Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்றில் ஆஜரானார் விக்னேஸ்வரன்

Featured Replies

நீதிமன்றில் ஆஜரானார் விக்னேஸ்வரன்

 

 
 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

viki.jpg

வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த மாதம் 08 ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்தே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

http://www.virakesari.lk/article/39914

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு 

 

 
 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

judge.jpg

வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகினர்.

இதன்போதே நீதிவான் முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/39921

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனை எழுந்து நிற்கப் பணித்த மன்று!!

 
 
viki.jpg
 

நீதி­யின் முன் எல்­லோ­ரும் சமன் என்று தெரி­வித்த மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் பிர­திவாதி­கள் பெயர் மன்­றில் அழைக்­கப்­ப­டும்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் எழுந்து நிற்­க­வேண்­டும் என்று பணித்­தது.

இதை­ய­டுத்து இரண்­டா­வது தட­வை­யாக நீதி­மன்­றில் அவ­ரது பெயர் அழைக்­கப்­பட்­ட­போது அவர் எழுந்து நின்­றார்.

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மற்­றும் அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­த­ரன், சிவ­னே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரான நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­த­போது இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

எதி­ரா­ளி­க­ளான முத­ல­மைச்­சர், அனந்தி சசி­த­ரன், சிவ­னே­சன் ஆகிய மூவ­ரும் நீதி­மன்­றில் முற்­பட்­டி­ருந்­த­னர். வழக்கு விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­ட­போது பிர­தி­வா­தி­க­ளின் பெயர்­கள் அழைக்­கப்­பட்­டன. அமைச்­சர்­கள் இரு­வ­ரும் எழுந்து நின்­ற­போ­தும் முத­ல­மைச்­சர் எழுந்து நிற்­க­வில்லை.

இதை அவ­தா­னித்த நீதி­ய­ர­சர் ஜானக டி சில்வா, யாராக இருந்­தா­லும் நீதி­யின் முன் அனை­வ­ரும் சமம் அவர் எழுந்து நிற்­க­வேண்­டும் என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ர­ணி­யான கன­க­ஈஸ்­வ­ர­னி­டம் சுட்­டிக்­காட்­டி­னார்.

உட­னேயே அவர் எழுந்து நிற்­பார் என்று நீதி­ய­ர­ச­ருக்கு உறு­தி­வ­ழங்­கி­னார் சட்­டத்­த­ரணி. மீண்­டும் பிர­தி­வா­தி­கள் பெயர் வாசிக்­கப்­பட்­ட­போது ஏனைய இரு அமைச்­சர்­க­ளு­டன் சேர்ந்து முத­ல­மைச்­ச­ரும் எழுந்து நின்­றார்.

வடக்கு மாகாண முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கி­ய­தற்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய இடைக்­கா­லக் கட்­ட­ளையை நடை­மு­றைப்­ப­டுத்­தா­மல் விட்­ட­தன் மூலம் வட­மா­காண முத­ல­மைச்­சர் மீதும் டெனீஸ்­வ­ர­னின் அமைச்­சுக்­கு­ரிய பொறுப்­பு­க­ளைத் தொடர்ந்­தும் தமது வசம் வைத்­தி­ருக்­கும் இரு அமைச்­சர்­கள் மீதும் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

அதனை விசா­ர­ணைக்கு ஏற்­றுக்­கொண்ட மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று நேற்­றைய தினத்­திற்கு அத­னைத் திக­தி­யிட்­டி­ருந்­தது. எனி­னும் நேற்­றைய தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­யா­யத்­தில் ஒரு நீதி­ய­ர­சர் மட்­டுமே நேற்­றுப் பணி­யில் இருந்­தார். மற்­றை­ய­வர் விடு­விப்­பில் சென்­று­விட்­டார்.

