Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் அகப்­பட்ட இலங்கைத் தீவு

Featured Replies

இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் அகப்­பட்ட இலங்கைத் தீவு

Untitled-10-b6eb339f11b78285ac0f962796bb325cd406f548.jpg

 

இரண்டாம் உலகப் போர் காலத்­துக்குப் பின்னர், அமெ­ரிக்க வர­லாற்றில் மிக அதி­க­மான பாது­காப்புச் செல­வி­ன­மாக அமையப் போகும், 2019ஆம் ஆண்­டுக்­கான பாது­காப்பு நிதி ஒதுக்­கீட்டு அங்­கீ­காரச் சட்­டத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அண்­மையில் கையெ­ழுத்­திட்­டி­ருந்தார்.

இதற்­க­மைய, 681.1  பில்­லியன் டொலர், 2019ஆம் ஆண்டில் பாது­காப்பு நிதி­யாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வுக்கும், ரஷ்­யா­வுக்கும் போட்­டி­யாக, அமெ­ரிக்­காவின் படை­ப­லத்தை அதி­க­ரிக்கும் நோக்­கி­லேயே டொனால்ட் ட்ரம்ப் நிர்­வாகம், பாது­காப்பு நிதி ஒதுக்­கீட்டை கணி­ச­மாக உயர்த்­தி­யி­ருக்­கி­றது.

இந்த நிதி ஒதுக்­கீட்டின் மூலம் அமெ­ரிக்கா தனது படை­ப­லத்தை மாத்­திரம் வலுப்­ப­டுத்திக் கொள்ளப் போவ­தில்லை. தனது நட்பு நாடுகள், பூகோள அர­சியல் நலன்­களின் அடிப்­ப­டையில், தனக்கு வேண்­டிய நாடு­களின் படை­ப­லத்­தையும் அதி­க­ரிக்கப் போகி­றது.

அமெ­ரிக்­காவின் கூடு­த­லான இரா­ணுவ நிதியைப் பெறப் போகின்ற நாடு­களின் பட்­டி­யலில் இலங்கை, இந்­தியா உள்­ளிட்ட நாடு­களும் உள்­ள­டங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தோ- – பசுபிக் பிராந்­தி­யத்தில் சீனாவின் இரா­ணுவத் தலை­யீடு மற்றும் செல்­வாக்கை ஓரம்­கட்­டு­வ­தற்கு இந்­தி­யா­வையும், இலங்­கை­யையும் தமது முக்­கிய பங்­கா­ள­ராக சேர்த்துக் கொண்­டி­ருக்­கி­றது அமெ­ரிக்கா.

2009 தொடக்கம், 2014 வரை இலங்கை தொடர்­பாக கடைப்­பி­டித்த இறுக்­க­மான போக்கை, 2015 ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர் தளர்த்த ஆரம்­பித்த அமெ­ரிக்கா, இப்­போது இன்னும் வேக­மாக இலங்­கைக்கு இரா­ணுவ உத­வி­களை வழங்க ஆரம்­பித்­துள்­ளது.

2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர், இலங்­கைக்கு இரா­ணுவ உத­வி­களை வழங்­கு­வதை அமெ­ரிக்கா இடை­நி­றுத்­தி­யி­ருந்­தது. மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லான பயிற்­சிகள் உள்­ளிட்ட ஒத்­து­ழைப்­பு­களை மாத்­திரம் தொடர்ந்­தது.

குறிப்­பாக மனி­தா­பி­மான, அனர்த்த மீட்பு ஒத்­து­ழைப்­பு­க­ளையே தொடர்ந்து வந்த அமெ­ரிக்கா, 2015இற்குப் பின்னர், இலங்கைக் கடற்­ப­டையை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான பயிற்­சி­களை வழங்கத் தொடங்­கி­யது. கூட்டுப் பயிற்­சிகள், ஒத்­தி­கைகள் என்று இப்­போது அவை விரி­வ­டைந்­துள்­ளன.

அண்­மையில் கூட, இலங்கைக் கடற்­ப­டையைச் சேர்ந்த 62 கொமாண்­டோக்­க­ளுக்கு திரு­கோ­ண­ம­லையில் “பலன்ஸ் ஸ்ரைல் -2018/1” என்ற திட்­டத்தின் கீழ், அமெ­ரிக்க கடற்­ப­டையின் சிறப்பு போர்ப்­படை அதி­கா­ரிகள் 3 வார­கால பயிற்­சி­களை அளித்­தி­ருந்­தனர்.

