Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவா­மியின் ஆட்டம் பலிக்­குமா?

Featured Replies

சுவா­மியின் ஆட்டம் பலிக்­குமா?

SAMAKALAM010918-PG01-R1Page1Image0009-3cb11393ec1a48828886bd3582aa7851acc87e42.jpg

 

இந்­தி­யாவை ஆட்சி செய்யும் பார­தீய ஜனதா கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக உள்ள சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வரும் 11ஆம் திகதி புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

சுப்­ர­ம­ணியன் சுவா­மியைத் தலை­வ­ராக கொண்ட விராட் ஹிந்­துஸ்தான் சங்கம் என்ற அமைப்­பினால் புது­டெல்­லியில் வரும் செப்­டெம்பர் 12ஆம் திகதி ஒரு கருத்­த­ரங்கு ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்தக் கருத்­த­ரங்கில் சிறப்புப் பேச்­சா­ள­ராக மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்­ள­வி­ருக்­கிறார். இந்தப் பய­ணத்தின் போது, மஹிந்த ராஜபக் ஷ புது­டெல்­லியில் மூன்று நாட்கள் தங்­கி­யி­ருக்கப் போவ­தாக அவ­ரது ஊடகப் பிரிவு அறி­வித்­துள்­ளது,

அதா­வது, செப்­டெம்பர் 13ஆம் திகதி வரை அவர் புது­டெல்­லியில் இருப்பார் என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷ தோல்­வியைத் தழு­விய பின்னர், முதல்­மு­றை­யாக புது­டெல்­லிக்குச் செல்லப் போகிறார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம், இந்­தியப் பிர­த­ம­ராக நரேந்­திர மோடி பத­வி­யேற்ற நிகழ்வு தான், மஹிந்த ராஜபக் ஷ கடை­சி­யாக புது­டெல்­லிக்குச் சென்ற சந்­தர்ப்­ப­மாகும். கிட்­டத்­தட்ட நான்கு ஆண்­டு­க­ளாக அவர் புது­டெல்லிப் பக்கம் தலை­காட்­ட­வே­யில்லை.

ஆர்­எஸ்எஸ் நடத்­திய பௌத்த மாநாடு ஒன்றில் பங்­கேற்க மஹிந்த ராஜபக் ஷ மும்­பைக்குச் சென்­றி­ருந்தார். திருப்­ப­திக்கு வழி­பாடு நடத்­தவும் அடிக்­கடி சென்று வந்தார். திருப்­பதி செல்லும் வழி­யாக பெங்­க­ளூ­ரையும் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

ஆனால், புது­டெல்­லியை மாத்­திரம் அவர் எட்­டியும் பார்க்­க­வில்லை.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு, மூன்று மாதங்­களில் முதல் முறை­யா­கவும், 2016 ஆம் ஆண்டு இரண்­டா­வது முறை­யா­கவும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கொழும்­புக்கு வந்­தி­ருந்த போது, மஹிந்த ராஜபக் ஷ வையும் சந்­தித்­தி­ருந்தார்.

அப்­போது, மஹிந்த ராஜபக் ஷ வை புது­டெல்­லிக்கு வரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்தார் நரேந்­திர மோடி. அந்த அழைப்பை ஏற்­றுக்­கொண்டு அவர் இது­வ­ரையில் புது­டெல்­லிக்குப் பய­ணத்தை மேற்­கொள்­ள­வில்லை.

ஆனால், நரேந்­திர மோடியின் கட்­சியில் இடம்­பெற்­றுள்ள ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, இப்­போது புது­டெல்­லிக்குப் பயணம் மேற்­கொள்ள இணங்­கி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கும் இடையில் உள்ள உற­வுகள் அனை­வரும் அறிந்­தது தான். விடு­தலைப் புலிகள் என்­றாலோ சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கு கடும் எரிச்சல். எப்­போதும் விடு­தலைப் புலி­களை எதிர்த்து வந்­த­வ­ரான சுவா­மியை, விடு­தலைப் புலி­களை அழிக்கும் இலக்­குடன் செயற்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிடித்துப் போனதில் ஒன்றும் ஆச்­ச­ரியம் இல்லை.

