Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிந்­து­போய்­விட்ட மகிந்­த­வின் அர­சி­யல் யுகம்

Featured Replies

முடிந்­து­போய்­விட்ட மகிந்­த­வின் அர­சி­யல் யுகம்

 

 

Maithripala-Sirisena-and-Ranil-W-pic-via

 
 
 
 

கடந்து போன­வற்­றைத் திரும்­பிப்­பார்க்­காது நாட்­டின் எதிர்­கா­லம் சிறக்க முன்­னோக்கி நகர்­வோம் என்­கி­றார் கலா­நிதி விக்­கிர­ மபாகு கரு­ணா­ரத்ன.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோல்­வி­ய­டைந்­தமை பொது­மக்­க­ளுக்கு நாடா­ளு­மன்­றத்­தி­னூ­டாக கிடைத்த வெற்­றி­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.

அர­சி­ய­லில் ஏற்­பட்­டுள்ள இந்த ஜன­நா­யக நடை­முறை தொட­ர­வேண்­டு­மென்­பதே மக்­க­ளின் எதிர்­பார்ப்­பாக அமைþÅ­­கி­றது.

 

இன்­னொரு விட­யம் குறித்­தும் கவ­னம் செலுத்­தப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அழி­வுப் பாதை­யில் சென்று கொண்­டி­ருந்த நாட்டை மீட்­டெ­டுத்­த­வ­ருக்­குப் பின்­னால் நாட்­டி­லுள்ள தொழி­லா­ளர்­கள், தொழில்­சார் ஊழி­யர்­கள் மற்­றும் தமிழ்­பே­சும் மக்­க­ளும் பக்க பல­மாக இருந்­த­னர்.

நாட்டு மக்­க­ளுக்கு  ஏமாற்­றம் தந்த  அவர்­க­ளது எதிர்­பார்ப்பு

நாட்­டி­லி­ருந்த சிறு­ச­மூ­கங்­கள் மகிந்த சிந்­தனை­ யின் வௌிப்­பா­டு­கள் என்ன என்­ப­தனை நன்­றா­கவே புரிந்­து­கொண்­டி­ருந்­த­ன. மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் கூட்­ட­ணி­யில் உரு­வான கூட்டு அரசு, நாட்­டில் பெரும் சிர­மத்­துக்கு மத்­தி­யில் வெல்­லப்­பட்ட சமா­தா­ன­மான சூழ் நி­லையை முன்­னோக்­கிக் கொண்டு செல்­வார்­க­ளென மக்­கள் எதிர்­பார்த்­தார்­கள்.

தென்­னா­பி­ரிக்­கா­வின் மறைந்த மாபெ­ரும் தலை­வர் நெல்­சன் மண்­ட­லோ­வின் வழி­யி­லேயே இலங்கை செல்ல வேண்­டும் என்­பதே இந்த நாட்டு மக்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்­த­வே­ளை­யில் சரி­யா­ன­தையே செய்­தார். அரச தலை­வர் தேர்­த­லின்­போது, தன்னை எவ­ருமே தோற்­க­டிக்க முடி­யாது என்ற இறு­மாப்­பு­டன் வலம்­வந்த, சர்­வா­தி­கா­ரி­போ­லச் செய­லாற்­றிய மகிந்த ராஜ­பக்­சவை வீழ்த்து­ வதற்கு, சரி­யா­ன­தொரு தெரி­வாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரச தலை­வர் தேர்­த­லுக்­கான பொது வேட்­பா­ள­ராக பல­ரின் பல­மான எதிர்ப்­புக்கு மத்­தி­யில்­தான் கள­மி­றங்கி தேர்­த­லில் வெற்­றி­பெற வைத்­த­மை­யும், அதற்­காக ரணில் மேற்­கொண்ட முடி­வும் சரி­யா­னதே என சக­ல­ரும் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­ச­த­லை­வர் பத­விக்­குப் பொருத்­த­மான ஒரு பொது­வேட்­பா­ளரை தெரிவு செய்து அவரை வெற்­றி­யும் பெறச் செய்­தமை பன்­னாட்டு சமூ­கத்­தின் பார்­வையை ரணில் விக்­கிர­ மசிங்­கவை நோக்­கித் திரும்ப வைத்­துள்­ளது.