இந்த நிலையில் தான் அமெ­ரிக்கா, இலங்­கையின் கடல்சார் கண்­கா­ணிப்பு பலத்தை அதி­க­ரிக்கும் வகையில், இரா­ணுவ நிதியை வழங்கப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் கடந்த வாரம் வெளி­யிட்ட அறி­விப்பில், இலங்­கைக்கு 39 மில்­லியன் டொலர் இரா­ணுவ நிதி வழங்­கப்­படும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. இந்த நிதி ஒதுக்­கீட்­டுக்கு அமெ­ரிக்க பாரா­ளு­மன்றம் இன்­னமும் அங்­கீ­காரம் அளிக்­க ­வில்லை.

இந்த நிதியை எவ்­வாறு செல­வி­டு­வது என்று இலங்கை அர­சாங்­கத்­துடன் பேச்சு நடத்தப் போவ­தா­கவும் அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

மிக நீண்ட காலத்­துக்குப் பின்னர், அமெ­ரிக்­கா­வினால் இலங்­கைக்­கான இரா­ணுவ நிதி அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதன் பெரும் பகுதி கடல்சார் கண்­கா­ணிப்புத் திறனை அதி­க­ரிப்­ப­தற்கே பயன்­ப­டுத்­தப்­படும். இந்தோ- – பசுபிக் பிராந்­தி­யத்தில் சுதந்­தி­ர­மான, திறந்த, சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வான கப்பல் பய­ணங்­களை உறுதி செய்­வதே அமெ­ரிக்­காவின் இலக்கு.

அதற்­கா­கவே இந்த இரா­ணுவ நிதியை இலங்­கைக்கு வழங்­க­வுள்­ளது அமெ­ரிக்கா. இலங்கைக் கடற்­ப­டையின் பலத்தை அதி­க­ரிப்­பது, இந்த திட்­டத்தின் ஒரு கட்டம்.

இதற்­காக, அமெ­ரிக்கா தனது கட­லோரக் காவல் படையில் இருந்து நீக்­கப்­பட்ட போர்க்­கப்பல் ஒன்­றையும் இலங்கைக் கடற்­ப­டைக்கு வழங்­க­வுள்­ளது. யுஎஸ்­சிஜி ஷேர்மன் என்ற பெய­ரு­டைய போர்க்­கப்­பலே, இலங்கைக் கடற்­ப­டைக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

ஹவாய் துறை­மு­கத்தில் தற்­போது தரித்து நிற்கும், யுஎஸ்­சிஜி ஷேர்மன் கப்­பலின் மேற் தளத்தில், எதிர்­வரும் 22 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிகழ்வில் இந்தக் கப்பல் இலங்கைக் கடற்­ப­டை­யிடம் கைய­ளிக்­கப்­படும்.

378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்­கப்பல் 1967ஆம் ஆண்டு கட்­டப்­பட்­டது. வியட்நாம் போரின் போது பல கப்­பல்­களை மூழ்­க­டித்து, சாதனை படைத்த இந்தப் போர்க்­கப்பல், அமெ­ரிக்க கட­லோரக் காவல்­ப­டையில் 50 ஆண்­டுகள் பணி­யாற்­றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், சேவையில் இருந்து நீக்­கப்­பட்­டது.

யுஎஸ்­சிஜி ஷேர்மன் போர்க்­கப்பல், இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரிடம் எதிர்­வரும் 22ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டாலும், உட­ன­டி­யாக அது கொழும்­புக்கு கொண்டு வரப்­ப­டாது. அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதமே கொழும்­புக்­கான பய­ணத்தை ஆரம்­பிக்கும்.

அதற்­குள்­ளாக, கப்­பலில் திருத்த வேலைகள் மற்றும் கரு­விகள் பொருத்தும் பணிகள் இடம்­பெ­று­வ­துடன், இலங்கை கடற்­ப­டையின் மாலு­மி­க­ளுக்கும் அதில் பயிற்­சிகள் அளிக்­கப்­படும். இதற்­கான செல­வு­களை இலங்கை அர­சாங்­கமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்­க­னவே அமெ­ரிக்கா 2004ஆம் ஆண்டு கடற்­ப­டைக்கு கொடுத்த போர்க்­கப்பல் இப்­போதும் ‘ எஸ்­எல்­என்எஸ் சமுத்ர’ என்ற பெய­ருடன் கடற்­ப­டையில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் நிலையில், அடுத்த ஆண்டில் அமெ­ரிக்­காவின் இன்­னொரு கப்­பலும் கடற்­ப­டையில் இணைந்து கொள்ளப் போகி­றது.

