Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி வீட்டுக்கு வெளியே?

Featured Replies

விக்கி வீட்டுக்கு வெளியே?

 
 

இன்று நடக்கக் கூடும் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்ட சம்பந்தர்-விக்கி சந்திப்பு நடக்கவில்லை. ஒரு முன்னாள் நீதியரசரான விக்கி நீதிமன்றதின் முன் குற்றம் சாடப்பட்டவராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அதுவும் அவருடைய பதவிக்கு காலத்தின் இறுதிக்கு கட்டத்தில். கூட்டமைப்புக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடு அசிங்கமான திருப்பங்களை அடைந்து விட்டது. தமிழரசுக் கட்சியைப் பகைத்துக் கொண்டு விக்கியைத் தொடர்ந்தும் கட்சிக்குள் வைத்திருக்க சம்பந்தரால் இனி முடியுமா?

அரசுத்தலைவரின் வடகிழக்கு அபிவிருத்திக்கான செயலணி தொடர்பான சர்ச்சையோடு சம்பந்தருக்கும் விக்கிக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சம் பெற்றுவிட்டன. கடைசியாக நடந்த பேரவைக்கூட்டத்தில் விக்கி ஏதாவது ஒரு முடிவை அறிவிக்கக் கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

வடமாகாண சபைக்குள் குறிப்பாக விக்கிக்கு எதிரான அணிக்குள் அவ்வாறான எதிர்பார்ப்பு அதிகரித்த அளவில் காணப்பட்டது. விக்கி கட்சித்தலைமைக்கு விரோதமாக ஏதாவது ஒரு கூர்மையான முடிவை அறிவித்தால் அவரை மாகாண சபைக்குள் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தோற்கடித்து விடுவது என்றும் திட்டமிடப்பட்டதாக ஒரு தகவல் வந்தது.

வடமாகாண சபையின் பதவிக்காலம் இந்த ஒக்டோபர் மாதத்துடன் முடிகிறது. அதற்கிடையில் இன்னும் இரண்டு சபை அமர்வுகளே உண்டு. விக்கி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தால் இம்முறை அவருக்கு எதிரான வாக்குகளே அதிகம் விழும் என்ற ஓர் எதிர்பார்ப்பும் தமிழரசுக்கட்சி வட்டாரங்களில் காணப்படுகின்றது.

எனவே விக்கியைத் தோற்கடிப்பது சுலபம் என்று ஒரு கணக்கு உண்டு. இது விக்கிக்கும் விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்று ஒரு ஊகம் உண்டு. இதனால் ஒரு கூர்மையான முடிவை அறிவிக்காமல் வழமைபோல நான்கு தெரிவுகள் தன்முன் உண்டு என்று அவர் அறிவித்திருந்தார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டு அம்முடிவையும் உள்ளடக்கிய நான்கு தெரிவுகளை அறிவித்திருக்கிறார் என்று ஊகிப்பவர்களும் உண்டு. இவ்வூகங்கள் சரியாக இருந்தால் வடமாகாண சபையின் காலம் முடியும் வரை அவர் அப்படிப்பட்ட முடிவு எதையும் அறிவிக்கப் போவதில்லை.

சரி, ஆனால் அதன் பின் அறிவிக்கப்போகும் முடிவுக்கு வேண்டிய தயாரிப்புக்களை அவர் செய்து வருகிறாரா?

தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதென்றால் அதை எப்பொழுதோ தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரையிலும் பேரவை ஒரு பிரமுகர் அமைப்பாகவே காணப்படுகின்றது. பெருந்திரள் மக்கள் மைய எதிர்ப்பு நடவடிக்கைகளில் அது பெரியளவில் ஈடுபட்டிருக்கவில்லை.

இரு எழுக தமிழ்கள் ஒரு கடையடைப்பு என்பவற்றுக்கும் அப்பால் பேரவை இன்று வரையிலும் அடிமட்ட மக்கள் மத்தியில் இறங்கி ஒரு பலமான வலைப்பின்னலைக் கட்டியெழுப்பியிருக்கவில்லை. இந்நிலையில் திடீரென்று அதை ஒரு மக்கள் இயக்கமாக எப்படி மாற்றுவது?