புத்­தி­சா­லி­கள், மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலம் மிக­வும் மோச­மான ஒன்று என ஏற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.
குடும்ப ஆட்­சி­யொன்றே மகிந்­த­வின் காலத்­தில் இலங்­கை­யில் இடம்­பெற்­றது.

நாட்­டில் மரி­யா­தை­யான, அச்­ச­மற்ற சூழல் நில­வ­வில்லை, மனித உரி­மை­கள் குழி தோண்­டிப் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன. அர­சின் சீரற்ற, ஒழுக்­கக் கேடான நிர்­வா­கத்­தி­னால், ராஜ­பக்ச குடும்­பத்­தி­னர் நாட்டை இருண்ட யுகத்­துக்கே இட்­டுச் சென்­றி­ருந்­த­னர்.

ராஜ­பக்ச குடும்­பத்­தி­ன­ரால் படு­கு­ழி­யில் தள்­ளப்­பட்­டி­ருந்த இலங்கை அர­சின் பொரு­ளா­தா­ரத்­தைக் கட்­டி­யெ­ழுப்­பவே மைத்­திரி, ரணில் கூட்­ட­ணி­யில் நல்­லாட்சி என்ற பெய­ரில் கூட்­ட­ரசு உரு­வாக்­கப்­பட்­டது. இப்­போது தலைமை அமைச்­சர் கூறு­வது உண்­மை­தான்.

அது மகிந்­த­வி­னால் பெறப்­பட்ட அல்­லது ஏற்­ப­டுத்­தப்­பட்ட கடன் சுமை­யைத்­தான் தற்­போ­தைய அரசு மீளச் செலுத்­தி­வ­ரு­கி­றது என்­ப­து­தான்.

நாட்­டின் பொரு­ளா­தார நிலை வீழ்ச்சி அரச தலை­வர் தேர்­தலை துரி­த­மாக்கியது

சகல அதி­கா­ரங்­க­ளை­யுமே தன்­னி­டத்­தில் குவித்­துக் கொண்­டது மட்­டு­மல்­லாது மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­லும்­கூட தனது அதி­கா­ரத்தை, ஆதிக்­கத்­தைச் செலுத்­தி­வந்த மகிந்த ராஜ­பக்­சவை பத­விக்­கா­லம் முடி­வ­டை­வ­தற்கு இரண்டு வரு­டங்­கள் இருந்த நிலை­யி­லேயே அரச தலை­வர் தேர்­தலை நடத்­து­மாறு ஆலோ­ச­கர்­கள் வற்­பு­றுத்தி வந்­தி­ருந்­த­னர்.

நாட்­டின் பொரு­ளா­தா­ரம் சீராக இருந்­தி­ருந்­தால், அரச தலை­வர் தேர்­தலை பத­விக்­கா­லம் முடி­வ­டை­வ­தற்கு முன்­னரே நடத்த வேண்­டிய அவ­சி­யம் மகிந்­த­வுக்கு ஏற்­பட்­டி­ராது. 2015இல் நாடு என்ன நிலை­யில் இருந்­தது என்­ப­தனை எடுத்­துக்­காட்ட இதுவே நல்­ல­தொரு உதா­ர­ண­மா­கும்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்­டில் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­ட­வும், சம உரி­மை­யு­டன், சமா­தா­ன­மாக, சகல இன­மக்­க­ளும் வாழ­வும் வெகு அவ­தா­ன­மாக பொது வேட்­பா­ள­ராக சரி­யான நேரத்­தில் அர­ச­த­லை­வர் பத­விக்­குக் கள­மி­றங்­கி­யி­ருந்­தார்.

ஆனால் இன்று மைத்­தி­ரி­பால சிறி­சேன, தாம் முன்­னர் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கப் பதவி வகித்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைப் பாது­காக்க வேண்­டிய அழுத்­தத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளார். ராஜ­பக்­ச­வை­யும், கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரை­யும் கட்­டுப்­ப­டுத்த இய­லாத பல­வீ­ன­மான நிலை­யில்­தான் மைத்­திரி தற்­போ­துள்­ளார்.

