Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடை

Featured Replies

கொடை

 

 
kadhir3

வீட்டில் ஒரு வாரமாகவே அம்மாவுக்கும் மகளுக்கும் இடையே இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருந்தது. இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டது ரகுதான். 
"" பாருங்கப்பா இந்தம்மாவை, புரியவே மாட்டேங்குது. நான் எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிச்சி திட்றாங்க'' எனக் குற்றப்பத்திரிகை வாசித்தாள் திவ்யா. 
""அம்மாதானே சொல்றாங்க... விடும்மா. நான் பேசிக்கிறேன்'' என்றான். ஆனால், மனைவியிடம் பேசி எளிதாகச் சம்மதிக்க வைக்க முடியாது என்பது அவனுக்குத்தான் தெரியும். 


""நீங்க ஒவ்வொரு விஷயத்திலும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க, ரொம்ப மாறீட்டா. சரியில்லை. அவ செய்ய நினைக்கிறதை சாதிச்சிடுறா, அதுக்கு நீங்களும் ஜால்ரா போடுறீங்க, இந்தக் காரியத்தை மட்டும் செய்ய நான் ஒத்துக்க மாட்டேன்'' என்று மனைவியிடமிருந்து சொல்லம்புகள் பாய்ந்தன. 
ரகு, எப்படிச் சொல்லி இவளைச் சம்மதிக்க வைப்பது என யோசித்தான். இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தால்தான் சரிவரும் என்று ""தனம் நிறுத்து, அப்படி என்ன அவ செய்யக் கூடாத காரியத்தைச் செய்ய நினைக்கிறா? நல்ல காரியம்தானே? செய்யட்டும் விடு'' என்றான் அமைதியாக.
""நான் ஆசை, ஆசையா வளர்த்தேன், என்னையே எதிர்த்து நிக்கிறா'' என்றாள். 


""திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லீட்டு இருக்காதே. ""நீ நாலு வருஷத்துக்கு முந்தி உன்னை நினைச்சுப்பாரு, ஆர்த்தி உன்கிட்ட என்ன சொல்லியனுப்பினா?'' என்றதும் அதிர்ச்சியில் பேசாமல் வாயை மூடினாள். அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
அவள் கண்முன்னே வந்து நின்றது ஆர்த்திதான். இன்று அவள் இப்படி இருப்பதற்கு காரணமே அந்த தேவதைதான். வெள்ளைச் சீருடையில் தேவதையாய் அவள் வலம் வருவதைப் பார்க்கவும், அன்பான மயிலிறகு வருடும் பேச்சைக் கேட்கவே திரும்ப நோய்வந்து மருந்துவனையில் படுத்துக் கொள்ளத் தோன்றும் பலபேருக்கு. 
அன்று பெருவிரைவு ரயில் கோளாறினால் இரண்டு மணிநேரம் வேலைக்குத் தாமதமாக வர நேர்ந்ததால் டாக்சியில் இருந்து இறங்கி வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தாள் ஆர்த்தி. எதிரில் வந்த சக ஊழியர்களுக்கு "காலை வணக்கம்', "குட் மார்னிங்' எனக் கூறியவாறே தன் வார்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், மறுநிமிடமே நோர்மா இரவு வேளை பார்த்த களைப்பு, இவள் தாமதமாக வந்தது என கடுப்பாக, ""ஒய் ஆர் யூ சோ லேட் ?'' என சலித்துக் கொண்டாள். 
""சீக்கிரமாகத்தான் வந்தேன், ரயில் திடீரென நின்றதால் பயத்தில் பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வரும் வரை உடனிருந்து கவனித்து மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வர தாமதமாகிவிட்டது. ஒரு தாதியாக இருந்து கொண்டு இந்த உதவி கூட செய்யாட்டா எப்படி, தாமதத்திற்கு மன்னிச்சிடு'' என்றாள் ஆங்கிலத்தில்.