இந்தத் தெரிவை விட்டு யோசித்தால் அடுத்த தெரிவு விக்கி ஒரு தனிக்கட்சி அல்லது கூட்டுக்கட்சியை ஆரம்பிப்பது தான். ஆனால் அதிலும் பல தடைகள் உண்டு. முதலாவது தடை அவரிடம் ஒரு கட்சி இல்லை. இரண்டாவது தடை அப்படியொரு கட்சியை இப்போதைக்கு அவசர அவசரமாகப் பதிய முடியாது. அதற்கு இலங்கைத் தீவின் சட்டம் விட்டுக்கொடுக்காது.

ஒரு கட்சியைப் பதியும் வேலைகள் எப்பொழுதோ அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்திருந்தால் அது இப்பொழுது வேலை செய்திருக்கும் ஆனால் மாகாண சபைக்கான தேர்தல் வர சில மாதங்களே இருப்பதாக ஊகிக்கப்படும் ஒரு பின்னணியில் ஒரு புதிய கட்சியை பதிவது கஸ்ரம். அதிலும் குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஒரு கட்சியைப் பதியவே முடியாது.

அப்படியென்றால் ஏற்கனவே பதியப்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து விட்டு அவற்றில் ஏதாவது ஒன்றின் பதிவைப் பயன்படுத்தலாம். அல்லது ஏற்கனவே பதியப்பட்ட ஒரு கட்சியை விலைக்கு வாங்கி அதன் பெயரையும் சின்னத்தையும் மாற்றலாம். ஆனால் அதைக் கூட விக்கி இன்னமும் செய்திருக்கவில்லை.

ஒரு கட்சியை வாங்குவதென்றால் மில்லியன் கணக்காகப் பணம் தேவை. அங்கும் கூட அவருடைய எதிர் அணி அவர் வாங்கத் திட்டமிடும் கட்சிக்கு அவர் கொடுக்க உத்தேசித்துள்ள தொகையை விடக் கூடுதலாக கொடுக்குமாயிருந்தால் நிலமை என்னவாகும்? ஒரு கட்சியை விலைக்கு வாங்கும் வேலையை மிகவும் ரகசியமாகச் செய்ய வேண்டும்.

அதை இப்பொழுது செய்வதை விடவும் ஏற்கனவே செய்திருந்தால் அதிகம் பாதுகாப்பாகவும் இருந்திருக்கும். கிடைக்கப்பெறும் தகவல்களின்படி விக்கியின் அணி இதுவரையிலும் ஏதும் ஒரு கட்சியை விலைக்கு வாங்கியிருப்பதாகத் தெரியவில்லை.

ஆயின் ஏற்கனவே பதியப்பட்ட கட்சிகளின் கூட்டை உருவாக்கவது தான் ஒரே வழி அப்படி உருவாக்கின் விக்கியுடன் கஜனும், சுரேசும் நிச்சயமாக இணைவர். புளொட்டும் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. ரெலோவின் ஒரு பகுதி முரண்டு பிடிக்கிறது. எனவே ரெலோவின் மற்றைய பகுதி விக்கியுடன் இணையும்?

இது முதலாவது பிரச்சினை, அடுத்த பிரச்சினை கஜன் விக்கியுடன் இணைவார். ஆனால் புளொட் இணைவதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்.ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைவதை ஏற்றுக்கொள்வாரா? ஏற்கெனவே கஜன், ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் தொடர்பாக கடும் விமர்சனங்களோடு காணப்படுகிறார். இது இரண்டாவது பிரச்சினை,

மூன்றாவது பிரச்சினை, மேற்படி கட்சிகளை இணைக்கும் போது அவற்றுக்கு எந்த விகிதத்தில் பிரதிநிதித்துவம் வழங்குவது என்பது மேற்படி கட்சிகளையும், விக்கினேஸ்வரனின் அணி என்று கருதப்படும் நான்காவது அணி, இவற்றோடு சிலசமயங்களில் சிவில் சமூக அமைப்புக்களின் அணி என்று பார்த்தால் மொத்தம் ஜந்து அணிகள் கூட்டுச்சேரக் கூடும் இவை தவிர தமிழரசுக்கட்சியின் அதிருப்தியாளர் அணி ஒன்றும் உண்டு.

