Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும்

Featured Replies

பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும்

 

ரொபட் அன்­டனி

குடும்­ப­மொன்று சமூ­கத்தில் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்க்­கைத்­த­ரத்­திலும் முன்­னே­றிச்­செல்­வ­தற்­காக தமது முழு முயற்­சி­யையும் மேற்­கொண்டு நகர்­வு­களை முன்­னெ­டுக்கும். அதில் வெற்­றி­பெ­று­கின்ற குடும்­பங்­களும் உள்­ளன. முன்­னேற்­ற­ம­டை­யாத குடும்­பங்­களும் உள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் ஒரு குடும்பம் சமூ­கத்தில் ஒரு நல்ல வாழ்க்­கைத்­த­ரத்தை அடை­ய­வேண்­டு­மென்றால் கடின உழைப்­புடன்கூடிய அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ்­வாறு அந்தக் குடும்­பத்­தினால் தனித்து அதனை செய்ய முடி­யாது.

அதற்கு மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற அர­சாங்­கமும் பக்­க­ப­ல­மாக இருக்­க­வேண்டும். அதே­போன்று பொரு­ளா­தார ரீதி­யிலும் சமூக பாது­காப்பு ரீதி­யிலும் கடின உழைப்பின் மூலம் முன்­னேற்­ற­ம­டைந்து வரு­கின்ற குடும்­பங்கள் இயற்கை அனர்த்­தங்கள் மற்றும் வேறு கார­ணங்­க­ளினால் பாதிக்­கப்­பட்டால் அர­சாங்கம் உடனடி­யாக உதவி செய்து அவர்­களை தூக்­கி­வி­டு­கின்­றது. அது அவ்­வாறு செய்­யப்­ப­ட­வேண்டும். மக்­க­ளுக்கு இது­போன்ற சவால்கள் வரும்­போது அவர்­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஜன­நா­யக ரீதியில் மக்­களால் அர­சாங்கம் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்­றது.

உதா­ர­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு செய்­ய­வேண்­டிய உத­விகள், சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் செய்­ய­வேண்­டிய உத­விகள், யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உத­விகள் என்­பன­வற்றை இதில் குறிப்­பி­டலாம். எனினும் இவ்­வா­றா­ன­தொரு அனர்த்­தத்­திற்கு முகம்­கொ­டுத்து 9 வரு­டங்கள் கடந்த நிலை­யிலும் இது­வரை நிவா­ர­ணங்­களைப் பெற முடி­யாது துன்­பங்­களை எதிர்­கொள்­கின்ற மக்கள் வடக்கு, கிழக்கில் உள்­ளனர் என்­பதே இங்கு குறிப்­பி­டப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும்.

கடந்த 30 வரு­ட­கா­ல­மாக இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட பகு­திகள் பாரிய இழப்­புக்­க­ளையும் பின்­ன­டை­வு­க­ளையும் சந்­தித்­தன. கிட்­டத்­தட்ட 30 வரு­டங்கள் பொரு­ளா­தா­ரத்­திலும் சமூக வளர்ச்­சி­யிலும் நாம் பின்ன­டை­வுக்கு சென்றோம். எனினும் யுத்தம் முடி­வ­டைந்து 9 வரு­டங்கள் முடிந்­து­விட்ட நிலை­யிலும் எம்மால் மீண்டு வரு­வ­தற்கு கடி­ன­மா­கவே உள்­ளது. யுத்­தத்தின் வடுக்­க­ளி­லி­ருந்து இன்னும் மக்கள் மீள­மு­டி­யாது தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். யுத்­தத்தின் கோர வடுக்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களை வாட்­டி­வ­தைப்­ப­துடன் அவர்­களை மீள்­ எழவிடாமல் தடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இந்த சூழலில் பொறுப்­புள்ள அர­சாங்கம் என்ற வகையில் யுத்­தத்தின் வடுக்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களை அந்த வடுக்­க­ளி­லி­ருந்து மீளக்­கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை சரி­யான முறையில் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வேண்டும். குறிப்­பாக அவர்­க­ளது சமூகப் பாது­காப்பு மற்றும் வாழ்­வா­தா­ரப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் விரைந்து தீர்வை வழங்­கி­யி­ருக்­க­வேண்டும். ஆனால் இது­வரை அதற்­கான முயற்சி ஒரு பொறி­மு­றையின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பது வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும். யுத்தம் முடி­வ­டைந்து 9 வரு­டங்கள் கடந்­துள்ள இந்த சூழலில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண இழப்­பீட்டை வழங்­கு­வ­தற்­கான இழப்­பீட்டு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த இழப்­பீட்டு அலு­வ­லக சட்­ட­மூலம் தொடர்பில் எதிர்­வரும் நாட்­களில் விவாதம் நடத்­தப்­பட்டு அது சட்­ட­மா­கி­ய­பின்னர் இழப்­பீடு வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­படும். தொடர்ந்து காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் அலு­வ­லகம் உள்­ளிட்ட அமைப்­புக்கள் முன்­வைக்கும் பரிந்­து­ரை­களின் அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்­கப்­படும். இது தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சியின் பிர­தம கொற­டா­வான அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்­க­வினால் கடந்த செவ்­வாய்க்­கிழமை முன்­வைக்­கப்­பட்­டது.

