Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்

Featured Replies

தியாக தீபம் தீலிபனின் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

thileepan.jpg?resize=697%2C362
தியாக தீபம் தீலிபனின் நினைவுத்தூபி, யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ளதால் நினைவு நிகழ்வை யாழ் மாநகரசபையே நடத்தும் என யாழ் மாநகரைசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இவ்விடயம் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

‘செப்டம்பர் 26ம் நாள் 1987ம் ஆண்டு எமக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணத்தை நிகழ்த்தி, எமது மக்களின் விடுதலைக்காக அகிம்சா ரீதியான தனது போராட்டத்தில் தனது 23ம் வயதில் இன்னுயிரை நீத்தார் அண்ணன் திலீபன் (இராசையா பார்த்தீபன்) அவர்கள்.

அன்றுமுதல் அகிம்சாமூர்த்தியாக எமது மக்கள் எமது அண்ணனை ‘தியாக தீபம் தியாகி லெப்டினன் கேனல் திலீபன்’ என்று மகுடம்சூட்டி இற்றைவரை நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

இந்த நாட்டின் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் எவ்விதமான பேதங்களும் முரண்பாடுகளுமற்று தியாக தீபம் தியாகி திலீபனை கௌரவத்தோடு நோக்குவதும் அவரது மகோன்னத தியாகத்தை மரியாதையோடு நினைவு கூர்வதும் தொடர்ந்தும் நிகழ்ந்துவருகின்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது.

தியாக தீபம் தியாகி திலீபன் தனது மக்களின் விடுதலைக்காக தனது அகிம்சா ரீதியான போராட்டத்தை நிகழ்த்திய நல்லூர் மண்ணும், அவர் தனது உயிரை தனது மக்களுக்காக ஆகுதியாக்கிய மண்ணும் யாழ் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கின்ற காரணத்தினால் அன்றுமுதல் இன்றுவரை யாழ் மாநகரசபை தியாக தீபம் தியாகி திலீபனை கௌரவப்படுத்துவதிலும், அவருக்கான நினைவாலயம் அமைப்பதிலும், வருடாவருடம் அவரை நினைவுகூர்வதையும் தனது பொறுப்பிலேயே நிகழ்த்திவருகின்றது.

அண்ணன் தியாக தீபம் தியாகி திலீபன் அவர்கள் தமிழ்பேசும் மக்களுக்கானவர் மாத்திரமல்லர், அவர் அகிம்சா ரீதியாகப் போராடுகின்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமுரியவர். அவர் ஒரு கட்சிக்கோ ஒரு இனத்திற்கோ உரியவர் அல்ல மாறாக விடுதலை வேண்டிய அனைவருக்குமானவர். தேசியத் தலைவர் அவர்கள் தியாக தீபம் திலீபன் அவர்களை தனது மகன் என்று விழித்துப் பேசியிருக்கின்றார்.

தனது போராட்டம் தமிழ்பேசும் மக்களுக்கானது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார். இவ்வாறான ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின்வழி வந்த ஒரு தியாகியை நினைவுகூர்வதில் எவ்வித பேதங்களும் பாராட்டப்படக்கூடாது.

எல்லாவிதமான முரண்பாடுகளையும் களைந்து தமிழ்பேசும் மக்களாக எதிர்வரும் 2018 செப்டம்பர் 26ம் திகதி தியாக தீபம் தியாகி திலீபன் அவர்களின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறும்; அனைவரையும் ஒற்றுமையாக இறுதிநாள் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு யாழ் மாநகரசபை சார்பில் நான் அழைப்புவிடுக்கின்றேன்.

இந்நிகழ்விற்கு மேலதிகமாக குறித்த நினைவிடத்தைச் சூழ வேறும் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது. என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறும், அனைத்துத் தரப்பினரையும் முன்கூட்டியே நான் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

அவர் உண்ணாவிரதமிருந்த இடத்தில் அகவணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அடுத்து, பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மலரஞ்சலி செலுத்துதல் நிகழ்வுகள் அனைத்தும் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறும்.

எமது போராட்டத்தை நேசிக்கும், எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் அனைத்துத் தமிழ்பேசும் மக்களின் பங்குபற்றுதலோடு சிறப்புற இடம்பெற அனைவரையும் ஒத்துழைக்குமாறு மீண்டுமொருதடவை வலியுறுத்த விரும்புகின்றேன்’ என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2018/96294/

  • தொடங்கியவர்

யாழ் மாநகர முதல்வர் நிகழ்வைப் பொறுப்பெடுப்பது திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம் -முன்னாள் போராளி காக்கா அண்ணன்

 

 
 

யாழ் மாநகர முதல்வர் நிகழ்வைப் பொறுப்பெடுப்பது திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம் -முன்னாள் போராளி காக்கா அண்ணன்

