Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மாத்திரம் விடுக்கப்பட்ட சவால் அல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மாத்திரம் விடுக்கப்பட்ட சவால் அல்ல

[05 - April - 2007]

* இது அரசியல் ரீதியாகத் தனிப்பட்ட விதத்தில் பிச்சுப் பிடுங்கும் வேளையல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வேளையாகும். பிரச்சினை இயல்பான வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதைப் புரிந்துகொண்டு நாட்டின் பொது நன்மையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது முக்கியமானது

-விக்டர் ஐவன்-

கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் மூலம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்ன?

விடுதலைப் புலிகளிடம் இலகுரக விமானங்கள் உள்ளன என்பது ரகசியமன்று. பாதுகாப்புத்துறை தொடர்பான ஆய்வாளர் இக்பால் அத்தாசின் கருத்துப்படி விடுதலைப் புலிகளிடம் 5 இலகு ரக விமானங்கள் உள்ளன. இந்திய புலனாய்வுத்துறை ஆய்வாளர்களின் கருத்துப்படி கடந்த 9 வருடங்களாக விடுதலைப் புலிகளிடம் இலகு ரக விமானங்கள் சில உள்ளன. இருப்பினும், அந்த விமானங்களைத் தாக்குதல் நடவடிக்கையொன்றுக்குப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.

விடுதலைப் புலிகளின் 2 இலகு ரக விமானங்களால் வன்னியிலிருந்து வான்வழியாக கட்டுநாயக்க வந்து விமானப்படைத் தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு எதுவித பாதிப்புகளுமின்றி மீண்டும் வன்னி திரும்ப முடிந்துள்ளது.

விடுதலைப் புலிகளிடம் நிரந்தர இராணுவம் மற்றும் நிரந்தர கடற்படை ஆகியனவற்றிற்கு மேலதிகமாக அளவில் சிறிதாயினும் வான் படையும் உள்ளது என்பதை இந்த வான் தாக்குதல் நிரூபித்துள்ளது.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த வான் தாக்குதலை நாங்கள் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்.

விடுதலைப் புலிகளிடம் விமானப் படைத்தளத்திற்குப் பதிலாக விமான நிலையத்தின் மீதோ அல்லது துறைமுகத்தின் மீதோ தாக்குதலை மேற்கொள்ளும் ஆற்றல் உள்ளது. விமான நிலையத்தின் மீதோ அல்லது கொழும்புத் துறைமுகத்தின் மீதோ தாக்குதலை மேற்கொண்டிருந்தால் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நட்டம் கட்டுநாயக்க தாக்குதலின் போது இடம்பெற்ற அழிவுகளிலும் பார்க்க மிக அதிகமாக இருந்திருக்கக் கூடும். ஆனால், விடுதலைப் புலிகள் விமான நிலையத்தின் மீது அல்லது கொழும்புத் துறைமுகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளாது விமானப் படைத்தளம் மீது தாக்குதலை மேற்கொண்டது ஏன்? தங்கள் ஆற்றலை எடுத்துக்காட்டவா? அல்லது வேண்டுமென்றே மேற்கொண்டனரா? விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் ஆற்றல் இருந்துள்ள போதிலும் அவ்வாறு மேற்கொள்ளாது விமானப்படைத்தளம் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டார்களெனில் அதற்கான காரணம் என்ன?

இதற்கு முன்னரே இவ்வாறான வான் தாக்குதலை மேற்கொள்ளும் ஆற்றல் இருந்துள்ள போதிலும் அவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து இந்தவேளையில் மாத்திரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலைத் தெரிவுசெய்தது ஏன்? களமுனைகளில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளை போக்குவதற்கு விடுதலைப் புலிகள் வசமிருந்த ஒரேயொரு துரும்பு இதுவே என்ற காரணத்தாலா? அல்லது இந்தத் தாக்குதலை மேற்கொள்ள வேறு காரணங்கள் இருந்தனவா?

இந்தத் தாக்குதலானது வான்வழித் தாக்குதலாயினும் இதனால் ஏற்பட்ட சேதங்கள் ஒரு "ஓட்டோவில்" பொருத்தப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதால் ஏற்படும் சேதங்களை விட குறைவானவை. அப்படியெனில் அவ்வாறான பிரதிபலனுக்காக வான் தாக்குதல் என்ற பெரிய துரும்பைப் பயன்படுத்த வேண்டிய காரணம் என்ன?

கடந்த காலங்களில் இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகள் கொழும்பு நகரில் தேர்ந்தெடுத்த நிலைகள் மீது அதிசயிக்கும் விதத்தில் பாரிய தாக்குதலை மேற்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தில் அவ்வாறான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனவே, இவ்வாறான குறைபாட்டைப் பூர்த்தி செய்வதற்காகவா இந்த வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது?

