Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க வேண்டுமா? மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி உருவாக வேண்டுமா?

Featured Replies

நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க வேண்டுமா? மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி உருவாக வேண்டுமா?

 

 

Be-a-Hitler-Wendaruwe-Upali-Asgiriye-Dep

 
 
 
 

தெற்­கில் ஒரு தரப்­பி­னர் இலங்­கை­யில் ஹ।ிட்­ல­ரின் ஆட்சி போன்ற ஆட்­சி­முறை உரு­வாக வேண்­டும் என்­கி­றார்­கள். வடக்­கிலோ தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் தலை­தூக்க வேண்­டும் என்று இன்­னொரு தரப்­பி­னர் விரும்­பு­கி­றார்­கள்.

இந்த நிலை தொட­ரு­மா­னால் இந்த இரு தரப்­பி­ன­ரும் தாம் விரும்­பும் விதத்­தி­லான தலை­வர்­களை அடைந்­தி­டக் கூடும்.
உண்­மை­யைக் கூறு­வ­தா­னால் நாட்­டின் பெரும்­பா­லான மக்­கள் குறிப்­பிட்ட இந்த இரு நபர்­க­ளது மீள் வரு­கையை விரும்­ப­வில்லை.

உபாலி தேரர் மற்­றும் அமைச்­சர் விஜ­ய­கலா ஆகிய இவ் இரு வருமே இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திக­தி­யன்று இந்த நாட்டு மக்­கள் வௌிப்­ப­டுத்­திய நல்­லாட்சி அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளையே முன்­வைத்­துள்­ளனர். ஒரு விட­யத்­தைக் கூறும் போது, வேறு ஒரு விட­யத்­தின் உள் அர்த்­தம் வௌித்­தெ­ரி­யா­த­வாறு வௌிக்­கொண்டு வரக் கூடிய பேச்­சுத் திறன் அவர்­க­ளி­டம் இருக்­கி­றது.

 

‘‘கெட்ட செய்­தி­களை கொண்டு வரும் தூதனை எவ­ரும் விரும்­பு­வ­தில்லை’’ என்­றொரு முது­மொழி வழக்­கில் உள்­ளது.

நீங்­கள் ஹிட்­ல­ரா­கவே இருங்­கள்  என கோத்­தா­பா­ய­வுக்கு உபா­லி­தே­ரர் ஆலோ­சனை

கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் இல்­லத்­தில் இடம்­பெற்ற கோத்­த­பா­ய­வின் பிறந்­தாள் வைப­வத்­தில் நல்­லாசி வழங்­கிய வெத­றுவ உபாலி தேரர்’’ பலர் உங்­களை ஹிட்­லர் என வர்­ணிக்­கி­றார்­கள். நீங்­கள் ஹிட்­ல­ரா­கவே இருங்­கள்.

இரா­ணு­வத்­தின் உத­வி­யு­டன் இந்த நாட்­டின் அரச தலை­வர் பத­வியை பொறுப்­பேற்று நாட்டை வழி­ந­டத்­துங்­கள் ’’எனக் கூறி­யுள்­ளார். இந்­தத் தேர­ரின் செய்தி, பொது மக்­க­ளி­ட­முள்ள நல்ல பண்­பு­களை சீர­ழிப்­ப­ தா­கவே, ஒரு ராஜத் துரோகச் செய­லா­கவே அமைந்­துள்­ளது.

ஸ்திர­மில்­லா­மல் தன் எதிர்­கா­லம் என்­ன­வா­கும் என்று தெரி­யா­மலே செயற்­ப­டும் அரசு, எந்த வேளை­யி­லும் பதவி கவிழ்ந்து விடக் கூடும் என்­பதை மக்­கள் அறி­வார்­கள். இந்­தச் செய்­தியை கூறு­ப­வர்­க­ளும் அறி­வார்­கள்.இப்­படி ஹிட்­லர் அல்­லது பிர­பா­க­ரன் என கருத்­துக் கூறி­ய­வர்­களை குறை­கூ­று­வது அல்­லது பதவி விலக்­கு­வது என்­பது ஒரு அர­சி­யல் தந்­தி­ரம்­தான்.

வடக்­குக்­கும் கிழக்­குக்­கும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி ­க­ளின் பிர­சன்­னம் கட்­டா­யம் தேவைப்­ப­டு­கி­றது என முன்­னாள் ராஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா பொது நிகழ்­வொன்­றில் வைத்­துக் கூறி­யுள்­ளார். அத்­து­டன் அவர் இரண்டு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­கள் அமர்ந்­தி­ருந்த மேடை­யிலே இப்­ப­டி­யா­ன­தொரு கருத்தை முன் வைத்­தி­ருந்­தார்.