இவற்றுக்கு சம அந்தஸ்து வழங்கி சமஅளவு விகிதத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படுமா? தமது கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் அவ்வாறு சம விகிதம் வழங்கப்படுவதை கஜன் ஏற்றுக்கொள்வாரா? கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெற்ற வெற்றிகளின் பின் தமிழத்தேசிய மக்கள் முன்னணி அதிகரித்த நம்பிக்கைகளோடு காணப்படுகின்றது. அது ஏனைய சிறிய கட்சிகளோடு தான் சமமாகக் கருதப்படுவதை ஏற்றுக்கொள்ளுமா? இது மூன்றாவது பிரச்சினை.

நான்காவது பிரச்சினை, விக்கியின் கூட்டுக்கு எது சின்னம்? என்பது. தேர்தல் அறிவிக்கப்பட முன் ஒரு ஜக்கிய முன்னணி உருவாக்கப்பட்டால் அது தனக்கு ஒரு பொருத்தமான சின்னத்தைக் கண்டுபிடிக்கலாம். கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது அப்படி ஒரு பொதுச் சின்னத்தைக் குறித்து உரையாடப்பட்டது.

ஆனால் சுரேஸ் அணி ஆனந்த சங்கரியின் கட்சியுடன் இணைந்து உதய சூரியனின் கீழ் போட்டியிட அதிகம் விரும்பியது. அனால் கஜேந்திரகுமார் அக் கூட்டிற்குள் இணைய மறுத்துவிட்டார். அவர் ஆனந்தசங்கரியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. எனவே உதயசூரியனின் கீழ் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை இணைக்க முடியாதபடியாலும், சுரேஸ் அணி உதய சூரியனைக் கைவிடத் தயாரற்றிருந்த காரணத்தினாலும் ஒரு பலமான கூட்டு முன்னணியை உருவாக்க முடியவில்லை. ஒரு புதிய சின்னத்துக்கான தேவையும் ஏற்படவில்லை.

எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மாற்று அணிகளுக்ககிடையில் ஓர் ஜக்கியத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் விமர்சகர்கள் சிலரும் பேரவையைச் சேர்ந்த சிலரும் இதில் ஈடுபட்டனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் ஒரு புதிய கூட்டை அறிவித்து புதிய சின்னத்தைப் பெற முடியாது என்று தேர்தல் ஆணையகம் கூறிவிட்டது.

இதனால் ஒன்றில் சைக்கிள் சின்னத்தின் அல்லது செம்பருத்திப் பூச்சின்னத்தின் கீழ் போட்டியிடலாம் என்று கேட்கப்பட்டது. கஜன் அணி சைக்கிளைக் கைவிட்டு செம்பருத்திப் பூவின் கீழ் போட்டியிடத் தயாராகக் காணப்பட்டது. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் உதயசூரியனின் கீழ் போட்டியிடுவதற்கே அதிகம் விரும்பியது. அதனால் அக்கூட்டுருவாக்க முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

இவ்வாறானதோர் அனுபவத்தின் பின்னணியில் விக்கியும் ஒரு புதிய கூட்டையும் புதிய சின்னத்தையும் குறித்து தீவிரமாகவும் வேதமாகவும் முடிவெடுக்க வேண்டியிருக்கும். வட மாகாணசபையின் காலம் முடியும் போது அதற்குரிய ஏற்பாடுகள் இல்லையென்றால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏற்பட்ட சிக்கல்கள் ஏற்படும்.

அப்படிப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டால் அது கூட்டமைப்பிற்கே சாதகமாக அமையும். கூட்டமைப்புக்கு எதிரான தரப்புக்கள் கொள்கைப் பிடிப்புடனும் நேர்மையாகவும், நீதியாகவும் இருந்தால் மட்டும் போதாது. சமயோசிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் சிந்திக்க வேண்டும். கடைசி நேரத்தில் ஒரு கூட்டை உருவாக்க முயற்சித்து அது தோல்விகண்டால் பின்னர் எல்லாமே பிசகிவிடும்.