யுத்­தத்­தின்­போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இவ்­வா­றான நிவா­ர­ணங்கள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன. அவர்கள் யாரென அடை­யாளம் காண முயற்­சித்தல் அவ­சி­ய­மாகும். யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் மற்றும் அதன் பின்­னரும் காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வுகள் இன்று நிவா­ரண இழப்­பீட்டை பெற­வேண்­டிய சூழலில் பாரிய துன்ப துய­ரங்­களை எதிர்­கொண்டு வாழ்ந்து வரு­கின்­றனர்.

அதே­போன்று யுத்­தத்­தின்­போது கண­வனை இழந்த பெண்கள், குடும்­பத்­த­லை­வி­க­ளாக இன்று தமது குடும்­பத்தை கொண்­டு­ந­டத்­து­வதில் பாரிய இன்­னல்­களை சந்­தித்து வரு­கின்­றனர். அத்­துடன் தமது உற­வு­களை இழந்த குடும்­பங்கள் வாழ்க்­கையை கொண்­டு­செல்­வ­திலும் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். இந்­தநி­லையில் ஏன் யுத்தம் முடி­வ­டைந்து 9 வரு­டங்கள் கடந்­த­போ­திலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வில்லை என்ற கேள்வி எழு­கின்­றது. இதற்கு நாம் இதன் பின்­ன­ணியை ஆரா­ய­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

 யுத்தம் 2009ஆம் ஆண்டு முடி­வ­டைந்­தது. அதன் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை ஆராய்­வ­தற்­கா­கவும் இதன்­பின்னர் இது­போன்ற ஒரு­மோதல் நிலைமை இந்­த­நாட்டில் உரு­வா­காமல் இருப்­ப­தற்­காக பரிந்­து­ரை­களை முன்­வைக்கும் நோக்­கிலும் கற்­றறிந்த பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டது. சுமார் 6 ­மா­தங்கள் நாடு­மு­ழு­வதும் அமர்­வு­களை நடத்தி மக்­க­ளி­ட­மி­ருந்தும் சாட்­சி­யங்­களை பெற்­றுக்­கொண்ட இந்த ஆணைக்­குழு 2011ஆம் ஆண்டு ஜன­வரி மாதமளவில் தனது பரந்­து­பட்ட அறிக்­கையை வெளி­யிட்­டது. அதில் ஆக்­க­பூர்­வ­மான பரிந்­து­ரைகள் காணப்­பட்­டன. எனினும் இது­வரை காலமும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் சரி­யான முறையில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது தொடர்­பான குற்­றச்­சாட்­டுகள் அனைத்­துப்­பக்­க­ங்களிலும் இருக்­கின்­றன.

எப்­ப­டி­யி­ருப்­பினும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விட­யத்தில் மிகவும் அக்­க­றை­யாக செயற்­பட்டு வந்­தது. குறிப்­பாக 2012 ஆம் ஆண்டு முத­லா­வது பிரே­ர­ணையை ஐ.நா. மனித உரி­மைப்­பே­ரவை இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றி­யது. அதில்கூட பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்து குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் 2013, 2014 ஆம் ஆண்­டு­க­ளிலும் ஜெனி­வாவில் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன. அவற்­றிலும் இந்த விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தன. எனினும் அது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கக்­கூ­டிய வகையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை.

அதன்­பின்னர் 2015ஆம் ஆண்டு இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து ஜெனிவா மனித உரி­மை­ப்பே­ர­வையில் மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதில் இழப்­பீடு வழங்­கு­வ­தற்­கான அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று ஒரு பரிந்­து­ரை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் அலு­வ­லகம் ஒன்றும் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் அந்த அலு­வ­ல­கத்தின் பரிந்­து­ரை­களின் பிர­காரம் இழப்­பீடு வழங்கும் நட­வ­டிக்கைகள் இடம்­பெ­ற­வேண்டும் என்றும் அதற்­காக இழப்­பீடு வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்றும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னாலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்த நிலை­யி­லேயே தற்­போது இழப்­பீட்டு அலு­வ­லகம் தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம்­வரை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­ததன் கார­ண­மாக 2019ஆம் ஆண்­டு­வரை மீண்டும் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அந்தக் கால­அ­வ­காசம் முடி­வ­தற்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலை­யி­லேயே தற்­போது இழப்­பீட்டு அலு­வ­லகம் தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை விரை­வாக விவா­தத்­திற்குட்­ப­டுத்தி நிறை­வேற்­று­வ­தற்கு அர­சாங்கம் ஆவ­ன­செய்­ய­வேண்டும். ஏற்­க­னவே 9 வரு­ட­கா­ல­மாக இந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் வாழ்க்­கையை கொண்­டு­ந­டத்­து­வ­தற்கு போராடி வரு­கின்­றனர். அவர்­களை மேலும் வாட்­டி­வ­தைக்­காமல் விரை­வாக இழப்­பீட்டு அலு­வ­ல­கத்தை நிறுவி அந்த மக்­க­ளுக்கு நிவா­ர­ணத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும்.