விடு­தலைப் புலிகள் இருந்த காலத்­திலும் சரி, அதற்குப் பின்­னரும் சரி, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த காலத்தில், சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கு கொழும்பில் இரா­ஜ­ம­ரி­யாதை தான் கிடைத்து வந்­தது.

இரா­ணுவம் நடத்­திய பாது­காப்புக் கருத்­த­ரங்­கு­க­ளிலும், வேறு பல நிகழ்­வு­க­ளிலும் அவர் ராஜபக் ஷவி­னரின் சிறப்பு அழைப்­பா­ள­ராக பங்­கேற்று வந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்தை இழந்த பின்­னரும் சுவா­மிக்கும் அவ­ருக்கும் நல்ல தொடர்பு இருந்தே வந்­தது. அதன் தொடர்ச்­சி­யாகத் தான் இப்­போது மஹிந்­தவை புது­டெல்­லிக்கு அழைத்­தி­ருக்­கிறார் சுப்­ர­ம­ணியன் சுவாமி.

அது­மாத்­தி­ர­மன்றி, இந்­தி­யாவில் சாத­னை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதி உயர் விரு­தான பாரத ரத்னா விரு­தையும் அவ­ருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சுப்­ர­ம­ணியன் சுவாமி கோரு­வது இது தான் முதல் முறை­யன்று. விடு­தலைப் புலி­களை அழித்­த­மைக்­காக, அவ­ருக்கு இந்த விருது வழங்­கப்­பட வேண்டும் என்ற கருத்தை சுவாமி ஏற்­க­னவே முன்­வைத்­தி­ருந்தார்.

நெல்சன் மண்­டே­லா­வுக்கு பாரத ரத்னா விருது வழங்­கி­யது போல மஹிந்­த­வுக்கும் வழங்க வேண்டும் என்று இப்­போது அவர், நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷவின் மீதான அவ­ரது அன்பின் வெளிப்­பா­டா­கவோ, நட்பின் வெளிப்­பா­டா­கவோ இதனைப் பார்க்கக் கூடி­ய­தன்று.

அதற்கும் அப்பால், மஹிந்த ராஜபக் ஷவைப் பற்­றிய ஒரு சாத­க­மான (positive) அலையை புது­டெல்­லியில் பரவ விடும் தந்­தி­ரமும் கூட.

இன்னும் கிட்­டத்­தட்ட 15 மாதங்­களில் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலை இலங்கை சந்­திக்கப் போகின்ற சூழலில் தான், மஹிந்­த­வுக்­கான புதி­ய­தொரு கதவைத் திறந்து விட்­டி­ருக்­கிறார் சுப்­ர­ம­ணியன் சுவாமி.

வெறு­மனே ஒரு கருத்­த­ரங்கில் உரை­யாற்­று­வ­தற்­காக மஹிந்­தவை அவர் புது­டெல்­லிக்கு அழைத்­தி­ருக்­கிறார் என்­பது மிகை­யான கற்­பனை.

கருத்­த­ரங்கில் உரை­யாற்­று­வ­தற்­காக மாத்­தி­ரமே வரு­வ­தென்றால், அந்தப் பயணம் மூன்று நாட்கள் புது­டெல்­லியில் தங்­கி­யி­ருக்கும் வகையில் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை.

அதற்கும் அப்பால் சில அர­சியல் சந்­திப்­பு­களை ஒழுங்கு செய்யும் முயற்­சி­யாக சுப்­ர­ம­ணியன் சுவாமி இந்த நிகழ்வை ஏற்­பாடு செய்­தி­ருக்­கிறார் என்­பதே பர­வ­லான கருத்­தாக உள்­ளது.  

புது­டெல்­லி­யுடன் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஒரு சுமு­க­மான உறவு இல்லை.அந்த உறவை மீள­மைப்­பது, சுப்­ர­ம­ணியன் சுவா­மிக்கு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற வேலை­யா­கவும் இருக்­கலாம். அந்த வேலையை யார் கொடுத்­தது என்ற கேள்­விக்கு இப்­போது விடை­யில்லை. 