""நான் உன்னை குறை சொல்லலை. ஹெட் டேக் லா, அந்த எட்டாம் எண் பேஷன்ட் ரொம்பத் தொந்தரவு, இனி நீயாச்சு அவளாச்சு, நான் வீட்டுக்கு கிளம்புறேன்'' என்றாள் கடுகடுத்த முகத்துடன் தாதியர் தொழிலுக்கே பொருத்தமில்லாதவளாய்.
அவள் சென்றபின் வேலையில் பம்பரமாகச் சுழன்றாள் ஆர்த்தி. ஒவ்வொரு படுக்கையாகச் சென்று வழக்கமான நடைமுறைகளைக் கவனித்துவிட்டுச் சென்ற வாரம் அறுவை சிகிச்சைக்காக பெட்டில் சேர்ந்திருந்த தனம்மாவின் பெட்டுக்கு வந்தாள். அவள் ஒரு கேன்சர் நோயாளி. கட்டாயம் அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றலாம். மருத்துவர் எவ்வளவு சொல்லியும் ஆபரேஷன் செய்ய சம்மதிக்காது நோயுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அவளது படுக்கைக்கு வந்தாள் ஆர்த்தி.
நோயின் தீவிரம் புரியாமல், ""என்னை இப்படியே விட்டுவிடுங்க'' எனச் சின்னக் குழந்தை போல அடம்பிடித்துக் கொண்டிருக்கும் தனம்மாவை இரு தாதிகள் மனதளவில் தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.


ஆர்த்தியைப் பார்த்ததும் சோகமாய் உட்கார்ந்திருந்த தனத்தின் முகம் மலர்ந்தது.
ஆர்த்தி இப்படி ஆப்பரேஷன் செய்ய மறுத்து அடம்பிடிக்கும் நோயாளிக்கும் ஆலோசனை செய்வதற்கென சிறப்புப் பயிற்சி பெற்றவள். அவளது சர்வீஸில் பல நோயாளிகளின் மனநிலைக்குத் தகுந்தவாறு அவர்களிடம் பேசி சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளச் செய்து, நன்றாக குணமாக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளாள்.
""உன்னால்தான் நான் உயிரோட இருக்கேன், மறுபிறவி தந்த தெய்வம்மா நீ''. 
""என் கடமையைத்தான் செய்தேன்'' என்று புன்னகைப்பாள். பல நோயாளிகளின் மருந்தே ஆர்த்தியின் புன்னகையும் அன்பான பேச்சும்தான்.
""என்னம்மா ராத்திரி மருந்து சாப்டீங்களா? தூங்கினீங்களா?'' என்றாள். அதற்கு பதிலே சொல்லாமல் ஜன்னல் அருகே சென்று வெளியில் வெறித்தபடி இருந்தாள் தனம்மா. திறந்திருந்தால் கீழே குதித்துவிடுவாள் போல இருந்தது, அவள் நின்றிருந்தவிதம். 
""ஏம்மா நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்னத்தைப் பாக்குறீங்க'' என்றாள். திரும்பிய தனம் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள் திடீரென தேம்பி அழ ஆரம்பித்தாள். 


""ஏம்மா அழறீங்க'' என்றாள் ஆர்த்தி. 
""இல்ல இப்படி வரக்கூடாத நோய் வந்து மற்றவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டு பூமிக்கு பாரமா வாழத்தான் வேண்டுமா? என்றாள். 
""நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க? உங்க மதிப்பு உங்களுக்குத் தெரியாது. உங்க குடும்பத்தினர் உங்க மேல உயிரையே வச்சிருக்காங்க. கண்டதையும் நினைச்சி மனசை குழப்பிக்காதீங்க. இந்த மாத்திரையைச் சாப்பிட்டுட்டு தூங்குங்க'' என்றாள். மாத்திரையை வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாள். நேற்று இரவு வந்த நர்சுக்கும் ஆர்த்திக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணியவாறே மருந்து தந்த மயக்கத்தில் கண்ணயர்ந்தாள்.
மதியம் பார்வையாளர் நேரத்தில் தனம்மாவின் கணவரும், மகளும் பார்க்க வந்தனர். இருவரையும் பார்த்ததும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
""ஏங்க எனக்கு ஆபரேஷன் வேண்டாம்... வீணா செலவு பண்ணாதீங்க. இன்னும் இரண்டு மாசத்துல என் கதை முடிஞ்சிடும். நீங்க கடனாளியாக வேண்டாம். நான் செத்த பிறகு பிள்ளைங்களை நல்லா கவனிச்சுக்கோங்க'' என்றவளிடம்,
""ஏய் உனக்கு .. அறிவில்லையா? எத்தனை தடவை சொல்றது, கேன்சர் வந்தவங்க எல்லாரும் செத்திடுவாங்களா? இப்போ உள்ள நவீன மருத்துவ வசதியில் குணப்படுத்திவிடலாம் வாய மூடு'' என சத்தம்போட ஆரம்பித்தார். 


