Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை

[30 - March - 2007]

* இந்திய விமானப்படை புதுடில்லிக்கு தெரிவிப்பு

விடுதலைப் புலிகளுக்குள்ள வான்வழி செயற்பாட்டு திறமை குறித்து அதிகளவு குழப்பமடையத் தேவையில்லையென இந்திய அரசாங்கத்துக்கு கூறியுள்ள இந்திய விமானப்படையினர் எதிர்காலத்தில் ஆகாய மார்க்க பாதுகாப்பு ராடார்களை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தால் அந்த வேண்டுகோள் சாதகமான முறையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்த ராடார்களுடன் தோளிலிருந்து ஏவும் ஏவுகணைகள் (ஐ.ஜி.எல்.ஏ) (IGLA shoulder- tired missiles), நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை (SAM) முறைமைகளையும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய முடியுமென இந்திய விமானப்படை யோசனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய வேளையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த இந்தியா வழங்கியிருந்த இந்திரா II ராடாரானது தொடர்பறச் செய்யப்பட்டிருந்ததை (Switched off) இந்திய அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மற்றொரு இந்திரா II ராடார் இலங்கைப் படையினரால் கிழக்கிற்கு நகர்த்தப்பட்டிருந்தது. தெற்கிலிருந்து இந்த வருடம் அது கொண்டு செல்லப்பட்டது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளம் தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை புதுடில்லி இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆயினும், இரணைமடு, முல்லைத்தீவுப் பகுதிகளில் விமான ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவதையும் இரு நவீன சற்- 143 விமானங்களையும் 2 ஹெலிகொப்டர்களை வைத்திருப்பதையும் புதுடில்லி அறிந்துள்ளது.

கட்டுநாயக்க தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையின் கூட்டுப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேராவுடன் தொடர்புகொள்ள புதுடில்லி முயன்றதாகவும் ஆயினும், இன்னமும் அது கைகூடவில்லையெனவும் `இந்தியன் எக்ஸ்பிரஸ்` பத்திரிகை கூறியுள்ளது.

இதேவேளை, தமிழ் மக்கள் பிரச்சினையென்ற அரசியல் ரீதியில் உணர்வு பூர்வமான காரணத்தால் அதாவது தி.மு.க. ஆதரவுடனான ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கம் ஆட்சியில் இருப்பதால் புதுடில்லியானது வான் பாதுகாப்பு ராடார்களை மட்டும் வழங்குவதோடு மட்டுப்படுத்திக் கொள்ளும் என்றும் கொழும்புக்கு தாக்குதலுக்கான ஆயுதங்களை வழங்கும் திட்டம் டில்லிக்கு இல்லையெனவும் கூறப்படுகிறது. மிக்- 27 விமானங்களை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு இலங்கை முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை புதுடில்லி விநயமாக மறுத்துவிட்டது. ஆனாலும், இந்திரா ஐஐ ராடார்களை இயக்குவதற்கு கொழும்புக்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் உதவி புரிந்து வருவதுடன் மிக்- 27 யுத்த விமானங்களுக்கான பயற்சியையும் இலங்கை விமானப்படையினருக்கு இந்திய விமானப் படையினர் வழங்கியிருந்தனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றபோதும் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்திலிருந்து இந்தியக் குழுவினர் வாபஸ் பெறவில்லை.

இந்தத் தாக்குதலுக்குப் பின்பு யுத்த ஆயுதங்களை விநியோகிக்குமாறு இலங்கை இந்தியாவை கேட்கவில்லை. அதேசமயம் தோளில் வைத்துத் தாக்கும் ஏவுகணையை (ஐ.ஜி.எல்.ஏ.) ஏற்கனவே புதுடில்லி வழங்கியுள்ளது. அதேசமயம் இந்தியாவிடமிருந்து நிலத்திலிருந்து ஆகாயத்தை தாக்கும் ஏவுகணை முறைமையை இலங்கை விரும்பினால் ரஷ்யர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கொழும்பை டில்லி கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில், புலமைசார் சொத்துரிமை மற்றும் பயன்படுத்தும் நடவடிக்கை என்பவற்றுக்கான உடன்படிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தேவை இருப்பதால் ரஷ்யாவுடன் தொடர்பு கொள்ளுமாறு டில்லி கூறியுள்ளது.

இது இவ்வாறிருக்க விடுதலைப்புலிகளின் தாக்குதல் தொடர்பாக இந்திய பாதுகாப்பமைச்சர் ஏ.கே.அந்தோனியும் இந்திய விமானப்படைத்தளபதி எஸ்.பி.தியாகியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது.

இது இவ்வாறிருக்க ராமேஸ்வரம் பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறும் விமானங்களை சுட்டு வீழ்த்த, இந்தியக்கடற்படை விமான எதிர்ப்புப்பீரங்கிகளை பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கா விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகளின் விமானம் பறந்து சென்ற திக்கு இந்திய கடல் எல்லையை ஒட்டியே உள்ளதென்று வெளியான தகவலால் இந்திய கடற்படையும் உஷார் நிலையில் உள்ளது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் விமானங்களை கண்டறியவும், அதை தடுத்து நிறுத்தவும் தேவைப்படும் நடவடிக்கைகளை கடற்படை எடுத்து வருகிறது.

