Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம்

Featured Replies

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்துகிறார் மகிந்த: அரச ஊடகம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்கெடுப்பு நடத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பரிசீலித்து வருவதாக சிறிலங்கா அரச ஊடகமான சண்டே ஓப்சர்வர் தெரிவித்துள்ளது.

சண்டே ஓப்சர்வரில் வெளியாகி உள்ள செய்தி:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து பொதுசன வாக்கெடுப்பு நடத்த மகிந்த ராஜபக்ச தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இதனை அரச தலைவர் செயலகத்தின் உயர் அதிகாரி நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் மக்களின் புதிய கருத்தை அறிய மகிந்த விரும்புகிறார் என்றும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனநாயகப் பூர்வமாக ஒழித்துக் கட்டுவதில் மகிந்த விருப்பம் கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வாக்கெடுப்பானது விரைவில் நடைபெற உள்ளதாகவும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மக்கள் எதிர்த்தால் யுத்த நிறுத்தத்திலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளும் என்றும் அரச தலைவர் மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்டது.

ஒப்பந்தத்தின் சரத்து 4.4-இல்

"எந்தத் தரப்பினராலும் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக நோர்வே அரசாங்கத்திற்கு அறிவித்தல் கொடுக்கப்படும் வரை இந்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும். அத்தகைய முன்னறிவித்தல் முடிவிற்கு வரும் தினத்திற்கு 14 தினங்களிற்கு முன்னதாக கொடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்யும் மகிந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடாத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலைத் தொடர்ந்து மகிந்தவை பதவி விலகக் கோரி தென்னிலங்கையில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்து தப்பும்விதமாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள மகிந்த தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் தெரிகிறது.

http://www.tamilwin.com/

  • தொடங்கியவர்

கருத்து வாக்கெடுப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு

போர்நிறுத்த உடன்படிக்கையை இல்லாது செய்ய மேற்கொள்ளவிருக்கும் பொதுமக்கள் கருத்து கணிப்பை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி; மற்றும் அனைத்துக் கட்சி கூட்டடைப்பின் தலைவருமான திஸ்ஸ விதாரனவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இல்லாது செய்வதற்கு மற்றய குழுவினருக்கு 14 நாட்கள் அறிவித்தல் கொடுத்தல் போதுமானதாகும் அதற்காக பொதுமக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்வது தேவையற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

திரு.விதாரண அவர்களும் அதே கருத்தை கொண்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

http://www.pathivu.com/

யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒரு புலிவால்

முன்பு சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக புலிகளுடன் அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை, மேல்நீதிமன்றத்தைக் காரணம் காட்டி நிராகரித்தார்கள்.

இப்போது அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கலைப்பதற்கான காரணத்தை மக்கள் தலையில் கட்டிவிட முயற்சிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

ஒப்பந்தத்திற் கூறப்பட்டது போன்று இரண்டு வாரத்தவணையின் மூலம் அதிலிருந்து விலகமுடியும். ஆனால் ஒப்பந்தத்திலிருந்து விலகுதல் என்பது உலக நாடுகளின் ஆதரவுத் தளத்தை இழப்பதற்குச் சமனானது. கருத்துக் கணிப்பொன்று நடைபெறுமாயின் பெரும்பான்மையான சிங்கள மக்கள் அதனை ஆதரிப்பார்கள். ஏனெனில் தென்னிலங்கைக்கு அவ்வாறான கருத்துக்கள்தான் பேரின அரசியல் வாதிகளால் ஊட்டப்பட்டுள்ளது. ஆனாலும் ஒப்பந்தத்தில் இருந்து விலகும் நிலைக்கு இலங்கை அரசு வரமாட்டாது என்றே நான் தனிப்பட எண்ணுகின்றேன். கருத்துக் கணிப்பு நடத்தப்படடு அதில் வெற்றியும் பெற்றால் அந்த முடிவினை இலங்கையரசு தனக்கேற்படும் சர்வதேச அழுத்தங்களுக்கெதிராகப் பயன்படுத்தும். வெளியேறப்போவதாகவும் பயமுறுத்தும். அதுமட்டுமன்றி வெளிப்படையான சில சார்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். இலங்கையின் பயன்பாட்டு அநுகூலங்களை விரும்பும் நாடுகள் இதனை ஆதரிக்கவும் செய்யும்.

யுத்தத்தில் தோல்வியையும் அதன் மோசமான விளைவுகளையும் உருவாகும் தமிழீழத்தையும் அங்கீகரிக்கிறீர்களா என நாட்டு மக்களிடம் கேக்கிறார் மகிந்த விடுங்கோவன் எல்லாரும் அங்கீகரிப்பீனம்

  • தொடங்கியவர்

சரியானதே ஈழவன் 85. பாதகமான சூழலிலும் நமது நலனைத் தலைமை நிச்சயம் பேணும். ஒருகல்லில் இரு மாங்காய்.

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர போரில் குதிக்க ராஜபக்ஷே முடிவு: ரத்தாகிறது போர் நிறுத்தம் மக்களிடம் கருத்துக்கணிப்பு

கொழும்பு -ஏப்ரல் 02, 2007: நார்வே மத்தியஸ்தத்தில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக தீவிரப் போரில் குதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே முடிவு செய்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்வது தொடர்பாக நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பு நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு நார்வே குழுவின் உதவியுடன், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது. ராஜபக்ஷே அதிபர் பதவிக்கு வந்தது முதல் விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கையை மிகத் தீவிரமாக்கினார்.

சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியானது. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை படையினருக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கவில்லை. அதேசமயம், இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல், இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடனான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த வசதியாக, அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக கைவிட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது கருத்துக் கணிப்பு நடத்தி தீர்மானிக்க அவர் முடிவு செய்துள்ளோர். அதிபரின் இந்த முடிவுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக கைவிடப்பட்டால், பெரிய அளவிலான போர் வெடிக்கும், அது மிகப் பெரிய பேரழிவுக்கு வித்திடும், இலங்கையில் ரத்த ஆறு ஓடும் என விடுதலைப் புலிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

-தற்ஸ் தமிழ்

  • தொடங்கியவர்

கந்தப்பு இலங்கையரசு நடப்பு நிகழ்வுகளையோ எச்சரிக்கைகளையோ அல்லது விளங்கிக் கொண்டவர்கள் சொல்லும் ஆலோசனைகளையோ ஏற்றுக்கொண்டு அதை விளங்கும் நிலையில் இல்லை. இதற்குக் காரணம் என்ன தெரியுமோ? பயம் பயம் பயம். விமானத்தாக்குதலினால் ஏற்பட்ட பயம். அதனால் பிதற்றுகிறார்கள். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்யட்டும் அதன் விளைவுகளை அவர்களே அனுபவிப்பார்கள்.

  • தொடங்கியவர்

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது சமாதான முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் - திஸ்ஸ வித்தாரண

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையில் பல குறைபாடுகள் இருந்தாலும் அதன் மூலமாகவே சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது சமாதான முயற்சிகளில் பாதகத்தை ஏற்படுத்தும் என்று சர்வகட்சி ஆலோசனை குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலோ அல்லது ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் கூட்டத்திலோ ஆராயப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தநிறுத்த உடன்படிக்கை மீது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் காலத்தில் புலிகளுடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன் படிக்கைக்கு சரவஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து இறுதியாக நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலோ அல்லது ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டத்திலோ இவ்விடயம் குறித்து பேசப்படவில்லை.

http://www.tamilwin.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.