Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடுக்­கு­நாறி மலையை காக்க -ஆர்ப்பாட்டம்!!

Featured Replies

வெடுக்­கு­நாறி மலையை காக்க -ஆர்ப்பாட்டம்!!

 

வவு­னியா, ஒலு­ம­டு­வில் உள்ள வெடுக்­கு­நாறி மலை­யைத் தொல்­லி­யல் திணைக்­க­ளம் உரிமை கோரு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து பிர­தேச மக்­க­ளால் நாளை­ம­று­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை ஆர்ப்­பாட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. வவு­னியா வடக்கு வடக்­குப் பிர­தேச செய­லம் முன்­பாக இந்த ஆர்ப்­பாட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்­தப் போராட்­டத்­தில் அனை­வ­ரும் கலந்து கொள்ள வேண்­டும் என்று வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் அழைப்பு விடுத்­துள்­ளார்.

வவு­னியா, வெடுக்­கு­நாறி மலை­யும், ஆதி லிங்­கேஸ்­வ­ர­ரும் எமது அடை­யா­ளம். அவற்றை ஆக்­கி­ர­மிக்க எடுக்­கும் முயற்­சி­க­ளைத் தடுத்து நிறுத்த எதிர்­வ­ரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­கம் முன்­பா­கக் கூட வேண்­டும் தனது முக­நூல் பக்­கத்­தி­லேயே இவ்­வாறு பதி­விட்­டுள்­ளார்.

தமி­ழ­ரின் பூர்­வீ­கக் கன்­னியா வெந்­நீர் ஊற்­றைத் தாரை­வார்த்­துக் கொடுத்­த­தைப் போன்று எமது வன்­னி­யின் அடை­யா­ளத்தை, எமது வடக்­கின் அடை­யா­ளத்­தைத் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­டம் தாரை வார்க்­கத் தயா­ரில்லை. வெடுக்­கு­நாறி மலை­யும், ஆதி லிங்­கேஸ்­வ­ர­ரும் எமது அடை­யா­ளம். எமது மக்­க­ளின் அடை­யா­ளம்.

எமது அடை­யா­ளத்­தைப் பாது­காக்க, ஆக்­கி­ர­மிப்­பைத் தடுத்து நிறுத்த கட்சி பேத­மின்­றித் தமி­ழ­ராய் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து எமது எதிர்ப்பை வெளிக்­காட்­டு­வோம் என்­றும் அவர் பதி­விட்­டுள்­ளார்.

நெடுங்­கேணி ஒலு­மடு பகு­தி­யில் உள்ள வெடுக்­கு­நாறி மலை மீது ஆதி ஐய­னார் ஆல­யம் அமைந்­துள்­ளது. அங்கு மக்­கள் காலங்­கா­ல­மாக வழி­ப­டு­கின்­ற­னர். தற்­போது அது தொல்­லி­யல் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மா­ன­தென அந்­தத் திணைக்­க­ளம் குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த 10ஆம் திகதி குறித்த ஆல­யத்தை சேர்ந்­த­வர்­களை நெடுங்­கேணி பொலி­ஸார் அழைத்து விசா­ர­ணைக்­கும் உட்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். ஆல­யத்­துக்­குச் செல்­ல­வேண்­டா­மென்­றும் மீறிச் சென்­றால் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் குறிப்­பிட்­ட­னர். அதற்கு மறு­நாள் ஆடி அமா­வாசை திதி என்­ப­தால் தொல்­லி­யல் திணைக்­க­ளம் மற்­றும் பொலி­ஸா­ரின் அனு­ம­தி­யு­டன் அங்கு சென்று பூசை வழி­பா­டு­களை மேற்­கொண்­ட­னர்.

கடந்த 12ஆம்­தி­கதி மீண்­டும் ஆலய நிர்­வா­கத்­தி­னரை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலி­ஸார், ஆல­யத்­தில் பூசை வழி­பா­டு­களை மேற்­கொள்ள தடை­யில்­லை­யெ­னக் குறிப்­பிட்­ட­னர்.

