Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்­தி­யா­வுக்கு 70 இலங்­கைக்கு 30 :.....மத்­தள விமான நிலை­யத்தை டில்­லிக்கு வழங்­கு­வ­தற்­கான உடன்­ப­டிக்கை விரைவில் என்­கி­றது அர­சாங்கம்

Featured Replies

இந்­தி­யா­வுக்கு 70 இலங்­கைக்கு 30 :

01PR16072018Page1Image0014-d69178941e7c2e8900b2c5fa11f72e0401008500.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

மத்­தள விமான நிலை­யத்தை டில்­லிக்கு வழங்­கு­வ­தற்­கான உடன்­ப­டிக்கை விரைவில் என்­கி­றது அர­சாங்கம்

மத்­தள விமான நிலை­யத்தை கூட்டு பங்­காண்­மையின் கீழ் கட்­டி­யெ­ழுப்பும் நோக்கில் இந்­தி­யாவின் நிறு­வ­ன­மொன்­றுக்கு வழங்­கு­வ­தற்கு இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதன்­படி விமான நிலை­யத்தின் இலா­பத்தில் 70 வீத­மான பங்கு இந்­திய நிறு­வ­னத்­திற்கும் 30 வீத­மான பங்கு இலங்­கைக்கும் கிடைக்கும். இதற்­கான ஒப்­பந்தம் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதற்­கான நட­வ­டிக்­கைகள் பூர­ண­மா­னதும் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­னரே கைச்­சாத்­தி­டப்­படும் என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இரா­ஜாங்க அமைச்சர் அசோக அபே­சிங்க தெரி­வித்தார்.  

ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டதில் இருந்து அடையும் நட்­டத்தில் 70 வீதத்­தையும் இந்­திய நிறு­வ­னமே சுமக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்­ட­கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

  அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப உரிய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. முன்­னைய ஆட்­சியின் போது கடன் பெற்று தேவை­யற்ற செல­வீ­னங்­களை மேற்­கொண்­டதன் பிர­தி­ப­லனை தற்­போது நாம் அனு­ப­வித்து வரு­கின்றோம். நாம் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் வெளி­நா­டு­க­ளுக்கு 13.8 பில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இந்த கடனை செலுத்­து­வ­தற்கு வரித்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம். நாம் நேரடி வரியை அதி­க­ரித்­துள்ளோம். மறை­மு­க­மான வரியை குறைத்­துள்ளோம். இதனால் நாட்டின் பொரு­ளா­தாரம் சற்று காலத்­திற்கு சிக்­க­லா­கத்தான் செய்யும். என்­றாலும் நாட்டில் 20 இலட்சம் வரை­யான வர்த்­தக நிலை­யங்கள் உள்­ளன. எனினும் 2015 ஆம் ஆண்டு நாம் ஆட்­சிக்கு வரும் போது 15 ஆயி­ரத்து 650 வற் வரி கோப்­பு­களே இருந்­தன. 4 இலட்சம் வரு­மான வரி கோப்­புகள் இருந்­தன. பூர­ண­மாக 6 இலட்சம் வரை­யான கோப்­புகள் இருந்­தன. எனினும் அதனை நாம் 10 இலட்­ச­மாக அதி­க­ரித்­துள்ளோம். இதன் ஊடாக அரச வரு­மானம் அதி­க­ரிக்கும். சாதா­ரண மக்­களின் சுமை குறையும். குறைந்த வரி கோப்­பு­களை கொண்டு எப்­படி நாட்டை முன்­னே­று­வது. தற்­போது நாட்டின் தனி ஒருவர் 5 இலட்சம் ரூபா கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. மஹிந்த ராஜ­பக்ஷ 2005 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வரும் போது தனி நபர் கடன் 95 ஆயிரம் ரூபா­வாகும். ஆனால் தற்­போது அது 5 இலட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது.

ஆகவே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் அரச ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்தோம். சமுர்த்தி கொடுப்­ப­னவை இரண்டு மடங்­காக அதி­க­ரித்தோம். மஹா­பொல புலமை பரிசில் உட்­பட மக்­க­ளுக்­கான சலு­கை­களை அதி­க­ரித்து அபி­வி­ருத்­தி­க­ளை­யும தொடர்ந்து கொண்டு செல்­கின்றோம். அனைத்து மாண­வர்­க­ளுக்கும் காப்­பு­றுதி வழங்­கினோம். மாண­வர்­க­ளுக்கு காப்­பு­றுதி வழங்கும் திட்டம் உலகில் எந்த நாட்­டிலும் உள்­ளது.

