Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரந்தன் கெமிக்கல் பயங்கரத்தின் அடையாளம்.

Featured Replies

paranthan

குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது

இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும்.

வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு விரல் நுனியளவு செரிவு குறைந்த தின்மக்குளோரின்தான் பயன்படுகிறது அந்த மிகச்சிறிய அளவு குளோரின் கூட தொடர் பாவனையின் மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்கின்றனர். சாதாரணமாக குடிதண்ணீர் கிணற்றிற்கு சற்று கூடுதலாக சில கிராம்கள் குளோரின் இட்டால் கிணற்றில் இருக்கும் மீன்கள் தவளைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு செத்துமிதக்கும். அத்தனை கடுமையான விசம் குளோரின்.

சாதரணமாக குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM வரை இருந்தால் அது மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே, 2 PPM அளவு இருக்குமானால் இருமல், வாந்தி தலைசுற்றல் ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரலை காலிபண்ணும் அதுவே 60 PPM இருந்தால் நொடியில் ஆளை முடித்துவிடும்.

PPM என்ற சொல் PARTICLES PER MILLION என்பதன் சுறுக்கமாகும் அதாவது பத்து லட்சம் காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள் இருந்தாலே, அது நமது உயிரை எடுத்துவிடும்.

செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினை கப்பல் மூலம் எடுத்துச்செல்ல அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்திருக்கின்றன அது இலகுவில் கடலின் உப்பு நீரோடு வேதியல் தாக்கத்துக்கு உள்ளாகி பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால்.

ஜேர்மனியில் விசவாயு செழுத்தி ஹிட்லர் யூதர்களை படுகொலைசெய்தார் என்று கதைகளில் படித்த அந்த விசவாயு வேரெதுவும் இல்லை குளோரினே. அதேபோல் சிரியா உற்பட மத்திய கிழக்கு நாடுகளில் இரசாயன தாக்குதல்களுக்கு பயன்படுவதும் திரவக் குளோரினே.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் வடக்கின் பெருவீதியான A-9 வீதியில் கிளிநொச்சி நகருக்கு அண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவுக்கு அருகில் “கெமிக்கல்” என்று அழைக்கப்படும் பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் இந்த கொடூர இரசாயன வேதிப்பொருளைத்தான் ஆனையிறவு உப்பில் இருந்து பிரித்தெடுக்கிறது.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலை பழைய படி இயங்கி இன்றைய உலகின் திரவக் குளோரின் தேவையை பூர்த்திசெய்ய இலங்கை அரசு தீவிரமாய் செயற்பட்டால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் திரவ, வாயுநிலை குளோரின் மற்றும் காஸ்டிக் சோடா, ஹைட்ரோ குளோரிக் அமிலம் போன்றவை ஒரு அணு உலையின் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருக்கும். ஒரு குளோரின் வாயுத்தாங்கி வெடித்துச்சிதறினால் வடமாகாணத்தின் மொத்தக்காற்றும் சுவாசிக்கத்தகுதியற்றதாவதோடு பலநூறு அப்பாவிகள் மூச்சுக்கு ஏங்கி மரணித்துப்போவார்கள். உலகில் அனேகமான விசவாயுக் கசிவு மரணங்கள் குளோரின் வாயுக் கசிவினாலேயே ஏற்படுகின்றன எனவே போபால் விசவாயு மரணங்களைப்போன்று பரந்தன் கெமிக்கல் மரணமும் தன் வடுவை காலம் முழுதும் சுமந்துகொண்டிருக்கும். இது ஒரு விபத்து நிகழ்ந்து குளோரின் வாயு சிலிண்டர் வெடித்தால் ஏற்படும் உடனடி விளைவு இதையும் தாண்டிய பின் விளைவுகள் பல இருக்கின்றன.

ஆனையிறவு உப்பளம் உப்பளமாக இயங்கி அங்கு உப்பு மட்டும் உற்பத்தி செய்யப்படுமானால் அதை அண்டியுள்ள நிலம் உவர் நிலமாகி பயிர்செய்கைக்கு உதவாத நிலமாய் போவதோடு நின்றுவிடும். அந்த உப்பை வைத்து திரவக்குளோரின் உற்பட வேதிப்பொருட்கள் தயாரிக்கத்தொடங்கினால் உப்பில் இருந்து இரசாயனங்களை பிரித்தெடுக்க குளோரினைவிடவும் ஆபத்து மிகுந்த இரசாயனங்கள் அதனோடு கலக்கப்படும் குளோரினை பிரித்தெடுத்தபின் வெளியாகும் ஆபத்து மிக்க இரசாயனக்கழிவுகள் பரந்தன் மண்ணிலேயே புதைக்கப்படும். அவை நிலத்தின் கீழிறங்கி நீரோட்டத்தால் இழுத்துச்செல்லப்பட்டு யாழ்குடாநாட்டின் சுண்ணக்கல் பாறைகளில் நீரோடு நீராய் சேமிக்கப்படும். எற்கனவே இவ்வாறு சேமிக்கப்பட்ட இரசாயனத்தின் விளைவைத்தான் இன்று குடாநாட்டு மக்கள் குடிநீர் பிரச்சனையாய் எதிர்கொள்கின்றனர்.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகள் அன்றுதொட்டு இன்றுவரை எங்கே கொட்டப்பட்டன கொட்டப்படுகின்றன என்பது இன்றுவரை பரம ரகசியமாகவே இருக்கின்றது. இனி கொட்டப்படுவதும் ரகசியமாகவே இருக்கும்.