அது தமிழ் வாக்குகளைச் சிதறடித்து விடும். தமிழ் மிதவாத அரசியலில் சம்பந்தர் அணி, விக்கி அணி, என்று இரு அணிகள் எழுவது தமிழ் ஜனநாயகத்தை மேலும் செழிப்பாக்கும் தான் ஆனால் அதேசமயம் அந்த இருகட்சியோட்டம் வவுனியாவின் எல்லைப்புறங்களிலும் முல்லைத்தீவின் விளிம்பிலும் குறிப்பாகக் கிழக்கிலும் தமிழ் வாக்குகளைச் சிதறடித்துவிடும். இது ஏனைய தரப்புகளுக்கு குறிப்பாக தென்னிலங்கை மையக் கட்சிகளுக்கு வாய்ப்புக்களைக் கொடுத்துவிடும்.

எனவே தமிழ் மக்களுக்குத் தேவைப்படுவது இருகட்சி ஓட்டம் அல்ல. ஒரு கட்சி ஓட்டம்தான். எனவே புதிய ஜக்கிய முன்னணியின் இறுதி இலக்கு தமிழரசுக்கட்சியிலிருந்து உடைந்து வரக்கூடியவர்களையும் அரவணைத்து உருவாக்கப்படக் கூடிய ஒரு பெருங்கூட்டுத்தான். விக்கினேஸ்வரன் அப்படியொரு பெருங் கூட்டை உருவாக்குவாரா?

கடைசியாக நடந்த பேரவைக் கூட்டம் முடியும் தறுவாயில் ஒரு பேரவை உறுப்பினர் விக்கினேஸ்வரனிடம் பின்வருமாறு கேட்ருக்கிறார். ‘ஜயா நீங்கள் என்ன முடிவை எடுத்தாலும் வீட்ட போற முடிவை மட்டும் எடுக்க வேண்டாம்’ என்று அதாவது விக்கினேஸ்வரன் தனக்கு முன்னுள்ள நான்கு தெரிவுகளில் ஒன்றாக அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அரசியலை விட்டொதுங்கி வீட்டுக்குப்போவது என்பது அத்தெரிவு. மேற்படி பேரவை உறுப்பினரின் வேண்டுகோளுக்கு விக்கினேஸ்வரன் சாதகமாகப் பதில் கூறியிருக்கிறார். ‘இல்லை நான் இங்கே தான் இருப்பேன்’ என்ற தொனிப்பட அவர் பதில் கூறினவராம்.

அப்பொழுது மேற்படி பேரவை உறுப்பினர் மேலும் பின்வருமாறு கூறியிருக்கிறார். ‘ஜயா நாங்கள் வீடு என்று கருதியது உங்கட கொழும்பு வீட்ட மட்டுமல்ல, வீட்டுச் சின்னத்தையும் தான்’ என்ற தொனிப்பட.

கடந்த இரு கிழமைகளாக நடப்பவற்றை வைத்துப் பார்த்தால் விக்கினேஸ்வரன் இனி வீட்டுக்கு அதாவது கூட்டமைப்பிற்குத் திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் முன்னெப்பொழுதையும் விடக் குறைந்துவிட்டன என்றே தோன்றுகிறது.

எனவே வீட்டுக்குள்ளிருப்பவர்களில் நீதியானவர்களையும், நேர்மையானவர்களையும் வீட்டுக்கு வெளியே கொண்டு வரவேண்டிய ஒரு பொறுப்பும் விக்கினேஸ்வரனுக்கு உண்டு. அப்பொழுதுதான் எதிர்தரப்புக்கும், வெளித்தரப்புக்கும் சவாலாக அமையவல்ல ஒரு பலமான ஜக்கிய முன்னணி உருவாகும். அதுதான் தமிழ்ப் பேரத்தையும் உயர்த்தும்.

-நிலாந்தன்-

http://athavannews.com/விக்கி-வீட்டுக்கு-வெளியே/

  • தொடங்கியவர்

பிள­வு­ப­டுத்திச் சாதிக்கும் யுக்தி பலிக்­குமா?

