Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாருக்கு இலா­பம் – இந்த வழக்­கால்?

Featured Replies

யாருக்கு இலா­பம் – இந்த வழக்­கால்?

 

 

மேன்முறையீட்டு நீதி­மன்­றத்­தில் பிர­தி­வா­தி­கள் பெயர் கூப்­பி­டப்­ப­டும்­போது வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் எழுந்து நிற்­பது கட்­டா­யம் என்று அறி­வு­றுத்தி அவரை எழுந்து நிற்­கச் செய்­தி­ருக்­கி­றார் நீதி­ய­ர­சர் ஜானக டி சில்வா.

ஒரு மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும், முன்­னாள் நீதி­ய­ர­ச­ராக இருந்­தா­லும், வய­தில் மூத்­த­வ­ராக இருந்­தா­லும், நீதி­யின் முன் எவ­ருக்­கும் பாகு­பாடு காட்­டப்­ப­டமாட்டாது என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் நீதி­ய­ர­சர் அவ்­வாறு அறி­வு­றுத்­தி­னார் என்­பது ஏற்­கத்­தக்­கதே.

ஆனால், எந்த நீதி­மன்­றத்­தின் உய­ரா­ச­னத்­தில் அமர்ந்­தி­ருந்து ஏனை­ய­வர்­க­ளுக்­குத் தீர்ப்பு வழங்­கி­னாரோ, அதே­ ஆ­ச­னத்­திற்கு எழுந்து நின்று மரி­யாதை வழங்க வேண்­டிய நிலையை ஒரு முன்­னாள் நீதி­ய­ர­ச­ருக்கு வழங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளும், அதே நீதி­ய­ர­ச­ரைத் தமது தலை­வர் என்று தலை­யில் தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­ப­வர்­க­ளும் தமி­ழர்­கள்­தாம் என்­பது மிகப் பெரும் முரண் நகை.

இவ்­வாறு ஒரு மதிப்­பார்ந்த மனி­தரை அவ­ரது முன்­னாள் பணி­யி­டத்­தி­லேயே தரம் குறைப்­பது போன்று நடத்­தும் நிலையை ஏற்­ப­டுத்­தும் இந்த வழக்­கால் யாருக்கு என்ன இலா­பம்? குறிப்­பா­கத் தமிழ் மக்­க­ளுக்கு இத­னால் ஏதா­வது இலா­பம் இருக்­கி­றதா?

ஒரு தன்­மு­னைப்பு (ஈகோ) மிக்க மனி­த­ரா­க­வும், தலை­வ­ராக விரும்­பும் சமா­னி­ய­னா­க­வும், இரு தலைக் கொள்ளி எறும்­பாக முத­ல­மைச்­சர் தவிப்­ப­தன் விளைவே இந்­தப் பிரச்­சி­னைக்­குக் கார­ணம் என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை. அர­சி­யல் என்­பது வெறும் அழுங்­குப் பிடி­யல்ல, எங்கு விட­வேண்­டுமோ அங்கு விட்­டும், எங்கு பிடிக்­க­வேண்­டுமோ அங்கு இறுக்­கி­யும் இலக்கை நோக்கி நகர்­வதே அர­சி­ய­லின் முக்­கிய சூக்­கு­மம். அதைத்­தான் தலை­வர்­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரம் என்­றும் சாணக்­கி­யம் என்­றும் கரு­தப்­ப­டு­கின்­றது.

காரி­யத்­தைச் சாதித்­துக்­கொள்­வது அர­சி­ய­லில் மிக முக்­கிய தேவை. ஆனால், இப்­போது முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு மக்­க­ளுக்கு எதைச் சாதித்­துத் தரப்­போ­கின்­றது என்­பது பெரும் கேள்வி? அதே­போன்று, இந்த விட­யத்­தைச் சமா­ளித்து பணிய வேண்­டிய நேரத்­தில் சற்றே பணிந்து நில­மையை சுமு­க­மாக்­கா­மல் விறைத்­துக் கொண்டு நிற்­ப­தன் மூலம் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் மக்­க­ளுக்கு என்ன தொண்­டாற்­றி­வி­டப்­போ­கி­றார் என்­ப­தும் புரி­யாத புதிர்­தான்.

வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னைப் பதவி நீக்­கம் செய்­த­தில் இருந்து ஆரம்­ப­மான இந்­தச் சட்­டப் போராட்­டத்­தால், மக்­க­ளுக்கு எந்த நன்­மை­யும் விளை­யப் போவ­தில்லை என்­பது வழக்கை வைத்­த­வர்­க­ளுக்­கும், அதனை எதிர்ப்­ப­வர்­க­ளுக்­கும் தெளி­வா­கத் தெரிந்­த­து­தான். அதை அவர்­கள் நன்கு அறிந்­த­வர்­க­ளும்­தான்.

