Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்குக!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடையை நீக்குக!

'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது...

கொம்பை மறந்த மாடு.'

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

குத்தீட்டிகளாகக் கொம்புகள் முளைத்திருக்க, தன் நிலை, பலம் அறியாது நுகத்தடியில் பூட்டப்படும் மாடுகளைப் போல் அல்லவா, தொன்மை, வீரம், வரலாறு முதலானவைகளை அறிந்துணராது தமிழர்கள் இன்று உள்ளனர்!

இந்தி(ய), இந்துத்துவ ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விடுபடவும், திராவிட இயக்கத்தின் போலிகளான தேர்தல் அரசிய்ல கட்சிகள் மாயை களினின்றும் விடுபடவும் தமிழ் மக்களுக்காக தமிழர் தேசிய இயக்கம் கண்டார் பழ. நெடுமாறன் அவர்கள். முதலாம் மாநாட்டில், 'தமிழ்நாட்டுக்குத் தன்னுரிமை பெறுவது எமது இலட்சியம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10-02-2002இல் திருச்சியில் தமிழர் இயக்கங்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழ்-தமிழின உணர்வாளர்கள் 20 ஆயிரம் பேர் கூடினர்.

உலகம் முழுவதிலும் தமிழர்கள் எந்த நாட்டிலே வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே இன்னல் நேர்ந்தால், அதனைத் துடைக்க வேண்டிய கடமை தமிழகத்தைச் சேர்ந்த ஆறுகோடித் தமிழர்கள் அனைவருக்கும் உண்டு என்று திட்டமிட்டு - உலகத் தமிழர் பேரமைப்பு அமைப்பினை 20, ,21-07-2002-ல் தொடங்கினார்.

'உலகத் தமிழர் பேரமைப்பு, ஐந்து மீட்புகளைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. மொழி மீட்பு, பண்பாட்டு மீட்பு, வரலாறு மீட்பு, இன மீட்பு, மண் மீட்பு ஆகிய ஐந்து மீட்புள் உடனடியாக நடைபெற்றாக வேண்டும். இந்த மீட்புகள் இல்லாமல் தமிழ் இல்லை; தமிழன் இல்லை' என்று பிரகடனப்படுத்தினார்.

தமிழகத் தமிழர்கள் மட்டுமன்றி, உலகத் தமிழர்களும் இந்த உரிமைப் பிரகடனத்தைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டனர்.

இந்நிலையில் மைய, மாநில பார்ப்பன அரசுகள் அதிர்ச்சிக்குள்ளாயின.

அய்யா பழ. நெடுமாறன் அவர்களை பொடாச் சட்டத்தின் கீழ் 1-8-02 அன்று கைது செய்தனர். மற்றும் கா. பரந்தாமன், சுப.வீ., பாவாணன், மருத்துவர் தாயப்பன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

13-8-2002ஆம் நாளன்று 'தமிழர் தேசிய இயக்க'த்தையும் தடை செய்தனர்.

நாடு முழுவதும் பொடா சட்டம் கண்டிக்கப்பட்ட நிலையில், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தலைவர்கள் பிணையில் வெளியே விடப்பட்டுள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படவில்லை, தொடர்கிறது.

இந்நாளில் தமிழகத்தில் கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறை ஆட்சியில் ஏறியிருக்கிறார். பதினேழு ஆண்டுகள் முதல்வராக, தமிழினத் தலைவராகக் கருதப்படும் கலைஞரும் தமிழர் தேசிய இயக்கத்தின் மீதனா தடையையும், முழுமையாக பொடாவையும் விலக்கி வைக்க முன்வரவில்லையே, ஏன்?