ஓர் ஒழுக்கமான கீழ்ப்படிவுள்ள சிப்பாயே பின்னர் படையணிகளை சரியாக நெறிப்படுத்தும் தளபதியாக விளங்குவான் என்பது எமது தலைவரின் கூற்று. யூ.எஸ். ஹோட்டலிலும் மாகாண சபையிலும் திரு இ.ஆர்னோல்ட் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த எமக்கு இவர் இந்நிகழ்வைப் பொறுப்பெடுப்பது திலீபனின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகமாகவே தென்படுகின்றது.உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை ஆட்காட்டிவெளி மற்றும் பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்களை அந்தந்தப் பிரதேச சபைகள் பொறுப்பெடுப்பதை தவிர்க்க முடியாமல் போகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில் கடந்த 15 ஆம் நாள் நடைபெற்ற நிகழ்வுகள் வேதனையளிக்கின்றன. ஒரு கட்சி முற்பகல் 10.10 இற்கு நிகழ்வு என்றது. சில நாட்களின் பின் இன்னொரு கட்சி காலை 09.30 இற்கு நிகழ்வு என்றது. இதில் அஞ்சலி என்பதை விட அடுத்தவனின் காலை வாருவதே முக்கியமானதாக கட்சிகளுக்குத் தெரிந்தது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் உணர்வுள்ள தமிழர்களுக்கு கவலையளித்தன. திலீபன் உண்ணாவிரதமிருந்த காலத்தில் அவனைப் பார்த்திருந்த ஒரு சிலரைத் தவிர ஏனையோர்தான் சச்சரவில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மனதில் திலீபனின் நினைவு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை எமக்கு உணர்த்தியது.

இதில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சி அன்னை பூபதியின் நிகழ்விலும் இவ்வாறான கோளாறை ஏற்படுத்தியது. உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருடன் சேர்ந்து அன்னை பூபதியின் சகோதரியை சுடரேற்ற வைத்து நாமே அன்னைக்கு முதலில் அஞ்சலி செலுத்தினோம் எனப் படம் காட்டியது.

செப்ரெம்பர் 26 என்றாலே திலீபனின் நாளும் யாழ். கோட்டையும்தான் நினைவுக்கு வரும். அந்த நினைப்பே இல்லாமல்தான், தூபிக்குப் பக்கத்தில் ஜனசக்தி இன்சூரன்ஸ் சார்பில் பந்தல் போட்டு சினிமாப் பாடல்களை அலறவிட்டு நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்தான் தற்போதைய யாழ். மேயர். மனம் பொறுக்காமல் யாரோ ஒருவர் இன்று திலீபனின் நினைவுநாள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் போல இருக்கிறது. சப்பாத்துடன் அஞ்சலி செலுத்தப் போன இவருக்கு ஒரு இளையவர்தான், அதைக் கழற்ற வேண்டும் எனவும் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. இந்த ரணம் எமது மனதில் இருந்து அகலவில்லை. அதற்குள் திலீபனின் நிகழ்வை இவர் பொறுப்பெடுப்பதாக அறிவிப்பதை எப்படிச் சகிப்பது.

அவரது அழைப்பில் ‘நான்’ என்ற பதம் வரும்போதெல்லாம் எமக்கு யூ.எஸ். ஹோட்டல்தான் நினைவுக்கு வருகிறது.எனவே திலீபனின் நினைவு நிகழ்வு மட்டுமல்லாது எதிர்வரும் மாவீரர் நாள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல்வாதிகளோ, உள்ளூராட்சி மன்றங்களோ தலையிடாது அதன் உறுப்பினர்கள் சாதாரண பிரஜைகளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாநகர-முதல்வர்-நிகழ/

  • தொடங்கியவர்

நினைவேந்தலை உள்ளுராட்சி அமைப்புக்கள் நடத்துவது பொருத்தமற்றது – மாவை

 

IMG-0517-720x450.jpg

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாவையின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

திலீபன் நினைவு நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுகிறது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் முன்வைத்த குற்றச்சாட்டை மாவை சேனாதிராஜா இதன்போது நிராகரித்திருந்தார்.

எப்படியிருந்தாலும் கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் அன்றைய நினைவு நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் மாவை கேட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் பதிலளித்தார்.

http://athavannews.com/நினைவேந்தலை-உள்ளுராட்சி/

  • தொடங்கியவர்
‘நினைவேந்தலை உள்ளூராட்சி மன்றங்கள் நடத்துவது பொருத்தமற்றது’
 

-எஸ்.நிதர்ஷன்

 

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நேற்று (23) தெரிவித்தார். 

 

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில், தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக, முன்னாள் போராளியொருவர் சுட்டிக்காட்டியபோதே, மாவை எம்.பி, தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, இவ்விடயத்தை அவர் உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென, குறித்த முன்னாள் போராளி விடுத்த வேண்டுகோளை, அவர் ஏற்றுக்கொண்டார்.  

“திலீபன் நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸ் வழக்கு தாக்கல் செய்திருக்கும் நிலையில், அதற்கெதிராக சுமந்திரன் எம்.பி வாதாட இருப்பதாக வெளிவந்த செய்திகளின் பின்னணியில், நல்ல நாடகம் அரங்கேறுகிறது” என, குறித்த முன்னாள் போராளி தெரிவித்த கருத்தை, மாலை எம்.பி அவர் நிராகரித்தார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/நினைவேந்தலை-உள்ளூராட்சி-மன்றங்கள்-நடத்துவது-பொருத்தமற்றது/175-222456

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.