Jump to content

பரந்தன் கெமிக்கல் பயங்கரத்தின் அடையாளம்.


Athavan CH

Recommended Posts

paranthan

குளோரின் என்றவுடன் அது தண்ணீரை சுத்திகரிக்கும் பொருள் என்றுதான் எம்மில் அதிகம் பேர் நினைக்கின்றனர். அது மக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் உற்பத்தி என்றுதான் நினைக்கிறோம் ஆனால் உண்மை அது அல்ல உயர் செரிவு நிலையில் அதுவோர் கொடூரமான இரசாயனமாகும். முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது

இன்றைய செய்திகளில் இரசாயன தாக்குதல் என்று குறிப்பிடப்படும் அனேக தாக்குதல்களில் குளோரின் வாயு நிலையிலோ அல்லது திரவ நிலையிலோ பயன்படுத்தப்படுகின்றது. இரசாயன ஆயுதங்களின் பிரதான மூலப்பொருள் செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினாகும்.

வழமையாய் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை சுத்திகரிக்கவென 10ஆயிரம் லிட்டருக்கு ஒரு விரல் நுனியளவு செரிவு குறைந்த தின்மக்குளோரின்தான் பயன்படுகிறது அந்த மிகச்சிறிய அளவு குளோரின் கூட தொடர் பாவனையின் மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்கின்றனர். சாதாரணமாக குடிதண்ணீர் கிணற்றிற்கு சற்று கூடுதலாக சில கிராம்கள் குளோரின் இட்டால் கிணற்றில் இருக்கும் மீன்கள் தவளைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு செத்துமிதக்கும். அத்தனை கடுமையான விசம் குளோரின்.

சாதரணமாக குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM வரை இருந்தால் அது மனிதர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதுவே, 2 PPM அளவு இருக்குமானால் இருமல், வாந்தி தலைசுற்றல் ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரலை காலிபண்ணும் அதுவே 60 PPM இருந்தால் நொடியில் ஆளை முடித்துவிடும்.

PPM என்ற சொல் PARTICLES PER MILLION என்பதன் சுறுக்கமாகும் அதாவது பத்து லட்சம் காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள் இருந்தாலே, அது நமது உயிரை எடுத்துவிடும்.

செரிவூட்டப்பட்ட திரவக் குளோரினை கப்பல் மூலம் எடுத்துச்செல்ல அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்திருக்கின்றன அது இலகுவில் கடலின் உப்பு நீரோடு வேதியல் தாக்கத்துக்கு உள்ளாகி பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால்.

ஜேர்மனியில் விசவாயு செழுத்தி ஹிட்லர் யூதர்களை படுகொலைசெய்தார் என்று கதைகளில் படித்த அந்த விசவாயு வேரெதுவும் இல்லை குளோரினே. அதேபோல் சிரியா உற்பட மத்திய கிழக்கு நாடுகளில் இரசாயன தாக்குதல்களுக்கு பயன்படுவதும் திரவக் குளோரினே.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் வடக்கின் பெருவீதியான A-9 வீதியில் கிளிநொச்சி நகருக்கு அண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவுக்கு அருகில் “கெமிக்கல்” என்று அழைக்கப்படும் பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் இந்த கொடூர இரசாயன வேதிப்பொருளைத்தான் ஆனையிறவு உப்பில் இருந்து பிரித்தெடுக்கிறது.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலை பழைய படி இயங்கி இன்றைய உலகின் திரவக் குளோரின் தேவையை பூர்த்திசெய்ய இலங்கை அரசு தீவிரமாய் செயற்பட்டால் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் திரவ, வாயுநிலை குளோரின் மற்றும் காஸ்டிக் சோடா, ஹைட்ரோ குளோரிக் அமிலம் போன்றவை ஒரு அணு உலையின் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருக்கும். ஒரு குளோரின் வாயுத்தாங்கி வெடித்துச்சிதறினால் வடமாகாணத்தின் மொத்தக்காற்றும் சுவாசிக்கத்தகுதியற்றதாவதோடு பலநூறு அப்பாவிகள் மூச்சுக்கு ஏங்கி மரணித்துப்போவார்கள். உலகில் அனேகமான விசவாயுக் கசிவு மரணங்கள் குளோரின் வாயுக் கசிவினாலேயே ஏற்படுகின்றன எனவே போபால் விசவாயு மரணங்களைப்போன்று பரந்தன் கெமிக்கல் மரணமும் தன் வடுவை காலம் முழுதும் சுமந்துகொண்டிருக்கும். இது ஒரு விபத்து நிகழ்ந்து குளோரின் வாயு சிலிண்டர் வெடித்தால் ஏற்படும் உடனடி விளைவு இதையும் தாண்டிய பின் விளைவுகள் பல இருக்கின்றன.

