Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் அந்த இரண்டு பிரதான வேட்பாளர்கள்?

Featured Replies

யார் அந்த இரண்டு பிரதான வேட்பாளர்கள்?

 

அடுத்த ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு இன்னும் ஒன்­றரை வரு­டங்கள் இருக்­கின்ற நிலையில் தற்­போதே அர­சியல் கட்­சி­களின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் தொடர்­பான காய்­ந­கர்த்­தல்­களும் அர­சியல் நகர்­வு­களும் மிகத்­தீ­வி­ர­மாக ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டன. ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­மாக இருந்தால் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு இறு­திப்­ப­கு­தியில் அதற்­கான அறி­விப்பு செய்­யப்­ப­ட­வேண்டும். அப்­ப­டிப் ­பார்த்­தாலும் கூட இன்னும் 18 மாதங்கள் அதற்­காக இருக்­கின்­றன. ஆனால் இவ்­வ­ளவு குறிப்­பி­டத்­தக்க நீண்­ட­காலம் இருந்தும் கூட தற்­போதே அனைத்துத் தரப்­பி­னரும் அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் பாரிய கவனம் செலுத்த ஆரம்­பித்து விட்­டனர்.

இது ஒரு ஆரோக்­கி­ய­மான விடயம் இல்­லா­வி­டினும் கூட அர­சியல் கட்­சிகள் இது­ தொ­டர்பில் திட்­ட­மிட்டு அர­சியல் நகர்­வு­களை முன்­னெ­டுப்­பதை நாம் தவ­றெனக் கூற முடி­யாது. அர­சியல் கட்­சிகள் என்­பவை அடுத்த தேர்­தலில் ஆட்­சியைப் பிடிப்­ப­தற்கு அர­சியல் வியூ­கங்­களை அமைப்­பது இயல்­பா­ன­தாகும். அந்­த­ வ­கையில் தற்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியும் மஹிந்த தரப்­பி­லான கூட்­ட­ணியும் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ளர்கள் யார் என்­பது தொடர்பில் பாரியளவில் ஆராய்ந்து வரு­கின்­றன.

 தற்­போ­தைய சூழலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கோத்­த­பாய ராஜ­பக் ஷ, பஷில் ராஜ­பக் ஷ, சமல் ராஜ­பக் ஷ, ஆகி­யோரின் பெயர்கள் மிகப் பிர­ப­ல­மாகப் பேசப்­பட்டு வரு­கின்­றன. அதே­போன்று மாற்று வேட்­பா­ளர்கள் தொடர்­பிலும் ஒரு சில தரப்­பி­னரால் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எவ்­வா­றெ­னினும் மேற்­கு­றிப்­பிட்ட 6 வேட்­பா­ளர்கள் தொடர்­பா­கவே தற்­போது மிகவும் பர­ப­ரப்­பாக தென்­னி­லங்கை அர­சியல் களத்தில் விவா­திக்­கப்­பட்டு வரு­கின்­றது. இங்கு முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனில் மேற்­கு­றிப்­பிட்ட எந்­த­வொரு அர­சி­யல்­வா­தியும் இது­வரை தான் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டுவதாக அறி­விக்­க­வில்லை என்­ப­தாகும்.

ஆளும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிர­தான கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டுவார் என பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­துடன் அது­ தொ­டர்­பான கருத்­துக்­களும் அவ்­வப்­போது கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளினால் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. நான் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டுவேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இது­வரை கூற­வில்லை.

ஆனால் அவரின் அர­சியல் காய்­ந­கர்த்­தல்­க­ளையும் வியூ­கங்­க­ளையும் பார்க்­கும்­போது அவர் அடுத்த தேர்­தலில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்கத் தயா­ரா­கி­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இதற்­காக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை அதன் அடி­மட்­டத்­தி­லி­ருந்து பலப்­ப­டுத்தும் செயற்­பாட்டில் கட்­சி­யினர் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

மறு­புறம் சஜித் பிரே­ம­தா­ஸவும் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் போட்­டி­யி­டு­வதே சிறந்­தது என கட்­சியின் ஒரு­சிலர் கூறி­வ­ரு­கின்­றனர். எனினும் இந்த விட­யத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கு­மி­டையில் பாரிய முறுகல் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டி­யி­டட்டும் என்ற நிலைப்­பாட்டிலேயே அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ இருக்­கின்­றாரா என்ற சந்­தே­கமும் அர­சியல் அவ­தா­னிகள் மத்­தியில் ஏற்­ப­டு­கின்­றது.