சீனாவின் செல்­வாக்கை உடைப்­ப­தற்­காக, அமெ­ரிக்கா போர்க்­கப்பல் மற்றும் இரா­ணுவ உத­வி­களை இலங்­கைக்கு அளித்து வரு­கின்ற நிலையில், சீனாவும், அதற்குப் போட்­டி­யாக, போர்க்­கப்பல் ஒன்றை வழங்கப் போவ­தாக அண்­மையில் அறி­வித்­தி­ருந்­தது. எந்த வகை­யான போர்க்­கப்­பலை இலங்கைக் கடற்­ப­டைக்கு சீனா வழங்கப் போகி­றது என்று சீனா இன்­னமும் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை.

எனினும், Type C28A அல்­லது Type C13B ரகத்தைச் சேர்ந்த போர்க்­கப்­ப­லா­கவோ அல்­லது, அண்­மையில் சீனக் கடற்­ப­டையில் இருந்து ஓய்­வு­பெற்ற Type 053 போர்க்­கப்­ப­லா­கவோ அது இருக்கக் கூடும் என்று நம்­பு­வ­தாக, சீன இரா­ணுவ ஆய்­வா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். இந்த மூன்று வகை சீனப் போர்க்­கப்­பல்­களும் தான், பொது­வாக ஏனைய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­பவை.

அல்­ஜீ­ரியா, பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த வகை போர்க்­கப்­பல்­களை வைத்­தி­ருக்­கின்­றன.

சீனாவின் இந்தப் போர்க்­கப்பல் இந்­தி­யாவின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தக் கூடும் என்று இந்­திய ஊட­கங்­களும், ஆய்­வா­ளர்கள் சிலரும் புர­ளியைக் கிளப்பி விட்­டி­ருந்­தார்கள்.

ஆனால், அதற்கு சீன ஆய்­வா­ளர்­களோ, இந்­தியா எவ்­வாறு இலங்கைக் கடற்­ப­டைக்கு போர்க்­கப்­பல்­களைக் கொடுத்­ததோ, அவ்­வாறு தான், சீனாவும் கொடுக்­கி­றது என்று பதி­லடி கொடுத்­தி­ருக்­கி­றார்கள்.

ஏற்­க­னவே, இந்­தி­யாவும் இரண்டு ஆழ்­கடல் ரோந்துக் கப்­பல்­களை இலங்கைக் கடற்­ப­டைக்கு கொடை­யாக வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆனால், பழைய போர்க்­கப்­பல்கள் கொடை­யாக வழங்­கப்­பட்­டாலும் கூட, அவற்றை ஏற்­றுக்­கொள்ளக் கூடாது என்று முன்னாள் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஜெயந்த கொலம்­பகே இந்­திய ஊடகம் ஒன்­றிடம் அண்­மையில் தெரி­வித்­துள்ளார்.

“தாய்க் கடற்­ப­டை­களில் சேவையில் இருந்து நீக்­கப்­பட்ட பழைய போர்க்­கப்­பல்கள், கொடை­யாக வழங்­கப்­படும். அல்­லது விற்­கப்­படும். வய­தான அந்தப் போர்க்­கப்­பல்­களின் இயந்­தி­ரங்கள், ஏனைய கரு­விகள், அடித்­தளம், என்­பன பழு­து­பார்க்­கப்­பட வேண்­டி­யி­ருக்கும் அல்­லது அடிக்­கடி பரா­ம­ரிப்­புக்கு உட்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும்.

அந்தக் கப்­பல்­களை கணி­ச­மான காலத்­துக்கு பழு­து­பார்க்க வேண்­டி­யி­ருக்கும். அதற்­கான செல­வு­களும் கப்­பலின் பெறு­ம­தி­யுடன் சேர்க்­கப்­பட வேண்­டி­யி­ருக்கும். கப்பல் கொடை­யாக வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் கூட, அதனைப் பரா­ம­ரிக்க அதிகம் செல­வ­ழிக்க வேண்­டி­யி­ருக்கும்.

இலங்கை அதன் தேவை­களை கவ­ன­மாக மதிப்­பீடு செய்ய வேண்டும். பொருத்­த­மான கொள்­வ­ன­வு­களை மேற்­கொள்ள வேண்டும். கொடை­யாக வழங்­கப்­ப­டு­கி­றது என்­ப­தற்­காக ஏற்றுக் கொள்­ளக்­கூ­டாது.

