Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல்

[29 - March - 2007]

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது தாக்குதலை நடத்திய புலிகள் இயக்கத்தினரின் விமானம் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள வயல்பகுதியில் விழுந்துவிட்டதாக கடந்த 26 ஆம் திகதி அதிகாலை பரவிய தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதியிலும் அதனை உள்ளடக்கிய மாறவில பொலிஸ் பிரதேசத்திலும் பெரும் பதற்றம் நிலவியது. இதனால், இந்தச் சம்பவம் பற்றி தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக விமானப்படை உத்தியோகத்தர்கள் ஆறுபேர் அடங்கிய குழுவொன்று மாறவில பொலிஸ் நிலையத்துக்கு விரைந்தது. உடனே, மாறவில பொலிஸ் பிரிவினர் குறித்த பகுதிகளில் வீதித் தடையை அமைத்து விமானப்படையினருடன் இணைந்து தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இந்த விசாரணைகளின் போதே மேற்படி புலிகளின் விமானம் மானிங்கல, வயல்வெளியூடாகத் தென்னை மரங்களை உரசுவதுபோல் தாழ்வாகப் பறந்து சென்றது தெரியவந்தது. இந்த விமானத்தை நேரில் கண்டவர்கள் குறித்த வயற்பகுதியில் நெல் குவிப்பு மற்றும் வைக்கோல் போர் அமைப்பு வேலைகளில் இரவு வேளையில் ஈடுபட்டிருந்த ஐந்து இளைஞர்களே ஆகும். இவர்கள் நடுநிசிக்குப் பின்னர் சுமார் 2 மணியளவில் உழவு இயந்திரம் வருவதுபோன்ற ஓசை வான்பகுதியில் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து எந்தவித விளக்கு ஒளியுமின்றி கரிய உருவத்தில் விமானம் ஒன்று வயல்வெளியில், தாழ்வாகச் சரிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், பீதியும் சந்தேகமும் அடைந்த அந்த இளைஞர்களில் ஒருவரே விமானம் வயல்வெளியில் விழுந்துவிடும் நிலையில் சென்றது பற்றி மாறவில பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.

எனவே, புலிகளின் விமானம் தூர இடத்திலிருந்து புறப்பட்டு வந்து நாத்தாண்டிய பகுதியூடாக மிகத் தாழ்வாகப் பறந்து சென்றதா அல்லது நாத்தாண்டியவை அண்டிய பிரதேசத்திலிருந்து தான் புறப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகும்.

-லங்காதீப: 27.03.2007

தினக்குரல்

வழமையாகவே சிங்கிளவர்கள் பிரமையில் திரிபவர்கள். அடிக்கடி பறக்கும் தட்டுக்களை சிங்கிளவர்கள் இரவில் வானில் கண்டுள்ளார்கள் என்று ஊடகங்களில் வரும் செய்தி இதற்கு அத்தாட்சி.

இந்த வியாதிக்கு ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது!

இரவில் படுக்கும் முன் தேசிக்காயை தலையில் வைத்து நன்கு தேய்த்து முழுகிய பின் வேப்பிலை சுற்றிவரக் கட்டப்பட்டுள்ள கட்டிலில் படுத்து உறங்க வேண்டும்!

கையில் இரும்புத்துண்டை வைத்து இருப்பது Extra Precaution! :lol::icon_mrgreen::blink:

வழமையாகவே சிங்கிளவர்கள் பிரமையில் திரிபவர்கள். அடிக்கடி பறக்கும் தட்டுக்களை சிங்கிளவர்கள் இரவில் வானில் கண்டுள்ளார்கள் என்று ஊடகங்களில் வரும் செய்தி இதற்கு அத்தாட்சி.

இந்த வியாதிக்கு ஒரே ஒரு மருந்துதான் இருக்கிறது!

இரவில் படுக்கும் முன் தேசிக்காயை தலையில் வைத்து நன்கு தேய்த்து முழுகிய பின் வேப்பிலை சுற்றிவரக் கட்டப்பட்டுள்ள கட்டிலில் படுத்து உறங்க வேண்டும்!

கையில் இரும்புத்துண்டை வைத்து இருப்பது Extra Precaution! :lol::icon_mrgreen::blink:

வேணுமென்டா உதவிக்கு நம்ம சாத்திரிய அனுப்புவம் மாப்பி :huh:

என்ன சிங்களவன் பயத்தில பிதற்றான் போல கிடக்கு==இதுக்கே இப்படியெண்டா.... போகப்போக

என்ன எல்லாம் சொல்லுவாங்களோ.... :lol::blink:

இனி என்ன போகபோக உடுத்த உடுப்பை பிச்சுக்கொண்டு அம்மணமா திரியப்போறாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.