அயர்லாந்தில் ஐ.ஆர்.ஏ. அமைப்பு 1990 இன் ஆரம்பத்தில் இங்கிலாந்திலுள்ள "ஹீத்ரோ" விமான நிலையம் மீது மேற்கொண்ட மோட்டார் தாக்குதலானது வட அயர்லாந்து பிரச்சினை தொடர்பான அரசியல் அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐ.ஆர்.ஏ. அமைப்பு "ஹீத்ரோ" விமான நிலையம் மீது மோட்டார் தாக்குதலை மேற்கொண்ட போது, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்களுக்கோ அல்லது அங்கிருந்த பயணிகளுக்கோ எதுவித பாதிப்பும் ஏற்படாத விதத்திலேயே மேற்கொள்ளப்பட்டது.

இருந்த போதிலும் அந்தத் தாக்குதல் காரணமாக ஐரோப்பாவின் முக்கிய வணிக மையமான லண்டன் நகரத்திலிருந்த வர்த்தகப் பிரமுகர்கள் குழப்பமடைந்தனர். ஐ.ஆர்.ஏ. அமைப்பினர் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளா விட்டாலும் தேவை ஏற்படின் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது என்பதை முதன்முதலாக அன்று தான் வர்த்தகப் பிரமுகர்கள் புரிந்து கொண்டனர். லண்டன் நகரில் அவ்வாறான நிலைமை உருவானால் லண்டன் வர்த்தகச் சந்தை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் எனப் புரிந்துகொண்ட வர்த்தகப் பிரமுகர்கள் அவ்வாறான நிலைமை உருவாகாமல் தடுக்கும் நோக்கில் வட அயர்லாந்தும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம் வட அயர்லாந்துப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணச் செயற்பட ஆரம்பித்ததற்குக் காரணம் ஹீத்ரோ விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மோட்டார் தாக்குதலேயாகும்.

இந்தத் தாக்குதல் மூலம் பிரபாகரன் அவ்வாறான ஒன்றையா எதிர்பார்க்கிறார்? அல்லது உங்களுக்கு வான் தாக்குதலை மேற்கொள்ளும் ஆற்றல் இருப்பதைப் போலவே தேவையேற்படின் அவ்வாறான தாக்குதலை மேற்கொள்ளும் ஆற்றல் தனக்கும் உள்ளது எனக் காட்டும் நோக்கிலா?

இந்த வான் தாக்குதலானது வான்வழித் தற்கொலைத் தாக்குதல் அல்ல. தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மீண்டும் திரும்பும் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். விடுதலைப் புலிகளிடம் விமானங்கள் இருப்பின் அவற்றின் ஆற்றலை வேறு தேவைகளுக்கும் அவர்களால் பயன்படுத்த முடியும். துறைமுகங்கள் போன்ற பொருளாதார கேந்திர நிலைகள் மீது குண்டுகளை வீச முடியும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள அவர்கள் தங்கள் விமானங்களைப் பயன்படுத்த முடியும்.

பிரபாகரனின் வான்படையானது விமான நிலையம் மீது தாக்குதலை மேற்கொள்ளாவிடினும் அந்தத் தாக்குதல் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கும் (விமான நிலையம் உட்பட) பாதிப்புகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. தாக்குதல் நடைபெற்ற அன்றே "கதே பசிபிக் விமான நிறுவனம்" இலங்கைக்கான விமான சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய அரசு அங்கிருந்து இலங்கை வரும் உல்லாசப் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. இந்த விமானத் தாக்குதலையடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையைப் பாதுகாப்பற்ற - எச்சரிக்கை நிறைந்த நாடு என்றே கருதுகின்றனர்.

இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்கு எனக் கருதப்படும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பங்கர்களில் வாழ நேரிடும். அத்துடன், யுத்தத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு நவீன பாணியில் அமைந்த யுத்தமாகவும் அது மாறக்கூடும். குண்டுகளுக்குப் பதிலாக ஏவுகணைகளைப் பயன்படுத்தும் நிலைமை கூட உருவாகலாம்.

இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு வெற்றிகொள்ளலாம். சகல வளங்களையும் பயன்படுத்தி யுத்தத்தை மேற்கொள்ளும் கொள்கையால் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகாண முடியுமா? பிரச்சினையை நிதானமாக உற்றுநோக்கும் - விமர்சிக்கும் ஆற்றல் அரசியல்வாதிகளிடம் உள்ளதா? விடுதலைப் புலிகளிடமுள்ள வான் பலத்திற்குப் பயந்து அவர்கள் கோரும் தனிநாட்டு அல்லது "கொன்படரேஷன்" கோரிக்கையை வழங்க முடியுமா?