கடந்த தவ­ணை­யில் இரு நீதி­ய­ர­சர்­க­ளும் இணைந்து இந்த வழக்கை விசா­ரிக்க முடி­வெ­டுத்­தி­ருந்த நிலை­யில் அதனை ஒரு­வ­ராக விசா­ரிக்க விரும்­ப­வில்லை என்று நீதி­ய­ர­சர் ஜானக டி சில்வா தெரி­வித்­தார். இதை­ய­டுத்து விசா­ர­ணையை எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்க அவர் விரும்­பி­னார்.

ஆனால், அந்­தத் திக­தி­யில் தனக்கு நேர­மில்லை என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­தணி தெரி­வித்­தார். எனி­னும் வழக்­குக்கு நீண்ட தவ­ணை­யிட நீதி­ய­ர­சர் மறுத்­து­விட்­டார். செப்­ரெம்­பர் 18ஆம் திக­திக்கு வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்ப்­பட்­டது.

இந்த வழக்­கில் பூர்­வாங்க ஆட்­சே­ப­னை­யைக் கிளப்­பு­வ­தற்­கான தனது உரி­மையை நீதி­மன்­றம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்று சட்­டத்­த­ரணி கன­க­ஈஸ்­வ­ரன் கோரிக்கை முன்­வைத்­தார். அதற்­குப் பதி­ல­ளித்த டெனீஸ்­வ­ரன் தரப்­புச் சட்­டத்­த­ர­ணி­யான சுமந்­தி­ரன், அவர் என்ன ஆட்­சே­ப­னை­யைக் கிளப்­பு­வார் என்­பது எனக்­குத் தெரி­யும் என்­றார்.

‘‘இதே­போன்­ற­தொரு விக்­னேஸ்­வ­ரன் நீதி­ய­ர­ச­ராக இருந்­த­போது எடுக்­கப்­பட்­டது. அப்­போது நான் கன­க­ஈஸ்­வ­ர­னின் பயிற்­சி­யா­ள­ராக இருந்­தேன். நாங்­கள் எழுப்­பிய பூர்­வாங்க ஆட்­சே­ப­னையை நீதி­ய­ர­ச­ராக இருந்த விக்­னேஸ்­வ­ரன் நிரா­க­ரித்­தார்’’ என்­றார் சுமந்­தி­ரன்.
தமக்­குக் கீழே இருப்­ப­வர்­க­ளைச் சிறப்­பா­கப் பயிற்­று­வித்­தால் இப்­ப­டித்­தான் நடக்­கும் என்று சிரித்­துக்­கொண்டே சொன்ன நீதி­ய­ர­சர் வழக்கு விசா­ர­ணையை செப்­ரெம்­பர் 18ஆம் திக­திக்கு ஒத்தி வைத்­தார்.

https://newuthayan.com/story/10/விக்னேஸ்வரனை-எழுந்து-நிற்கப்-பணித்த-மன்று.html

  • தொடங்கியவர்

அர­சியல் கார­ணி­க­ளுக்­காக தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்கு

11-8d638338c604c58109a24767831004f7f5f31bbb.jpg

 

மேன் முறை­யீட்டு மன்றில் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனின் சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் தெரி­விப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு, பா.டெனீஸ்­வ­ரனை வடக்கு அமைச்சுப் பத­வியில் இருந்து விலக்­கி­யமை குறித்த வழக்­குகள் அர­சியல் கார­ணி­க­ளுக்­கா­கவே தொடுக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் நேற்று மேன் முறை­யீட்டு நீதிமன்றில் அறி­வித்தார்.

வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து, உள்­ளூ­ராட்சி மற்றும் மீன்­பி­டித்­துறை அமைச்­சா­ராக பதவி வகித்த பா.டெனீஸ்­வ­ரனை பதவி நீக்­கிய உத்­த­ர­வுக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் விதித்த இடைக்­கால உத்­த­ரவை அமுல் செய்­யா­ததன் ஊடாக நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தொடர்பில் விளக்­க­ம­ளிக்க அவர் நேற்று நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய மன்றில் ஆஜ­ரானார்.