நீதி­மன்­றத்­திற்கு வெளியே இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க முடி­யா­தென்­றில்லை. இந்த வழக்­கில் மோது­ப­வர்­கள் ஆசி­ரி­யர்­க­ளும் மாண­வர்­க­ளும் மூத்த வழக்­க­றி­ஞர்­க­ளும் அவர்­க­ளின் கீழே இளை­ய­வர்­க­ளா­கப் பணி­யாற்­றி­ய­வர்­க­ளும் ஒரே கூரை­யின் கீழே வழக்­கு­க­ளைக் கையாள்­ப­வர்­க­ளும்­தான். தமக்­கி­டையே பேசிப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு அவர்­க­ளால் முடி­யா­மல் இருப்­ப­தற்கு ஏதோ ஒன்று தடை­யா­க­இ­ருக்­கி­றது. அந்த ஏதோ ஒன்று நிச்­ச­ய­மாக மக்­கள் நலன் அல்ல, அது சுய­ந­லன் மட்­டுமே!

வழக்­கில் மோதும் தலை­வர்­க­ளின் அர­சி­யல் எதிர்­கா­லம் என்­கிற சுய­ந­ல­னைக் கருத்­தில் கொண்டே நீதி­மன்­றத்­தில் அவர்­கள் மோது­கி­றார்­கள். ‘‘இது ஓர் அர­சி­யல் நோக்­கம் கரு­திய வழக்கு’’ என்று முத­ல­மைச்­ச­ரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் எடுத்­துச் சொன்­னார். அது உண்­மை­தான். அதே­ய­ள­வுக்கு இந்த வழக்கை எதிர்­கொண்­டே­தான் ஆவேன் என்று விடாப்­பி­டி­யு­டன் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நிற்­ப­தற்­குப் பின்­னா­லும் அதே அர­சி­யல் நோக்­கம்­தான் இருக்­கி­றது என்­பதை அவர் நீதி­மன்­றத்­தில் சொல்­லா­விட்­டா­லும், புரிந்­து­கொள்­வது சிக்­க­லான ஒன்­றல்ல.

மாகாண சபை­யின் பத­விக் காலம் முடிந்த பின்­ன­ரும் புலி வாலைப் பிடித்த கதை­யாக இந்­தப் பிரச்­சினை தொடர்­வ­தற்கு வாய்ப்­பு­கள் அதி­கம் உண்டு. அப்­படி ஒரு நிலை ஏற்­பட்டு, அதுவே இந்­தத் தலை­வர்­க­ளின் அர­சி­ய­லுக்கு எம­னா­கி­வி­டு­வ­தற்கு முன்­பாக மக்­கள் நலன் கருதி இந்­தப் பிரச்­சி­னை­யைச் சுமு­க­மா­கத் தீர்த்­துக் கொண்டு இந்­தப் புத்­தி­சா­லித்­த­னத்­தை­யும் நேரத்­தை­யும் தமி­ழி­னத்­தின் விடி­வுக்­காச் செல­விட இவர்கள் முன்­வ­ர­வேண்­டும்.

https://newuthayan.com/story/10/யாருக்கு-இலா­பம்-இந்த-வழக்­கால்.html

தமிழரை நடுத்தெருவில் விடவேண்டும் என்பதில் உதயன் பத்திரிகை தெளிவாகத்தான் இருக்கிறது. வழமை போல் முதலமைச்சரைத் தாக்குகிறது. ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் பணத்திற்கு தமது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள்.

வடமாகாண சபையின் அமைச்சரவை  தெரிவின் போது  தமிழரசுக்கட்சி  ஒரு லிஸ்ட் கொடுத்தார்கள் , அதில்  டெனீஸ்­வ­ர­னின் பெயரோ , சத்தியலிங்கத்தின் பெயரோ இருக்கவில்லை , தமிழரசுக்கட்சியின் லிஸ்டினைத் தூக்கிவீசிய முதலமைச்சர். மாகாணசபை உறுப்பினர்களிடம் C.V  கேட்டார்.( "சி.வி கேட்ட C.V" என அப்போது பத்திரிகைகளில் கூட செய்தி வந்ததது). அதன் பிரகாரம் அவர் அமைச்சர்களைத் தெரிவு செய்தார். முதலமைச்சருக்கும் தமிழரசுக்கட்சிக்கும் மோதல் போக்கு தொடங்கிய ஆரம்பப புள்ளி இதுவாகத் தானிருக்கும். அன்று  தமிழரசுக்கட்சியின்  லிஸ்ட்டின் படி முதலமைச்சர் செயற்பட்டிருந்தால் இன்றைக்கு பெரும் பாலானோருக்கு  டெனீஸ்­வ­ர­ன் யாரென்று தெரியாமலே போயிருக்கும். அதே  டெனீஸ்­வ­ர­ன் தான் இன்று  முதலமைச்சரை நீதிமன்றம் வரை கூட்டிச் செல்கிறார்.

சாதரண பாடசாலை அதிபர்( உடுவில் மகளிர் கல்லூரி) பிரச்சனையை தீர்க்க முடியாமல் மாணவிகளை சிங்கள அதிபரின் கால்களில் விழச்செய்தவர் தான் இந்த சுமந்திரன் அவருடன் இவரும் சேர்ந்து , கூடவே உதயன் பத்திரிகையும் ........!

இதே அரசியல் கோமாளிக் கூத்துகள் நடக்கும் பகுதியில் தான் ஒரு 14  வயதுச் சிறுமி பள்ளிச் சீருடை இல்லாமல் தற்கொலை செய்கிறாள். தேவையற்ற வழக்குகளுக்கு லட்ச கணக்கில் செலவழிப்பவர்கள் , ஒரு 2 மீற்றர் துணியை எடுத்துக் கொடுத்திருக்கலாம்...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.