Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Featured Replies

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 

 
 

நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத் திருவிழா திங்கட்கிழமை 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

38660584_260950761172804_151977958934839

இம்மாதம் 15 ஆம் திகதி மடுமாதா திருவிழா பக்தி உணர்வு மேலிட நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார். 

போர்க்காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்குள் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. 

38738350_450771595401367_239956270889566

இருப்பினும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மடு பிரதேசத்தில் இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின் போது மடு தேவாலயமும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பகுதியில் தஞ்சமடைந்த பலர் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு தஞ்சமடைந்திருந்த இடம்பெயர்ந்த மக்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினார்கள். 

இறுதி நேரம் வரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அபயமளித்து அடைக்கலம் வழங்கிய மடு அன்னையும் தீவிரமடைந்த யுத்த மோதல்கள் காரணமாக பாதுகாப்புக்காக இடம்பெயர நேர்ந்தது.

அந்தநேரம் பாதுகாப்பை முன்னிட்டு மடு அன்னையின் சொரூபத்தை வடமேற்குக் கரையோரக் கிராமமாக்கிய தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்ல நேர்ந்ததாக அந்த வேளையில் மடு பரிபாலகாராகப் பணியாற்றிய அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மடு அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் மடு ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு, மடு மாதா ஆலயம் சிறப்புற செயற்படத் தொடங்கியது. 

யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான கத்தோலிக்கர்கள் மற்றும் இந்து சமய மக்களும் மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுவதாகவும் அவர் கூறினார். 

38655891_849441291927707_695250103507196

அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவின்போது 9 நாட்களும் ஆலயத்தில் கூடித் தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் பாம்பு போன்ற விஷம் தோய்ந்த உயிரினங்களினாலோ அல்லது வன விலங்குகளினாலோ பக்தர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்பட்டதில்லை என்பது அன்னையின் அருளுக்கு அடையாளமாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இத்தகைய சிறப்பு மிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவின் கொடியேற்ற வைபவத்தில் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளையிடம் இருந்து மடு பரிபாலகர் பொறுப்பை ஏற்கவுள்ள அருட்தந்தை பெப்பிசோசை உள்ளிட்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பெருமளவான பக்தர்களும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

http://www.virakesari.lk/article/37984

  • தொடங்கியவர்

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா

 

 
 

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

39070702_333928890481914_849034952606482

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கின்றனர்.

39127253_246561082660902_300927629200562

இன்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஆரம்பமாகி ஒப்பக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

39177572_885407088318114_161672971432230

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.

39266583_219380078739133_494351480516929

மடுத் திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான அனைத்து இன பக்தர்களும் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/38493

  • தொடங்கியவர்

மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு 

 

 

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

ma.jpg

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இன்று புதன் கிழமை காலை 6.30 மணியளவில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர் கெரல்ட் அன்ரனி பெர்னாண்டோ , காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க , கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சல் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

ee.jpg

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும், திருச் சொரூப ஆசியும் வழங்கப்பட்டது. மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக போது மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,ரவி கருநாநாயக்க உற்பட அரசியல் பிரமுகர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நீதிபதிகள், வைத்தியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

r.jpg

a.jpg

மேலும் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மன்னார் ஆயரிடம் கையளித்தார்.

இதேவேளை மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் அறிவிப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று  புதன்கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38515

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.