‘‘வடக்­கில் உள்ள பல பெண்­கள் பெரிய சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யில்­தான் வாழ்ந்து வரு­கின்­ற­னர். அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் 6 வயதுடைய சிறுமி கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால், இப்­ப­டி­யா­ன­தொரு சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருக்­காது என­வும் அவர் கருத்­து­வௌி­யிட்­டி­ருந்­தார். கூட்­டத்தை கவ­ரும் வகை­யில் பொடி வைத்­துப்­பே­சு­வ­தில் கைதேர்ந்­த­வர் இந்த விஜ­ய­கலா.

மறைந்த முன்­னாள் இந்து சமய விவ­கார அமைச்­சர் தியா­க­ராஜா மகேஸ்­வ­ர­னின் மனை­வி­தான் இந்த விஜ­ய­கலா. வடக்­கில் தமிழ் மக்­கள் சுதந்­தி­ர­மாக நட­மா­ட­வும், பிள்­ளை­கள் அச்­சம் எது­வு­மின்றி பாட­சா­லை­க­ளுக்­குச் சென்­று­வ­ர­வும், மீண்­டும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் உரு­வாக வேண்­டு­மென்ற கருத்தை விஜ­ய­கலா முன்­வைத்­தி­ருந்­தார்.

‘‘அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வடக்­கி­லுள்ள தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைக்­கா­மல் இங்கு அவ­ரு­டைய கட்­சியை பலப்­ப­டுத்­து­வ­தில் தான் ஆர்­வம் காட்­டு­கி­றார். மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­க­ளைக் காப்­பாற்­றத் தவ­றி­விட்­டார்’’ என­வும் அமைச்­சர் விஜ­ய­கலா குறிப்­பிட்­டுள்­ளார்.

மகிந்­த­வின் ஊழல் விவ­கா­ரத்தை  திசை­தி­ருப்­பும் முயற்­சியா?  என்ற சந்­தே­கம்

ஆயி­னும் அர­சி­யல் நில­வ­ரங்­கள் சூடு­பி­டித்­தி­ருக்கும் ஒரு பின்­ன­ணி­யில், சீன நிறு­வ­னம் ஒன்­றி­டம் இருந்து 7.6 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்ளை மகிந்த ராஜ­பக்ச முறை­கே­டாக தமது தேர்­தல் பரப்­பு­ரைச் செல­வு­க­ளுக்­கா­கப் பெற்­றுக்­கொண்­ட­தாக நியூ­யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யி­னால் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு விவ­கா­ரம், இந்த அமைச்­சர் விஜ­க­லா­வின் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் பற்­றிய கருத்­துக் கார­ண­மாக திசை­தி­ரும்பி இப்­போது எல்­லோ­ரு­டைய பார்­வை­யும் அமைச்­சர் விஜ­ய­கலா மேல்­தான் விழுந்­துள்­ளது.

அதே­போ­லவே அர்­ஜுன் அலோ­சி­ய­சின் மெண்­டிஸ் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 118பேர் இலஞ்­ச­மாக பணம்­பெற்­றுக்­கொண்­டமை தொடர்­பான விவ­கா­ர­மும் மெல்ல அடங்­கிப் போய்­விட்­டது.

சமீப காலங்­க­ளில் வௌியி­டப்­பட்ட அறிக்­கை­க­ளின் ஊடாக தௌிவா­கும் ஒரு­வி­ட­யம், வடக்­குக் கிழக்கு தமிழ் மக்­க­ளின் இத­யங்­க­ளில் இருந்து இன்­ன­மும் கூட தமிழ் ஈழ விடு­த­லைப் புலி­க­ளது நினை­வு­கள் மறை­ய­வில்லை என்­ப­து­தான்.

நாட்­டில் சமா­தா­னம் உரு­வாகி சகல இன மக்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழ வேண்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டும் சந்­தர்ப்­பத்­தில், இப்­படி தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் மீண்­டும் உரு­வாக வேண்­டும் எனக் கூறப்­ப­டும் போது அது நாட்­டின் சமா­தா­னத்­தை­யும் ஒற்­று­மை­யை­யும் சீர்­கு­லைப்­ப­தாக அமைந்­து­வி­டும்.

