Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில் பேச்சுக்கான அர்ப்பணிப்பு அவசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதட்டளவில் அல்ல, உள்ளத்தளவில்

பேச்சுக்கான அர்ப்பணிப்பு அவசியம்

`

விடுதலைப்புலிகளோடு சமாதானப் பேச்சுகளை நாளை நடத்தவும் அரசு தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்திருக்கின்றார்.

கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் முதல் விமானத்தாக்குதல் நடைபெற்று அடுத்தநாள் இந்தஅறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

""பரந்த பயனுள்ள அமைதியை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இதற்காகப் பேச்சு நடத்த வேண்டும், எல்லா வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என எமது அரசு நம்புகின்றது. பேச்சுக்குப் புலிகள் தயார் என்றால் நாளையே நாம் பேச்சை நடத்தலாம்.'' என்ற சாரப்பட வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கின்றார்.

கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதலை அடுத்து, இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத்தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமை நாடான ஜேர்மன் ஆகியவற்றின் இலங்கைத் தூதுவர்களையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவரையும் சந்தித்துப் பேசிய பின்னரே, "நாளையே அமைதிப் பேச்சுக்கு அரசு தயார்!' என்ற தகவலை வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால் அவர் விருப்பப்படி அவர் குறிப்பிட்டவாறு நாளையே அமைதிப் பேச்சுகளை ஆரம்பிக்க முடியாதிருப்பதற்கு இடைஞ்சலாக இருக்கின்ற காரணம் என்னவென்பது அவரது வார்த்தைகளிலேயே தொக்கி நிற்பதுதான் கவனிக்கத்தக்கது.

""நாம் பேச்சு நடத்தவேண்டியுள்ளோம், எல்லா வழிகளையும் முயற்சிக்க வேண்டியுள்ளோம் என்பதே எமது அரசின் எண்ணமாகும்.'' ("Oதணூ ஞ்ணிதிஞுணூணட்ஞுணt ஞஞுடூடிதிஞுண் tடச்t தீஞு ணஞுஞுஞீ tணி tச்டூடு, தீஞு ணஞுஞுஞீ tணி ஞுதுணீடூணிணூஞு ச்டூடூ ச்திஞுணதஞுண்'') என்றுதான் வெளிவிவகார அமைச்சர் கூறியிருக்கிறார்.

அங்குதான் தவறு இருக்கின்றது.

அமைதி முயற்சிகளில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதானால் அதில் இதய சுத்தியுடனும், முழு முனைப்புடனும் பங்குபற்ற வேண்டும். அப்போதுதான் அவை பலனளிப்பவையாக பயன் தருகின்ற செயற்பாடாக அமையும். ஒருபுறம் பெயருக்கு சமாதான முயற்சிகள், அமைதிப் பேச்சுகள் என்று கூறிக்கொண்டு மறுபுறம் இராணுவ வெறித்தனம் மிக்க யுத்தப் பேரெடுப்பை மேற்கொள்வதால், இரண்டுமே குழம்பிப் போகும் என்பதுதான் நிலைமை. அத்தகைய எத்தனம் இரு தோணிகளில் கால்வைத்த வேலையாகிவிடும்.

மஹிந்தரின் அரசு அப்படித்தான் நடந்துகொள்கின்றது என்பதே வேதனைக்குரியது. அமைதிப் பேச்சுகளுக்கான சூழலை உருவாக்கித்தந்த யுத்த நிறுத்தத்தை உதாசீனம் செய்து, மேலாண்மைத் திமிரோடும் போர்வெறிப் போக்கோடும் படை நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் முன்னெடுத்து, அமைதிக்கான சகல வாய்ப்புகளையும் சிதறடித்து, எந்நேரத்திலும் கொடும்போர் வெடிக்கலாம் என்ற ஆபத்து ஏதுநிலையை இந்த அரசின் கையாள்கை உருவாக்கி நிற்கின்றது.

அந்தப் பின்னணியில்தான் இலங்கை இனப்போரில் கிளர்ச்சித்தரப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனது விமானப்படையை முதன் முதலில் அறிமுகப்படுத்தும் கட்டத்துக்கு நிலைமை போயிருக்கின்றது.

""எல்லா வழிகளையும் அரசு நாடவேண்டிய தேவை உள்ளது'' ("ஙிஞு ( ஞ்ணிதிஞுணூணட்ஞுணt) ணஞுஞுஞீ tணி ஞுதுணீடூணிணூஞு ச்டூடூ ச்திஞுணதஞுண்'')என்று வெளிவிவகார அமைச்சர் இப்போது குறிப்பிடும் போக்கே இந்த இக்கட்டு நிலையை சமாதான முயற்சிகளின் இடைத் தேக்கத்தை கொண்டு வந்திருக்கின்றது என்பது வெள்ளிடைமலை.

