Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்ரேலியாக் கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிப்பு

Featured Replies

அவுஸ்ரேலியாக் கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் தேசியத் தலைவரால் மாமனிதராக மதிப்பளிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்ரேலியக் கிளையின் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைக்கு அவர் ஆற்றிய பணியை மதிப்பளித்து தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் எனும் அதியுயர்ந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவுஸ்ரேலியப் பொறுப்பாளராகவும் அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தின்பால் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வியாழக்கிழமை இவர் தீடீர் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவரின் இறுதிக் கிரிகைகள் அடுத்த வாரம் நடுப்பகுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்ட அறிக்கை விரைவில் இணைக்கப்படும்

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமாருக்கு "மாமனிதர்" விருது: தமிழீழ தேசியத் தலைவர் அறிவிப்பு [வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 22:20 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் தில்லைநடராஜா ஜெயக்குமாருக்கு தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான "மாமனிதர்" விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்.

29/03/2007

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகச் செயற்பட்டு, எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஒரு அற்புதமான மனிதரை நாம் இன்று இழந்துவிட்டோம். இந்த நல்ல மனிதரை இழந்து, எமது தேசம் இன்று சோகக்கடலிலே மூழ்கிக்கிடக்கிறது.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் ஒரு பண்பான மனிதர். நெஞ்சில் தூய்மையும் நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர், பொதுநலத்தையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் அழகு. அவர் உதிரும் மந்திரப் புன்னகை அந்த அழகிய ஆளுமையை அணிசெய்தது. இதுவே, அனைவரையும் அவரை நோக்கிக் காந்தமாகக் கவர்ந்திழுத்தது.

இவர் ஒரு சிறந்த தேசப்பற்றாளர். அவுஸ்திரேலிய மண்ணில் தளமிட்டு நின்றபோதும், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை அவர் ஆழமாக நேசித்தார். சிங்கள அதிகார வர்க்கம் தனது இராணுவ அடக்குமுறைப் பாதையைக் கைவிட்டு, தமிழ் மக்களுக்கு என்றுமே ஒரு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை என்பதை அவர் ஆழமாக உணர்ந்தவர். விடுதலையின் பாதையில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை அனுபவ ரீதியாகப் பட்டறிந்தவர். இந்தச் சிந்தனைத் தெளிவும் பட்டறிவும் அவரிடம் விடுதலைத் தீயைப் பற்ற வைத்தது. அவரும் எமது விடுதலை இயக்கத்தோடு ஒன்று சேர்ந்து, போராட்ட வாழ்வில் முழுமையாக மூழ்கினார்.

கடல்கள் தாண்டி, கண்டனங்கள் கடந்து, தனது தாயகத்திற்கு வெளியே, தூர தேசத்திலே ஒருவர் எத்தனை பெரும் பணியை தனது தேச விடுதலைக்கு ஆற்ற முடியுமோ அதனைத்தான் இவர் அவுஸ்திரேலிய மண்ணில் புரிந்தார். அவுஸ்திரேலிய நாட்டின் அரசியல் போக்கையும் சட்ட நடைமுறைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டப் பணிகளைச் சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் முன்னெடுத்தார். அங்கு வாழும் எம்மக்கள் மத்தியில் தமிழ்ப்பற்றையும் இனப்பற்றையும் ஊட்டிவளர்த்து, போராட்ட விழிப்புணர்வைத் தூண்டி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களை அணிதிரட்டினார். அவுஸ்திரேலிய மண்ணில் ~தமிழ்க்குரல்| வானொலி தோற்றம் பெறுவதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பல்வேறு நாடுகளில் தனது கிளைகளைப் பரப்புவதற்கும் துணை நின்றவர். இவர் ஆரவாரமின்றி, அமைதியாக ஆற்றிய விடுதலைப்பணி என்றும் போற்றுதற்குரியவை.

திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக ~மாமனிதர்| என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. எமது நெஞ்சத்து நினைவலைகளில் அவர்கள் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)

தலைவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி மரியாதையும் வீரவணக்க நிகழ்வும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03.04.07) மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை இடம்பெறவுள்ளது.

இடம்: Springvale Town Hall

முகவரி: 397 - 405 Springvale Road, Springvale

என்ற இடத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் அனைவரும் திரண்டு வந்து ஜெயக்குமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: 00 61 413 073 09

தொடர்புகளுக்கு:

செல்லிடப்பேசி இலக்கம்: 00 61 413 073091

தொலைநகல்: 00 61 3 9803 4932

மின்னஞ்சல்: jayakmr@yahoo.com

தொடர்புபட்ட செய்தி: விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் ஜெயக்குமார் காலமானார்

நன்றி புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த பல நாடுகளில் பொறுப்பாளார்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவுஸ்திரெலியாவில் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு மேலாக இருந்தவர் ஜெயக்குமார் அவர்கள்.புலம் பெயர்ந்த நாடுகளில் இதுவரை மாமனிதர் விருது பெற்றவர்களில் இருவர். இருவரும் அவுஸ்திரெலியா நாட்டினைச் சேர்ந்தவர்கள். ஜெய்க்குமார் அவர்களும் விஞ்ஞானியான எலியசரும் அவர்களுமே பெற்றார்கள்.

அன்னாருக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் நின்று அஞ்சலி செலுத்துகிரார்கள். நேரடி ஒளிபரப்புகல் நடைபெறுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.