இதன்­போதே அவர் சார்பில் மன்றில் ஆஜ­ரா­கிய ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் இதனை மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி ஜனக் டி சில்வா முன்­னி­லையில் தெரி­வித்தார். அத்­துடன் அவற்­றுக்கு எதி­ராக ஆட்­சே­ப­னங்­களை முன்­வைக்­கவும் அவர் இதன்­போது அனு­மதி கோரினார்.

 எனினும் முறைப்­பாட்­டா­ள­ரான பா. டெனீஸ்­வரன் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ, வழக்­குகள் அர­சியல் கார­ணி­க­ளுக்­காக தொடுக்­கப்­பட்­டவை என்­பதை முற்­றாக மறுத்­த­துடன், முத­ல­மைச்சர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் இடைக்­கால தடைக் கட்­ட­ளையை அமுல் செய்­யாது இருப்­ப­த­னா­லேயே நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும், அவர் தனது சேவை பெறு­நரை பதவி நீக்­கி­ய­மைக்கு எதி­ரான வழக்கில் கூட எந்த ஆட்­சே­ப­னங்­க­ளையும் இது­வரை முன்­வைக்­காத நிலையில் இரு விட­யங்­க­ளையும் விசா­ர­ணைக்கு எடுத்து நியாயம் வழங்­கப்­படல் வேண்டும் எனவும் கோரினார்.

 இந் நிலையில் நேற்று இந்த விட­யங்­களை ஆராய்ந்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்வா, வழ­மை­யாக இம்­ம­னுவை ஆராயும் குழுவில் உள்­ள­டங்கும் நீதி­பதி குமு­தினி விக்­ர­ம­சிங்க பிர­சன்­ன­மா­காத நிலையில் வழக்கை எதிர்­வரும் 18 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார். 

அன்­றைய தினம் நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் மீளவும் மன்றில் ஆஜ­ரா­கு­மாறு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன், வட­மா­காண சபை அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­தரன் மற்றும் பி.சிவ­னேஷன் ஆகி­யோ­ருக்கு உத்­த­ர­விட்டார். அத்­துடன் பா. டெனிஸ்­வ­ரனை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு விக்­னேஸ்­வரன் எடுத்த தீர்­மா­னத்­துக்கு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால தடை உத்­த­ர­வா­னது எதிர்­வரும் ஒக்­டோபர் 9 ஆம் திகதி வரை நீதி­மன்­றினால் நீடிக்­கப்­பட்­டது. 

வழக்கு விசா­ரணை ஆரம்பம்:

 வட மாகாண மீன் பிடித்­துறை அமைச்­ச­ராக இருந்த பா.டெனிஸ்­வரன் மீது ஊழல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு, அவரை அந்த அமைச்சு பத­வியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து முத­ல­மைச்­சரின் தீர்­மா­னத்தை ரத்துச் செய்யும் உத்­த­ர­வொன்றை பிறப்­பிக்­கு­மாறு கோரி பா. டெனிஸ்­வரன் மேன்­மு­றை­யீட்டு மன்றில் ரீட் மனு­வொன்­றினை தாக்கல் செய்­தி­ருந்தார்.

அதில் பா.டெனிஸ்­வ­ரனை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு விக்­கி­னேஸ்­வரன் எடுத்த தீர்­மா­னத்­துக்கு கடந்த ஜூலை 29 ஆம் திகதி இடைக்­கால தடை உத்­த­ரவு பிறப்­பித்து, மீண்டும் அவ­ருக்கு அந்தப் பத­வியை வழங்­கு­மாறு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

எனினும் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தின் அந்த உத்­த­ர­வுக்கு அமைய செயற்­பட்டு தனக்கு அமைச்சில் கட­மை­களை முன்­னெ­டுக்க முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் அனு­ம­தி­ய­ளிக்­காமல் தொடர்ந்து இருந்து வரு­வ­துடன் அத­னூ­டாக மேன் முறை­யீட்டு மன்றின் கட்­ட­ளையை உதா­சீனம் செய்து நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­த­தாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்­துறை அமைச்சர் பா.டெனிஸ்­வரன் மீள மனு தாக்கல் செய்தார்.