அவ்வாறான தீர்வு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையுமா? ஆயுதப் படைப்பிரிவுகளை வைத்திருக்கும் உரிமையற்ற அரசியல் தீர்வுக்கு விடுதலைப் புலிகளை இணங்கவைக்க முடியுமா? தெரிவு செய்துள்ள யுத்த நடைமுறைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியல் தீர்வைக் காணும் வழிமுறை நோக்கித் தன்னை மாற்றிக்கொள்ள அரசால் முடியுமா? அரசு தன்னை அவ்வாறு மாற்றிக் கொண்டாலும் அவ்வாறான ஒரு தீர்வினைக் காண்பதற்கு தேவையான ஒத்துழைப்பை எதிர்க்கட்சி வழங்குமா?

தனிப்பட்ட விதத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழிவை விரும்பும் சக்திகளுக்குத் திருப்தியை அளிக்கும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ள போதிலும் விடுக்கப்பட்டுள்ள சவாலானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு மட்டுமே விடுக்கப்பட்டுள்ள சவால் அல்ல. இது ஒட்டுமொத்த நாட்டிற்குமே விடுக்கப்பட்டுள்ள சவாலாகும்.

இது அரசியல் ரீதியாகத் தனிப்பட்ட விதத்தில் பிச்சுப் பிடுங்கும் வேளையல்ல. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வேளையாகும். பிரச்சினை இயல்பான வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதைப் புரிந்துகொண்டு நாட்டின் பொது நன்மையைப் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது முக்கியமானது.

விடுதலைப் புலிகளின் சண்டித்தனத்திற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லாவிடினும் அந்தச் சண்டித்தனம் என்ற பாத்திரத்தின் பின்னணியில் தமிழ் மக்களின் நியாயமான துன்பங்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொண்டு அந்தத் துன்பங்களுக்குத் தீர்வுகாண பொதுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முடிந்தால் அந்தத் திட்டத்தை விடுதலைப் புலிகள் ஏற்க நேரிடும் அல்லது ஏற்க மறுத்து அழிய நேரிடும்.

மூலம் -ராவய 01.04.2007

-தமிழில் நேமிக்கா-

தினக்குரல்

"விடுதலை புலிகளின் வான் தாக்குதல் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் மாத்திரம் விடுக்கப்பட்ட சவால் அல்ல...!"

ஆமாம், இது கூலிக்குழுக்களுக்கும், சிறீ லங்கா பேரினவாத அரசுடன் ஒத்து ஊதும் உதவாக்கரை தமிழ் அரசியல்வாதிகளிற்கும் கூட விடப்பட்ட சவால் ஆகும்.

பருந்து வானத்தில் வட்டமிட்டுவிட்டு கோழிக் குஞ்சை தூக்கிக் கொண்டு போவதுபோல், விரைவில் தமிழீழ வான்படை இவர்களையும் ஒரே லாக்காக கொத்தித் தூக்கி கிளிநொச்சி தமிழீழ நீதிமன்றில் கொண்டுபோய் குற்றவாளிக் கூண்டில் இறக்கிவிடக்கூடும்.... :lol::(:lol:

சவால்கள் விடுத்து சாதிக்கும் விடயமல்ல இது. அவலங்களுக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மக்கள் குழுமம் தனது விடிவின் தொடக்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் தனது சொந்த மக்களின் ஆதரவுடன் நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. நடைபெற்ற வான்தாக்குதலை ஒரு எச்சரிக்கையாக மட்டும் காட்ட விரும்புபவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தாக்குதலுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட இடம் தாக்குதல் நடந்த நேரம் துல்லியமான தாக்குதல் தாக்குதலின் பின் விடுக்கப்பட்ட அறிவிப்பு. இவைகள் எல்லாம் ஒரு எச்சரிக்கை சவால் என்ற வரையறைக்குள் அடக்கிவிட முடியுமா? இது சாதாரண ஒரு சினிமா சண்டைக் காட்சியல்ல. பிழைத்துப் போனால் திரும்ப எடுப்பதற்கு. ஆகவே இது ஒரு எச்சரிக்கையல்ல. ஒரு சவாலல்ல. இது சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அது இராணுவ மேலாண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த வளர்சி மறு தரப்பினருக்கு மென்மேலும் இனப்பிரச்சினையை சிக்கலாக்கியிருக்கிறது என்பதை விட தாங்களே சிக்கலுக்குள் விழுந்து விட்டார்கள். பேச்சு வார்த்தை, சமாதானம் என்று தமிழ்த் தரப்பு நேசக்கரம் நீட்டுகிற போதெல்லாம் அவர்கள் பலவீனமடைந்து விட்டார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டதிற்கான விளைவு தான் இந்த விமான வளர்சி. இன்று தமிழ்த் தரப்பிற்கு இருக்கிற ஒரே வழி பிரிந்து செல்வதை விட வேறு வழி கிடையாது என்பது உறுதியாகி விட்டது.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.