Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனோவைக் கண்டு அஞ்சுகின்றதா கூட்டமைப்பு?

Featured Replies

மனோவைக் கண்டு அஞ்சுகின்றதா கூட்டமைப்பு?

 
 
pg6-1.jpg?itok=5fFt6sOs

வடக்குக் கிழக்கு வீடமைப்பு, வீதி அபிவிருத்தி அமைச்சர் மனோவிடமிருந்து பறிபோகிறது” என்று தலைப்புச் செய்தியிட்டுள்ளது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதைப்போல ஒரு செய்தியை “அமைச்சர் மனோவின் குழப்பத்தால் வடக்குக் கிழக்கு வீடமைப்பு தாமதம்” என்று தலைப்பிட்டு அதே பத்திரிகை வெளியிட்டது.

அதற்கு மனோ கணேசன் தன்னுடைய முக நூலில், “இதென்னப்பா... அநியாயம்? வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று வருடங்களாக, இதோ, அதோ என்ற அறிவிப்புகளுடன், ஒரு வீடுதானும் கட்டப்படாமல் வீட்டுத்திட்டம் படு தாமதமடைந்து கைகூடாமல் இருக்கிறது.

இதற்கும் எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால், உண்மையில் அமைச்சரவையில் இந்தத் தாமதம் பற்றி வடகிழக்கு தமிழ் உடன்பிறப்புகள் சார்பாக அடிக்கடி குரல் எழுப்புவதே நான்தான்.

உண்மை இப்படி இருக்கும்போது, கடந்த வாரம் அமைச்சரவையில் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில் இருந்த தெளிவின்மை சம்பந்தமாக ஒரு விளக்கம் கேட்டிருந்தேன். இதை சரியாக புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு அபாண்ட பொய்யை தலைப்பு செய்தியாக போடுவதா?” என்று கவலை தெரிவித்திருந்தார்.

மனோ கணேசனிடமிருந்து இந்த வேலைத்திட்டங்களை பிரதமரோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கத்தின் வேறு கைகளோ பறிக்கவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே இதைப் பறித்து இன்னொரு கையில் கொடுக்க வேணும் என்று கேட்கிறது.

இதைப்பற்றி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில் வடக்குக் கிழக்கில் வீடமைப்பு, வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை மனோ கணேசனிடம் கொடுக்க வேண்டாம். அதை மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பிலே கொடுக்க வேணும். அதாவது மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனின் பொறுப்பில் ஒப்படைக்க வேணும். இதை பிரதமருடைய பணியகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் சம்மந்தன்.

மனோ கணேசனின் கையிலிருந்து இதை சுவாமிநாதனுக்கு மாற்றுவதற்கான வலுவான காரணங்கள் எதையும் சம்பந்தன் முன்வைக்கவில்லை.

இதற்கு இன்னொரு உதாரணம், 24. 07. 2018 அன்று அமைச்சரவையில் வடக்கு கிழக்கில் வீடு கட்டுதல் தொடர்பில் கடும் வாத விவாதம் ஏற்பட்ட போது நான் ஜனாதிபதியை பார்த்து சுத்த சிங்களத்தில் சொன்னது. அமைச்சரவையில் அனைவரும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

வடக்கு கிழக்கில் வாழ்வாதார அபிவிருத்தி செய்யப்படவில்லை. இங்கிருந்து தலைவர்கள் அங்கு போய் வாக்குறுதிகள் அளிப்பதுதான் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் அங்கு ஒன்றும் நடைபெறுவதில்லை. மூன்று வருடங்கள் கழிந்தும், அங்கு அமைச்சர் சுவாமிநாதன், தனக்கு ஒதுக்கப்பட்ட 40 ஆயிரம் வீடுகளில் ஒரு வீட்டைத் தானும் கட்டவில்லை. இப்போதுதான் இன்னொரு 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பொறுப்பு, உங்கள் அமைச்சு மூலம் என்னிடம் வந்துள்ளது. அதற்கும் பல தடைகளை நான் இன்று காண்கிறேன். இங்கிருந்து யார் வடகிழக்குக்கு போய் என்ன தான் சொல்லி வந்தாலும், அங்கு மக்கள் நியாயமாக கோபம் கொண்டுள்ளார்கள். உங்கள் மீது, பிரதமர் மீது, நம் அரசாங்கம் மீது கோபம் கொண்டுள்ளார்கள்” என மனோ குறிப்பிட்டது.

