Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவ­று­களும் தவ­றான புரி­தல்­களும்

Featured Replies

தவ­று­களும் தவ­றான புரி­தல்­களும்

S-04Page1Image0002-6a5ff64aa9e3e295624241eafd19a1f9cb87e2ee.jpg

 

தாம் ஆட்­சியில் இருந்­ததால், அந்தக் காலத்தில் நடந்த தவ­றுகள் தமக்குத் தெரி­யாமல் போய் விட்­டன என்ற சப்பை நியா­யத்தைக் கூறி தப்­பிக்க முனைந்­தி­ருக்­கிறார் பசில் ராஜ பக்ஷ. 

அதி­காரம் உள்ள இடத்­துக்கு சாதா­ரண மக்­களின் குறைகள் சென்­ற­டை­வது அரிது தான். ஆனாலும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் தவ­றுகள் நடந்த போது அதனைச் சுட்­டிக்­காட்­டி­ய­வர்­களும், வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­களும்,  

அச்­சு­றுத்­தப்­பட்­டனர், தாக்­கப்­பட்­டனர். காணாமல் போகவும் செய்­யப்­பட்­டனர்

தவ­று­களைத் திருத்திக் கொண்டு அடுத்த தேர்­த­லுக்குத் தயா­ராகி விட்டோம் என்று கேகா­லையில் அண்­மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பசில் ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

கடந்த ஆட்­சியில் தாம் தவ­று­களைச் செய்­தி­ருக்­கிறோம் என்­பதை அவர்கள்- தெளி­வாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­களோ இல்­லையோ- தமது அர­சி­ய­லுக்­காக அதனை ஒப்புக் கொள்ள முன்­வந்­தி­ருக்­கி­றார்கள்.

2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ பக்ஷ தோல்­வியைத் தழு­விய போது, அந்தத் தோல்வி தமது குறை­பா­டு­களின் விளை­வாக ஏற்­பட்­டது என்­பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயா­ராக இருக்­க­வில்லை. 

மாறாக, இந்­தி­யாவும், அமெ­ரிக்­காவும் தம்மைத் திட்­ட­மிட்டு தோற்­க­டித்து விட்­ட­தா­கவே ஆரம்­பத்தில் புலம்பித் திரிந்­தனர். எனினும், நாள­டைவில், தமது அர­சியல் மீள் எழுச்­சிக்கு, கடந்த காலத்தை ஒப்புக் கொள்ள வேண்­டிய தேவை அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

மக்­களால் ஏன் தோற்­க­டிக்­கப்­பட்டோம் என்­பதை நியா­ய­மான முறையில் ஏற்­றுக்­கொள்ளத் தவ­றினால் மீண்டும் ஒரு சந்­தர்ப்பம் வராது என்­பதை அவர்கள் உணர்ந்து கொண்­டனர்.

அதனால், இப்­போது, நாங்கள் கடந்த ஆட்­சியின் போது தவறு செய்து விட்டோம் என்­பதை அவர்கள் ஏற்­றுக்­கொள்ள முன்­வந்­தி­ருக்­கி­றார்கள்.

தாம் ஆட்­சியில் இருந்­ததால், அந்தக் காலத்தில் நடந்த தவ­றுகள் தமக்குத் தெரி­யாமல் போய் விட்­டன என்ற சப்பை நியா­யத்தை கூறித் தப்­பிக்க முனைந்­தி­ருக்­கிறார் பசில் ராஜபக் ஷ.

அதி­காரம் உள்ள இடத்­துக்கு சாதா­ரண மக்­களின் குறைகள் சென்­ற­டை­வது அரிது தான். ஆனாலும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் தவ­றுகள் நடந்த போது அதனைச் சுட்­டிக்­காட்­டி­ய­வர்­களும், வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­களும், அச்­சு­றுத்­தப்­பட்­டனர், தாக்­கப்­பட்­டனர். காணாமல் போகவும் செய்­யப்­பட்­டனர்.

இப்­ப­டி­யான நிலையில் ஆட்சி செய்­யப்­பட்­டமை கூட, பசில் ராஜபக் ஷ கூறிய நியா­யத்­துக்கு ஒரு கார­ண­மாக இருக்­கலாம்.

போர் வெற்றி மிதப்பில் தாம் நினைத்­ததே சட்டம் என்ற வகையில் செயற்­பட்­டதன் விளைவு, தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­டத்தில் மாத்­தி­ர­மன்றி, சிங்­கள மக்­களின் எதிர்ப்­பையும் ராஜ­பக் ஷ வினர் சம்­பா­திக்க நேரிட்­டது.

அதன் விளைவு தான், 2015 தோல்வி. அந்தத் தோல்­வியில் இருந்து அவர்கள் மீள முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எனவே எப்­ப­டி­யா­வது, தமது தோல்­வியை நியா­யப்­ப­டுத்­து­வதை விட, தவ­று­களை ஒப்புக் கொள்­வதே சிறந்த அர­சியல் உத்தி என்­பதை உணர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

தாம் தவ­று­களைத் திருத்திக் கொண்டு விட்டோம், இப்­போது புதிய வடி­வ­மெ­டுத்து வந்­தி­ருக்­கிறோம் ஆத­ரி­யுங்கள் என்ற தொனியில் அமைந்­தி­ருக்­கி­றது அவ­ரது வாதம்.