முதல் கட்டமாக ராமேஸ்வரம் கடற்கரையை ஒட்டியுள்ள அரிச்சமுனை பகுதியில் சக்தி வாய்ந்த ராடார் கருவிகளை அமைத்துள்ளது. நடமாடும் தன்மை கொண்ட இந்த ராடார் கருவிகள் இந்திய கடல் எல்லை முழுவதையும் கண்காணிக்கும் திறன் கொண்டவை.

வான் வழியாக மட்டுமன்றி கடல் வழியாக செல்லும் கப்பல்கள், படகுகள் கூட இந்த ராடாரின் கழுகுக் கண்களுக்கு தப்ப முடியாது. `டிஸ் அன்ரனா' போல் இந்த ராடார் கருவிகள் காணப்படுகின்றன. அடுத்தடுத்து 3 வாகனங்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டு அவை அரிச்சமுனை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ராடார் கருவிகள் அமைக்கப்பட்டதையடுத்து தனுஷ்கோடியில் கடற்படை கமாண்டோக்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எந்த அசாதாரண நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். எந்த அதிரடி நடவடிக்கையையும் எதிர் கொள்பவர்கள்.

இவர்களை போல் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறும் விமானங்களை சுட்டு வீழ்த்த நவீன விமான எதிர்ப்பு பீரங்கிகள் அமைக்கவும் கடற்படை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளும், விமான எதிர்ப்பு பீரங்கிகளை ராமேஸ்வரம் பகுதியில் அமைப்பது பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.

புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை

புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை * இந்திய விமானப்படை புதுடில்லிக்கு தெரிவிப்பு

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை நம்ம "குழப்பமுத்து" பன் - கீ - மூன் இந்தியாவை ரொம்ப குழப்பிட்டாரோ?

- கப்பல்பயணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிஞ்சுக்கால் நடையில் தேர்போல் ஆடிவரும் குருத்துக்களையும்

சதைபிளந்து சிசுரத்தம் குடிக்கும் வான்படையின் கொலைவெறிக்கு

துன்பம் நேரவிட்டாமல் சிறகால் அடைகாக்கும் இந்திய அதிகாரமே

நீ மனித உரிமைகளின் கழுத்தை வெட்டும் போது காந்தியத்தை வாய் உச்சரித்து பாவத்தைக் கழுவுகிறதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

09/07/1995 அன்று வணக்கத்தின் தலம் ஒன்று பிணக்காடானது.

141 உயிர்களின் சதைகளை குவித்து வைத்திருந்தது நவாலி தேவாலயம் தலைவிரு கோலமாய்

சிங்கள விமானப்படையின் நரவெறி பசியாறிய கொடுமைக்கு

வெளி உலகு கேள்வி தொடுத்தது

"கோவில் கூரையில் நின்று தன் விமானத்துக்கு குண்டுகள் தீர்க்கப்பட்டனவாம்" என்று அரசு பதில் அளந்தது

எங்கே எம் இரத்தத்தில் ஒருவன் அரசமுகவரியில் இருந்திருந்தால் அவன் கேட்டிருப்பான் இப்படி

"மரணபயத்தில் சரண்புகுந்த பலநூறு மக்கள் தோன்றி இராத விமானியின் கண்களுக்கு எப்படி ஒரு சில புலிகளை துப்பாக்கியுடன் தெரிந்தது.

அத்தனை மக்களில் ஒருவனுக்கு கூட புலிகள் தோன்றி இருந்தால் ஒருவன் கூட சரண்புகுத்திருக்க முடியாதே அந்த இடத்தில்" என்று.

எங்கே தமிழ்நாட்டு அரசு கூட எம்துன்பங்களைக் உரிமையோடு தட்டிக் கேட்கின்ற உள்ளம் கொண்டிருக்கவில்லை.

எம்மரணங்கள் அநுபவிக்கின்ற மரணவதையை விட கொடுமையாக இருப்பது

அரசு கற்பிக்கின்ற காரணங்களை செவி கொள்வதுதான்.

தமிழ்நாட்டு அரசியல் பிரபலங்களின் இரத்தோட்டத்தில் பதவிவெறியே தமிழ் உணர்வுக்கு மேலால் மிதப்பது,

எனவே

எம் அவலங்களின் நீதிகளும் எம்மோடு சேர்த்தே புதைகுழிக்கு அனுப்பப்படுகிறது அனாதரவாக!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ச்செல்வன் அண்ணையும் இதைதானே பல காலங்களாக சொல்லி வருகிறாார்..

இப்ப ஆவது விளங்குதா டின்று பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கட்டமாக ராமேஸ்வரம் கடற்கரையை ஒட்டியுள்ள அரிச்சமுனை பகுதியில் சக்தி வாய்ந்த ராடார் கருவிகளை அமைத்துள்ளது. நடமாடும் தன்மை கொண்ட இந்த ராடார் கருவிகள் இந்திய கடல் எல்லை முழுவதையும் கண்காணிக்கும் திறன் கொண்டவை.

வான் வழியாக மட்டுமன்றி கடல் வழியாக செல்லும் கப்பல்கள், படகுகள் கூட இந்த ராடாரின் கழுகுக் கண்களுக்கு தப்ப முடியாது. `டிஸ் அன்ரனா' போல் இந்த ராடார் கருவிகள் காணப்படுகின்றன. அடுத்தடுத்து 3 வாகனங்களில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டு அவை அரிச்சமுனை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இலங்கை இராணுவம், இந்திய அப்பாவி மீனவர்களைச் சுட்டுப் போட்டு செல்லும் போது இந்த ராடர்களில் இலங்கை அரசாங்கத்தின் கப்பல்கள் தெரியமாட்டாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.