Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சாயத்து முறையின் கீழ் அதிகாரப் பகிர்வு அபத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்து முறையின் கீழ்

அதிகாரப் பகிர்வு அபத்தம் `

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்') மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பல்வேறு பிரமுகர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றார். அவர் களுள் ஒருவர் அவரது நெருங்கிய நண்பரும் பஞ் சாயத்துத் துறைக்கான இந்திய மத்திய அமைச்சரு மான மணிசங்கர ஐயர் என்று தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாயத்து நிர்வாக முறையை குறித்து இந்திய அமைச்சரிடம், இலங்கை ஜனாதிபதி கேட்டுத் தெரிந்துகொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

இலங்கையின் தேசியச் சிக்கலாக உருவெடுத் திருக்கும் இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு காண்பதற்கான தெற்கின் முன் யோசனைகளை சிபாரிசு செய்யும் நோக்குடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஒன்றை மஹிந்தரின் அரசு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் அமைத்திருந்தது. அதன் தலைவராக அமைச்சர் டியூ குணசேகரா நியமிக்கப்பட்டார்.

அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர், கருத்து வெளியிட்ட அமைச்சர் டியூ குணசேகரா, இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் "பஞ்சாயத்து ராஜ்' அதிகாரப்பகிர்வு முறை நல்ல முன்மாதிரி என்று அதை சிலாகித்துக் கூறியிருந்தார்.

போதாக்குறைக்கு, இலங்கையில் அமைதித் தீர்வுக்கு இந்தியாவின் "பஞ்சாயத்து ராஜ்' அதி காரப்பகிர்வு முறை நல்ல முன்மாதிரி அடிப்படை என்பதால், இந்தியாவுக்குச் சென்று, அதை நேரடியாக ஆய்வு செய்து, விடயங்களைக் கண்டறிந்து வரு வதற்காக இந்திய விஜயம் ஒன்றையும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து அவர் மேற் கொண்டார்.

அப்போதே, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தி யாவின் பஞ்சாயத்து ஆட்சி முறையிலான தீர்வு என்ற பேச்சு "மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வேலை' போன்றது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இலங்கையின் சிறுபான்மையினரான தமிழர் களின் தேசிய இனப்பிரச்சினையே இன்று இலங் கைத் தீவில் உக்கிர உள்நாட்டுப் போருக்குக் காலாகி யிருக்கிறது. தமிழர் தாயகத்துக்கு, கௌரவத்துடன் கூடிய வாழ்வியலுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டமையாலேயே தேசிய இனப்பிரச்சினை கூர்மை யடைந்து இவ்வாறு குரூர வன்முறைப் போராக வெடித்தது என்பது கண்கூடு.

ஆகவே, தமிழர் தாயகத்துக்கு உரிய அதிகாரங் களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமே இனப்பிரச்சி னைக்குத் தீர்வுகாண முயற்சிக்கலாம். அதுவே சிறந்த நியாயமான வழிமுறையுமாகும்.

ஆனால், பௌத்த சிங்களப் பேரினவாதத் திலும் மேலாண்மைச் சிந்தனையிலும் புதைந்து கிடக்கும் தென்னிலங்கை, ஈழத்தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்க்கின்றது.

வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்துக்கு அதி காரம் பகிரப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் தென்னிலங்கைச் சிங்களத் தீவிரவாதிகளின் கட்சி யான ஜே. வி. பி., அதற்குப் பதிலாக கிராமங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்படலாம் என்ற உப்புச்சப் பற்ற கருத்தியலையும் முன்வைக்கின்றது.