""சமாதானம் என்றால் சமாதானம்; போர் என்றால் போர்'' என்று எண்பதுகளில் தமிழர்களைப் பார்த்துத் தென்னிலங்கைத் தலைமை அறைகூவல் விடுத்தது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அப்போதைய மமதைப் பேச்சு சிறுபான்மையினரான தமிழர் தரப்பால் மறக்கற்பாலதல்ல.

அதையே இப்போது பதிலாகக் கூறவேண்டிய நிலைமை தமிழர் தரப்புக்கு உருவாகியிருப்பதும் வரலாற்றுக் கட்டாயமாகியிருக்கின்றது.

""அமைதி முயற்சி என்றால் அமைதி முயற்சி; போர் என்றால் போர்! இதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். அதில் தீவிரத்துடனும் இதயசுத்தியுடனும் ஈடுபடுங்கள். இனப்பிரச்சினைக்கு, "பல தோணிகளில் கால் வைப்பதுபோல' பல வழிகளிலும் தீர்வு காண முயற்சிப்பது அர்த்தமற்றது; அபத்தமானது. அமைதித் தீர்வும் இராணுவத் தீர்வும் ஏக காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடியவையே அல்ல. அப்படி ஏக காலத்தில் முன்னெடுப்பது இரண்டு வகை முயற்சிகளையுமே அடியோடு பாதிக்கும்.'' என்ற யதார்த்தத்தை தென்னிலங்கை அரசுத் தலைமைக்குச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் தமிழர் தரப்புக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே, ""நாளையே பேச்சை நடத்தத் தயார்! '' என்று அறிவிப்பதற்கு முன்னர்

""இராணுவத் தீர்வு அணுகுமுறைச் சிந்தனையை இன்றே அடியோடு தலைமுழுகி விட்டோம்!'' என்று அறிவிக்கவும், அதை இதயசுத்தியோடு செயற்படுத்தி, வெளிப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் அரசுத் தரப்பு முன்வரவேண்டும்.

அவ்வாறு முன்வந்து நடந்து கொண்டால்தான், நாளையே அமைதிப் பேச்சை நடத்தத் தயார் என்ற அதன் அறிவிப்பில் அர்த்தம் இருக்கும்.

யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு முரணாகப் பெரும் இராணுவ முன் நகர்வுகளையும், படையெடுப்புக்களையும் மேற்கொண்டு, தமிழர் தாயகப் பிரதேசங்களைப் புதிது புதிதாக ஆக்கிரமித்தபடி, நாளையே அமைதிப் பேச்சுகளை ஆரம்பிக்கலாம் எனக் கனவு காண்பதோ, அத்தகைய நம்பிக்கையை நப்பாசையை சர்வதேச சமூகத்துக்கு உண்டாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, அழைப்பு விடுவதிலோ எந்தப் பலனும் கிட்டப்போவதில்லை.

ஆகவே அமைதிப் பேச்சுக்கான ஈடுபாடு உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் செயலளவில் வெளிப்படவேண்டியது அவசியம்.

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் வான்படை, அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.

சிறீலங்காவில் அதிகரித்துவரும் அரசின் இராணுவ ஆதிக்க நடவடிக்கைகளுக்கு விரைவில் பதிலடி கிடைக்கும்.

RASAN

இந்தக் காலத்தில் எவனெவன் என்ன என்னத்தைப் பற்றிக் கதைப்பது என்று ஒரு விவஸ்தை இல்லாமப் போச்சு!

றோஹித போகொல்லாகம நன்னாத்தான் பிலிம் காட்டுறான்!

உள்ளத்தளவில் அல்ல, உதட்டளவிலும் போருக்கான அர்ப்பணிப்பு அவசியம் என்று உவன் சொல்லியிருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும்!

அதுபோக....கீழே..

ஓதணூ ஞ்ணிதிஞுணூணட்ஞுணட் ஞஞுடூடிதிஞுண் ட்டச்ட் தீஞு ணஞுஞுஞீ ட்ணி ட்ச்டூடு, தீஞு ணஞுஞுஞீ ட்ணி ஞுதுணீடூணிணூஞு ச்டூடூ ச்திஞுணதஞுண்''

அப்படியென்றால் என்ன?

"ஙிஞு ( ஞ்ணிதிஞுணூணட்ஞுணட்) ணஞுஞுஞீ ட்ணி ஞுதுணீடூணிணூஞு ச்டூடூ ச்திஞுணதஞுண்''

அப்படியென்றால் என்ன?

யாரோ ஒரு தமிழ்ச் சித்தர் சொல்லும் மந்திரம் போல் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.