Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள்

Featured Replies

அனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள்

 

 
 

அமெரிக்காவின் சியட்டலின் டகமோ விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் அற்ற விமானத்தை நபர் ஒருவர் அனுமதியின்றி செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானநிலையத்தின் பொறியல் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவர் அனுமதியின்றி விமானநிலையத்தை செலுத்தியதால் உடனடியாக விமானநிலையத்தை மூடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் இரு எவ்15 யுத்த விமானங்கள் அந்த விமானத்தை துரத்திச்சென்றதாகவும் இதன் காரணமாக அந்த நபர் விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை விமானம் விழுந்து நொருங்கி கொல்லப்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

29 வயது நபரே இதனை செய்தார் இது பயங்கரவாத செயல் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

seattle4.jpg

 

 

ஹொரிசன் எயர்லைன்ஸ் விமானசேவையின் விமானத்தையே குறிப்பிட்ட நபர் எடுத்துச்சென்றுள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெறுவதை பார்த்த ஒருவர் இது பைத்தியக்காரத்தனமான செயல் நபர் உத்தரவைமீறி விமானம் ஒன்றை எடுத்துச்சென்றுள்ளார்,என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட விமானத்தை இரு போர் விமானங்கள் துரத்திசெல்வதை காண்பிக்கும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் குறிப்பிட்ட நபர் எவ்வாறான உரையாடலை மேற்கொண்டார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை விமானத்தில் எவ்வளவு எரிபொருட்கள் இருக்கின்றன என்பது குறித்து எனக்கு கவலையில்லை, நான் வீடியோ கேம்களை விளையாடியுள்ளதால் என்னால் விமானத்தை கையாள முடியும் என தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.virakesari.lk/article/38302

  • தொடங்கியவர்

அமெரிக்கா: விமானத்தை திருடிய ஊழியர்; நடந்தது என்ன?

சியாட்டில் விமான நிலையத்தில் பயணியர் யாரும் இல்லாத விமானம் ஒன்றை திருடி, மேலேழுந்து பறந்து அருகிலுள்ள தீவில் மோதியவர் அந்த விமான நிலையத்தை சேர்ந்த ஊழியர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விழுந்த இடம்படத்தின் காப்புரிமைCBS Image captionவிமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஏற்பட்ட தீ

விமானத்தை திருடி, பறந்த அந்த ஊழியர் "ஹாரிசன் ஏர்" என்ற விமான நிறுவனத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக விமானத்தை கட்டி இழுப்பது மற்றும் பயணிகளின் பைகளை விமானத்திலிருந்து வெளியே எடுப்பது போன்ற பணிகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

இதுவரை அந்த ஊழியரின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமெரிக்க ஊடகங்கள் அவரை ரிச்சர்ட் ரஸ்ஸல் என்று குறிப்பிட்டு வருகின்றன.

அந்த ஊழியர், உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை மாலையில் அனுமதியில்லாமல் விமானத்தை இயக்கியதால் சியாட்டிலுள்ள டகோமா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

ரிச்சர்ட் ரஸ்ஸல்படத்தின் காப்புரிமைAFP Image captionரிச்சர்ட் ரஸ்ஸல்

உரிய அனுமதியின்றி எடுத்துச்செல்லப்பட்ட இந்த விமானத்தை இரண்டு ஃஎப்15 பைட்டர் ஜெட் விமானங்கள் துரத்தி சென்றன. ஆனால், புகெட் சவுண்ட் என்ற இடத்தில் விமானம் மோதியதில் அந்த நபர் பலியானார்.

இந்த நபர் உள்ளூரை சேர்ந்த 29 வயதானவர் என்று தெரிவித்திருக்கும் உள்ளூர் ஷெரீஃப் அலுவலகம் இதுவொரு 'தீவிரவாத சம்பவம் அல்ல' என்று கூறியுள்ளது.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @drbmbdgty
 
Yzq8YyPFaQ3yHpNu?format=jpg&name=small
 

Some dude stole a plane from #Seatac (Allegedly), did a loop-the-loop, ALMOST crashed into #ChambersBay, then crossed in front of our party, chased by fighter jets and subsequently crashed. Weird times.

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @drbmbdgty

"தீவிரவாதிகள் தண்ணீரின் மேலே வட்டமடிக்கமாட்டார்கள்" என்று குறிப்பிட்டு, ஜாலிக்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம் சோகத்தில் முடிவடைந்துள்ளதாக தோன்றுகிறது என்று பியர்ஸ் வட்டார ஷெரிஃப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாக எபிசி7 நியூஸ் வெளியிட்டுள்ளது.

ரஸ்ஸலின் முன்னாள் சக பணியாளர் ஒருவர் அவரை 'மிகவும் அமைதியானவர்' என்று கூறியுள்ளார்.

"ரிச்சர்ட் மற்ற பணியாளர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டார். நான் அவரையும், அவரது குடும்பத்தினரையும் நினைத்து பெரிதும் வருந்துகிறேன்" என்று சியாட்டில் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய ரிக் கிறிஸ்டென்சன் கூறியுள்ளார்.

76 இருக்கைகளோடு இரண்டு எந்திரங்களை கொண்ட டர்போபிராப் பாம்பார்டியர் Q400 விமானம் 'ஹாரிசன் ஏர்' நிறுவனத்தின் துணை நிறுவனமான அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு சியாட்டில் டகோமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் மேலெழுந்து பறந்தது.

தண்ணீருக்கு மேலே மிகவும் தாழ்வாக இந்த விமானம் பறந்துள்ளது,படத்தின் காப்புரிமைAFP Image captionதண்ணீருக்கு மேலே மிகவும் தாழ்வாக இந்த விமானம் பறந்துள்ளது,

தாறுமாறாக பறந்த அந்த விமானத்தை, பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் இரண்டு ஜெட் விமானங்கள் பறந்து கண்காணிக்க தொடங்கின.

ஒரு மணிநேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 30 மைல் தொலைவுக்கு அப்பால் இருக்கின்ற கெட்ரான் தீவில் இந்த திருடப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. ஜெட் விமானங்களால் இந்த மோதல் நிகழவில்லை..

https://www.bbc.com/tamil/global-45157691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.