Jump to content

இளமையின் கீதம்” புத்தக விமர்சனம் – ப்ரியா ;(சீன பழைமை சமூகத்தை எதிர்த்து போரிட்ட ஒரு இளம் பெண்ணின் கதை)


Recommended Posts

Book_Keetham.jpg

இந்த உலகம் எப்பொழுதுமே அப்படியே இருப்பதில்லை, அது காலம் காலமாக மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டேஇருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு மூலப்பொருளாக உழைப்பும் உழைப்பு சுரண்டலும் இருந்துகொண்டே இருக்கின்றது. அது சுற்றுப்புறச்சூழலில் மட்டும் அல்ல சமூகம் மற்றும் தனிமனித உறவுகளுக்குள்ளும் மிகப்பெரிய மாற்றத்தைஏற்படுத்தியுள்ளது. தந்தை என்ற உறவே தனி சொத்துடமை என்னும் உழைப்பு சுரண்டலின் வித்தாக அமைந்தது.
அப்படி சீனாவின் கிராமம் ஒன்றி காலம் முழுவதும் உழைத்து உழைத்துக் களைத்து போன அந்தப் பெண்ணை குத்தகைபணம் கொடுக்கவில்லை என்று காரணம் காட்டிக் களவாடி சென்றான் அந்தக் கிழட்டு பண்ணையார். மற்றவர்களிடம்இருந்து தான் சுரண்டிய சொத்தை யாருக்க கொடுப்பது எனத் தெரியாமல் இரந்த அவனுக்கு இந்த இளம் பெண் பிள்ளைபெற்றுபோடும் உரு இயந்திரமானால்.

பெற்றவுடன் பிள்ளையை இழந்தால் சில நாட்களில் சுயநினைவை இழந்தால் பின் உயிரையே இழந்தால். இந்த முழுக்கதையும் அந்தக் குழந்தைக்கு ஒரு தம்பி பிறக்கும் வரை, அவளைப் பண்ணையாரும் அவரது மனைவியையும்கொடுமைப்படுத்தும் வரை தெரியாது.

ஆம் அப்படிப் பிறந்து, பெரியம்மாவின் கொடுமைக்கு உள்ளாகி வாழ்வின் எல்லாக் கொடுமைகளுக்கும் உள்ளாக்கியபோதிலும் தாய் நாட்டிற்காகவும், உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் போராட வேண்டும் என்ற லட்சியத்தில்அவள் மூழ்கினால்.

தன் பெரியம்மாவிடம் இருந்து தப்பித்த டாவோ சிங் ஒரு பழமைவாதியிடம் காதல் கொள்கிறாள். நாளாக நாளாக அவன்பிற்போக்கு தனத்தை வெறுக்கத் தொடங்கிய அவளுக்கு, சிவந்து கொண்டிருந்த சீனாவின் புரட்சிகர தோழர்களுடன்நட்பு ஏற்பட்டது.

அந்தப் புரட்சிகர இயத்தோடு, நாட்டின் விடுதலைக்காய் டாவோசிங்கின் பயணமே இந்த இளமையின் கீதம்.

இப்படி, எதையும் மிகைப்படுத்தாமல் நாம் நாள்தோறும் சந்திக்கும் கதாபாத்திரங்கள் அடிக்கடி தோன்றி மறைகின்றன இந்த கதையில். தனிப்பட்ட வாழ்க்கை போராட்டத்துக்கும் ஒட்டுமொத்த மக்கள் புரட்சிக்கும் இடையே டாவோ சிங் கடந்து வந்த பாதைகளையும், அவள் சந்தித்த பலத் தரப்பட்ட மனிதர்களை பற்றியும் நினைக்க வைக்கிறது கதை. புரட்சி, போராட்டம் மட்டுமின்றி காதல், மோதல், நட்பு, தோழமை, ஏமாற்றம் என அனைத்தையும் இளமையின் கீதத்தில் பிரதிபலித்துள்ளார் யாங் மோ. நாம் பார்த்து பழகிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே எது உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி? கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்பட வேண்டும்? என்பதை எடுத்துரைக்கிறது இளமையின் கீதம். தனிமையில் இருக்கும் இளம்பெண் டாவோசிங்கை விட, முதுமையில் இருக்கும் பேராசிரியர் வாங்-திருமதி வாங் தம்பதி குடும்பத்துடன் புரட்சியில் பங்கெடுத்தது அற்புதம். அடையாள போராட்டங்கள் தான் புரட்சிக்கு வழிவகுக்கும் என்ற சில முற்போக்காளர்களின் கருத்துக்களை அழித்து சீன புரட்சியின் படிநிலைகளை எடுத்துரைத்துள்ளது இளமையின் கீதம். டாவோ சிங்கை தவிர, அவளது தோழி சியாவோ யென், தோழர் லூ சியா சுவான், காட்டிக் கொடுக்கும் தய் யூ ஆகியோர் மனதில் ஆழப் பதிந்து விடுகிறார்கள். முதல் பாகத்தில் வந்து செல்லும் லூ சியா சுவானின் நினைவுகள் இறுதி வரை நிலைத்திருக்கிறது. இரண்டாம் பாகத்தில் லூ சியா சுவானை நினைவுப்படுத்துகிறது சியான் ஹூவா கதாபாத்திரம்.