இப்படியிருக்கையில் இந்தச் செய்தியின் பின்னணி என்ன என்று அறிவதற்காக மனோ கணேசனைத் தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. ஆனால் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், மனோ கணேசனின் பொறுப்பில் இந்த வேலைத்திட்டங்கள் இருக்குமானால் அவர் நேரடியாக இதைக் கவனிப்பார்.

அதிகாரிகளோ வேறு முகவர்களோ தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு இவற்றைக் கையாள்வதற்கு இடமளிக்க மாட்டார். வேலைகளை விரைவாக செய்து முடிப்பதற்கு முயற்சிப்பார் என்றன.

எனவே, இது வடக்குக் கிழக்கில் வீட்டுத்திட்டத்தையும் வீதி அபிவிருத்தியையும் சீராக முன்னெடுக்கும் அக்கறையின் பாற்பட்டுச் சம்பந்தன் சிந்திக்கவில்லை என்று நிரூபணமாகிறது. இதற்குப் பின்னால் நிச்சயமாக ஒரு அரசியல் போட்டியே இயங்கிக் கொண்டிருக்கிறது.

மனோ கணேசனுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் (குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்கும்) இடையில் உருவாகியுள்ள கொதிநிலை முரணே இதற்குக் காரணம்.

கூட்டமைப்புக்கும் மனோவுக்குமிடையில் ஒரு நிழல் யுத்தம் அண்மைக்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் தீர்வில் இந்த அரசாங்கம் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. அரசியலமைப்பு உருவாக்கம் நேர்மையாக நடக்கவில்லை.

அது சாத்தியப்படும் என்று உறுதி கூற முடியாது என்ற தொனிப்பட மனோ கணேசன் தொடர்ச்சியாக – வெளிப்படையாகப் பேசி வருகிறார். முடிந்தவரையில் மனோ உண்மையைச் சொல்ல முற்படுகிறார். பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அவர் விரும்பவில்லை.

ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ இந்த விடயத்தில் இன்னும் தீர்மானமாக எதையும் சொல்லவில்லை. இழுபட்ட சமாளிப்புகளையே செய்துகொண்டிருக்கிறது. இதையிட்டு மனோ சில சந்தர்பங்களில் வெளிப்படையாக – நேரடியாக கூட்டமைப்பின் மீது விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதனால் கூட்டமைப்பு மனோவின் மீது கசப்படைந்திருக்கிறது. கூட்டமைப்பின் உள் வட்டாரங்களில் மனோவைக் குறித்த விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன. கடிந்த சம்பவங்கள் உண்டு.

ஆனாலும் நேரடியாக மனோ கணேசனை மறுத்துரைப்பதற்கு கூட்டமைப்பினால் முடியவில்லை. அப்படிச் செய்தால் மனோ மேலும் கேள்விகளை எழுப்புவார். சங்கடங்களை உருவாக்குவார் என்ற பயம் அதற்குண்டு.

 

 
 

எனவே மனோ கணேசனை மடக்குவதற்கு வேறு வழிகளில் வியூகங்களை வகுத்திருக்கிறது கூட்டமைப்பு (தமிழரசுக்கட்சி).

இதன் வெளிப்பாடே தமிழரசு கட்சி பொதுசெயலாளர் துரை ராசசிங்கம் கடந்த வாரம் மனோவைக் குறித்து வெளியிட்டிருந்த விமர்சனம். துரைராசசிங்கத்தின் விமர்சனத்துக்கு மனோ தன்னுடைய முகநூலில் உடனடியாகவே பதிலளித்திருந்தார்.

