Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகளின் தாக்குதலும் இந்தியாவின் பிரதிபலிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வான் புலிகளின் தாக்குதலும் இந்தியாவின் பிரதிபலிப்பும்

விடுதலைப் புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என எதிர்பார்த்த கொழும்பு வட்டாரங்கள் ஏமாற்றமடைந்திருக்கின்றன.

சட்ட ரீதியான அரசாக இல்லாத ஒரு தரப்பிடம் அதுவும் "பயங்கரவாத இயக்கம் ஒன்றிடம் விமா னப்படை இருப்பது பெரும் ஆபத்தான விடயம் என்று பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து, அதன் மூலம் சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பி விடும் கொழும்பின் முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதையே ஆரம்பகட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

புலிகளிடம் விமானப் படையணி இருக்கும் விவகாரம் முதலில் இந்தியாவில்தான் பெரும் அதிர்வு களையும், அரசியல் எதிர்வினைகளையும் ஏற்படுத் தும் எனக் கொழும்பு எதிர்பார்த்தது. ஆனால், அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. கொழும்பின் நம்பிக்கை தகர்ந்துவிழும் வகையிலேயே விவகாரங்கள் அரங்கேறியுள்ளன.

புலிகளின் வான் படையணி குறித்து இந்தியா, உத்தியோகபூர்வ கண்டனம் எதனையும் வெளியிடவில்லை. ஆக, வழமைபோல புலி எதிர்ப்புப் பிரசாரத் தில் ஈடுபட்டுவரும் சில புதுடில்லி ஊடகங்கள் மட் டும் அதிகாரிகளையோ, அமைச்சுகளையோ நேரடி யாகக் குறிப்பிடாமல், புலிகளின் வான் படையணி குறித்து இந்தியா கவலை கொண்டிருப்பதாகச் செய்தி வெளியிட்டதோடு விவகாரம் அங்கு அடங்கி விட்டது. அந்தச் செய்தி கூட இவ்விடயத்தில் தனிப்பட்ட ஈடுபாடு கொண்ட வேறு பிற தரப்புகளின் "விதைப் பாக" இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

புலிகளின் வான் படையணி தொடர்பாக இந்தியா நடந்து கொள்ளும் போக்கு வெளிப்படுத்தும் செயற் பாடு கொழும்பின் நிலைப்பாட்டில் பெரும் குழப் பத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமது வான் படையணி இலங்கையின் பௌத்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரானதேயொழிய, இந்தியாவுக்கு எதிரானதல்ல என்றும், இந்தியாவின் நலனுக்கு எதிராக இவ்விடயத்தில் எந்தச் சந்தர்ப்பத் திலும் தமது இயக்கம் செயற்படாது என்பதையும் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார். இந்த விவகாரத்தில் புலிகளின் அந்த உறுதிமொழி இந்தியாவைத் திருப்திப்படுத்தப் போதுமானதா என்று சொல்லமுடியாது.

ஆனால், புலிகளின் வான் படையணி இருப்பது பற்றிய தகவலை கடந்த 26ஆம் திகதி கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீதான தமது வான் தாக்குதல் மூலம் புலிகள் வெளிப்படுத்தி, உறுதிப்படுத்தி, அத் தாக்குதலுக்கு உரிமை கோரிய பின்னர், இந்தியா நடந்துகொண்ட விதம் கொழும்புக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சில செய்திகளை படிப்பினைகளை உணர்த்தியிருப்பதையும் நாம் உணரமுடிகின்றது.

புலிகளிடம் வான் படையணி இருப்பதை புலிகள் கட்டுநாயக்காத் தாக்குதல் மூலம் நிரூபித்ததை அடுத்து, இந்தியா தனது தென்கரையோரத்தில் புதிய ராடர்களை நிறுவி, தெற்கு முனையில் தனது கண் காணிப்பை அதிகப்படுத்தியது. அது தவிர, புலிகளின் வான் படையணிக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு, அதைக் கண்டிக்கவோ, அந்தப் படையணி இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, புலிகளிடம் வான் படையணி இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். அது இலங்கை அரசின் கொழும்பின் பிரச்சினை. அந்தப் படையணியால் இந்தியப் பிராந்தியத்துக்கோ, அதன் இறைமைக்கோ ஆபத்து இல்லாவிட்டால் சரி என்ற மனப்போக்கில்தான் இந்தியாவின் செயற்பாடும், அதன் இராஜதந்திர பிரதிபலிப்புகளும் இருந்தன.