தாய், வீரம் விலைந்தது போன்ற ரஷ்யா நாவல்களை போல் அல்லாமல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த கதாநாயகியின் பயனம், நம்மோடு பொருத்தி பார்த்து கொள்ள செய்யும் சூழலும், மொழிபெயர்ப்பு நடையும், சீன புரட்சியை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றத. இத்தகைய சிறந்த நாவலை சிறந்த முறையில் தமிழக்கம் செய்த்தன் மூலம் தோழர் மயிலை பாலு பொதுவுடமை இயக்கங்களுக்கு மிகப்பெரிய பணியை செய்துள்ளார்.

http://www.cmpc.in/?p=2619

இளமையின் கீதம் : லெனின் மதிவானம்

(சீன பழைமை சமூகத்தை எதிர்த்து போரிட்ட
ஒரு இளம் பெண்ணின் கதை)

“இளமையின் கீதம்” என்ற நாவல் சீன முற்போக்கு இந்தியவாதியான யங்மோவின் ஆற்றல்மிக்க படைப்பாகும். இந்நாவல் கிட்டத்தட்ட 748 பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்நாவலை மயிலை பாலு தமிழிலே மொழிப்பெயர்த்துள்ளார். மார்ஸிம் கார்க்கியின் ~தாய்| நாவல் ரசிய புரட்சிக்கு முன் எழுதப்பட்டதாகும். அந்நாவலுக்கு ரசிய புரட்சியை சரியான திசையில் இட்டு சென்றதில் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் மார்சிம் கோர்க்கியின் அனுபவங்களை உள்வாங்கி அதன் வழியில் பட்டைத்தீட்டப்பட்ட அறுவடையாகவும் சில சமயங்களில் அதன் சிகரமாகவும் இந்நாவல் விளங்குகின்றது.

கதை இப்படிதான் தொடங்குகின்றது………!

பழைய சீன நிலப்பிரபுத்துவ வாழ்க்கையினால் சீரழிக்கப்பட்ட குடியான பெண் பெற்றிருந்த மகள் தான் கதையின் கதாநாயகி லின் டாவோசிங். பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் நிர்கதியான டாவோசிங் தன்னந்தனியாக தனது ஊரை விட்டு வெளியேறி வேறோரு கிராமத்திற்கு வந்திறங்கும் காட்சியிலிருந்து தொடங்குகின்றது நாவல்.

தேடிப்போன மாமாவும் அந்த கடலோர கிராமத்தில் இல்லாமல் இருக்க, ஆதரவின்றி குழப்பத்தில் மூழ்கும் டாவோசிங் தன்னை மறந்து கடலின் அழகினை ரசித்து களிப்புறுவதும் பின் நிராதரவாக நிற்கும் அவளை மேலும் துன்ப துயரங்கள் துரத்த மிகவும் தளர்ந்து தற்கொலைக்கு முயற்சிக்கின்றாள்.

இந்நிலையில் டாவோசிங் மீது காதல் கொண்டு அவளை அறியாமல் பின்தொடரும் யுங் சே என்ற பல்கலைக்கழக மாணவனால் அவள் காப்பாற்றப்படுகின்றாள். பின்னர் இருவரும் காதலர்களாகி கணவன் மனைவியாக வாழ்கின்றனர். பின்னாட்களில் (1930களில்) சீனாவில் மகத்தான போராட்டமானது தேசத்தின் தலைவிதியை இளைய தலைமுறையினரின் தலைவிதியுடன் ஒன்றாக சேர்த்து போராட வேண்டியக் காலக்கட்டத்தில் லூசியா – சுவான் என்ற பல்கலைக்கழக மாணவர் மூலமாக அரசியல் அறிவினையும் அமைப்பாக்க உணர்வினையும் பெறுகின்றாள் டாவோசிங்.