'மனோ கணேசன், வடகிழக்கிற்கு வந்து எமக்கு 'புத்தி' கூறி 'குழப்பம்' விளைவிக்க கூடாது. நாம் நினைத்தால் வடகிழக்கிற்கு வெளியேயும், தமிழர் வாழும் அனைத்து இடங்களிலும் தேர்தல்களில் போட்டியிட முடியும்' என அகில இலங்கை தமிழரசு கட்சி பொதுசெயலாளர் துரைராசசிங்கம் என்பவர் சொன்னதாக ஒரு செய்தியை சற்று தாமதமாக படித்தேன்.

துரைராசசிங்கத்தை எனக்கு நேரடியாக தெரியாது. எங்கே, எப்போதாவது அவரை சந்தித்திருப்பதாகவும் எனக்கு ஞாபகமில்லை.

இந்த செய்தியில் கூட்டமைப்பு பேச்சாளர் நண்பர் சுமந்திரனின் பெயரும் இடம்பெறுகிறது. எனவே இதுபற்றி சுமந்திரனிடம் வினவிய போது, அவர் இந்த செய்தியில் உள்ளவாறு, தங்கள் கட்சி பொதுசெயலாளர் இந்த அறிக்கையை விடுத்துள்ளார் என்பதை என்னிடம் நேரடியாக உறுதிப்படுத்தினார்.

எதுவாயினும், இந்த செய்திக்கு நான் நேரடியாக பதிலளிக்க போவதில்லை.

ஆனால், இவர்கள் என்னை என்னவிதமாக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள் என எனக்கு நன்றாக புரிகிறது. இதற்கு மாறாக, நான் பிரதேசங்களையும், பிராந்தியங்களையும் கடந்த ஒரு ஜனநாயகவாதி என்பதை மட்டும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஞாபகப்படுத்திட விரும்புகிறேன்” என.

இன்னொரு இடத்தில் “ஆளை விடுங்கப்பா சாமி...! கிளிநொச்சியில் அமைச்சின் மாகாண நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தால், கிழக்குக்கு போய் அங்கு வாழும் தமிழரின் துன்பத்தை பகிர்ந்து கொண்டால், மனோ கணேசன் ஏன் வடக்குக்கும், கிழக்குக்கும் வருகிறார் என கேட்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்ல முன்னே என்னை திட்டியும் தீர்க்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படியென்றால் மனோ கணேசனைக் கண்டு கூட்டமைப்புப் பயப்படுகிறதா? என்றால், “அப்படித்தான்” தோன்றுகிறது என்றே பதிலளிக்க வேண்டியுள்ளது.

மனோ கணேசன் தன்னுடைய அமைச்சின் வேலையைக் கவனிப்பதற்காக வடக்குக் கிழக்கிற்கு அடிக்கடி பயணிக்கிறார். அந்தச் சந்தர்ப்பங்களில் மனோ கணேசனைத் தொடர்பு கொண்டு பலரும் பல விடயங்களையும் பேச முற்படுகிறார்கள்.

இதற்குக் காரணம், மனோ பல விடயங்களையும் வெளிப்படையாகப் பேசுகிறார். பலரையும் சந்திக்க தயாராக இருக்கிறார் என்பதாகும். இதையிட்டு சிலருக்கு வேறு பார்வைகளும் உண்டு. மனோ பந்தா காட்டுகிறார். அவர் பேசும் அளவுக்கு செயற்பாடுகளில் வேகத்தையோ திறனையோ காட்டுதில்லை என்ற விதமாக.

இன்னொரு விமர்சனமும் உண்டு. மனோவின் அரசியல் நிலைப்பாடு எப்போதும் அடிநிலை மக்களின் மீட்சிக்கானதில்லை. சுயமானதில்லை என்பதாக. அதைப்பற்றியெல்லாம் தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்க வேணும்.