சுப்­ர­ம­ணியன் சுவாமி அண்­மையில் இலங்கை வந்­தி­ருந்த போது, மஹிந்­தவைப் போலவே, அதி­கா­ரத்தை இழந்து நிற்கும் மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி நசீ­மையும் கொழும்பில் சந்­தித்­தி­ருந்தார்.

அப்­போது, அவர் மாலை­தீவில் வரும் 23ஆம் திகதி நடக்­க­வுள்ள தேர்­தலில் குழப்­பங்கள் நிகழ்ந்தால் இந்­தியா தலை­யீடு செய்யும் என்று கூறி­யி­ருந்தார்.

உட­ன­டி­யா­கவே, “அது இந்­திய அரசின் கருத்து அல்ல, சுவா­மியின் தனிப்­பட்ட கருத்தே” என்று இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சின் பேச்­சாளர் ரவீஷ் குமார் அந்தக் கருத்தை மறுத்­தி­ருந்தார்.

சுவா­மியின் இந்தக் கருத்து, மாலை­தீவு அர­சுக்கு கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், இந்­தியத் தூது­வரை அழைத்துக் கண்­ட­னமும் தெரி­வித்­துள்­ளது.

மாலை­தீவு விவ­கா­ரத்தில் மூக்கை நுழைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் அழைப்பின் பேரில் தான் மஹிந்த ராஜபக் ஷ புது­டெல்­லிக்கு செல்­ல­வுள்ளார். மாலை­தீவு விடயம் போலவே, மஹிந்த விவ­கா­ரத்­தையும் தன்­னிச்­சை­யாக கையாள எத்­த­னிக்­கிறார் போலும்.

எது எவ்­வா­றா­யினும், மஹிந்த ராஜபக் ஷவின் சீன சார்பு நிலையே, 2015 ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்­கான சூழல் உரு­வா­கி­ய­தற்கும் முக்­கிய கார­ணி­யாக இருந்­தது.

மஹிந்த ராஜபக் ஷ தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், தி ஹிந்து நாளி­த­ழுக்கு அளித்­தி­ருந்த முத­லா­வது பேட்­டி­யி­லேயே, இந்­தியா மற்றும் அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­பு­களை குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

நரேந்­திர மோடி அர­சாங்­கத்தை அவர் நேர­டி­யாக குற்­றம்­சாட்­டா­வி­டினும், இந்­தியப் புல­னாய்வு அமைப்­பான, றோவின் மீது அவர் தனது கோபத்தை வெளிப்­ப­டுத்­தினார். அவர் மாத்­தி­ர­மன்றி, பசில் ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகி­யோரும் கூட, மஹிந்­தவின் தோல்­விக்கு இந்­தியப் புல­னாய்­வுத்­துறை தான் காரணம் என்று கூறி­யி­ருந்­தனர்.

மஹிந்த ராஜபக் ஷ சீனா­வுடன் கொண்­டி­ருந்த நெருக்கம், இந்­தி­யா­வுக்கு அச்­சத்தைக் கொடுத்­தது. அவர் தொடர்ந்து ஆட்­சியில் இருப்­பது இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடும் என்று யோசித்­தது.

அதன் விளைவு தான், அவ­ரது ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான ஒரு அணியைத் தயார்­ப­டுத்­து­வ­தற்­கான ஊக்­கத்­தையும் கொடுத்­தி­ருந்­தது.

இப்­படி தனது ஆட்­சியைக் கவிழ்த்த இந்­தி­யாவின் தலை­ந­க­ரத்­துக்கு இது­வரை எட்டிக் கூடப் பார்க்­காத மஹிந்த ராஜபக் ஷ, கருத்­த­ரங்கில் உரை­யாற்­று­வ­தற்­காக வரப் போகிறார் என்­றதும், அதற்குப் பின்னால் இருக்கக் கூடிய அர­சியல் தான் எல்­லோ­ராலும் ஆரா­யப்­ப­டு­கி­றது.