1930களில் ஜப்பானிய ஏகாதிபத்தியமானது சீனாவின் மீதான தனது ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்திருந்தது. இப்போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் உள்ளுர் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும் தீவிரமாக போராடியது. இத்தகைய பின்னணியில் கதைமாந்தர்களையும் இயக்கங்களையும் பொருளாக கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் தன்னிகரற்ற தலைவர்களாகவோ அல்லது பிறவி நாயகர்களாகவோ Book_Keetham.jpgசித்தரிக்கப்பட்டவில்லை. மாறாக அன்றைய வாழ்க்கைப் போராட்டத்தின் ஊடாக – புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் வெளிப்பட்ட மனிதர்களே படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறு முதலாளிகள், சிறு உடமையாளர்கள், அறிவு ஜீவிகள், கூலி விவசாயிகள், பாட்டாளிகள் என பலத்தரப்பட்டோர் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். தமது வர்க்க நிலைப்பாடுகளுக்கேற்ப தமது சிந்தனை வன்முறைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இதுவரைக் காலம் தமது ஒவ்வொரு தலைமுறைக்காகவும் சேகரித்து வைத்த நாகரிகங்கள் அனைத்தையுமே இந்நாட்டின் மானுடம் இழந்து அம்மனமாகி இருக்கும் ஓர் சூழலில், லட்சக்கணக்கான இளைஞர்கள் தமது தேசத்தின் தலைவிதியை மாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு காலக் கட்டத்தில், சமகால போராட்டத்திலிருந்து விலகி நூலகசாலைக்குள்ளும் பரிசோதனை அறைக்குற்றும் இருந்துக் கொண்டு புரட்சி குறித்த அவதூறுகளை பேசும் சிறு முதலாளித்துவ பண்பு சீனாவிற்கு மட்டும் உரித்தானதல்ல. மக்கள் சார்பான தத்துவங்களையும் இலக்கணங்களையும் இவர்கள் தமது சுயநலத்தின் பேரில் தமக்கேற்றவகையில் மாற்றியமைக்க முனைகின்றார்கள். ”ஒரே மூச்சில் புரட்சி அல்லது வீழ்ச்சி” என கூப்பாடு எழுப்பும் இக் கனவான்களை தான் லெனின் புரட்சிகர வாய்ச் சொல் வீரர்கள் என விமர்சிக்கின்றார்.

இத்தகைய சந்தர்ப்பவாதிகளால் புரட்சி எவ்வாறு காட்டிக் கொடுக்கப்படுகின்றது என்பதற்கு நாவலில் வரும் பாத்திரங்களான சூ நிங், தய் யூ ஆகியோர் சிறந்த உதாரணங்களாகும்.

யாவற்றுக்கும் மேலாக புரட்சிகர காலத்தில் காதல் கூட எவ்வாறு ஓர் சமுதாயம் சார்ந்ததாக வெளிப்படுகின்றது என்பதற்கு பின்வரும் இரு காதல் கடிதங்கள் தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
யூ யூங்சே தனது மனைவியான டாவோ சிங் புரட்சிகர இயக்கத்தில் பங்கெடுப்பது குறித்து ஆத்திரமுற்று லூ சியா சுவான் என்ற கம்யூனிஸ்டுக்கு எழுதுகின்ற கடிதத்தின் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன.

“சில கொள்கைகளை பிரச்சாரம் செய்ததன் மூலம் என் மனைவியின் மனதை நீ ரொம்பவும் கெடுத்து விட்டிருப்பதை நான் காண்கின்றேன். அவள் உனது ஆணைப்படியே செயல்படுகிறாள். எப்போது பார்த்தாலும் ”புரட்சி”, ”போராட்டம்” என்று தான் பேசிக் கொண்டிருக்கிறாள். மிக மோசமான முறையில் எங்களது குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டது.

நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துன்பத்தில் நீ இன்பம் காண்பதும் எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்ததக்கது. ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநெறி இருக்க வேண்டும்………..”