போர்க்­கப்­பல்­களை பல்­வேறு நாடு­களில் இருந்து கொடை­யாக பெற்றுக் கொள்ளும் போது அவற்றில் பொருத்தக் கூடிய ஆயு­தங்கள் தொடர்­பாக பிரச்­சி­னைகள் எழும்பக் கூடும். ஏற்­க­னவே இருந்த ஆயு­தங்கள் பதி­லீடு செய்­யப்­பட வேண்டும்.

பயன்­ப­டுத்­தப்­படும் ஆயு­தங்கள் நாட்­டுக்கு நாடு வேறு­படக் கூடும். கையா­ளுதல் மற்றும் பல ஆயுதப் பொறி­மு­றை­களை இணைத்தல், ஒரு சவா­லான பணி­யாக இருக்கும். உதி­ரிப்­பா­கங்­களைப் பெற்றுக் கொள்­வதும், பிரச்­சி­னைக்­கு­ரிய ஒன்­றாக இருக்கக் கூடும்.

இலங்­கைக்கு இப்­போது, இரா­ணுவத் தள­பா­டங்கள் தேவை­யில்லை. ஏனென்றால், விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர், அவர்­களின் முழு­மை­யான இரா­ணுவத் திறனும் அழிக்­கப்­பட்­ட­துடன் நிறை­வுக்கு வந்து விட்­டது.

ஆனாலும், பிராந்­திய மற்றும் பூகோள ரீதி­யாக சக்­தி­வாய்ந்த நாடுகள், இலங்­கைக்கு, இரா­ணுவத் தள­பா­டங்­களை குறிப்­பாக போர்க்­கப்­பல்­களை கொடை­யாக வழங்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தியப் பெருங்­க­டலின் கட்­டுப்­பாட்­டுக்­காக, மேற்­கு­லகம் மற்றும் இந்­தியா ஒரு பக்­கமும், சீனா மற்­றொரு பக்­கமும் நடத்­து­கின்ற போட்­டிக்குள் இழுத்துச் செல்­லவே இவ்­வாறு போர்க்­கப்­பல்­களை கொடை­யாக வழங்­கு­கின்­றன.

உள்­நாட்டுப் போர் நடந்து கொண்­டி­ருந்த போது, இலங்­கைக்கு ஆயு­தங்­களை விற்க மறுத்த நாடுகள் இப்­போது, கொடை­யாக ஆயு­தங்­களை வழங்­கு­கின்­றன. இது ஏனென்றால், அவர்­களின் பூகோள அர­சியல் நலன்­களை அடை­வ­தற்­கா­கவே,” என்றும் அவர் சாடி­யி­ருக்­கிறார்.

அது மாத்­தி­ர­மன்றி, இலங்­கையை இரா­ணுவ மய­மாக்கும் செயற்­பா­டு­களில், சர்­வ­தேச நாடு­களே ஈடு­பட்­டி­ருக்­கின்­றன என்றும் அட்­மிரல் ஜயந்த கொலம்­பகே குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

“இலங்கைத் தீவு­ட­னான தமது இரா­ணுவத் தொடர்­பு­களை அதி­க­ரித்­ததன் மூலம், இந்த நாடுகள் இலங்­கையில் புதிய இராணுவ மயமாக்கலை ஆரம்பித்தன.

பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள், இலங்கைத் துறைமுகங்களுக்கு மேற்கொண்ட பயணங்களே, இந்த இராணுவ மயமாக்கலுக்கான சாட்சி, 2009 தொடக்கம், 2017 வரை, 398 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்துள்ளன.

இந்தியாவின் 82 போர்க்கப்பல்களும், பாகிஸ்தானின் 24 போர்க்கப்பல்களும், ஜப்பானின் 67 போர்க்கப்பல்களும், பங்களாதேஷின் 23 போர்க்கப்பல்களும், சீனாவின் 31 போர்க்கப்பல்களும், அமெரிக்காவின் 18 போர்க்கப்பல்களும், ரஷ்யாவின் 26 போர்க்கப்பல்களும், இந்தக் காலப்பகுதியில் இலங்கைத் துறைமுகங்களுக்கு வந்துள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.

அட்மிரல் கொலம்பகேயின் கருத்து நிலையில் இருந்து பார்க்கும் போது, சர்வதேச சக்திகளின், இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அகப்பட்டு விட்டது என்றே கருத வேண்டியுள்ளது.

இலங்கை அரசாங்கமே நினைத்தாலும் கூட இதிலிருந்து இலகுவில் வெளியே வந்து விட முடியாது என்பதையே இது உணர்த்தி நிற்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.