அறநெறிப் பயணம், திருச்செந்தூர் கொலை விசாரணை, தங்கவயல் பயணம், காவிரி உரிமைப் பிரச்சாரப் பயணம், கண்ணகி கோயில் தமிழர்களுக்கே சொந்தம், மூணாறு தமிழர் வாழ்வுரிமை, தமிழர் தொழில் வணிக உரிமை, தமிழ் மண் மீட்புப் பயணம், தமிழர் சுதேசிப் பிரச்சாரப் பயணம், வழிபாட்டு மொழி வாக்கெடுப்பு, நீலகிரி மண்-மரம்-கொள்ளை எதிர்ப்பு போன்ற பல்வேறு இயக்கங்களை நடத்தியவர் பழ. நெடுமாறன் அவர்கள்.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கியதை எதிர்த்து ஒரு கோடிக்கு மேல் கையெழுத்து இயக்கம் நடத்தி மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீ:ட்டுக்கும் ஏற்பாடு செய்தவர் பழ. நெடுமாறன் அவர்கள். அம்மேல் முறையீட்டில் நான்கு பேர் தவிர்த்த ஏனையோர் அனைவரும் விடுதலை பெற்றனர். அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அல்லவா? இந்நால்வரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது அல்லவா?

நடிகர் ராஜ்குமாரை சந்தன வீரப்பனிடமிருந்து மீட்டு வரவில்லை எனில் கர்நாடகத் தமிழர்களின் கதி என்னவாயிருக்கும்?

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஆந்திர குப்பம் அணைக்கட்டுப் பிரச்சினை எதுவாயிருப்பினும் நடுநிலையான முடிவெடுத்து மக்களிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஊட்டி வருபவர், பழ. நெடுமாறன் அவர்கள்தானே!

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு வெளிப்படையான ஆதரவு அளித்து, தனித் தமிழீழமே தீர்வு என்று தெளிவுடன் அறிவித்துச் செயல்படுபவர்,

பழ.நெடுமாறன் அவர்களைத் தவிர வேறு எவர் உளர்?

சிங்கள இனவெறிக் கழுகுகளின் கூரிய நகங்களிலிருந்து ஈழத்தமிழரைப் பாதுகாக்க நாளும் சிந்தனையும் செயலும் கொண்டிருப்பவர் பழ. நெடுமாறன் அவர்கள் அல்லவா?

உணர்வுள்ள உள்நாட்டுத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் நெஞ்சில் நெடுமாறன் தனி இடம் பெற்றுள்ளார்.

கொள்கை வெறி, போர்க்குண அமைப்புத் திறன் இவற்றைச் சார்நதும் மலிவான உத்கிளை மறுதலிப்பதும் அவர் கடைப்பிடிக்கும் அரசியல் அறமாகும்.

'மலையில் விழுந்த மழைத் துளிகள் கற்களோடு மல்லுக்கட்டி, மணலை அறுத்து ஆறாகத் தனக்கொரு வழி அமைத்துக் கொள்வதுபோல, நெடுமாறன் அவர்கள் தமிழக அரசியலில், (தேர்தல் அரசியலிருந்து விலகி) தமக்கென்று தனி அரசியல் பாதையை வகுத்துக்கொண்டிருக்கிறார்.

பிரதமர் இந்திராகாந்தியை வன்முறைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றியவர். இந்திராகாந்தி அவர்களால் 'என் அருமை மகன்' என்று அழைக்கப்பட்டவர், நெடுமாறன்.

கல்வி வள்ளல் காமராசர் அவர்களால் 'மாவீரன்' என்றும், 'அஞ்சா நெஞ்சன்' என்றும் புகழப்பட்டவரும் நெடுமாறன் அவர்களே!

தமிழுக்கும் தமிழர் இனத்துக்கும் பாதுகாவலராக, மீட்பராக விளங்கும் அய்யா பழ. நெடுமாறன் மீது 'பொடா'வின் நிழலும் படலாமா?

தமிழர் பண்பாட்டு, கலை, அரசியல் மீட்பு இயக்கமாம், தமிழர் தேசிய இயக்கத்தின் மீது மேலும் தடை நீடிக்கலாமா? - தமிழர்கள் எண்ணம் இது.

தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழர் (தேசிய) இயக்கத்திற்குத் தடையாய் இருக்கக்கூடாது.

- 'யாதும் ஊரே', மார்ச் 2007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.