ஆனையிறவு உப்பளம் உப்பளமாக இயங்கி அங்கு உப்பு மட்டும் உற்பத்தி செய்யப்படுமானால் அதை அண்டியுள்ள நிலம் உவர் நிலமாகி பயிர்செய்கைக்கு உதவாத நிலமாய் போவதோடு நின்றுவிடும். அந்த உப்பை வைத்து திரவக்குளோரின் உற்பட வேதிப்பொருட்கள் தயாரிக்கத்தொடங்கினால் உப்பில் இருந்து இரசாயனங்களை பிரித்தெடுக்க குளோரினைவிடவும் ஆபத்து மிகுந்த இரசாயனங்கள் அதனோடு கலக்கப்படும் குளோரினை பிரித்தெடுத்தபின் வெளியாகும் ஆபத்து மிக்க இரசாயனக்கழிவுகள் பரந்தன் மண்ணிலேயே புதைக்கப்படும். அவை நிலத்தின் கீழிறங்கி நீரோட்டத்தால் இழுத்துச்செல்லப்பட்டு யாழ்குடாநாட்டின் சுண்ணக்கல் பாறைகளில் நீரோடு நீராய் சேமிக்கப்படும். எற்கனவே இவ்வாறு சேமிக்கப்பட்ட இரசாயனத்தின் விளைவைத்தான் இன்று குடாநாட்டு மக்கள் குடிநீர் பிரச்சனையாய் எதிர்கொள்கின்றனர்.

பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகள் அன்றுதொட்டு இன்றுவரை எங்கே கொட்டப்பட்டன கொட்டப்படுகின்றன என்பது இன்றுவரை பரம ரகசியமாகவே இருக்கின்றது. இனி கொட்டப்படுவதும் ரகசியமாகவே இருக்கும்.

காகித ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கழிவு நீரே பலபேரின் உயிரை பல இடங்களில் குடித்திருக்கிறது அந்த ஆலைகளில் பிரதான வேதிப்பொருளாய் பயன்படுத்தும் திரவக் குளோரினை தயாரிக்கும் ஆலையின் கழிவுகள் எத்தனை வீரியம் மிக்கதாய் இருக்கும்? அந்த கதிரியக்க வீரியம் மிக்க கழிவுகள் பல தசாப்தங்களாய் எம்மண்ணில்தானே தொழிற்சாலை தொழிற்புரட்சி வரலாற்று சாதனை என்ற பெயர்களில் கொட்டப்பட்டிருக்கிறது? பரந்தன் கெமிக்கலை அண்டிய மரங்களின் வேர்களிடம் பல கதைகள் இருக்கும் அவை வாழ்வோடு போராடிக்கொண்டிருப்பதைப்போல எதிர்காலத்தில் வடக்கும் போராடும்.

இலங்கை செறிவூட்டப்பட்ட திரவக் குளோரின் எற்றுமதியால் பலகோடி வருமானத்தைப்பெற்றுக்கொள்ள வன்னியை சுடுகாட்டு பூமியாக்க நினைக்கிறது. பரந்தன் கெமிக்கல் கடந்த காலங்களிலும் இன்றும் ஒரு சிலரின் வாழ்வில் வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொடுத்திருக்கலாம் ஆனால் அது ஒரு பாரிய நிலப்பரப்பை இன்று சுடுகாடாய் மாற்றியதோடு மேலும் சுடுகாடாய் மாற்றவும் செய்யும். அத்துடன் பல அப்பாவி மக்களை போதிய விழிப்புணர்வு இல்லாமல் சோடாப் பெக்ரி வேலை என்ற பேரில் காவுவாங்குவதோடு ஒரு தேசத்தையும் காவுகொள்கிறது.

