Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவ அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களினால் ஆளப்பட்ட்து.

1948 ல் சுதந்திரம் தந்தபோதும், பிரித்தானியா 1957 வரை கட்டுநாயக்காவில் RAF ராயல் விமானப்படை  தளத்தினையும், திருகோணமலையின் ராயல் நேவி தளத்தினையும் ஜப்பானால் மீண்டும் ஒரு யுத்தம் வராது என்பது உறுதியாகும் வரை வைத்திருந்தது. 

இன்று சீனா அம்பந்தோட்டை நுழைந்தவுடன், அமெரிக்கா, பிரிட்டன் தலைமையில் மேலை நாடுகளும், ஜப்பானும், இந்தியாவும் மூக்கை நுழைக்கின்றன. ரஷியாவும் எட்டிப் பார்க்க முயல்கிறது. அனைவரது கண்ணும் திருகோணமலை மீதே உள்ளது. 

அமெரிக்கா முன்னர் திருகோணமலை வர முயல்கின்றது என்பதற்ககாவே இந்தியா தமிழ் இயக்கங்களை வளர்த்து ஆதரித்தது.

அமெரிக்கா வரப்போவதில்லை, நண்பன் ஆகி விட்டது என்றதும்.... அழிக்க துணை நின்றது.

ஆனால்.... சீனத்து அச்சறுத்தலை பெரிதாக நினைக்க வில்லை.

அப்போது இருந்த சீனா வேறு இப்போது வேறு. மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக வளைந்து நிற்கிறது சீனா.

ஆசியாவின் 7 முக்கிய வளரும் நாடுகளில்,முஸ்லீம் நாடுகளான இந்தோனேசியா, மலேசியா மேற்குலகின் நம்பிக்கைக்கு உரியதல்ல. தென் கொரியா நம்பிக்கைக்கு உரியதாயினும்... வட கொரியாவினால் நிரந்தர நம்பிக்கை வைக்க முடியாத நிலை.

தாய்லாந்து ராணுவ ஆட்சி மிரட்டல்களுக்கு உரிய அரசியல் நிச்சய மில்லாத நாடு. 

மீதமிருக்கும் சிங்கப்பூரும், தாய்வானும் சீன சார்பானவை. சிங்கப்பூரில் 72 % சீனர்கள்.

அப்பகுதியில் பெரும் பொருளாதார புலியாக பிரிட்டனிடம் இருந்த ஹாங் கொங்கும் சீன வசம்.

இந்த நிலையில், சிறிய, கேந்திர முக்கியத்துவம் மிக்க, இலகுவாக கையாளாக கூடிய இலங்கையும் கையை விட்டு போவதை அனுமதிக்க முடியாத நிலையில் ஏனைய நாடுகள். 

ஆனாலும் சீன வலுவாக அம்பாந்தோடையில் காலூன்றி விட்டதனை, அந்த கால்களை இலகுவாக விழுத்த முடியாத வகையில் பெரு வட்டிக்கு கடன் என்னும் கொங்கிரீட்டினையும் போட்டு உள்ளதனையும் ஏனைய நாடுகள் கவனித்து அதிர்ந்து போயுள்ளன.  

தீடீரென பார்த்தால்... ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் வருகிறார். புதிய தூதர் நியமனமாகிறார். 

இப்படித்தான் கொங்கோ என்னும் ஆபிரிக்க நாடு. யுத்தம் முடிந்ததும்... பிரிட்டனும், அமெரிக்காவும்... எதோ பிழைச்சு போங்க இதை வைத்து என்று ஆளுக்கு 10 மில்லியன் டொலர் பணம் கொடுத்தார்கள். சீனாவோ 10 பில்லியன் முதலீடு செய்து சகல அடிப்படை அமைப்புகளையும் கட்டி எழுப்பியதுடன்... பதிலாக அந்த நாட்டு கனிவளங்களை அடுத்த 10 வருடங்களுக்கு தமக்கு மட்டுமே என எழுதி வாங்கி விட்டது. இது விடயம் தாமதமாக தெரிந்ததும்... அடங்கோக்க மக்கா.... என்று வாயை பிளந்தன அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள்.

இப்போது இலங்கையில் அந்த நிலை வர விடக் கூடாது என முனைப்புடன் உள்ளன.

சீனாவுக்கு எதிர்ப்பினை தரக்கூடிய தமிழர் தரப்பினை தன்பக்கம் இழுக்கும் முயல்வில் இப்போது யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளன மக்களுக்கு உதவி செய்யப்போகிறோம் என்று கிளம்பி விட்டது சீனா.

இந்தியாவும் அதே போல கிளம்பி இருந்தாலும் இனி வேகமாக இயங்கும். இந்த வகையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி முதலிடம் பிடிக்கிறது.

இனி ஜப்பானும் வரும்... தமிழருக்கு உதவுகிறோம் என....

ஆக.... புலிகளை ஒழிக்க சிங்களவர்கள் கைக்கொண்ட அதே ராஜதந்திரத்தினை.... தமிழர்கள் தமது உரிமைகளை வெல்ல பயன்படுத்த வேண்டிய நிலைமை கை கூடி வருகிறது.

image_54145fa380.jpg

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.