SAMAKALAM150918-PG01-R1Page1Image0004-3d2a7ff7e585431bf697f3f1f179a454c0e927d0.jpg

 

-கபில்

எந்தக் கொள்­கையும் இல்­லாத கூட்­ட­மைப்பு என்று கூறி­யுள்ள வடமாகாண முதலமைச்சர் அதே கூட்­ட­மைப்பின் மூலம் கிடைத்த முத­ல­மைச்சர் பதவி காலா­வ­தி­யாகும் நாள் வரை அதில் அமர்ந்து விட்டுப் போகும் உறு­தி­யுடன் தான் இருக்­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை.கூட்­ட­மைப்­புக்கு குறிப்­பிட்ட கொள்கை என எது­வு­மில்லை என்று கூறும் நிலைக்கு அவர் வந்து விட்ட நிலை­யிலும், அங்கு அவர் இனி­மேலும் தரித்து நிற்பார் என்று நம்­பு­வ­தற்கு இட­மில்லை

 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விட்டு, வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வெளி­யேறப் போகிறார் என்­பது இப்­போது, உறு­தி­யாகி விட்­டது. அதனை அவர் அண்­மையில் ஒரு ஆங்­கில நாளி­த­ழுக்­கான செவ்­வியில் தெளி­வா­கவே கூறி­யி­ருக்­கிறார்.

தமிழ் மக்கள் பேர­வையின் கூட்­டத்தில் 2009இல் ஏற்­றுக்­கொண்ட தலை­மைத்­துவ பாத்­திரம் மற்றும் அணு­கு­மு­றையில் கூட்­ட­மைப்பு தோல்வி கண்டு விட்­டது என்று மொட்­டை­யாகக் கூறி தனது, வெளி­யேற்­றத்­துக்கு அச்­சாரம் போட்ட முத­ல­மைச்சர், ஆங்­கில நாளி­த­ழுக்கு கொடுத்த செவ்­வியில் மிகப் பட்­ட­வர்த்­த­ன­மாக பல விட­யங்­களைப் போட்டு உடைத்­தி­ருக்­கிறார்.

“தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் குறிப்­பிட்ட எந்தக் கொள்­கை­களும் இல்லை. அது ஒரு பதிவு செய்­யப்­பட்ட அர­சியல் கட்­சியும் அல்ல. அத­னிடம் பொது­வான சின்­னமும் இல்லை. முறைப்­படி, கிர­ம­மான கூட்­டங்­களை நடத்­து­வதும் இல்லை. எமது மக்­களின் தேவைகள், அபி­லா­சை­களை பிர­தி­ப­லிப்­பதை கைவிட்ட ஒரு குழு­வி­னா­லேயே அது இயக்­கப்­ப­டு­கி­றது. மக்­க­ளுக்கு எது சிறந்­தது என்று அந்தக் குழுவே முடிவு செய்­கி­றது. நீங்கள் குறிப்­பிட்ட அந்த கன­வானும், (சுமந்­திரன்), அவ­ரது அடி­யாள்­க­ளுமே அதனை இயக்­கு­கின்­றனர். அவர்­களின் நலன்கள் சுய­சார்­பு­டை­யவை. மக்­களின் பங்­க­ளிப்­புக்கு அங்கு இட­மில்லை.” என்று அவர் அந்தச் செவ்­வியில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

ஒரு கட்­சியில் இருந்து வெளி­யே­று­வ­தற்கு முடிவு செய்து விட்ட ஒரு­வ­ருக்கு, இதை­விடக் கூடு­த­லான நியா­யங்­களோ, கார­ணங்­களோ தேவைப்­ப­டாது.

ஆனால், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்து போட்­டி­யிட முன்­வந்த போதும், கூட்­ட­மைப்பு இப்­படித் தான் இருந்­தது. இப்­போதும் அப்­ப­டியே தான் இருக்­கி­றது.  

அவர் கூட்­ட­மைப்பில் சேரும் போது கூட்­ட­மைப்­பிடம் இருந்த அதே தகை­மைகள் தான், இப்­போது அவர் வெளி­யேறும் போதும் அத­னிடம் இருக்­கி­றது.

