Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரியலின் ஒரு புதிய பரிமாணம் - இடப்பெயர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரியலின் ஒரு புதிய பரிமாணம் - இடப்பெயர்வு

ஈழத் தமிழர்களின் தனியரசுக்கான போராட்டம் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை இன்று அடைந்துள்ளது. விடுதலைப் போராட்டமானது தனது இறுதி இலக்கினை நோக்கிய பயணப் படிமானத்தில் மிகத்திடமாகவும் உறுதியாகவும் நிலைபெற்றுவிட்டது.

இந்த இறுக்கமான நிலையினை தளர்வுறுச் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வதில் எதிரியானவனும், கொள்கைப் பற்றுறுதி அற்ற முன்னாள் போராளிக்குழுக்களும், எண்பது, தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமது குழுவினது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டதன் பின்னர் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் போராளிக்குழுக்களின் ஒரு சில புலி எதிர்ப்பு உறுப்பினர்களும் தத்தமது நாடுகளில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை வெளிப்படையான உண்மை.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா அரசானது பாரிய மனிதவுரிமை மற்றும் மனித அவலங்களை தனது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வாழும் எமது சகோதரர்கள் மீது மிகவும் கொடூரமான முறையில் மேற்கொண்டுவருகின்றது.

ஜே.ஆர் ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி. விஜேதுங்க, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோரினால் நடத்தப்பட்ட தமிழர் விரோத நடவடிக்கைகள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் இன்று துட்டகைமுனுவின் வாரிசு எனக் கூறிக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ஸ சகோரார்களால் நன்கு திட்டமிட்ட முறையிலும் கொடூரமான செயற்பாடுகள் மூலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதில் முக்கியமாக நாம் இன்று கவனிக்க வேண்டியது என்னவெனில், இன்றைய சிங்கள அரசாங்கத்தின் படையினராலும், புதிதாக அரசியல் பாதைக்கு திரும்புவதற்கு, ஒற்றையாட்சி முறையே சிறந்ததது என தனது வெற்று அரசியல் ஞானத்தை வெளிக்காட்டி வரும் துணைப்படையினராலும் மேற்கொள்ளும் கடத்தல், காணாமல் போதல், உத்தியோகப்பற்றற்ற கைது மற்றும் தடுப்புக் காவல் என்பன தமிழர்கள் மீது மேற்கொள்ளும் ஒரு விதமான மனஅழுத்த போரியல் முறை என்பதை நாம் இங்கு கவனத்தில் எடுத்தல் வேண்டும்.

தமிழர்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து இடம்பெயரச் செய்தல், தொடர் இடப்பெயர்வுகளை ஏற்படுத்தி அகதிகளாக்குதல், திறந்த வெளித்தடுப்பு முகாம்களில் அகதிகளாக வாழச்செய்தல், தமிழர்கள் மீது விமானக்குண்டுகளை, பீரங்கிக்குண்டுகளை வீசி உயிர் பற்றிய மரணபயத்தை ஏற்படுத்ததல், பொருளாதார தடைகளை விதித்து அன்றாட வாழ்க்கைச் சுமைகளைச் சுமத்துதல் இவைகள் யாவும் மொத்தத்தில், ராஜபக்ஷவினாலும் அவரது சகோதரர்களின் வழிநடத்தலில் - தமிழர்களுக்கு கொடுக்கும் மிக ஆழமான அழுத்தங்களாகும்.

இந்தவகையான ஆழமான அழுத்தங்களை, தமிழர்கள் மீது பிரயோகிப்பதன் மூலம், தமிழர்கள் இதுவரை காணாத அல்லது நன்கு அனுபவப்படாத ஒரு போரியல் உத்தியென ஸ்ரீலங்கா அரசு நினைப்பது மட்டுமல்லாமல் செயற்படுத்தியும் வருகின்றது.

இருப்பினும், இந்தவகையான புதிய போரியல் யுக்தியை எதிர்கொள்வதற்கு களத்தில் உள்ள மக்களை விடுதலைப்புலிகள் ஓரளவுக்கேனும் தயார்படுத்தி வருகின்றமை கண்கூடு.

ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டினை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்காப் படைகள் தமது முழுப்பலத்தினையும் ஒன்று குவித்து படை நடவடிக்கையை மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் குடாநாட்டு மக்களை தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுமாறு விடுதலைப்புலிகள் அறைகூவல் விடுத்தனர்.

இந்த இடப்பெயர்வு மக்களுக்கு பல சொல்லெணாத் துயரங்களை ஏற்படுத்தியிருந்தமை நாம் யாவரும் அறிந்த ஒன்று. எனினும், காலப்போக்கில் விடுதலைப்புலிகளின் அறைகூவலால் பல்லாயிரக்கணக்கானோர் தமது வாழ்வியலை புதிய வடிவத்தில் செப்பனிட்டு சிறப்பாக உயர்த்தியிருந்ததோடு, புலிகளைப் பாராட்டியதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த வகையில், இன்று கிழக்கு மாகாணத்தில் நிகழ்ந்துவரும் இடப்பெயர்வும், யாழ்ப்பாண இடப்பெயர்வு போன்றதொரு சூழலை எமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றது.

கிழக்கு இடப்பெயர்வு

இடப்பெயர்வு மனித அவலத்தின் முக்கிய சாட்சியாகவும், போரின் குறியீடாகவும் அமைந்துவிடுகின்றது. இந்த வகையில் ஈழப்போரின் நான்காம் கட்டம் வாகரையிலிருந்து ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது என்றே கருத இடமுண்டு.

வாகரைப் பகுதி மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது, அவர்களின் போக்குவரத்துப் பாதைகளை மூடியும், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் செல்வதையும் ஸ்ரீலங்காப் படைகள் தடுத்திருந்தனர்.

மாறாக, விடுதலைப்புலிகள் மக்களை தமது கேடயமாக பாவிக்கின்றனர் என்ற பிரச்சாரத்தை தமது ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரப்படுத்தியுமிருந்த

போரியலின் புதிய பரிமாணம் - இடம்பெயர்வு என செய்தி கூறுகின்றது. ஆனால், இப்போது நடைபெறுவதாய் கூறப்பட்ட நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் போரில் எப்போதோ ஆரம்பித்து விட்டது. சுமார் 20 ற்கும் மேற்பட்ட வருடங்களிற்கு முன் என நினைக்கின்றேன். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.