இந்தச் சூழலில், மகிந்­தவின் தயவு இந்­தி­யா­வுக்குத் தேவைப்­ப­டு­கி­றதா- அல்­லது இந்­தி­யாவின் தயவு மகிந்­த­வுக்குத் தேவைப்­ப­டு­கி­றதா என்­பதே அந்த ஆய்­வு­களின் அடிப்­படை.

அதுவும் மஹிந்­தவே மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டுவார் என்றும், இல்­லை­யில்லை அவ­ரது சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரையே போட்­டியில் நிறுத்­துவார் என்றும், ஒரு ட்ம்மியையே போட்­டியில் நிறுத்­துவார் என்றும் பர­வ­லாகப் பேசப்­ப­டு­கின்ற சூழலில் தான் அவ­ரது புது­டெல்லிப் பயணம் திட்­ட­மி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இல்­லா­விட்­டாலும், இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் தவிர்க்க முடி­யாத அல்­லது தடுக்க முடி­யா­த­ள­வுக்கு வளர்ந்து விட்­டது. மஹிந்­த­வுக்குப் பதி­லாக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆட்­சியில் அமர்த்­து­வதில் வெற்­றியைக் கண்­டி­ருந்­தாலும், அவ­ரது அர­சாங்கம் சீனாவை உதறித் தள்ளி விட்டுச் செயற்­படத் தயா­ராக இல்லை.

இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் இந்­தி­யா­வுக்குப் பிடிக்­கா­விட்­டாலும், ஓர­ள­வுக்கு அதனை பொறுத்துக் கொள்ள வேண்­டிய நிலையே காணப்­ப­டு­கி­றது.

ஆனாலும், கொழும்பை ஆட்­டு­விப்­பதில், தான் நினைத்­ததை நடத்தி வைப்­பதில், இன்­னமும் புது­டெல்­லியின் கடி­வாளம் கழன்று போக­வில்லை.

சீன சார்­பா­ள­ரான மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்தால், அவர் எப்­படி நடந்து கொள்வார் என்ற சிக்கல் உள்­ளது. அவ­ரது கடந்த காலத்தை வைத்து மதிப்­பீடு செய்தால், அது இந்­தி­யா­வுக்கு சாத­க­மா­ன­தல்ல.

அவ­ரிடம் மாற்றம் நிகழும் என்று எதிர்­பார்த்­தாலும் கூட, அது இந்­தி­யா­வுக்கு சாத­க­மா­ன­தாக இருக்கும் என்று கரு­து­வ­தற்­கில்லை. எனவே, மஹிந்­தவை வைத்து இந்­தியா எதையும் சாதிக்க முனை­வ­தற்கு சாத்­தி­யங்கள் குறைவு.

ஆனால், உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் வெளிப்­பட்­டுள்ள மஹிந்­தவின் பலம், இந்த விட­யத்தில் இந்­தியா முன்­யோ­ச­னை­யான சில முடி­வு­களை எடுப்­ப­தற்கு வழி வகுத்தால் அது ஆச்­ச­ரி­ய­மல்ல.

அதே­வேளை, மஹிந்­தவைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தி­யாவின் தயவு அவருக்குத் தேவைப்படுகிறது. மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு அவர் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் புதுடெல்லியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவருடைய முதன்மையான தேவையாக இருக்கிறது.

புதுடெல்லியில் மஹிந்த தங்கியிருக்கப் போகும் மூன்று நாட்களும், முக்கியமானவை. அந்தக் காலப்பகுதியில், மஹிந்த நடத்தப் போகும் சந்திப்புகள், வெளிப்படுத்தப் போகும், சமிக்ஞைகள் கூறப் போகும் கருத்துக்கள் எல்லாமே உன்னிப்பாக பார்க்கப்படும்.

ஏனென்றால், அது, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பதை முடிவு செய்வதில் தீர்க்கமான பங்கை வகிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும், அதற்கும் அப்பால், 2019 ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் எதிர்பார்க்கப்படும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் அமையப் போகும் அடுத்த அரசாங்கத்தின் கொள்கையையும் இந்தக் கட்டத்தில் யாரும் சாதாரணமாக எடைபோட்டு விட முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.