மகிந்த குழு­வி­ன­ரின் கைப்­பொம்­மை­யா­கச் செயல்­ப­டும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் நட­வ­டிக்­கை­க­ளி­னால் பாதிக்­கப்­ப­டு­வது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­தான். அர­சின் நிர்வா­ கத்­தில், அரச நிறு­வ­னங்­கள் போன்­ற­வற்­றின் நிய­மனங்க­ ளில் அரச தலை­வர் எடுக்­கும் முடி­வு­கள் எவ்­வ­ளவு தவ­றா­னவை என்­ப­தைப் புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அரச தலை­வர் இந்த நிய­ம­னங்­க­ளின்­போது தலைமை அமைச்­ச­ரு­டன் கலந்­தா­லோ­சிப்­ப­தில்லை என்­பது புலப்­ப­டு­கின்­றது.

இலஞ்ச ஊழல் ஆணை­யா­ளர் டில்­ருக்சி டயஸ் விக்­கி­ர­ம­சிங்­கவை மிக அநா­க­ரி­க­மான முறை­யில் பதவி நீக்­கம் செய்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, அவ­ரு­டைய சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க இய­லாத நிலையி ­லுள்­ளார்.

அரச தலை­வர் சகல அதி­கா­ரங்­க­ளை­யும் கொண்­ட­வ­ராக இருந்த போதி­லும் , அர­சில் இடம்­பெ­றும் சகல தவ­று­க­ளுக்­கும் தலைமை அமைச்­ச­ரும் அமைச்­ச­ர­வை­யுமே பொறுப்­பேற்­கும் நிலை காணப்­பட்­டது. ஆனால் அதி­கா­ர­முள்ள அரச தலை­வர் இவர்­களை காப்­பாற்ற முன்­வ­ர­வில்லை.

ஆரம்­ப­கா­லங்­க­ளில் தலைமை அமைச்­ச­ரும் அவ­ரு­டைய ஐக்­கிய தேசி­யக் கட்சி உறுப்­பி­னர்­க­ளும் ஊட­கங்­க­ளுக்கு பெரிய அள­வில் முன்­னு­ரிமை வழங்­க­வில்லை. ஆனால் தொடர்ந்து வந்த காலங்­க­ளில் ரணில் மற்­றும் அவ­ரது கட்­சி­யி­னர் தங்­கள் போக்கை மாற்­றிக்­கொண்­ட­னர். கட்­டுப்­பாட்­டு­டன் இருப்­ப­து­தான் தொடர்ந்­தும் அவர்­கள் அர­சில் நீடிப்­ப­தற்கு வாய்ப்­பாக இருக்­கும் என அவர்­கள் எண்­ணி­யி­ருந்­தா­லும் அது நடக்­கா­ம­லும் போக­லாம்.

ஒரு பொழுது போக்­குக்­காக, அர­சி­யல் பிர­மு­கர்­களை தாக்­கிப் பேசு­வ­து­தான் பொது­வாக அர­சி­யல் கலா­சா­ரம். இது முன்­னைய காலத்­தில் அர­சர்­கள் இலங்­கையை ஆண்ட கால கட்­டத்­தி­லும் சரி, அதன் பின்­னர் ஐரோப்­பி­யர்­கள் இலங்­கையை ஆட்சி புரிந்த காலத்­தி­லும்­கூட இது­வே­தான் வழ­மை­யாக இருந்­துள்­ளது. அதே நிலை­தான் இன்­று­வரை தொடர்­கி­றது.

மகிந்­த­வுக்கு வௌிநாட்டு வங்­கி­யில் பெருந்­தொகை  நிதி வைப்­பில்

மத்­திய வங்­கி­யின் பிணை­முறி மோச­டி­யைத்­தான் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகப்­பெ­ரிய ஊழல் மோசடி என நினைக்­கி­றார். இந்­தத்­தொகை 80மில்­லி­யன் டொலர்­க­ளா­கும். இந்த பணம் ஒழித்து வைக்­கப்­ப­ட­வில்லை. அவ­சி­யம் ஏற்­ப­டின் இந்­தப் பணத்தை மீண்­டும் வசூ­ழித்­துக்­கொள்ள இய­லும் இதனை ஒரு அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளின் அங்­க­மாக கரு­த­லாம்.