எப்­ப­டி­யா­வது. அடுத்த முறை ஆட்­சியைப் பிடித்து விடலாம் என்ற உறு­தி­யான நம்­பிக்­கையில் ராஜபக் ஷவினர் இருக்­கின்­றனர். அதற்­காக அவர்கள் எல்லாத் தரப்­பு­க­ளையும் திருப்­திப்­ப­டுத்­து­கின்ற, தமது பக்கம் இழுக்­கின்ற உத்­தி­க­ளையும் கையாளத் தொடங்­கி­யுள்­ளனர்.

ராஜபக் ஷவி­ன­ருக்கு தோல்­வியின் ருசியை அனு­ப­விக்க கற்றுக் கொடுத்­த­வர்கள் தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தான். அதனால் தான், இப்­போது அவர்­களை இலக்கு வைத்து காய்­களை நகர்த்தி வரு­கின்­றனர்.

தமிழ், முஸ்லிம் மக்­க­ளு­டனும், அர­சியல் தலை­மை­க­ளு­டனும் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் இவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்­கி­யுள்­ளனர்.

இது­மாத்­தி­ரமே தமிழ் முஸ்லிம் மக்­களை இவர்­களின் பக்கம் திருப்பி விடும் என்று எதிர்­பார்ப்­பது முட்­டாள்­தனம்.

அதிலும் குறிப்­பாக, தமிழ் மக்கள் விட­யத்தில் தாம் செய்த தவறு என்ன என்­பது பற்­றியோ அதனைத் திருத்திக் கொள்­வ­தற்­கான உத்தி பற்­றியோ ராஜபக் ஷவி­ன­ரிடம் இருந்து எந்த தெளி­வான சமிக்­ஞையும் வெளி­யா­க­வில்லை என்­பது கவ­னிக்க வேண்­டிய விடயம்.

அண்­மையில் சீனத் தூத­ர­கத்தின் ஏற்­பாட்டில், சீன மக்கள் விடு­தலை இரா­ணுவம் உரு­வாக்­கப்­பட்ட 91 ஆவது ஆண்டு விழா கொழும்பில் கொண்­டா­டப்­பட்ட நிகழ்வில், இரா.சம்­பந்­த­னுடன், மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

அந்தச் சந்­திப்பின் போது, தனது ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு எடுத்த முயற்­சிகள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை என்றும், அடுத்த முறை பத­விக்கு வந்­ததும் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைக்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக் ஷ கோரி­யி­ருந்தார்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை கூட்­ட­மைப்பு தான் கெடுத்து விட்­டது என்­பது மஹிந்­தவின் நீண்­ட­கால குற்­றச்­சாட்டு. கடை­சி­யாக அவர் யாழ்ப்­பாணம் வந்­தி­ருந்த போதும் கூட அவர் அந்தக் குற்­றச்­சாட்டைக் கூறி­யி­ருந்தார்.

அதனைத் தான், மீண்டும் சம்­பந்­த­னிடம் அவர் கூறி­யி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

அதற்கு இரா.சம்­பந்தன், பழை­யவை போகட்டும், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வது இப்­போது முக்­கி­ய­மா­னது .அதற்கு மஹிந்த ராஜபக் ஷவின் ஒத்­து­ழைப்பு அவ­சியம் தேவைப்­ப­டு­வ­தாக கூறி­யி­ருக்­கிறார்.

இந்தக் கடப்­பாட்டில் இருந்து மஹிந்த ராஜபக் ஷ விலகி விடக்­ கூ­டாது என்றும் அவர் வலி­யு­றுத்­தி­ யி­ருக்­கிறார். 

அதற்கு, மஹிந்த ராஜபக் ஷ பார்க்­கலாம் என்று பதி­ல­ளித்­தி­ருக்­கி­றாரே தவிர மறுப்பும் சொல்­ல­வில்லை. ஏற்றுக் கொள்­ள­வு­மில்லை.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் புலி­களை வென்று விட்ட மேலா­திக்க மனோ நிலையில் இருந்து, தாம் விரும்­பிய தீர்வு ஒன்றைத் தமி­ழர்­களின் மீது திணிக்­கவே விரும்­பி­யது,

அதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் பங்­கா­ளி­க­ளாகப் பயன்­ப­டுத்திக் கொள்­ளவும் முற்­பட்­டது.

இருந்­தாலும், மஹிந்த ராஜ பக்ஷ அர­சாங்­கத்­துக்கு தமி­ழர்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக எந்தத் தீர்­வையும் வழங்­கு­கின்ற எண்­ணமோ திட்­டமோ இருக்­க­வில்லை. 