காகித ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கழிவு நீரே பலபேரின் உயிரை பல இடங்களில் குடித்திருக்கிறது அந்த ஆலைகளில் பிரதான வேதிப்பொருளாய் பயன்படுத்தும் திரவக் குளோரினை தயாரிக்கும் ஆலையின் கழிவுகள் எத்தனை வீரியம் மிக்கதாய் இருக்கும்? அந்த கதிரியக்க வீரியம் மிக்க கழிவுகள் பல தசாப்தங்களாய் எம்மண்ணில்தானே தொழிற்சாலை தொழிற்புரட்சி வரலாற்று சாதனை என்ற பெயர்களில் கொட்டப்பட்டிருக்கிறது? பரந்தன் கெமிக்கலை அண்டிய மரங்களின் வேர்களிடம் பல கதைகள் இருக்கும் அவை வாழ்வோடு போராடிக்கொண்டிருப்பதைப்போல எதிர்காலத்தில் வடக்கும் போராடும்.

இலங்கை செறிவூட்டப்பட்ட திரவக் குளோரின் எற்றுமதியால் பலகோடி வருமானத்தைப்பெற்றுக்கொள்ள வன்னியை சுடுகாட்டு பூமியாக்க நினைக்கிறது. பரந்தன் கெமிக்கல் கடந்த காலங்களிலும் இன்றும் ஒரு சிலரின் வாழ்வில் வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் ஆனால் அது ஒரு பாரிய நிலப்பரப்பை இன்று சுடுகாடாய் மாற்றியதோடு மேலும் சுடுகாடாய் மாற்றவும் செய்யும். அத்துடன் பல அப்பாவி மக்களை போதிய விழிப்புணர்வு இல்லாமல் சோடாப் பெக்ரி வேலை என்ற பேரில் காவுவாங்குவதோடு ஒரு தேசத்தையும் காவுகொள்கிறது.

சிங்களத்தின் முதலாவது இன அழிப்பு தொழில் ரீதியில்தான் தொடங்கியிருக்கிறது அதை இருகரம் கூப்பி வரவேற்றவர்களும் வடக்குத்தமிழர்களாய்த்தானிருந்தனர். அத்துடன் ஆபத்து மிகுந்த இரசாயன தொழிற்சாலையை தம் நிலத்தின் கெளரவம் என்று கருதுவதும் அதை மீண்டும் செயற்படவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் ஒரே இனம் எம்மினம்தான் ஏனெனில் இரசாயனத்தொழிற்சாலைகள் எங்கு அமைக்கப்படுமோ அங்கெல்லாம் மக்கள் அதற்கு எதிராய் அதன் பின் விளைவுகளை மனதில் வைத்து போராடியிருக்கின்றனர் ஆனால் நாம்தான் நடுவீட்டில் அதற்கு இடம் கொடுத்திருக்கிறோம் .

கடந்த காலத்தில் பரந்தன் கெமிக்கல் இல்லையென்றவுடன் திரவக்குளோரின் உற்பத்தியை கைவிட்டுவிட்டு இறக்குமதியை மேற்கொண்ட இலங்கை அரசு அதை இலங்கையின் இன்னோர் பாகத்தில் ஏன் செயற்படுத்த வில்லை என்பதில் பல கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. எதனால் ஏனைய உப்பளங்களில் செரிவூட்டப்பட்ட திரவக்குளோரினை இலங்கை உற்பத்தி செய்யவில்லை? எதற்காய் இரசாயன தொழிற்சாலை அமைக்கவில்லை? ஆனையிறவு உப்பில் மாத்திரம் தானா திரவக்குளோரினை பிரித்தெடுக்க முடியும்? புத்தளம் உப்பளத்திலும் அம்பாந்தோட்டை உப்பளத்திலும் குளோரின் உற்பத்தி செய்ய முடியாதா?

அங்கெல்லாம் அத்தொழிற்சாலையினை அமைத்தால் அதன் எதிர்கால விளைவுகளை சிங்களமக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதால்தான் அமைக்காமல் இருக்கிறது.
நாமோ கெமிக்கல் பெக்ரியை திறந்தால் வடக்கு சிங்கப்பூர் ஆகிவிடும் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறோம் குடிக்க சுத்தமான நீர் இன்றி. இதுதான் உண்மை. வடக்கின் நிலத்தடி நீர் வற்றியா போய்விட்டது? இல்லையே குடிப்பதற்கு அது உகந்ததாக இல்லை அதில் அதிக வேதிப்பொருள் கலந்திருக்கிறது என்றுதானே இன்று யாழ் குடிநீருக்கு மாற்றுத்திட்டம் தேடுகிறீர்கள்? யாழ் நிலத்தடி நீருக்கு வேதிப்பொருள் எப்படி வந்தது எப்படி அதிக உவராக மாறியது என்று யாரேனும் கேள்விகேட்டார்களா இல்லை ஆராய்ச்சிதான் செய்தார்களா?

சுன்னாகம் பவர் ஸ்ரேசனின் கழிவு ஒயில் நிலத்தில் கலந்ததற்கே ஒரு பிரதேசத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறதென்றால் ஒரு மாபெரும் இரசாயன தொழிற்சாலையின் கழிவுகள் மண்ணில் புதைக்கப்படுவதில் நீர் நிலைகளில் கலக்கப்படுவதில் எத்தனை பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சிந்தியுங்கள். ஆனையிறவு உப்பளம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் அபாயகரமான அழிவுக்கு தமிழர்கள் தாமே கையெழுத்து இட்டுக்கொடுத்திருக்கின்றனர். அதிலிருந்து அவர்கள் மீழ்வது கடினம்.

சு.பிரபா

paranthan

https://thinakkathir.com/?p=69565

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு நன்றி ஆதவன் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.