எனவே கூட்­ட­மைப்பு மாறி விட்­டது என்று நியா­யப்­ப­டுத்­தினால் அது தவறு.

சில காலங்­க­ளுக்கு முன்னர், கூட்­ட­மைப்புத் தலை­மை­யுடன் முரண்­பா­டுகள் ஏற்­பட்ட போது, கூட்­ட­மைப்­புக்குள் இப்­ப­டி­யான நிலை இருக்­கி­றது என்று எனக்குத் தெரி­யாது என்று முத­ல­மைச்சர் கூறி­யி­ருந்தார்.

ஒரு முன்னாள் நீதி­ய­ரசர், தனக்­கென ஒரு ஆளுமைப் பரப்­பையும், செல்­வாக்குப் பரப்­பையும் கொண்ட ஒருவர், முத­ல­மைச்சர் பத­வியை நீட்­டு­கி­றார்கள் என்­றதும், அந்தக் கட்­சியின் தகு­நிலை, தகு­தி­யீ­னங்கள் பற்றி ஆரா­யாமல் உள்ளே வந்­தது சரி­யா­னதா?

எந்தக் கொள்­கையும் இல்­லாத கூட்­ட­மைப்பு என்று கூறி­யுள்ள அவர், அதே கூட்­ட­மைப்பின் மூலம் கிடைத்த முத­ல­மைச்சர் பதவி காலா­வ­தி­யாகும் நாள் வரை அதில் அமர்ந்து விட்டுப் போகும் உறு­தி­யுடன் தான் இருக்­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை.

கூட்­ட­மைப்­புக்கு குறிப்­பிட்ட கொள்கை என எது­வு­மில்லை என்று கூறும் நிலைக்கு அவர் வந்து விட்ட நிலை­யிலும், அங்கு அவர் இனி­மேலும் தரித்து நிற்பார் என்று நம்­பு­வ­தற்கு இட­மில்லை.

அதையே அவர் கடந்த வாரம் செவ்­வியில் மற்­றொரு சந்­தர்ப்­பத்தில் “மக்­களின் கருத்­துக்கள் மற்றும் அபி­லா­சை­களை மதிக்­கா­த­வர்­களின் கைகளில் நான், ஒரு கைப்­பா­வை­யாக இருக்க முடி­யாது. என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்த நிலையில் விக்­னேஸ்­வ­ரனின் வெளி­யேற்றம் உறு­தி­யாகி விட்­டது. அவர் இன்­னொரு கட்­சியில் சேர்­கி­றாரோ, கூட்­ட­ணியை அமைக்­கி­றாரோ, அல்­லது மக்கள் இயக்­கத்­துக்கு தலை­மை­யேற்­கி­றாரோ என்­ப­தல்ல பிரச்­சினை.

அவர் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேறப் போவது உறுதி. அவ்­வாறு அவர் வெளி­யேறி அடுத்து எந்த நட­வ­டிக்­கையை எடுத்­தாலும், அது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பது தான் உண்மை.

ஏனென்றால், கூட்­ட­மைப்பின் வாக்­குகள் பிள­வு­படும்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அர­சி­யலை விட்டு ஒதுங்கி மக்கள் இயக்­கத்­துக்கு தலைமை தாங்க முயன்­றாலும், அவர் கூட்­ட­மைப்பின் காலை இழுத்து வீழ்த்தும் காரி­யத்­தையே செய்வார் என்­பதும் உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டே, 2015 பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்­க­ளி­யுங்கள் என்று அறை­கூவல் விடுத்த அவர், கூட்­ட­மைப்பை விட்டு வெளியே வந்த பின்­னரும் சும்­மா­யி­ருப்பார் என்று எவரும் எதிர்­பார்க்க முடி­யாது.

கூட்­ட­மைப்பை விட்டு வெளியே வந்து, கூட்­ட­மைப்பின் வாக்­குகள் பிரிக்­கப்­ப­டு­வ­தை­யிட்டும் அவர் கவலை கொள்ளப் போவ­தில்லை. அதனால் தமிழர் தரப்­புக்கு ஏற்­படக் கூடிய இழப்­பு­க­ளையும் பெரிய விட­ய­மாக அவர் கரு­த­வில்லை.