கடந்த 70வரு­டங்­க­ளா­கவே எங்­களை ஆண்ட அர­சி­யல்­வா­தி­கள் இப்­படி இன­வா­தத்­தைத்­தூண்டி விட்­டுத்­தான் அர­சி­யல் செய்­துள்­ள­னர்.

எங்­கள் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு. தற்­போது இந்த விஜயகலாவின் விடயம் ­போதும் அர­சி­யல் செய்­வ­தற்கு இந்த விட­யத்­துக்­குச் சார்­பா­க­வும் சிலர் குரல் எழுப்ப, பல அர­சி­யல்­வா­தி­கள், பேரி­ன­வா­தி­கள், மத­கு­ரு­மார் எனப் பல­ரும் இதற்கு எதி­ராக கோஷம் எழுப்­பும்­போது, பொது மக்­க­ளின் மன­தில் இது ஒரு பீதியை உரு­வாக்­கி­வி­டும்.

ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் ஒத்­துப்­போ­காத இரண்டு தலை­வர்­க­ளும், எல்லா விட­யங்­க­ளி ­லும் சர்ச்­சைக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவே இருந்து கொண்டு, ஏதா­வது ஒரு­வி­ட­யத்­தில் ஒரு­வர் மேல் ஒரு­வர் பழி போடு­கின்­ற­னர். இதில் ஒரு­வர் நேர­டி­யாக வௌிப்­ப­டை­யா­கவே தாக்­கு­கி­றார்.

மற்­ற­வர் தனது உத­வி­யா­ளர் ஊடாக அத­னைச் செய்­கி­றார். இப்­ப­டி­யாக இரண்டு தலை­வர்­க­ளும் தங்­க­ளுக்­குள்­ளேயே பிரச்­சி­னை­களை உரு­வாக்­கிக்­கொண்­ட­தன் பய­னாக அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் என்ற விட­யம் கிடப்­பில்­போ­டப்­பட்­டு­விட, அதுவே வடக்­கில் அமை­தி­யின்­மையை உரு­வாக்கி இறு­தி­யில் அமைச்­சர் விஜ­ய­கலா மீண்­டும் விடு­த­லைப்­பு­லி­கள் உரு­வாக வேண்­டும் என்­று கூறும் அள­வுக்கு கடு­மை­யான சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யுள்­ளது.

இது ஒரு பக்­கம் இருக்க, மறு­பக்­க­த்தில் சர்­வா­தி­கா­ரம், அரா­ஜ­கம், இலஞ்­சம், ஊழல்,அதி­கார துஷ்­பி­ர­யோ­கம் என எல்­லா­வற்­றை­யுமே நடத்­திய முன்­னைய அர­சின் ராஜ­பக்ச குடும்­பம், இப்­போது மௌ்ள மௌ்ள தலைத்­தூக்கி தங்­கள் அர­சி­யல் வாழ்க்­கையை மீண்­டும் புதுப்­பிக்க முயல்­கின்­றது.

கோத்­த­பா­ய­வுக்கு தமி­ழர் எவ­ரும்  வாக்­க­ளிக்க மாட்­டார்­கள் என  தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­தன் விமர்­சிப்பு

தமி­ழீழ மக்­கள் விடு­த­லைக் கழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­தன் ‘‘தமிழ் மக்­கள் பொது­வாக கோத்­த ­பா­ய­வுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்­கள். ஆயி­னும் ஒரு சிலர் அவரை ஒரு செயல் வீர­ராக நினைக்­கின்­ற­னர். வடக்­கிற்கோ தெற்­கிற்கோ சொல்­வீ­ரர்­கள் தேவை­யில்லை.செயல் வீரர்­கள்­தான் தேவைப்­ப­டு­கி­றார்­கள்’’ எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

வடக்­கில் இளை­ஞர்­க­ளி­டையே மீண்­டும் பயங்­க­ர­வா­தம் தலைத்­தூக்­கக் கூடிய அடை­யா­ளங்­கள் காணப்­ப­டு­கின்­றன. அத்­து­டன் இந்த இளை­ஞர்­களை தங்­கள் பக்­கம் இழுக்­கும் முயற்சி­யில் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரும் வேறு சில உறுப்­பி­னர்­க­ளும் ஈடு­பட்­டுள்­ள­னர். இந்­தக்­கு­ழு­வில் கடை­சி­யாக இணைந்­துக்­கொண்­ட­வர்­தான் விஜ­ய­கலா. நிலமை கட்­டுக்­க­டங்­கா­மல் போகு­முன்­னர் அரசு தக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­க­வேண்­டும்.

