Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு அமெரிக்கப் பிரஜைகள் கைச்சாத்திட்ட அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரு அமெரிக்கப் பிரஜைகள் கைச்சாத்திட்ட அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு உடன்படிக்கை

[29 - March - 2007]

பி.இராமன்

அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 (9/11) தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் அப்போது பதவி வகித்த ஜனாதிபதி சந்திரிகா அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு அனுப்பிய செய்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

"எமது நாட்டிலுள்ள துறைமுகங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள் ஆகிய அனைத்து வசதிகளையும் வழங்கத் தயார்" எனத் தெரிவித்திருந்தார்.

அல்-ஹைதா மற்றும் ஆப்கான் தலிபான் அமைப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின்போது பயன்படுத்துவதற்காகவே இலங்கை வழங்குவதாகத் தெரிவித்த அந்த யோசனையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

2002ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்க அரசின் தென் ஆசிய வட்டகை நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவிச் செயலர் கிறிஸ்டினா றொக்கா தலைமையிலான தூதுக் குழுவினர் இலங்கை வந்தனர். அமெரிக்காவின் பிரிகேடியர் ஜெனரலான திமோதி கோர்மெலியும் (அமெரிக்க கடற் பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி) அடங்கியிருந்த அந்தத் தூதுக்குழு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் பலருடன் பலாலி ராணுவத் தளத்தில் ரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். திமோதி திருகோணமலைக்கும் சென்றார். இதற்கு அடுத்த மாதத்தில் அமெரிக்க இராணுவ மற்றும் சட்டவல்லுநர்கள் நால்வர் அடங்கிய குழு ஒன்று ரகசியமாகக் கொழும்பு வந்தது.

இந்த விஜயங்களின் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது என "சன்டே ரைம்ஸ்" பத்திரிகை தெரிவித்தது.

உத்தேச ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இலங்கைப் படைகளுக்கு போர்ப் பயிற்சிகள், ராணுவத் தளபாடங்கள், அவற்றிற்கான மேலதிக உதிரிப்பாகங்கள் ஆகியனவற்றை வழங்கும் எனவும் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் பயங்கரவாதத்தை ஒழித்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு கண்காணிப்புப் படகுகள் மற்றும் கடற்பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும் இரு விமானங்களை அமெரிக்கா வழங்குவது தொடர்பான கருத்தை வெளியிட கொழும்போ அல்லது வாஷிங்டனோ விரும்பவில்லை எனவும் " சன்டே ரைம்ஸ்" பத்திரிகை தெரிவித்தது. இந்த உடன்பாடு தொடர்பான தயாரிப்புப் பணிகள் முடிவடைவதற்கு முன்னரே அமெரிக்க யுத்தக்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து எரிபொருள்களை நிரப்பியது. மேலும், அமெரிக்க கடற்படை வீரர்கள் தங்கள் ஓய்வைக் கழிக்கும் நிலையமாக கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தினர்.

2002 ஏப்ரல் மாதத்தில் " USS HOPPER" என்ற கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகம் வந்தது. எட்டு வருடங்களின் பின்னர் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்த முதலாவது கப்பல் இதுவாகும்.

அமெரிக்கப் படைகள் இலங்கையிலுள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுபாதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள உத்தேச உடன்பாட்டில் வழிவகுக்கப்பட்டுள்ளது எனவும் இவற்றிற்கு ஈடாக இலங்கைக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் ஆயுத தளபாட வளங்களை மேம்படுத்தல் தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளது என்ற கருத்து கொழும்பில் பரவியது.

அவ்வேளையில், இலங்கையில் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றிய அஷ்லி வில்ஸ் வாஷிங்டனில் தன்னைச் சந்தித்த வல்லுநர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரிடம் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

"ஸ்ரீலங்காவின் அமைவிடம், அந்நாட்டு மக்களின் ஆர்வம் மற்றும் வர்த்தக ரீதியிலான திறமைகள் காரணமாக அவர்கள் (இலங்கையர்கள்) தென் ஆசியாவில் சிங்கப்பூர் போன்ற ஒரு முன்னேற்றத்தை அடையும் நிலையிலுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜோசப் பரராஜசிங்கம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த அரசியல் செயலர் ஜோசப் நொவாக் என்பவரைச் சந்தித்து உத்தேச உடன்பாடு தொடர்பாக இலங்கையில் தமிழ் மக்கள் கொண்டிருந்த உணர்வலையை எடுத்துக் கூறினார். உத்தேச உடன்பாடானது இலங்கை அரசால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் யுத்தத்தின்போது ஒத்துழைப்பை வழங்குவதாக அமையக்கூடும் என ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார் எனவும் தமிழ் மக்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்த பெரும்பான்மையினரான சிங்கள மக்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது அமையும் எனவும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