ஆனால், ஆல­யத்­தில் மாற்­றங்­கள் செய்­தல், கட்­ட­டங்­களை அமைத்­தல் போன்ற எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கக் கூடா­தென அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். ஆல­யத்தை சூழ­வுள்ள காட்­டுப் பகுதி தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தின் கட்­டுப்­பாட்­டில் உள்­ள­தால், அங்கு செல்­லக் கூடா­தென்­றும் மீறி­னால் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தமி­ழர்­க­ளின் எல்­லைக்­கி­ராம பகு­தி­யில் காணப்­ப­டும் இந்த ஆல­யத்தை காலங்­கா­ல­மாக தரி­சித்து வந்த நிலை­யில், அதனை அப­க­ரிக்க முயல்­கின்­ற­னர் என்று பிர­தேச மக்­கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­ற­னர்.

https://newuthayan.com/story/10/வெடுக்­கு­நாறி-மலையை-காக்க-ஆர்ப்பாட்டம்.html

  • தொடங்கியவர்

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தை பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!


IMG-5d09a770767592c278f54cb80c833c27-V.j
200 வருடங்களுக்கும் மேலாக எமது பிரதேசத்து மக்களால் வழிபாடுகளில் ஈடுபட்டு வரப்படும் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆசி சிவன் ஆலயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தடுத்து ஆலயத்தை பாதுகாக்கும் போராட்டம், நாளை (21.08.2018) இடம்பெறவுள்ளமையினால் அனைவரும் ஒன்றிணையுமாறு  வடக்கு ஒலுமடு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தின் செயலாளரும், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான து.தமிழ்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.

 
தமிழர் தொன்மையை அழிக்க நினைக்கும் சக்திகளிடம் இருந்து எமது பாரம்பரியங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து  து.தமிழ்செல்வன்   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
 தொண்மை அழிப்புக்கு எதிராக போராடுவோம்!

தமிழர்கள் தனித்துவமான கலை கலாசார பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. யுத்தம் மற்றும் இதன் தாக்கத்தில் இருந்தும் மீள தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது காலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப்பாதுகாத்து வருகின்ற நிலையில் பேரினவாத சக்திகளின் எதேச்சதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் அவதானித்து வருகின்றோம்.

 

 

இவ் வகையிலேயே 200 வருடங்களுக்கும் மேலாக எமது பிரதேசத்து மக்களால் வழிபாடுகளில் ஈடுபட்டு வரப்படும் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆசி சிவன் ஆலயத்திற்கும் ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

வெடுக்குநாறிமலை என்பது நாகர் காலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க கூடிய ஒரு விடயமாகவும் அதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதனையும் தமிழர் தொன்மை தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் பல ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் அப்பகுதி மக்களால் இவ் ஆலயப்பகுதி தெய்வீக பிரதேசமாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந் நிலையில் ஆடி அமாவாசை உட்பட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இப் பிரதேசத்தில் உள்ளவர்களால் இங்குள்ள ஆதி விக்கிரகங்களுக்கு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு வருவதுடன் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஆதி சிவனுக்கும் உமை அம்மைக்கும் பயபக்தியுடனும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும் சென்று வழிபாடுகளை 5 தலைமுறைகள் கடந்தும் பல்லாண்டு காலமாக செய்துவரும் நிலையில் இன்று அதனை தொல்லியலுக்குரிய இடமாக ஆக்கிரமித்துக்கொள்ள இலங்கை தொல்லியல் திணைக்களம் முனைப்புக்காட்டி வருகின்றது.

தமிழர்களது மரபுசார்ந்த பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் தமது ஆளுகைக்குள் உட்படுத்தி அதனை பாதுகாப்பதாக தெரிவித்து பௌத்த மேலாதிக்க சிந்தனைகொண்டு பௌத்த வழிபாட்டு இடங்களாக மாற்றியுள்ளதனை கிழக்கில் கன்னியா வென்னீரூற்றிலும் தமிழர் வழிபாட்டு இடமான கதிர்காமத்திலும் நாம் கண்டு வருகின்றோம்.

இந் நிலை வடக்கில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு ஏற்படக்கூடாது என்பதில் வடபுலத்து தமிழர்கள் உணர்ந்து தலைப்பட வேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே செவ்வாய்க்கிழமை (21.08) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு இடம்பெறும் தமிழர் அடையாளமான வெடுக்குநாறி மலை மற்றும் ஆதி சிவன் ஆலய மீட்பு போராட்டத்தில் கட்சி பேதமின்றியும் மத பேதங்களை களைந்தும் தமிழர்களின் அடையாளத்தினை மீட்க ஒன்றிணைந்து வாருங்கள் என அனைவரையும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் கோரி நிற்கின்றேன்.

http://globaltamilnews.net/2018/92143/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.