இந்தியாவின் இந்தப் போக்கு வேறு சில ஊகங்களையும் வெளிப்படுத்தி நிற்பதையும் நாம் கவனத் தில் கொள்ளலாம்.

யாழ். குடாநாடு மீது விடுதலைப் புலிகள் இலக்கு வைக்கும் சமயங்களில் எல்லாம் அரசியல் அவதானி கள் தரப்பில் ஒரு கருத்து முன்வைக்கப்படுவது வழமை. பூகோள வடிவமைப்பில் யாழ். குடாநாட்டின் உச்சந் தலையாக இருப்பது பலாலி விமான நிலையம். தென் னிந்தியாவுக்கு மிக நெருக்கமாக உள்ள விமான ஓடுபாதை அங்குதான் அமைந்துள்ளது. அத்தகைய விமானத்தளம் புலிகள் வசம் வீழ்வதை இந்தியா ஒருபோதுமே அனுமதிக்காது என்றும், அதன் காரண மாக யாழ். குடாநாட்டைக் கைப்பற்றும் புலிகளின் கனவுக்கு இந்த இலங்கை தன் இயலாமையால் விட்டுக் கொடுத்தாலும், இந்தியா இடமளிக்கவேமாட்டாது என்ற ஒரு நம்பிக்கை கொழும்பு அரச சார்பான வட்டாரங்களில் மிகுதியாக இருந்து வந்தது.

ஆனால், வன்னியில் புலிகளின் வான் கட்ட மைப்பு நிறுவப்பட்டு, அதன் தாக்குதல் நடவடிக்கை கள் ஆரம்பிக்கப்பட்டு, அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதற்கு எதிராகக் கொந்தளித்து எழுவதற்கு இந்தியா முன்வராத நிலையில், பலாலி விமானத்தளம் கைமாறக் கூடாது என்பதற்காக இந்தியா ஏதேனும் உறுதியான ஸ்திரமான பதில் நடவடிக்கைகளை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறும் சந்தர்ப்பம் அற்றுப் போகிறது.

புலிகளின் விமானப்படை அணி எங்கிருந்தாலும், அதனால் தனது நலனுக்கும் தனது பிரதேசத்திற்கும் பாதிப்பு இல்லாத வரையில் அது குறித்து இந்தியா அதிகம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்பது சாடைமாடையாகவேனும் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. கொழும்புக்கு நிச்சயம் குழப்பத்தைத் தந்திருக்கும் எனக் கருதலாம்.

தவிரவும், புலிகளின் விமானப்படை அணி குறித்து இந்தியாவிடமிருந்து மட்டுமல்ல, ஏனைய சர்வதேச நாடுகளிடமிருந்தோ, ஐ.நா. போன்ற அமைப்புகளிடமிருந்தோ கண்டனமோ, எதிர்ப்போ, விசனமோ எழாதமையும் கொழும்புக்குப் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், எரிச்சலையும் தந்திருப்பதையும் உணர முடிகின்றது.

புலிகளின் வான் படையணிக்கு எதிராக சர்வ தேச நிலைப்பாட்டை உருவாக்கும் கொழும்பின் எத் தனம் இதுவரை பலனளித்ததாக இல்லை. இந்த முயற்சியில் இலங்கை பின்னடைவு கண்டதற்குப் பல காரணங்கள்.

இலங்கை விமானப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுக்களை நடத்தி அப்பாவிப் பொது மக்களையும் பெருமளவில் கொன்றொழித்ததோடு மட்டுமன்றி தப்பிப்பிழைத்தவர்களின் உயிர் வாழ்வுக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றமையும் வான் புலிகள் சரியாக இராணுவ இலக்கு மீதே தாக்குதல் நடத்தியமையும் கூட, இந்தக் காரணங்களில் அடங்கும் என்று கருதலாம்.

இவற்றின் தாற்பரியம் கொழும்புக்குப் புரியுமோ, என்னவோ ......!

-உதயன்

உதயனின் கண்ணோட்டத்தில் பல உண்மைகள் கூறப்பட்டுள்ளது. இணைப்பிற்கு நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.