இத­னை­ய­டுத்து வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் மற்றும் இரு அமைச்­சர்­களை நேற்று அது தொடர்பில் விளக்­க­ம­ளிக்க மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறு கடந்த ஆகஸ்ட் 08 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்­றினால் அழைப்­பானை அனுப்­பட்­டது.

அதன்­படி முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனும், அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­தரன் மற்றும் பி.சிவ­னேஷன் ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர்.

 அதன்­படி நீதி­மன்ற அவ­ம­திப்பு குறித்த விசா­ர­ணைகள் நேற்று நீதி­பதி ஜனக் டி சில்வா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. வழ­மை­யாக இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னெ­டுக்கும் இந்த விசா­ர­ணை­களில் நேற்று ஒரு நீதி­பதி வருகை தரா­மையால் நேற்­றைய தினம் நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் விக்­கி­னேஸ்­வரன் உள்­ளிட்­டோ­ரிடம் விளக்கம் கோரு­வதை பிற்­போட நீதி­மன்றம் தீர்­மா­னித்­தது.

   சட்­டத்­த­ர­ணி­களின் பிர­சன்­னங்­களும் வாதங்­களும்:

 எனினும் நேற்­றைய வழக்கின் போது ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் சார்பில் மன்றில் ஆஜ­ராகி இவ்­வ­ழக்­கா­னது அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக தொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்தார். அர­சியல் கார­ணி­க­ளுக்­காக முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேற்­படி குற்­றச்­சாட்­டுக்­களை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது எனவும், அவற்­றுக்கு எதி­ராக ஆட்­சே­ப­னங்­களை முன்­வைக்­க­வுள்­ள­தா­கவும் அவர் நீதி­ப­திக்கு அரி­வித்தார்.

 இதன்­போது நீதி­மன்றில் முறைப்­பாட்­டாளர் பா. டெனீஸ்­வரன் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வ­ரனின் கருத்­துக்­களை முற்­றாக நிரா­க­ரித்தார்.

 தனது சேவை பெறுநர், தனக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு மன்றை நாடி­ய­தா­கவும், அதன்­போது மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் கொடுத்த கட்­ட­ளை­களை முதலாம் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பான விக்­கி­னேஸ்­வரன் பின் பற்­றா­மை­யா­லேயே நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் கூறினார்.

 அத்­துடன் நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்கு எதி­ராக விக்­கி­னேஸ்­வ­ரனால் உயர் நீதி­மன்றில் மனு தாக்கல் செய்த நிலையில் அதுவும் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளதால், இந்த வழக்கை விசா­ரணை செய்­வ­தற்கு எந்த தடங்­களும் இல்லை என அவர் வாதிட்டார்.

 இதன்­போது நீதி­மன்றில் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக மனுவில் பெய­ரி­டப்­பட்­டி­ருந்த அனந்தி சசி­தரன் உள்­ளிட்டோர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். 6 ஆவது பொறுப்புக் கூறத்­தக்க நபர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

 நீதி­மன்ற உத்­த­ரவு:

 இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி ஜனக் டி சில்வா எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும், அன்றைய தினம் ஆட்சேபனங்களை முன்வைக்குமாறும் உத்தரவிட்டதுடன் அன்று முதலமைச்சர் விக்கி, அமைச்சர்களான அனத்தி, சிவனேஷன் ஆகிய மூவரையும் மன்றில் பிரசன்னமாகவும் கட்டளையிட்டார்.

வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பா.டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடுத்த உத்தரவை தடை செய்து மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை நீதிபதி ஜனக் டி சில்வா நீடித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.