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் தெரிவுக் குழுவில் மற்­றைய தரப்­புகள் தீர்வுத் திட்­டங்­களை முன்­வைத்த போதும், மஹிந்த தரப்பு அதனை முன்­வைக்­க­வே­யில்லை.

ஏனென்றால் தீர்வு எதையும் முன்­வைக்கும் மனோ­நி­லையில் அவர்கள் இருக்­க­வில்லை.

 இப்­போதும் கூட அந்த மனோ­நிலை மாறி­யி­ருப்­ப­தாக கருத முடி­ய­வில்லை.

மீண்டும் சம்­பந்­த­னையோ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையோ வளைத்துப் போட்டு தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்று விடு­வ­தற்கே அவர் முயற்­சித்­தி­ருக்­கிறார்.

கடந்த காலத் தவ­று­களை அடுத்த முறை ஆட்­சிக்கு வந்த பின்னர் தான் திருத்திக் கொள்ள வேண்­டிய அவ­சியம் ஒன்றும் இல்லை. இப்­போதே அதற்­கான வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்­களால் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுமா- இல்­லையா என்­ப­தெல்லாம் வேறு விடயம். ஆனால் இப்­போ­துள்­ளதை விட ஒரு முன்­னேற்­ற­க­ர­மான அர­சி­ய­ல­மைப்பு யோசனை முன்­வைக்­கப்­படும் போது, அதற்கு ஆத­ரவு அளித்து, மஹிந்த ராஜபக் ஷ தமது மாற்­றத்தை தமிழ் மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தலாம்.

ஆனால் ராஜபக் ஷவி­ன­ரிடம் அத்­த­கைய எந்த மாற்­றமும் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பை தோற்­க­டிப்­ப­தி­லேயே குறி­யாக இருக்­கி­றார்கள்.

அது­போ­லவே, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும், அதன். உண்­மை­யான பரி­மா­ணங்­க­ளையும் ராஜபக் ஷவினர் உணர்ந்து கொள்­ள­வில்லை.

அண்­மையில் தமிழ் ஊட­கங்­களின் ஆசி­ரி­யர்­களை கோத்­தா­பய ராஜபக் ஷ சந்­தித்த போது வெளி­யிட்ட கருத்­துக்கள் அனைத்­துமே, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக அவர் கன­வு­லகில் மிதக்­கிறார் என்­பதை உணர முடி­கி­றது.

நாட்டில் உள்ள பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களைத் தீர்த்து விட்டால், எல்லா பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருக்­கி­றது.

இனப்­பி­ரச்­சினை என்று எது­வு­மில்லை. பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் தான் போருக்கும், போராட்­டத்­துக்கும் காரணம் என்­பதை நிறுவ முயற்­சிக்­கிறார் கோத்­தா­பய ராஜபக் ஷ.

இதி­லி­ருந்தே ராஜபக் ஷவினர் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை எவ்­வாறு புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை தெரிந்து கொள்ள முடி­கி­றது.

வெறு­மனே அபி­வி­ருத்தி அர­சி­யலை முன்­னெ­டுத்து விட்டால், இனப்­பி­ரச்­சினை, அர­சியல் தீர்வு எல்­லாமே அதற்குள் மறைந்து விடும் என்று அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்.

ராஜபக் ஷவினர் இப்­படித் தான் கடந்த காலத்தை மீள் பரி­சீ­லனை செய்­தி­ருக்­கி­றார்கள் என்றால், அது அவர்­களின் தோல்­விக்­கான அறி­கு­றி­யாகத் தான் இருக்கும்.

பொரு­ளா­தார வச­தி­க­ளுக்­காக தமிழ் மக்கள் போராட்­டத்தை ஆரம்­பிக்­கவோ நடத்­தவோ இல்லை. அவ்­வா­றாக இருந்­தி­ருந்தால், போருக்குப் பின்னர் ராஜபக் ஷவினர் பொரு­ளா­தார வச­தி­களை அள்ளி வீசிய போது தமிழ் மக்கள் அதற்குள் அமிழ்ந்து போயி­ருப்­பார்கள்.

2015 இல் அவர்­களைத் தோற்­க­டிக்கும் முடிவை அவர்கள் எடுத்­தி­ருக்க மாட்­டார்கள்.

தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது- தமது உரிமைகளை. தமது பாரம்பரிய தாயகத்தை, சுயமாக நிர்வகிக்கின்ற உரிமைகளை. தாம் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடிய உரிமைகளை.

தமது நிலங்கள் பறிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த காலத் தவறுகளை திருத்திக் கொண்டிருப்பதாக கூறும் ராஜபக் ஷவினருக்கு, கடந்த காலத் தவறுகளுக்காக நீதி வழங்கப்படுவது அவசியம் என்பதை தமிழ் மக்கள் வலியுறுத்துகிறார்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இவ்வாறாக, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையோ, அபிலாசைகளையோ புரிந்து கொள்ளாமல், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கோ முற்படாமல், ராஜபக் ஷவினர் தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடிக்க ஆசைப்படுவது அபத்தமான ஒன்றாகத் தெரியவில்லையா?

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-05#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.