அந்தக் கருத்தியலுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியே இந்தியாவின் "பஞ்சாயத்து ராஜ்' முறை யிலான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கைக்கும் முன்மாதிரியாகக் கொள்ளும் எத்தனம் என்பதும் இங்கு வெளிப்படையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை மத்தியில் ஓர் அரசு இருந்தாலும், மாநிலங்களுக்கு தனி மாநில அரசுகள் என்ற அந்தஸ்துடன் அதிகாரப்பகிர்வு செய் யப்பட்டுள்ளது. அந்த அதிகாரப்பகிர்வு அலகின் கீழ், கிராமங்களுக்கு அதிகாரங்களை மேலும் பரவ லாக்கும் அம்சமாகவே கிராமப் பஞ்சாயத்து முறை பரிசீலிக்கப்படுகின்றது. அது கூட இன்னும் இந்தி யாவில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆக, இந்தியாவில் மூன்றாம் மட்ட அதிகாரப் பகிர்வு செயற்பாட்டை அது இந்தியாவிலேயே வெற்றியளிக்கவில்லை என்பதைத் தெரிந்திருந்தும் கூட அதனை, இலங்கைக்கு இரண்டாம் கட்ட அதிகாரப் பகிர்வுக்கு அடிப்படையாகக் காட்ட முயல் கின்றது தென்னிலங்கை.

தமிழர்கள் தனிநாடு கோரும் நிலைக்குத் தள் ளப்பட்டு சுமார் 35 ஆண்டுகள் கடந்துவிட்டபின் னர் அதற்கான விடுதலைப் போராட்டம் கோர யுத்தமாக வெடித்து,பெரும் இரத்த ஆறு இலங்கைத் தீவில் பெருக்கெடுத்தோடும் இந்தச் சூழ் நிலை யில், கிராமப் பஞ்சாயத்து முறைத் தீர்வுக்கான தளமாகப் பயன்படுத்த தென்னிலங்கை முயற்சிப்பது, ஈழத் தமிழர்களையும் அவர்களது உரிமைப் போரை யும் கேலிக்கும் கிண்டலுக்கும் உட்படுத்தும் செயற் பாடாகும்.

தரைப்படை, கடற்படை என்பவற்றைத் தாண்டி தனக்கெனத் தனியான விமானப்படையை உரு வாக்கும் தேசக்கட்டமைப்பு மட்டத்துக்குத் தமிழர் தாயகம் தன்னை விருத்தி செய்து ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், கிராம மட்டத்திலான "கட்டைப் பஞ்சாயத்து' அடிப்படையிலான தீர்வு குறித்து தென்னிலங்கை பரிசீலிக்க முயற்சிப்பது அபத்தமன்றி வேறில்லை.

தென்னிலங்கை பௌத்த சிங்களத் தீவிரவாதி களைத் திருப்திப்படுத்தும் திட்டம் ஒன்றே இலங்கை யின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாகும் எனக் கொழும்பு கருதுமானால் இப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வே சாத்தியமல்ல என்பதே முடி வாகிவிடும்.

எனவே, எந்த வழித் தீர்வு என்பதைக் கொழும்பு தான் முடிவு செய்யவேண்டும்.

உதயன்

ஏற்கனவே இப்போது சிங்களக் காடையர்கள், மற்றும் கூலிக்குழுக்களின் கட்டைப் பஞ்சாயத்துத்தான் யாழ் குடாவிலும், தென் தமிழீழத்திலும் நடைபெறுகின்றது. மகிந்துவின் கூட்டம் எப்படி, எப்படியெல்லாம் தமிழரை சிறுமைப்படுத்தலாம் என்று வழி தேடிக் கொண்டு இருக்கின்றது. இதற்கெல்லாம் விரைவில் தமிழீழ உச்ச நீதிமன்றம் பதில்கூறும்...