யூ யுங்சேயை பிரிந்து ஆற்றல் மிக்க தோழராக கட்சி பணிகளை முன்னேடுக்கும் டாவோ சிங்கின் தன்னலமற்ற போக்கு, ஆளுமை நேர்மை என்பன அவள் மீதான மெல்லிய காதலை லூ சியா – சுவானுக்கு தோற்றுவித்திருந்தது. சிறைப்பட்டு மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் போது அவன் தன் காதலை கடிதம் மூலம் இவ்வாறு வெளிப்படுத்துகின்றான்.

“கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்த போது உலகின் மிக முன்னேறிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். புரட்சியை முன்னேடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாய் தோழரே. வெற்றியின் நேரத்தை விரிவுபடுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்ட்டுகள் இரத்தம் சிந்துகின்றார்கள், உயிர்த்தியாகம் செய்கிறார்கள்………… அன்புத் தோழரே, அன்பு டாவோசிங் எனது முறை விரைவிலே வரக்கூடும்”

வேறுபட்ட நாகரீகங்களின் வீச்சை நாம் இங்கு தரிசிக்கின்றோம். முன்னைய கடிதம் தனது காதல், மகிழ்ச்சி, இன்பம் குறித்து புலம்புகின்றது. பின்னையது இப்போராட்டத்தில் தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி அதனை முன்னேடுத்து செல்வாள் என்ற நம்பிக்கையும் கூடவே புரட்சிக்குரிய கம்பீரத்தையும் நமக்கு வழங்குகின்றது.

இந்த நவீனம் பழைமைச் சமூகத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு இளம் பெண் அறிவு ஜீவியின் கதையாகும். தாய் நாவலில் ஒரு சாதாரண தாய் எவ்வாறு புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டாலோ அவ்வாறே இந்நூலில் ஒரு சாதாரண பெண் புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டு மிக தீவிரமான கம்யூனிஸ்டாக மாறி சீன தேசத்தின் விடுதலைக்காக போராடுகிறாள். மறுபுறத்தில் சீனாவின் பண்ணையடிமைத்தனத்திற்கு பழியான தனது தாய் லிண்டோவை போன்று அந்த அடிமை வாழ்க்கை முறைக்குள் மட்டும் கட்டுண்டுக் கிடக்காது. கதாநாயகி டாவோ சிங் தனது முதல் காதலன் சந்தர்ப்பவாதி என்று தெரிந்தும் அவனை துணிவாக விட்டு விலகி செல்கின்றாள். அந்தவகையில் ஒரு பெண்ணின் ஆளுமையை அழகுற சித்தரித்துக் காட்டப்படுவதில் இந்நாவல் வெற்றியடைகின்றது.

சரித்திரத்தின் தூர தொலைவில், வரலாற்றில் நம்மீது பலாத்தகாரம் கொண்டுள்ள நொடிய கொடூர அலைக்கழிப்புகளினூடே ஒரு உறுதியை இனி ஒரு விதி செய்ய இந்நாவலின் அனுபவங்கள் நமக்கு ஆதர்சனமாக அமைகின்றன.
இனிவரும் காலங்களில் எமது தலைமுறையினருக்கு வெறுமனே சகித்துக் கொண்டு போகும் பண்பை கற்றுக் கொடுக்காமல் அவற்றினை எதிர்த்து போராடும் பண்பை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. நிமிர்ந்து நிற்கவும் வாழ்க்கைக்காக போராடவும் முற்படுகின்ற போது இந்நாவல் அவர்களின் கையில் வலிமை மிக்க ஆயுதமாக திகழும் என நம்பலாம்.

இறுதியாக மொழிப்பெயர்ப்பு பற்றிக் கூறுவதாயின் நாவலின் உள்ளடக்கம் உருவம் சிதையாதவகையில் மிக எளிமையான எழுத்து நடையில் மயிலை பாலு தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். நெருடலற்ற அவரது மொழிபெயர்ப்பு சீன வாழ்வுடன் எம்மை இணைக்கின்றது. இத்தகைய நவீனத்தை தமிழ் வெளிக் கொணர்வதன் மூலமாக தமிழ் இலக்கியத்திற்கு காத்திரமானதொரு பங்களிப்பினை நல்கியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

அந்தவகையில் இந்நாவல் தன்னால் இயன்ற மட்டும் மக்களின் சுக துக்கங்களை இசைக்க முனைகின்றது. இந்நூலை வாங்குங்கள், படியுங்கள், ரசியுங்கள், விமர்சியுங்கள், பலருக்கு சொல்லுங்கள் என்று வாசகர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்ளலாமா?

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.