ஆங்­கில நாளிதழ் செவ்­வியில் இது­பற்றி கேட்­கப்­பட்­ட­தற்கு அவர் அளித்­தி­ருக்­கின்ற பதிலே அதற்குச் சான்று.

“நீங்கள் இன்­னொரு கூட்டின் கீ்ழ் போட்­டி­யிட்டால் வாக்­குகள் பிள­வு­படும்.தனிப்­பெ­ரும்­பான்மை கிடைக்­காது. இதனால் பாதிக்­கப்­படப் போவது தமிழர் தரப்பே, அர­சியல் தீர்வை நோக்­கி­யி­ருக்கும் தமிழர் தரப்­புக்கு இது ஒரு பின்­ன­டைவே, நீங்­களே ஆக்­கு­வோ­னா­கவும், அழிப்­போ­னா­கவும் இருக்க விரும்­பு­கி­றீர்­களா?” என்று கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்கு அவர் “தனிப்­பட்ட நல­வு­ரித்­துக்­களைப் பெற்றுக் கொள்ள அர­சியல் மௌனம் காத்து- எமது பிரச்­சி­னை­க­ளையும் நல­வு­ரித்­துக்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வதைத் தவிர்க்க எத்­த­னிப்­பதை தடுக்க வாக்­குகள் பிள­வு­பட்டால் அதில் பிழை­யில்லை.

கடந்த 9 ஆண்­டு­களில் கட்சி பிள­வு­ப­டாமல் இருந்து, அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் ஒரு அங்­கு­ல­மேனும் முன்­னே­றி­யுள்­ளதா?

இரா­ணுவம் எமது காணி­களில் இன்­னமும் குடி­யி­ருக்­கி­றது. சிங்­களக் குடி­யேற்­றங்கள் தொடர்­கி­றது. பௌத்­தர்கள் நிரந்­த­ர­மாக வாழாத பகு­தி­களை நோக்கி புத்தர் சிலைகள் வரு­கின்­றன. எமது காணி உரித்­து­களில் மகா­வலி அதி­கா­ர­சபை தலை­யி­டு­கி­றது. எமக்­கு­ரிய சிறி­ய­ள­வி­லான பொலிஸ் அதி­கா­ரத்­தையும் எம்­மிடம் தர­வில்லை. இப்­ப­டியே நீண்டு செல்­கி­றது’ என்று கூறி­யி­ருந்தார்.

அதா­வது, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள், நல உரித்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதை தவிர்ப்­பதை தடுப்­ப­தற்­காக வாக்­குகள் பிள­வு­ப­டுத்­தப்­ப­டு­வதில் தப்­பில்லை என்று மாத்­திரம் அவர் கூற­வில்லை.

கூட்­ட­மைப்­பாக கடந்த 9 ஆண்­டு­களில் ஒன்­று­பட்­டி­ருந்து எதனைச் சாதித்தோம் என்றும் அவர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

இதுதான் அபத்­த­மான விடயம். "ஒன்­று­பட்டால் உண்டு வாழ்வு”, ஒற்­று­மையே பலம், என்று பல பழ­மொ­ழிகள் கூறப்­ப­டு­கின்­றன. ஆனால் அதை­யெல்லாம் உதா­சீனம் செய்யும் வகையில் அமைந்­தி­ருக்­கி­றது முத­ல­மைச்­சரின் கருத்து.

கூட்­ட­மைப்பு ஒன்­று­பட்­டி­ருந்­தது கடந்த 9 ஆண்­டு­களில் மாத்­தி­ர­மல்ல, அதற்கு முன்­னரே, 2001ஆம் ஆண்டில் இருந்தே கூட்­ட­மைப்பு செயற்­பாட்டு ரீதி­யாக ஒன்­று­பட்­டி­ருந்­தது. விடு­தலைப் புலி­க­ளுடன் சேர்ந்தே செயற்­பட்­டது.