எனினும் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளரை தெரி­வு­செய்­யும்­போது கட்­சி­யினர் காலி­மு­கத்­தி­டலில் ஒன்­று­கூடி வாக்­கெ­டுப்பை நடத்தி வேட்­பா­ளரைத் தெரி­வு­செய்­ய­வேண்­டு­மென கடந்த ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியின் மே தினக்­கூட்­டத்தில் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார். ஆனால் அதற்­குப்­பின்­ன­ரான கடந்த இரு மா­த­கா­லத்தில் அவர் இந்த விட­யத்தில் அதிகம் எதுவும் பேச­வில்லை.

எனவே அடுத்த தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிடும் சாத்­தியம் அதிகம் காணப்­ப­டு­கின்­றது. தற்­போது ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்­தி­ருக்கும் சிறு­பான்மைக் கட்­சி­களும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு அளிப்­ப­தற்­கான பச்­சைக்­கொ­டியைக் காட்­டி­யி­ருப்­ப­தா­கவே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. காரணம் எதிர்­வரும் பிர­தான தேர்­தல்­களில் பிர­தான கட்­சி­களின் வெற்­றிக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

தமிழ், முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு இல்­லாமல் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வது என்­பது மிகவும் கடி­ன­மா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. எனவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ராயின் சிறு­பான்மை மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பாரிய முயற்­சியில் இறங்­குவார். இதே­வேளை மஹிந்த தரப்­பிலும் மைத்­திரி தரப்­பிலும் கூட அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலுக்கான பாரிய அர­சியல் நகர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் தற்­போது வெறு­மனே 23 பேருடன் தேசிய அர­சாங்­கத்தில் அக்கட்சி அங்கம் வகிக்­கின்­றது. அந்த 23 பேரின் நிலைப்­பா­டா­னது அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யி­ட­வேண்டும் என்­ப­தாகும். ஆனால், தான் அடுத்த தேர்­தலில் கள­மி­றங்­கு­வது தொடர்­பாக மைத்­தி­ரி­பால சிறி­சேன இது­வரை எந்­தக்­க­ருத்­தையும் வெளி­யி­ட­வில்லை. எனினும் அண்­மையில் கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்­வு­பெ­ற­மாட்டேன் என அறி­வித்­தி­ருந்தார்.

எப்­ப­டி­யி­ருப்­பினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா என்­பது குறித்து இது­வரை உறு­தி­யான நிலைப்­பா­டுகள் எவையும் அறி­விக்­கப்­ப­டாத நிலை­மையே நீடிக்­கின்­றது. இது இவ்­வா­றி­ருக்க கூட்டு எதி­ர­ணியின் சார்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கு­ப­வர்கள் தொடர்­பி­லேயே நாட்டில் பர­ப­ரப்­பாக பேசப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக மஹிந்த தரப்பில் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் பெயரும் பஷில் ராஜ­ப­க் ஷவின் பெயரும் மிகப் ­பி­ர­ப­ல­மாக பேசப்­பட்டு வரு­கின்­றன.

கோத்­த­பாய ராஜ­பக் ஷ அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குத் தயா­ரா­கி­யி­ருப்­ப­தற்­கான சமிக்­ஞைகள் தென்­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இவர் அதற்­காக பல்­வேறு வியூ­கங்­களில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. குறிப்­பாக வர்த்­த­கர்கள், தொழில்சார் நிபு­ணர்கள், தேரர்கள் உள்­ளிட்­டோரை கோத்­த­பாய ராஜ­பக் ஷ அடிக்­கடி சந்­தித்து வரு­வ­துடன் தனது எதிர்­கால பொரு­ளா­தாரத் திட்­டங்கள் தொடர்­பா­கவும் அவ்­வப்­போது உரை­யாற்­றி­வ­ரு­கின்றார்.