30வருட போர் இந்த நாட்டை கிழிந்த கந்­தல் துணி­போல் ஆக்­கி­விட்­டது. வடக்­கி­லுள்ள மக்­க­ளுக்­குக் குறை­கள் இருக்­கின்­றன என்­பது உண்­மை­தான். அரசு வடக்­கில் சட்­டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­ வும், குற்­ற­வா­ளி ­க­ளைக் கைது­செய்து குற்­றங்­களை கட்­டுப்­ப­டுத்­த­வும் தவ­றி­விட்­டது.

பொரு­ளா­தா­ர­ரீ­தி­யாக பாதிக்­கப்­பட்­டி­ருந்த மக்­கள், அரசு செய்த நல்ல விட­யங்­க­ளைக் கண்டு கொள்­ள­வில்லை. ஆனால் விடு­த­லைப் புலி­கள் இழைந்த பேர­ழி­வு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், மீண்­டும் அவர்­க­ளுக்கு அழைப்பு விடுப்­பது மக்­க­ளுக்கு கேடு விளை­விப்­ப­தா­கவே அமை­யும்.

விஜயகலா­வின் மேடைப்­பேச்­சின் உண்­மைத் தன்மை என்­ன­வென்­றால் வடக்­கில் சட்­ட­மும் ஒழுங்­கும் நிலை நாட்­டப்­ப­ட­வேண்­டும் என்­ப­து­தான். தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் நிர்­வா­கத்­தில் கற்­ப­ழிப்பு,கொலை, கொள்ளை போன்­றவை கேள்­விப்­ப­டாத விட­யம் என்று அவர்­க­ளின் நிர்­வா­கத்­தி­ற­ மையை பாராட்­டி­னாரே தவிர, விஜ­ய­கலா தனி­நாடு கேட்­கவோ, தனி­நாட்­டுக்­காக போராட ஒரு இயக்­கத்­தையோ கேட்­க­வில்லை என்­பது வௌிப்­படை.

இலங்­கை­யில் வாழும் சில தீவி­ர­வாத கொள்கை உடை­ய­வர்­க­ளும், புலம்­பெ­யர்ந்து வௌிநா­டு­க­ளில் வாழும் பெரும்­பா­லான தமி­ழர்­க­ளும், இலங்­கை­யின் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரா­க­வும், தெற்­கில் வாழும் சில குழு­வி­ன­ருக்கு எதி­ரா­க­வும், மன­தில் பெரும் வெறுப்­பு­ட­னேயே உள்­ள­னர். அவர்­கள் மீண்­டும் இலங்­கை­யில் தமி­ழீ­ழப் புலி­கள் இயக்­கம் உரு­வா­வ­தைத்­தான் விரும்­பு­கி­றார்­கள்.

சட்­ட­மும் ஒழுங்­கும் சீர்­கு­லைந்­துள்­ளமை குறித்த பொது­மக்­கள் கவலை

வடக்­கில் இன்று மக்­கள் சமா­தா­ன­மா­க­வும் அமை­தி­யா­க­வும் வாழ்­கின்­ற­னர். விஜ­ய­க­லா­வின் பேச்­சை­யும் உபாலி தேரரது கருத்­துக்­க­ளை­யும் அவர்­கள் சரி­யா­கப் புரிந்­து கொள்ள வேண்­டி­யது மிக அவ­சி­யம். இன்று இலங்கை வாழ் சகல மக்­க­ளுமே நாட்­டின் சட்­ட­மும் ஒழுங்­கும் சீர்­கு­லைந்து கொண்டு போவ­தை­யிட்டு கவ­லை­கொண்­டுள்­ள­னர்.

நாட்­டில் கொலை,கொள்ளை,கற்­ப­ழிப்பு, ஆள்­க­டத்­தல்­போன்ற குற்­றங்­கள் பெரு­கி­விட்­டன. இவற்­றைச் சீர்ப்­ப­டுத்த வேண்­டிய அர­சி­யல்­வா­தி­கள் நித்­தி­ரை­கொள்­வ­து­போல் தெரி­கி­றது.