அவர் கத்திய சத்தம் கேட்டு தாதியர் அறையிலிருந்து விரைந்து வந்த ஆர்த்தி, 
""சத்தம் போடாதீங்க அங்கிள், அவுங்க ஏதோ விரக்தியில் பேசுறாங்க, நான் பேசுறேன்'' என்றும் தனம்மா கணவர் ரகுவை சமாதானப்படுத்திவிட்டு. 
""அம்மா யார் சொன்னது இரண்டு மாசத்துல செத்துடுவீங்கன்னு ஆபரேஷன் முடிஞ்சி, ஹீமோ தெரபி சிகிச்சை எல்லாம் ஒழுங்கா எடுத்தா நல்லா குணமாயிடும். உங்க பேரப்பிள்ளைங்க கல்யாணம் வரைக்கும் இருப்பீங்க'' என்றாள்.
""அந்த ஆசையெல்லாம் இல்லை, என் பொண்ணு கல்யாணம் வரை இருந்தாலே போதும்மா, நான் என்ன பாவம் செய்தேன்'' என மகளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
""எனக்கு நிறைய வேலை இருக்கு முடிச்சிட்டு வந்து பேசுறேம்மா'' என சொல்லிவிட்டு மற்ற நோயாளிகளை கவனிக்கச் சென்று விட்டாள் ஆர்த்தி. 
நான்கு மணி நேரம் கழித்து காப்பி இடைவேளையின் போது காப்பி கப்பை தூக்கிக் கொண்டு தனம்மாவின் படுக்கைக்கு அருகே அமர்ந்தாள். அவள் வந்தது கூட தெரியாமல் எங்கோ வெறித்தபடி இருந்த தனம்மாவை, ஆர்த்தியின் ""அம்மா, அம்மா'' என்ற அன்பான அழைப்பைக் கேட்டு உற்சாகமாய் எழுந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


"" ஏம்மா அப்படி பாக்குறீங்க'' என்றவளிடம், ""ஒண்ணுமில்லை இனி எத்தனை நாளைக்குப் பார்க்கப்போறேன்?'' என்று சொல்லும்போதே கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
""இப்படியே பேசிட்டு இருந்தீங்க இந்த பக்கமே வரமாட்டேன். நோர்மாவைத்தான் உங்களை கவனிக்க போடச் சொல்லப் போறேன்'' என்றதும் ஆர்த்தியோடு சேர்ந்து தனம்மாவுக்கும் சிரிப்பு வந்தது. 
""உங்களுக்கு எப்படி விளக்கினாலும் புரியாது. வாங்க என் கூட'' என்று குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றாள், அங்கு வலியை தாங்கிக் கொண்டு படுத்திருந்த சிறுவர்களைப் பார்த்ததும், தான் எவ்வளவோ மேல் என தோன்றியது தனம்மாவிற்கு.
""இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தனர், இவர்களே வலியையும், சிகிச்சையையும் தாங்கும்போது உங்களால முடியாதா?'' என்றாள். 
தொடர்ந்து, ""டாக்டர் சிகிச்சையின்போது ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி விளக்கினார் என்றால், நீங்கள் மனதளவில் பக்குவப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இதற்கு மேலும் ஆபரேஷன் வேண்டாம் முடி கொட்டும், தோலில் மாற்றம் ஏற்படும் பார்க்க சகிக்காது என்றால், கடைசி அஸ்திரம் இதுதான். வாங்க என் கூட'' என்று தாதிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த லிடியாவை கொஞ்சநேரம் வெளியில் இருக்கும்படி கேட்டுக் கொண்டாள்.
அவள் சென்றபின் கதவைச் சாத்திவிட்டு தன் சட்டை பொத்தான்களை கழட்ட ஆரம்பித்தாள். தனம்மாள் அதிர்ந்து போய் ""ஏய் என்ன பண்றே?'' என்ற கத்தலை பொருட்படுத்தாமல், ஆர்த்தி உள்ளாடையையும் கழட்ட ஆரம்பித்தாள். பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உள்ளாடையைக் கழட்டியதும், ஒரு மார்பகம் அறுவைச் சிகிச்சையால் அகற்றப்பட்டிருந்த கோரக்காட்சியைப் பார்த்ததும் தனம்மாள்அதிர்ந்தாள். 
""உனக்குப் போயா இப்படி?'' என குழறிக்குழறி கேட்டாள்.