மத்­தள விமான நிலையம்

மத்­தள விமான நிலை­யத்­திற்­காக 2010 ஆம் ஆண்டு கடன் பெற்­றுள்­ளனர். இதன்­படி 190 மில்­லியன் டொலர் சீன நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெற்­றுள்­ளனர். இதற்கு அப்பால் அதனை நிர்­மா­ணித்த நிறு­வனம் 35 மில்­லியன் டொலர் மேல­தி­க­மாக செல­விட்­டுள்­ளது.இதன்­படி சுமார் 230 மில்­லியன் டொலரை குறித்த நிறு­வனம் நிர்­மாண பணி­க­ளுக்­காக செல­விட்­டுள்­ள­துடன் இலங்கை அர­சாங்கம் 20 மில்­லியன் டொலர் செல­விட்­டுள்­ளது. இதன்­படி மத்­தள விமான நிலை­யத்­திற்­காக மொத்­த­மாக 252 மில்­லியன் டொலர் செல­வி­டப்­பட்­டுள்­ளது. இதனை நிர்­மா­ணிக்கும் போது சரி­யான செயற்­திட்ட ஆய்­வ­றிக்கை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. இதன்­கா­ர­ண­மா­கவே பற­வை­களின் தலை­யீ­டுகள் உட்­பட சுற்று சூழல் பிரச்­சி­னைகள் பல உள்­ளன.

மத்­தள விமான நிலை­ய­மா­னது கடந்த ஆண்டின் போது ஒரு மாதத்­திற்கு 65 இலட்சம் ரூபா இலாபம் அடைந்­த­துடன் செல­வீனம் 2900 இலட்­ச­மாக இருந்­தது. ஆகவே இதனை கொண்டு எப்­படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்­வது. இந்த விமான நிலை­யத்­திற்­காக 2010 ஆம் ஆண்டு கடன் பெறப்­பட்­டது. இந்த கடனை செலுத்­து­வ­தற்கு ஐந்து ஆண்டு கால சலுகை வழங்­கப்­பட்­டது. ஆகவே 2015 முதல் 2030 வரைக்கும் கடன் செலுத்த வேண்டும். இதில் ஒரு வரு­டத்­திற்கு 1.7 பில்­லியன் ரூபாவை கட­னாக செலுத்த வேண்டும். ஆகவே நாம் மூன்­றாண்­டு­க­ளுக்­கான கடனை செலுத்­தி­யுள்ளோம். இந்த கடன் தொகையை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தின் வரு­மா­னத்தை கொண்டே செலுத்­தினோம். ஆகவே நட்­ட­மான நிலை­மையில் எப்­படி இதனை கொண்டு செல்­வது. இதன்­கா­ர­ண­மாக நாம் உலக நாடு­களில் இருந்து விலை­மனு கோரினோம். கூட்டு பங்­காண்மை செயற்­திட்­ட­மாக கொண்டு சென்று இலா­ப­க­ர­மான விமான நிலை­ய­மாக மாற்ற திட்­ட­மிட்டோம். இதன்­போது ஆறு யோச­னைகள் வந்­தன. அவற்றில் விமான திருத்த பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக மத்­தள கோரப்­பட்­டது. அவ்­வா­றான யோச­னை­களை நிரா­க­ரித்தோம். எனினும் இந்­தி­யா­விடம் இருந்தே சிறந்த யோசனை வந்­தது. இதன்­போது நாம் விமான நிலை­யத்­திற்­கான மதிப்­பீ­டொன்றை செய்தோம். இந்த விமான நிலையம் நிர்­மா­ணித்­திற்கு 252 மில்­லியன் டொலர் செல­வி­டப்­பட்­டது. ஆகவே 325 மில்­லியன் டொல­ருக்கு நாம் மதிப்­பீடு செய்­துள்ளோம்.

ஆகவே இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைக்கு இந்­திய சிவில் விமான சேவை அமைச்சில் இருந்து பலர் வருகை தந்­தனர். அவர்கள் எமது மதிப்­பீ­டு­க­ளுக்கு இணங்­கினர்.

மத்­தள விமான நிலை­யத்தை கூட்டு பங்­காண்­மையின் கீழ் கட்­டி­யெ­ழுப்பும் நோக்கில் இந்­தி­யாவின் நிறு­வ­ன­மொன்­றுக்கு வழங்­கு­வ­தற்கு தற்­போது இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. இதன்­படி விமான நிலை­யத்தின் இலா­பத்தில் 70 வீத­மான பங்கு இந்திய நிறுவனத்திற்கும் 30 வீதமான பங்கு இலங்கைக்கும் கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருவதுடன் அதற்கான நடவடிக்கைகள் பூரணமானதும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே கைச்சாத்திடப்படும். இந்த விமான நிலையத்தை நாம் விற்கவில்லை. ஒன்றிணைந்த செயற்திட்டமாக முன்னெடுக்கவுள்ளோம்.

 கைச்சாத்திடப்பட்டதில் இருந்து இலாபம் பெறும் வரை அடையும் நடத்திலும் 70 வீதத்தை இந்திய நிறுவனமே சுமக்க வேண்டும். ஆகவே இது எமக்கு சாதகமான ஒப்பந்தமாக அமையும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.