Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான்: நாடு திரும்பியவுடன் நவாஸ் ஷெரீஃப் கைது

Featured Replies

பாகிஸ்தான்: நாடு திரும்பியவுடன் நவாஸ் ஷெரீஃப் கைது

ஊழல் குற்றச்சாட்டில் சமீபத்தில் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார்.

நவாஸ் நாடு திரும்புவதை ஒட்டி குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர். Image captionநவாஸ் நாடு திரும்புவதை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளோர்.

அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்த நவாஸ் ஷெரீஃப் விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கினார். முன்னதாக, அவரது வருகையை ஒட்டி கூடுவதைத் தடுப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக நவாஸ் ஷெரீஃப் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக தமது பயண வழியில் அபுதாபியில் இறங்கியபோது பிபிசியிடம் பேசிய நவாஸ், மக்களை அரசு கடுமையாக ஒடுக்கிவருவதால், இந்தப் பின்னணியில் தற்போது பாகிஸ்தானில் நடக்கவுள்ள தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறினார்.

நவாஸ் நாடு திரும்பும்போது ஏற்படும் நிலைமையை கட்டுப்படுத்த ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/global-44826875

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நவாஸ் செரிப் – மகள் மரியம் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நவாஷ் ஷெரீப் மற்றும் மரியம் ஆகியோர் ஹெலிகொப்டர் மூலம், இஸ்லாமாபாத்திலுள்ள அதியாலா சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- கட்சி தலைவர்கள் பலரையும் கலவரங்களை முன்னெடுப்பார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

nawaz-sharif-.jpg?resize=650%2C400

 

 

http://globaltamilnews.net/2018/87463/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

லண்டனில் இருந்து லாகூர் திரும்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் கைது: ஆதரவாளர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றம்

 

 
14chskonawaz

அபுதாபி விமான நிலையத்தில் காத்திருந்த நவாஸ் ஷெரீப், மரியம்.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும் அவரது மகள் மரியமும் நேற்று நாடு திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் இறங்கிய அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 1990-களில் பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனம் மூலம் லண்டனில் சொத்துகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. நவாஸ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2017 ஜூலை 28-ம் தேதி நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

 

லண்டன் சொத்து வழக்கு

இந்தப் பின்னணியில் லண்டனில் சட்டவிரோதமாக 4 வீடுகளை வாங்கிய வழக்கில் தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்காத குற்றத்துக்காக மரியத்தின் கணவர் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நவாஸின் மனைவி குல்சூம் புற்றுநோய் பாதிப்பு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக நவாஸும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் முகாமிட்டிருந்தனர். குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் சரண் அடையாவிட்டால் அவர்களை கைது செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நடைபெற்ற கண்டன பேரணியில் மரியத்தின் கணவர் கேப்டன் சப்தார் கைது செய்யப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

லாகூரில் பதற்றம்

பாகிஸ்தான் திரும்புவதற்காக நவாஸும் அவரது மகள் மரியமும் நேற்று லண்டனில் இருந்து அபுதாபி சென்றனர். பின்னர் அங்கிருந்து எதிகாட் விமானம் மூலம் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு புறப்பட்டனர். அங்கு நேற்றிரவு 9 மணிக்கு தரையிறங்கிய நவாஸையும் மரியத்தையும் போலீஸார் கைது செய்தனர்.

லாகூர், இஸ்லாமாபாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று காலை முதலே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் சாலை மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

லாகூரில் பெருந்திரளானோர் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அங்கு சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதங்களைத் தடுக்க 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாரும் 5 ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை துண்டிக்கப் பட்டது.

 

25-ம் தேதி தேர்தல்

பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி கடந்த மே 31-ம் தேதி ஆட்சியிலிருந்து விலகியது. நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் இடைக்கால பிரதமராக பொறுப் பேற்றுள்ளார்.

நவாஸ் ஷெரீபின் கைது நடவடிக்கையால் நாடாளுமன்றத் தேர்தலை சுமுகமாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதை எதிர்கொள்ள நசீர் உல் முல்க் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

http://tamil.thehindu.com/world/article24417312.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.