6வயது பெண்­கு­ழந்தை பாலியல் துஷ் பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை­செய்­யப்­பட்­டது ஒரு பக்­க­மும் 59வய­தான பெண் நோய்­வாய்ப்­பட்டு படுக்­கை­யில் இருந்த தனது கண­வன் கண் எதி­ரி­லேயே கற்­ப­ழிக்­கப்­பட்டு கொலை­செய்­யப்­பட்­டமை, யாழ்ப்­பா­ணத்­தில் மட்­டு­மல்ல இலங்­கை­யின் வேறு எந்­தப் பகு­தி­யில் நடந்­தி­ருந்­தா­லும் கூட இதே போன்­ற­தொரு தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும்.

விஜ­ய­கலா குறிப்­பிட்ட இன்­னொரு விட­யம் ‘‘வடக்­கில் இந்த அரசு எந்­த­வி­த­மான அபி­வி­ருத்தி வேலை­களை முன்­னெ­டுத்­தது என்­பது குறித்து எது­வும் தெரி­ய­வில்லை. ஆனால் இந்த அரசு அப­க­ரிக்­கப்­பட்ட எங்­கள் மக்­க­ளின் காணி­களில் பலவற்றை அவர்­க­ளி­டம் மீள்­அ­ளித்­துள்­ளது. அதற்கு அர­சுக்கு நன்றி கூற­க் கட­மைப்­பட்­டுள்­ளேன். இதைத் தவிர, இந்த அரசு வடக்­குக்கு எது­வுமே செய்­ய­வில்லை’’ என்­றார் விஜ­ய­கலா.

சிலர் விஜ­ய­க­லாவை பதவி வில­கச்­செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்­டும் என­வும் கூறு­கின்­ற­னர். விஜ­ய­கலா நில­மையை உணர்ந்து புத்­தி­சா­லித்­த­ன­மாக பேசி­யி­ருக்­க­வேண்­டும். உணர்்ச்சி வசப்­பட்டு, மன அழுத்­தம் கார­ண­மா­க­வே­தான் அப்­ப­டி­யான வார்த்­தை­களை வௌியிட்­ட­தாக கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள இய­லாது. எரி­கின்ற நெருப்­பில் எண்­ணெய் வார்த்­தது போல் அவ­ரு­டைய இந்த மேடைப்­பேச்சு அமைந்­து­விட்­டது.

தமிழீழ வி­டு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் சிறு­வர்­க­ளை­யும் படை­யில் சேர்த்து போரின்­போது ஆயு­தங்­க­ளைக் கையில் ஏந்­தச் செய்­த­கொ­டூ­ரம் அவ­ருக்கு மறந்­து­விட்­டதா?

விஜ­ய­கலா பதவி இறக்­கப்­ப­டக்­கூ­டாது. அவர் மன்­னிக்­கப்­பட்டு அவர் செய்த பிழையை அவர் உண­ர­வேண்­டும். அவர் பேசி­யவை தெற்­கி­லும் கூட­ந­டக்­கக் கூடும். வடக்­கி­லும் கிழக்­கி­லும் வாழும் ஒரு சில தொகுதி இளை­ஞர்­க­ளின் மன­தில் இருந்து தமி­மீழ விடு­த­லைப்­பு­லி­கள் இயக்­கம் இன்­னும் கூட மறை­ய­வில்லை. நாங்­கள் விரும்­பி­னா­லும், விரும்­பா­விட்­டா­லும் இது­தான் யதார்த்த பூர்­வ­மான உண்மை.

வெத­ருவ உபாலி தேரர் கோத்­த­பா­வுக்கு கூறிய ஹிட்­லர் கதை­யைத்­தான், விஜ­ய­க­லா­வும் யாழ்ப்­பா­ணத்­தில் மேடை­யில் பகி­ரங்­க­மாக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் பற்­றிக் கூறி­யுள்­ளார். அப்­ப­டி­யா­னால் தவறு செய்­ப­வர்­களை ஹிட்­ல­ரைப்­போல அல்­லது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளைப் போல அவர்­க­ளுக்­கென அவர்­க­ளா­லேயே உரு­வாக்­கப்­பட்ட நஞ்­சு­வாயு அறை­யிலோ அல்­லது மின்­கம்­பங்­க­ளிலோ தண்­டனை கொடுக்­கப்­ப­டு­வதை இவர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள் போ­லும்.

http://newuthayan.com/story/09/நாட்டில்-மீண்டும்-விடுதலைப்-புலிகள்-தலைதூக்க-வேண்டுமா-மீண்டும்-ஹிட்லரின்-கொடுங்கோல்-ஆட்சி-உருவாக-வேண்டுமா.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.