அது­மட்­டு­மன்றி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அனு­மதி வழங்­கினால் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான அமெ­ரிக்கப் பிர­ஜா­வு­ரி­மையை தான் கைவி­டத்­த­யா­ராக இருப்­ப­தாக அண்­மையில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ கூறி­யி­ருந்தார். அதே­நேரம் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் மற்­று­மொரு சகோ­த­ர­ரான பஷில் ராஜ­ப­க் ஷவும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா என்­பது தொடர்பில் கருத்­துக்கள் எழ ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. அவரும் பல்­வேறு கூட்­டங்­களில் பங்­கேற்று மஹிந்த பெய­ரி­டு­ப­வரே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வருவார் எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் மஹிந்த தரப்பில் இருக்­கின்ற கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்கும் பஷில் ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டையில் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் பனிப்போர் நில­வு­வ­தாகத் தக­வல்கள் வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. எனினும் இதனை பஷில் ராஜ­பக் ஷ மறுத்­தி­ருந்தார்.

அண்­மையில் இது­தொ­டர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த பஷில் ராஜ­ப­க் ஷ,­"எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுக்­கு­மி­டையில் நெருக்­கடி நில­வி­வ­ரு­வ­தாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் அவருக்­கு­மி­டையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையுமில்லை. நாங்கள் இரு­வரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­கின்றோம். எப்­ப­டி­யி­ருப்­பினும் ஜனா­தி­பதி தேர்தல் வரும்­போது யார் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதை மஹிந்த ராஜ­பக் ஷ தீர்­மா­னிப்பார். மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வையே மக்கள் விரும்­பு­கின்­றனர். எனவே மஹிந்த­ ரா­ஜ­பக் ஷ யாரை கள­மி­றக்­கு­கின்­றாரோ அவரே வேட்­பா­ள­ராக வருவார். அவரின் வெற்­றிக்­காக நாங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம். மாறாக எனக்கும் எனது சகோ­தரர் கோத்­த­பா­ய­வுக்­கு­மி­டையில் எந்­தப்­பி­ரச்­சி­னையுமில்லை. நாங்கள் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம். நமக்­கி­டையில் பிரச்­சி­னை­யி­ருப்­ப­தாக பொய்ப்பிர­சாரம் செய்­கின்­றனர். நாங்கள் புரிந்­து­ணர்­வு­டனும் ஒற்­று­மை­யு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம்", என்று தெரி­வித்­தி­ருந்தார்.

எப்­ப­டி­யி­ருப்­பினும் யார் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதை இது­வரை மஹிந்த ராஜ­பக் ஷ பகி­ரங்­க­மாக அறி­விக்­காமல் இருக்­கின்றார். கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் சிறு­பான்மை வாக்­கு­களைப் பெறு­வதில் சிக்கல்கள் ஏற்­படும் என மஹிந்த எண்­ணு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மறு­புறம் பஷில் ராஜ­ப­க் ஷ­வுக்கு சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களைப் பெற முடி­யு­மாக இருந்­தாலும் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் அதி­க­ளவு வாக்­கு­களைப் பெறு­வதில் சிக்­கல்கள் இருப்­ப­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