சிங்களத்தின் முதலாவது இன அழிப்பு தொழில் ரீதியில்தான் தொடங்கியிருக்கிறது அதை இருகரம் கூப்பி வரவேற்றவர்களும் வடக்குத்தமிழர்களாய்த்தானிருந்தனர். அத்துடன் ஆபத்து மிகுந்த இரசாயன தொழிற்சாலையை தம் நிலத்தின் கெளரவம் என்று கருதுவதும் அதை மீண்டும் செயற்படவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் ஒரே இனம் எம்மினம்தான் ஏனெனில் இரசாயனத்தொழிற்சாலைகள் எங்கு அமைக்கப்படுமோ அங்கெல்லாம் மக்கள் அதற்கு எதிராய் அதன் பின் விளைவுகளை மனதில் வைத்து போராடியிருக்கின்றனர் ஆனால் நாம்தான் நடுவீட்டில் அதற்கு இடம் கொடுத்திருக்கிறோம் .

கடந்த காலத்தில் பரந்தன் கெமிக்கல் இல்லையென்றவுடன் திரவக்குளோரின் உற்பத்தியை கைவிட்டுவிட்டு இறக்குமதியை மேற்கொண்ட இலங்கை அரசு அதை இலங்கையின் இன்னோர் பாகத்தில் ஏன் செயற்படுத்த வில்லை என்பதில் பல கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. எதனால் ஏனைய உப்பளங்களில் செரிவூட்டப்பட்ட திரவக்குளோரினை இலங்கை உற்பத்தி செய்யவில்லை? எதற்காய் இரசாயன தொழிற்சாலை அமைக்கவில்லை? ஆனையிறவு உப்பில் மாத்திரம் தானா திரவக்குளோரினை பிரித்தெடுக்க முடியும்? புத்தளம் உப்பளத்திலும் அம்பாந்தோட்டை உப்பளத்திலும் குளோரின் உற்பத்தி செய்ய முடியாதா?

அங்கெல்லாம் அத்தொழிற்சாலையினை அமைத்தால் அதன் எதிர்கால விளைவுகளை சிங்களமக்கள் எதிர்கொள்ளவேண்டும் என்பதால்தான் அமைக்காமல் இருக்கிறது.
நாமோ கெமிக்கல் பெக்ரியை திறந்தால் வடக்கு சிங்கப்பூர் ஆகிவிடும் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறோம் குடிக்க சுத்தமான நீர் இன்றி. இதுதான் உண்மை. வடக்கின் நிலத்தடி நீர் வற்றியா போய்விட்டது? இல்லையே குடிப்பதற்கு அது உகந்ததாக இல்லை அதில் அதிக வேதிப்பொருள் கலந்திருக்கிறது என்றுதானே இன்று யாழ் குடிநீருக்கு மாற்றுத்திட்டம் தேடுகிறீர்கள்? யாழ் நிலத்தடி நீருக்கு வேதிப்பொருள் எப்படி வந்தது எப்படி அதிக உவராக மாறியது என்று யாரேனும் கேள்விகேட்டார்களா இல்லை ஆராய்ச்சிதான் செய்தார்களா?

சுன்னாகம் பவர் ஸ்ரேசனின் கழிவு ஒயில் நிலத்தில் கலந்ததற்கே ஒரு பிரதேசத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறதென்றால் ஒரு மாபெரும் இரசாயன தொழிற்சாலையின் கழிவுகள் மண்ணில் புதைக்கப்படுவதில் நீர் நிலைகளில் கலக்கப்படுவதில் எத்தனை பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சிந்தியுங்கள். ஆனையிறவு உப்பளம் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் அபாயகரமான அழிவுக்கு தமிழர்கள் தாமே கையெழுத்து இட்டுக்கொடுத்திருக்கின்றனர். அதிலிருந்து அவர்கள் மீழ்வது கடினம்.

சு.பிரபா

paranthan

https://thinakkathir.com/?p=69565

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும்,  கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
    • 02 JUN, 2024 | 11:24 AM   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.  https://www.virakesari.lk/article/185089
    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
    • 01 JUN, 2024 | 11:22 PM யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர்.  இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185081
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.