Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு முதலமைச்சர் தவறான தெரிவு! விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்

Featured Replies

வடக்கு முதலமைச்சர் தவறான தெரிவு! விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்

 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார்.

இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது.

வடமாகாண சபையின் பதவி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற போட்டியெழுந்துள்ளது.

எனினும், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், முதலமைச்சருக்கு எதிராக அண்மை காலமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சுமந்திரன் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/politics/01/186796?ref=home-top-trending

  • தொடங்கியவர்

மீண்டும் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தமாட்டோம்-சுமந்திரன் உறுதி !!

 

 
 

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தும் தவறை மீண்டும் செய்ய மாட்டோம் என நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய அரசியல்யாப்பு தொடர்பில் கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நியமித்ததன் பிரதிபலனை தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுபவிப்பதாக கூறியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சரின் தற்போதைய நடத்தை குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது.இதுவே எமது கட்சி எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்ற போது பிள்ளையான் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளவரான முன்னாள் ஆயுததாரியான பிள்ளையானை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முதலமைச்சர் ஆக்கினார்.

பிள்ளையானை முதலமைச்சர் ஆக்கிய பின்னர் மஹிந்த ராஜபக்ச உலகம் முழுவதும் சென்று, பிள்ளையான் போன்றவர்களுக்கு எவ்வாறு பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பது என கேட்டார்.பிள்ளையானை அவரே உருவாக்கிவிட்டு எவ்வாறு பிள்ளையானுக்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பது என கேட்கின்றார்.நியாயமான கேள்வி.தற்போது பிள்ளையான் கொலைக் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார்.

அதற்கு எமது பதிலாக தான் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கினோம்.அதன் பின்னர் அனைத்து அதிகாரங்களையும் அவருக்கு ஏன் வழங்க முடியாது என நாம் கேட்டோம்.துரதிஷ்டவசமாக அது தோல்வியில் முடிவடைந்த பரிசோதனையாக அமைந்துள்ளது.அதற்கான பிரதிபலனை நாம் அனுபவிக்கின்றோம்.அதுபோன்ற தவறை மீண்டும் ஒருதடவை செய்ய மாட்டோம் என நம்புகின்றேன்.

https://www.ibctamil.com/srilanka/80/102667

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.