எனினும் கடந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மஹிந்த தரப்பு பெற்ற வெற்­றியில் பஷில் ராஜ­ப­க் ஷவின் பாரிய வியூகக் கட்­ட­மைப்பு முக்­கி­ய­மான பங்­க­ளிப்பை செலுத்­தி­ய­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. எனவே மஹிந்த ராஜ­ப­க் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ மற்றும் பஷில் ராஜ­பக் ஷ ஆகி­யோ­ருக்­கி­டையில் ஒரு­வரைத் தெரிவு செய்­வதென்பது ஒரு நெருக்­க­டி­யான விட­ய­மாக அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போ­து­ கூட கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிப்­போரில் ஒரு தரப்­பினர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வு­டனும் மற்­றொரு தரப்­பினர் பஷில் ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து செயற்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இரு தரப்­பினர் மத்­தி­யிலும் பல்வேறு கருத்­துக்கள் வெளிவர ஆரம்­பித்­துள்­ளன.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் தேர்­த­லுக்கு இன்னும் 18 மாதங்கள் இருக்­கின்ற சூழலில் தற்­போதே போட்டி சூடு­பி­டிக்க ஆரம்­பித்து விட்டது. இங்கு சிறு­பான்மை மக்கள் மிகவும் சிந்­தித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. தமிழ் பேசு­கின்ற மக்கள் இந் நாட்­டுக்கு சுதந்­திரம் கிடைத்­த­தி­லி­ருந்தே பல்­வேறு விட­யங்­களில் ஏமாற்­றப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றனர். தமது அர­சியல் விதியைத் தீர்­மா­னிப்­ப­தற்­கான தீர்­வுத்­திட்டம் ஒன்றை பெற்­றுக்­கொள்­வதில் தமிழ் பேசும் மக்கள் வர­லாறு முழு­வதும் ஏமாற்­றப்­பட்டே வந்­தி­ருக்­கின்­றனர்.

அது­மட்­டு­மன்றி கடந்த காலத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வரை நீதி – நியாயம் கிடைக்­க­வில்லை. எனவே அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் மிகவும் தீர்க்­க­மாக சிந்­தித்து தமது வாக்­கு­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அவர்கள் முன்­வ­ர­வேண்டும். தமது வாக்­குகள் வெற்­றியைத் தீர்­மா­னிக்கும் வகையில் தீர்க்­க­மா­ன­தாக அமை­வ­தற்­கான வியூ­கங்­களை தமிழ் பேசும் மக்­களின் கட்­சிகள் அமைத்­துக்­கொள்­ள­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எது எப்­ப­டி­யி­ருப்­பினும் பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளினால் தமிழ் பேசும் மக்­களின் அல்லது சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றிபெறுவது மிகவும் கடினமானதாகும். எனவே இவ்வாறான ஒரு தேவை பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இருப்பதன் காரணமாக அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எக்காரணம் கொண்டும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் எதிர்வரும் தேர்தல்களில் வீணடிக்கப்பட்டு விடக்கூடாது. இந்த விடயத்தில் சிறுபான்மை மக்களின் தலைவர்கள் மிகவும் சிந்தித்துச் செயற்படவேண்டியது அவசியமாகும். யார் என்ன கூறினாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகின்றன. எனவே அனைத்து பிரதான வேட்பாளர்களும் தேர்தல் நெருங்கும்போது தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளை நெருங்கி ஆதரவைக் கோருவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் சரியான முறையில் அரசியல் வியூகத்தை அமைக்கவேண்டியது தமிழ் பேசும் மக்களின் தலைவர்களின் பொறுப்பாகும். இந்த விடயத்தில் சிறுபான்மைத் தலைவர்களான சம்பந்தன், ரவூப் ஹக்கீம், ஆறுமுகன் தொண்டமான், மனோ கணேசன், ரிஷாத் பதியூதீன் ஆகியோர் சிந்தித்துச் செயற்படவேண்டியது அவசியமாகும்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகள் சூடுபிடித்துள்ள நிலையில் சிறுபான்மை மக்களும் தமது பலத்தை, செல்வாக்கை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலான அரசியல் வியூகங்களை அமைப்பதற்கு சிறுபான்மை மக்களின் தலைவர்கள் முயற்சிக்கவேண்டும். எப்படியிருப்பினும் அடுத்த ஒன்றரை வருடகாலமானது ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் மிகவும் பரபரப்பாகவும் சூடுபிடிக்கும் வகையிலும் இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியும்.

ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-30#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.