அப்­படி ஒன்­று­பட்­டி­ருந்தும், கூட தமி­ழரின் உரி­மை­களை அடையும் விட­யத்தில் எதையும் சாதிக்க முடி­ய­வில்லை என்­பது உண்மை தான்.

அதற்­காக, வாக்­கு­களை பிரித்துப் போட்டு, அர­சியல் செய்தால் மாத்­திரம், அந்த அர­சியல் உரி­மை­க­ளையும், முத­ல­மைச்சர் குறிப்­பிட்ட விட­யங்­க­ளையும் சாதித்து விட முடி­யுமா?

கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்தி, அதன் வாக்­கு­களை சிதைத்து வெளியே வரும் முத­ல­மைச்சர், தான் தலை­மை­யேற்கும் கூட்­ட­ணியைக் கொண்டு மாத்­திரம், இந்த விட­யங்­களை அடைந்து விட முடி­யுமா? அதுவும் நிச்­ச­ய­மற்­றது தான். ஒரு போதும் அவரால் அத்­த­கைய வாக்­கு­று­தியைக் கூட கொடுக்க முடி­யாது.

பல­மாக இருக்கும் போது கண்­டு­கொள்­ளாத சிங்­களத் தலை­மைகள், தமிழர் தரப்பு பல­வீ­ன­ம­டையும் போது கண்­டு­கொள்­வார்கள் என்று எதிர்­பார்ப்­பது மடமை.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனைப் பொறுத்­த­வ­ரையில், கூட்­ட­மைப்பு மற்றும் அதன் தலைமை தொடர்­பாக ஆழ்ந்த அதி­ருப்­தியும், வெறுப்பும் இருக்­கி­றது. அத­னுடன் ஒட்­டிப்­போக முடி­யா­மைக்கு அவர் ஆயிரம் கார­ணங்­களை முன்­வைக்­கலாம். அது அவ­ரது தனிப்­பட்ட விடயம்.

கூட்­ட­மைப்புத் தலை­மை­யுடன் இணங்கிப் போவதும் போகாமல் இருப்­பதும், அவ­ரது உரிமை. ஆனால் அதற்­காக, ஒன்­பது ஆண்­டுகள் ஒன்­றாக இருந்து எதைச் சாதித்தோம், இனிப் பிள­வு­பட்டால் என்ன என்ற தோர­ணையில் கேள்­வியை எழுப்­பு­வது அபத்தம்.

தமிழர் தரப்பின் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­ப­டாமல், ஒன்­று­ப­டுத்­தப்­பட வேண்டும். அதன் மூலம் உரு­வாக்­கப்­படும் பலம் தான் முக்­கி­ய­மா­னது. அது கூட்­ட­மைப்­பாக இருக்­கலாம். இன்­னொரு அமைப்­பா­கவும் இருக்­கலாம். ஆனால் தமி­ழரின் வாக்­குகள் ஒருங்­கி­ணைக்­கப்­பட வேண்டும்.

அதை விடுத்து. வாக்­கு­களைப் பிள­வு­ப­டுத்­து­வதோ- அதனை நியா­யப்­ப­டுத்­து­வதோ, அற்ப அர­சியல் நலன்சார் விட­ய­மா­கவே தெரி­கி­றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானே ஒரு அணியை உருவாக்கி மேற்கூறிய விடயங்களை – அல்லது இலக்குகளை அடைய முடியும் என்பதற்குக் கூட எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை அவர் மறந்து விடக் கூடாது.

இதில் தனியே தமிழர்களின் அரசியல் மாத்திரமல்ல. சிங்களவர்களின் அரசியலும் சேர்ந்தே இருக்கிறது.

எனவே அவரால் கூட இந்த விடயங்களை தனித்துச் சாதித்து விட முடியும் என்று நம்புவதற்கு தமிழ் வாக்காளர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்து, சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு வடக்கிலும் தீனி போடும் நிலை ஒன்று ஏற்படுமானால், அதற்கான பாவத்துக்கும் பழிக்கும், தமிழ் மக்களின் வாக்குகளை உடைத்தவர்கள் எவராயினும் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்.

அத்தகையதொரு நிலையை நோக்கித் தான், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் ஒட்டுமொத்தமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.