2002 மே 31 ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

"ஸ்ரீலங்காவில் எந்தவொரு இராணுவ முகாமையும் பயன்படுத்த அமெரிக்கா ஆர்வம் கொள்ளவில்லை. கைச்சாத்திடப்படவுள்ள உத்தேச உடன்படிக்கையானது அந்த உடன்படிக்கையின் பெயரில் குறிப்பிட்டதைப் போலவே இரு தப்பினருக்குமிடையே இராணுவ சேவை தொடர்பான உதவிகளை வழங்கும் உடன்படிக்கையேயாகும். இந்தச் சேவைகளை வழங்குவதானது, உபகரணங்களை பணம் செலுத்திப் பரிமாறுவதாகவோ அல்லது ஒரே பெறுமதியையுடைய உபகரணங்களை இரு தரப்பினரும் பரிமாறுவதாகவோ அமையும். அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான கையகப்படுத்தல், சேவை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தங்கள் 56 நாடுகளுடன் (ஆசிய நாடுகள் உட்பட) மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒப்பீட்டு ரீதியில் இந்த ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெற்ற ஒப்பந்தங்களாக அமையாவிடினும் இரு தரப்பினரதும் வசதிக்கேற்ப அவை தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்கள் புதுடில்லியை எட்டியதும் அவை இந்திய அரசின் குறிப்பிடத்தக்களவு கவனத்தை ஈர்த்தது.

இந்திய அரசின் அதிருப்தியைத் துடைத்தெறியும் நோக்கில் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க அப்போது இந்தியாவில் ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசுடன் தொடர்புகொண்டு இலங்கையில் எந்தவொரு இராணுவ முகாமையும் அமெரிக்காவுக்கு வழங்கும் எண்ணமில்லை எனத் தெரிவித்தார்.

இந்தியா மீது இலங்கை கொண்டுள்ள நல்லெண்ணத்தை உறுதிசெய்தல் மற்றும் திருகோணமலைத் துறைமுகத்தின் எதிர்காலம் பற்றி இந்தியா கொண்டிருந்த சந்தேகம் தொடர்பாக உடனடியாகக் கவனம் செலுத்திய ரணில் விக்கிரமசிங்க திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதாகவும் திருகோணமலைப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2002 டிசம்பர் மாதத்தில் இந்த உத்தரவாதத்தை வழங்கிய பின்னரும் இலங்கை அரசு, இந்திய அரசுக்குத் தெரிவிக்காமல் அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாக அறிந்த இந்திய அரசு குழப்பத்தில் ஆழ்ந்தது எனத் தெரியவந்தது. திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் குறித்து அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதை அறிந்த இந்தியா நிலைமையை இவ்வாறு தெரிவித்தது.

"இலங்கை அரசு அமெரிக்காவுக்கு ஒன்றையும் அதேநேரம், இந்தியாவுக்கு மற்றொன்றையும் தெரிவிக்கிறது" எனத் தெரிவித்தது.

வாஜ்பாய் தனக்கு நம்பிக்கையான ஒருவரை இலங்கைக்கு இரகசியமாக அனுப்பி இது தொடர்பான தனது அதிருப்தியை இலங்கை அரசுக்குத் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க இந்த அறிக்கையை (தகவலை) முதலில் நிராகரித்தார். எந்தவொரு இராணுவ முகாமிலும் வசதிகளை வழங்குவதற்கோ அல்லது எண்ணெய்க் குதங்களைப் பயன்படுத்தவோ அமெரிக்காவுக்கு வாய்ப்பளிக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை எனத் தெரிவித்தார். உத்தேச உடன்பாடுகள் தொடர்பாக வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளை ரணில் விக்கிரமசிங்காவின் அரசு இதன் பின்னர் கைவிட்டது.

2004 பெப்ரவரி 8 ஆம் திகதி அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் தேவிந்த சுபசிங்க இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் இலங்கை மக்களை விழித்து ஆற்றிய உரையில், அமெரிக்காவுடன் இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு தொடர்புகளைக் கொள்ள முடிந்தமையையிட்டுத் திருப்தி தெரிவித்தார். இந்த மட்டத்தில் புரிந்துணர்வு மற்றும் இணக்கப்பாடு ஊடாக இலங்கைக்கு பெரிய அளவில் சாதகமான நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவும் தொடர்புகள் ஊடாக இரு நாடுகளுக்குமிடையே நட்புறவு வளர்ந்துள்ளதாகவும் உலக வர்த்தகம், பொருளாதாரத் துறை மற்றும் 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்காவில் அப்போது, பிரதி ராஜாங்கச் செயலாளராகப் பணியாற்றிய ஆம்டேஜ் இலங்கை தொடர்பாகத் தெரிவித்த கருத்தை இலங்கைத் தூதுவர் அந்த வைபவத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான புதிய நிலைமைகள் குறித்து பெருமையுடன் தெளிவுபடுத்துகையில் இரு நாடுகளுக்குமிடையே பாதுகாப்புத் தொடர்புகள் வளர்ச்சியடைந்து வருகின்றன எனவும் இலங்கைக் கடற்படையினருக்கு ஆழ்கடல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக கப்பலொன்றை வழங்கியது பேருதவி எனவும் குறிப்பிட்டார். மேலும், அவர் தனது உரையில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உருவாகிவரும் தொடர்புகள் குறித்து நீண்ட விளக்கங்களை அளித்தார்.

(நாளை தொடரும்)

நன்றி -தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.