கொழும்பு தீர்வைத் தருமென்பதோ கொழும்பின் தீர்வினைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிலைமை மாறிவிட்டது. அவர்களால் முன்வைக்கப்படும் தீர்வுகளைப் பரிசீலிப்பதற்குக் கூடத் தகுதியற்றவை. வெறுங்கையைப் பிசைந்து கொண்டிருப்பவர்களிடம் தீர்வை முன்வைக்கும்படி கோருவதென்பது என்ன நடவடிக்கையை தமிழருக்கெதிராக அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை மறைக்கின்ற நிலைதான் அந்தக் கோரிக்கை. பஞ்சாயத்து முறை பற்றிய அறிவை மகிந்த மணிசங்கர ஐயரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு இந்திய அரசியல் பற்றிய பரீட்சைக்குத் தோற்றப் போகின்றாரா? உதயனுக்கு இன்னமும் புரியவில்லையா? ஏற்கெனவே கட்டைப் பஞ்சாயத்து முறையை விடவும் மேலான இலங்கை அரசினால் முன்வைக்கப் பட்ட தீர்வுகள் தமிழர் தரப்பால் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்தக் கட்டைப்பஞ்சாயத்துக்கு இங்கு இடமிருக்காது. தீர்வு இதுதான் என்று எதையாவது முன்வைக்கக் கூடிய நிiயில் இலங்கையில்லை. எந்தத் தீர்வினை முன்வைத்தாலும் அதை எதிர்க்கத் தயாராகி நிற்கும் சிங்கள அரசியல் வாதழகள் ஒருபுறம் அந்த எதிர்பாளர்களைச் சமாளிக்குமாப் போல் நடித்து தமது கட்சி நலன்பேணும் அரசியல் வாதிகள் ஒருபுறம். இவ்வாறான தன்மைகள் இருக்கும் போது உதயன் விடும் கோரிக்கைக்கு ஏதாவது அர்த்தங்களுண்டா?

முதல் உந்த முருங்கை மரத்தைத் தறிச்சு விழுத்தவேணும் அப்பதான் வேதாளம் போய் அதிலை திரும்பவும் ஏறாது. ஒண்டுக்கு வர்க்கமூலம் தேடுறது போலையெண்டு தான் இதைச் சொல்லவேணும். அவனுக்கு நாங்கள் அவ்வளவு இளக்காரமாப் போயிற்றமோ. கட்டப் பஞ்சாயத்து இந்தியாவிலை ஒரு அடித்தள மட்டத்திலையுள்ள ஒரு நிர்வாக முறை. உதையே எங்களுக்கு தர ஆலோசனை நடக்குது. உது சரிவராது ஈழத்தோடை சேத்து முழு சிறிலங்காவையும் தமிழர் புடிச்சு பிறகு இவனுக்கு கட்டப் பஞ்சாயத்தை வைச்சுக் குடுத்தாத் தான் சரிப்படுவான்.

மணிசங்கரன் இன்னும் கோமணம் கட்டிக்கொண்டு திரியுறான் என்பதற்காக நாங்களும் கட்ட வேண்டுமா ?

முதல் உந்த முருங்கை மரத்தைத் தறிச்சு விழுத்தவேணும் அப்பதான் வேதாளம் போய் அதிலை திரும்பவும் ஏறாது. ஒண்டுக்கு வர்க்கமூலம் தேடுறது போலையெண்டு தான் இதைச் சொல்லவேணும். அவனுக்கு நாங்கள் அவ்வளவு இளக்காரமாப் போயிற்றமோ. கட்டப் பஞ்சாயத்து இந்தியாவிலை ஒரு அடித்தள மட்டத்திலையுள்ள ஒரு நிர்வாக முறை. உதையே எங்களுக்கு தர ஆலோசனை நடக்குது. உது சரிவராது ஈழத்தோடை சேத்து முழு சிறிலங்காவையும் தமிழர் புடிச்சு பிறகு இவனுக்கு கட்டப் பஞ்சாயத்தை வைச்சுக் குடுத்தாத் தான் சரிப்படுவான்.

மணிசங்கரன் இன்னும் கோமணம் கட்டிக்கொண்டு திரியுறான் என்பதற்காக நாங்களும் கட்ட வேண்டுமா ?

கட்டைப் பஞ்சாயத்து முறையில் விமானப்படை வைத்திருக்கலாமா?

கடற்படை வைத்திருக்கலாமா? காலாட்படை வைத்திருக்கலாமா?

என்பதை மணிசங்கர ஐயரிடம் கேட்டுத் தெளிவு பெற்று மகிந்தவை சோதனை எழுதச் சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.