""இப்போ உங்களுக்கு தைரியமா? மூன்றாண்டுகளுக்கு முன் எனக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது, ஆபரேஷன், சிகிச்சைக்குப் பிறகு நான் உயிரோடதான் இருக்கேன். உங்களுக்குப் புரிய வைக்கத்தான் என் ஆடையைக் கழட்டினேன். ஒரே சமயத்தில் மார்பகம், ஓவரி, கர்ப்பப்பை எல்லாம் ஒட்டுமொத்தமாக எடுத்துவிட்டனர். இதைக் காரணம் காட்டி நிச்சயித்த திருமணம் நின்றுவிட்டது. அதிர்ச்சியில் உறவு என்றிருந்த அம்மாவும் இறந்துவிட்டார். இப்போ எனக்கிருக்கும் ஒரே ஆறுதல் என் தாதி வேலை தான்'' என்றாள்.
மேலும் அவள், ""உங்களுக்கு குடும்பம் இருக்கு, செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு, கொஞ்சநாள் கஷ்டம்தான் சிகிச்சைக்குப் பிறகு நன்றாய் இருப்பீங்க. உங்க குடும்பத்தினரோடு நானும் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன்'' என்றாள். தனம்மா ஆபரேஷனுக்கு சம்மதித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. 
ஆர்த்தி பெற்ற மகளைவிட அதிகமாக கவனித்துக் கொண்டாள். 


தனம்மா சிகிச்சையின்போது வாந்தி, வாந்தியாக எடுத்தாலும், உடம்பில் தெம்பு வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஏதாவது சாப்பிட வைத்தாள் ஆர்த்தி. 
ஒரு வழியாக ஆறு டோசேஜும் போட்டு முடிந்தது. அத்தனை முறையும் செத்துப் பிழைத்தாள் தனம்மா. அவள் தோற்றம் மாறியது. முடி கொட்டி தலை மொட்டையானது. கை, கால், தோல் உறிந்து சொறி பிடித்தமாதிரி மாறியது. 
தனம் மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதைப் பார்த்து, ஆர்த்தி "" எனக்கும் இப்படித்தாம்மா இருந்தது, ஆறு மாசத்துல பழையபடி ஆகிடுவீங்க'' எனச் சொல்லி அவளை மன உளைச்சலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொண்டாள். ஒரு வழியாக சிகிச்சை முடிந்தது. 
மருத்துவர் சோதித்துவிட்டு ""கேன்சர் செல்கள் அழிந்துவிட்டன. இருந்தாலும் மாதம் ஒருமுறை செக்கப் வரணும்'' என்றார். மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றாள் தனம்மா. ஆர்த்தி அடிக்கடி தனம்மா வீட்டிற்குச் சென்று வந்தாள். அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியானாள். 
அப்போதெல்லாம் ""உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்'' என புலம்புவாள்.
""நீங்க ஏதாவது செய்யணும்னு நினைத்தால் புதுசா வர்ற கேன்சர் நோயாளிகளிடம் உங்கள் அனுபவத்தைச் சொல்லி அவர்களை சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளச் செய்யுங்க'' என்றாள். அன்றிலிருந்து தேவைப்படும் போதெல்லாம் ஆர்த்தி அழைக்கும் போதெல்லாம் மருத்துவமனைக்குச் சென்று தன் சேவையை செய்கிறாள் தனம்மா. 


இப்படி பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த தனம் அழைப்புமணி சத்தம் கேட்டு கதவைத் திறக்க, மொட்டை தலையுடன் ஆர்த்தி நின்று கொண்டிருந்தாள். 
""ஏய் இது என்ன புது ஸ்டைல் பிக்பாஸ் ஆர்த்தி மாதிரி'' என கேட்கவும், ஆர்த்தி பின்னால் மறைந்திருந்த திவ்யா ஓவியா ஸ்டைலில் கிராப் தலையுடன் இடுப்பு வரை இருந்த முடியை வெட்டி வந்து நின்றாள். கேன்சர் சிகிச்சையின்போது முடி கொட்டுபவர்களுக்கு, "விக்' செய்வதற்காக முடியைத் தந்திருக்கிறார்கள் இருவரும்.
எதுவும் திட்டாமல் ""உள்ளே வாங்க'' என்றாள். ""அடுத்த முறை "பிங்க் ரிப்பன் கார்னிவலு'க்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க'' என்றாள்.

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.