அதே­வளை ஒரு கட்­டுப்­பா­டில்­லாத சக­ல­வ­ழி­க­ளி­லும் பணத்தை சுரண்­டிய ராஜ­பக்ச ஒரு வௌிநாட்டு வங்­கி­யில் 600மில்­லி­யன் டொலர்­களை வைப்­பி­லிட்டு வைத்­தி­ருப்­ப­த­னூ­டாக ராஜ­பக்ச அர­சில் எந்த அள­வுக்கு இலஞ்ச ஊழல் மலிந்­தி­ருந்­தது என்­ப­தனை உண­ர­மு­டி­யும்.

அதே­வேளை இந்த நாட்­டின் ஊட­கங்­கள், உண்­மை­யில் இந்த நாட்­டின் ஐன­நா­ய­கத்தை காப்­பாற்­று­வ­தற்கு கடப்பாடு உடையவை. ஆனால் அவையோ நாட்டை மீண்­டும் அழி­வின் பாதைக்கே இருண்ட வாழ்க்­கைக்கே, இட்­டுச் செல்­லும் நிலை­மையை உரு­வாக்­கும் போக்­கில் செயற்­ப­டு­கின்­றன.

தற்­போ­தும் இலங்கை ஒரு உறுதியற்ற இருண்ட தன்­மை­யான நிலையை நோக்­கியே பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. மைத்­தி­ரி­தான் இந்த உறுதியற்ற நிலைக்­குப் பின்­பு­லத்­தில் செயல்­ப­டு­கி­றார். எப்­ப­டி­யா­வது தமது அரச தலை­வர் பத­வி­யைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­காக மகிந்­த­வுக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் உற­வைப் பேண­மு­ய­லு­கி­றார். ஒரு புதுப்­பா­தையை மைத்­திரி அமைத்­துக் கொண்­டுள்­ளார் போலத் தோன்­று­கி­றது. ஜன­நா­ய­கம் தொடர இன்­னும் ஒரு கட்­சி­யைத் தனக்­குச் சார்­பாக வைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

பண்­டார நாயக்­க­வின் சகாப்­தத்தை மீண்­டும் உரு­வாக்க எண்­ணிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கனவு கலைந்து போய் மீண்­டும் ஒரு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறு­வாகி அதன் கடி­வா­ளங்­களை மகிந்த கையி­லெ­டுக்­கும் நிலமை உரு­வா­கி­யது. நாடா­ளு­மன்­றில் கடை­சி­யாக நிகழ்ந்த சம்­ப­வம் பல­ரின் கண்­க­ளைத் திறந்து விட்­டது. அது பொது­மக்­க­ளின் நிலைப்­பாடு என்ன என்­ப­தைத் தெளி­வா­கக் காட்­டி­யுள்­ளது.

மகிந்­த­வின் அர­சி­யல் என்­பது இலங்­கை­யின் சரித்­தி­ரத்­தில் முடிந்­து­போ­ன­தொரு அத்­தி­யா­யம். அது கவ­லை­யான துன்­ப­மா­ன­தொரு இருண்­ட­தொரு காலம். எவ­ரா­லும் ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாத ஒரு காலம். மகிந்­த­வின் ஆட்­சிக் காலம். எந்­த­வொரு அர­சி­யல் தலை­வ­ரா­ளும் அந்த மோச­மான அர­சி­ய­லுக்கு உயிர்­கொ­டுக்க இய­லாது. ஆகவே பின்­பு­றம் திரும்­பிப் பார்க்க எண்­ணா­தீர்­கள். ஒரு இனி­மை­யான சுபீட்­ச­மான எதிர்­கா­லத்தை எதிர்­பார்த்து முன் செல்­லுங்­கள்.

http://newuthayan.com/story/11/முடிந்­து­போய்­விட்ட-மகிந்­த­வின்-அர­சி­யல்-யுகம்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.