எனவே வடக்குக் கிழக்கிற்கு வரும் மனோ கணேசன், தான் பங்கேற்கும் நிகழ்வுகளில் சமகால அரசியல் நிலவரங்களைப்பற்றிப் பேசுகிறார். அப்படிப் பேசும்போது அது தவிர்க்க முடியாமல் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களாக – கூட்டமைப்புக்குச் சங்கடங்களை அளிப்பதாக அமைந்து விடுகிறது.

இதனைக் கூட்டமைப்பு விரும்பவில்லை. அதனுடைய அரசியல் இருப்புக்கு இது சவாலாக அமைவதால் கூட்டமைப்புக்கு எரிச்சலூட்டுகிறது. இதன் வெளிப்பாடே மனோவின் அமைச்சுப் பொறுப்புக்கு வந்த வீடமைப்பையும் வீதி அபிவிருத்தியையும் பறிக்க முனைவதாகும்.

இதில் இன்னொரு விசயமும் உண்டு. மனோவிடமிருந்து பறித்து சுவாமிநாதனிடமும் பிரதமரின் பணிமனையின் கண்காணிப்பிலும் விட்டால் அதை மறைமுகமாகத் தாங்கள் கையாளலாம் என்பது கூட்டமைப்பின் அனுமானம். அப்படிக் கையாளும்போது அப்படி இப்படி நடந்து கொள்ளலாம் அல்லவா!

இது மட்டுமல்ல, இன்னொரு எச்சரிக்கையையும் கூட்டமைப்பு மனோவுக்கு விட்டிருக்கிறது. “வடக்குக் கிழக்கிற்கு வெளியே – கொழும்பில் – மனோவின் தேர்தல் களத்தில் - எதிர்காலத்தில் கூட்டமைப்புப் போட்டியிட வேண்டியிருக்கும்” என.

இதற்கும் மனோ மேற்படி பதிவொன்றில் “நான் பிரதேசங்களையும், பிராந்தியங்களையும் கடந்த ஒரு ஜனநாயகவாதி” என. அப்படியென்றால் எதிர்காலத்தில் கூட்டமைப்புக்குச் சவாலாக மனோவும் வடக்குக் கிழக்கில் – குறிப்பாக வடக்கில் – வன்னியில் தனது அணியைக் களமிறக்கக் கூடும். ஆனால், அந்த முடிவை அவர் அவசரப்பட்டு எடுப்பார் என்று தோன்றவில்லை.

தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது இதைப்பற்றிய பேச்சு வந்தவேளை மனோ சொன்னார், ஆம். (ஆதங்கப்படாதீர்கள்...!) நாட்டுக்கே, உலகிற்கே துணிச்சல் பற்றி பாடம் எடுத்து சிவந்த மண் அது. இது ஒரு தேய்பிறை காலம். அவ்வளவுதான்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் போராட்ட வடிவங்கள் மாறும். போராட்ட இலக்குகளின் முன்னுரிமை வரிசைகளும் மாறும். ஆகவே காலமும் மாறும்.

வெளியே இருந்து எவரையும் அங்கே கொண்டு வர நான் முன்மொழியவில்லை. அங்கே அந்த மண்ணில் இருந்தே தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, துணிச்சல், நேர்மை, தன்னம்பிக்கை கொண்ட தோழர்கள் எழுந்து வர வேண்டுகிறேன். அதற்கான இயந்திரத்தை தயாரிக்க உதவிடுவேன். உரிமைக்கு குரல் கொடுக்கும் நான் உறவுக்கும் குரல் கொடுப்பேன், எப்போதும் போல.....!

கருணாகரன்

http://www.vaaramanjari.lk/2018/08/19/அரசியல்/மனோவைக்-கண்டு-அஞ்சுகின்றதா-கூட்டமைப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.