இழப்­பீட்டு அலு­வ­ல­கத்தின் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண இழப்­பீட்டை பெற்­றுக்­கொ­டுப்­பதில் காணா­மல்­போனோர் குறித்து விசா­ரிக்கும் அலு­வல­கத்தின் பரிந்­து­ரைகள் மிக முக்­கி­யத்­துவ­மிக்­க­தாக கரு­தப்­ப­டு­கின்­றன. இந்த பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வா­கவே காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் அடை­யாளம் காணப்­பட்டு இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

ஒரு­முறை இந்த இழப்­பீட்டு விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த முன்­னைய அர­சாங்­கத்தின் காணா­மல்­போனோர் குறித்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஸ்வல் பர­ண­கம இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட ஒரு குடும்­பத்­திற்கு 5 இலட்சம் ரூபா­வ­ரையில் நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் யுத்­தத்தின் வடுக்­களில் சிக்கி பாரிய இழப்­புக்­களை சந்­தித்­தி­ருந்­தனர். உற­வுகள் மற்றும் உட­மை­களை இழந்த இந்த மக்கள் யுத்தம் முடிந்­ததன் பின்னர் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொண்­டி­ருந்­தனர். எனவே அவர்­க­ளுக்கு ஒரு­கு­றிப்­பி­டத்­தக்க அளவு நிவா­ரண நிதியை பெற்­றுக்­கொ­டுப்­பதன் ஊடாக அவர்­களின் இழப்­பு­களை ஈடு­செய்ய முடி­யாது. ஆனால் அந்த மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கொண்­டு­ந­டத்­து­வ­தற்கு நிவா­ரண இழப்­பீடு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். அது தொடர்பில் சரி­யான முறையில் அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட மக்கள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் எதிர்­கொண்­டு­வரும் சிர­மங்கள் குறித்து கவனம் செலுத்­த ­வேண்டும். யுத்தம் முடிந்­த­வு­ட­னேயே கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­ வேண்­டிய இந்த நிவா­ரண இழப்­பீட்­டு­ வி­டயம் இது­வ­ரை­காலம் தாம­த­ம­டைந்­துள்­ளமை தொடர்­பிலும் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­து­வது அவ­சியம். எனவே தாம­த­மின்றி இழப்­பீட்டு அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­பது கட்­டா­ய­மாகும்.

யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் எந்­த­வொரு விட­யமும் இது­வரை முழு­மை­யாக செய்­யப்­ப­ட­வில்லை. விசே­ட­மாக காணா­மல்­போனோர் விவ­காரம் இன்னும் தீர்க்­கப்­ப­டாமல் உள்­ளது. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை இன்னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. உண்­மை­யைக்­கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவும் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணமும் வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு யுத்­தத்தின் பின்னர் கடந்த 9 வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சாத­க­மான விட­யங்கள் எதுவும் முழு­மை­யாக இடம்­பெற்­ற­தாக கூற முடி­யாது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் இந்த விட­யங்கள் விரை­வாக இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் காணி விடு­விப்பில் மாத்­திரம் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டதே தவிர ஏனைய விட­யங்கள் தாம­த­மா­கிக்­கொண்டே செல்­கின்­றன. தமக்கு நேர்ந்த அநீ­திக்கு நீதி நிவா­ரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் தென்­னி­லங்­கையில் ஏற்­ப­டு­கின்ற அர­சியல் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப காய்­ந­கர்த்­தலில் ஆர்வம் காட்டும் நல்­லாட்சி அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான விட­யங்­களை முன்­னெ­டுப்­பது தொடர்பில் ஆர்வம்காட்­டு­வ­தில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

 தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்த இழப்பீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் பாரிய எதிர்ப்புகள் இன்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கையை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு இழப்பீட்டு அலுவலகம் உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டியது அவசியம் என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுறுத்த வேண்டும். அரசாங்கம் காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தையும் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நிறுவியது.

எனவே இழப்பீட்டு அலுவலக விடயத்தில் அரசாங்கம் அதன் தேவை குறித்து தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகும். சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த இழப்பீட்டு அலுவலகம் தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. எனவே தாமதப்படுத்தாமல் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். மக்கள் 9 வருடங்களாக கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் இந்த அவலநிலைக்கு விடிவு காணவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இன்னும் காலத்தை கடத்தாமல் விரைந்து பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டி எதிர்காலம் தொடர்பில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இந்த இழப்பீடு வழங்கும் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகமே இந்த இழப்பீட்டு அலுவலக விடயதானத்துக்கு பொறுப்பாக இருப்பதாக தெரிகிறது. எனவே அந்த அலுவலகம் இழப்பீடு வழங்கும் விடயத்தில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-21#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.