Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நாவில்....இன்று

Featured Replies

தமிழ் அகதிகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த பெண்

அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பான இணக்கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக ஏ.பி.சி தமிழ் ஒலி சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றிய ரெபேக்க லிம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த பல இலங்கை தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

தமிழ் பெண்கள், ஆண்கள் உட்பட அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு தஞ்சம் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் பயின்று வந்த பிள்ளைகள் உட்பட 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் பிறக்காத, அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளும் இதில் அடங்குகின்றனர் என ரெபேக்க லிம் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/194220?ref=home-feed

  • தொடங்கியவர்

ஓமந்தையில் காணாமல் போன மகன் - ஐ.நாவில் தாய் விடுத்த கோரிக்கை

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் இதுவரை வழங்கப்படவில்லை என காணாமல் போனோர் சம்பந்தமான அமைப்பின் செயலாளர் லீலா தேவி ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்ட போரின் போது ஓமந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட எனது மூத்த மகன் காணாமல் போனார்.

 

இலங்கை ஜனாதிபதி விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, படை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவோ, அவர்களை விளக்கமறியலில் வைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

11 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலையில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய படை அதிகாரி ரவிந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை இலங்கை ஆட்சியாளர்களின் கைகளில் உள்ளது. இதனால், இலங்கையின் உள்நாட்டு நீதி கட்டமைப்பு எமக்கு தேவையில்லை. சர்வதேச நீதி கட்டமைப்பையே நாங்கள் கோருகிறோம்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் தலையிட்டு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கட்டமைப்பை ஏற்படுத்தி, குற்றம் செய்தவர்களுக்கு சர்வதேச சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க வேண்டும் எனவும் லீலா தேவி ஆனந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/194227?ref=home-feed

 

 
  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளை தோற்கடித்த படையினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்! ஐ.நாவில் சரத் வீரசேகர

 

இலங்கையில் விடுதலைப்புலி பயங்கரவாதிகளை தோற்கடித்த இராணுவத்தினர் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் முக்கிய இராணுவ அதிகாரிகளும் அடங்குவதாகவும் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்குலக நாடுகளுக்கு விஜயம் செய்வதற்கான வீசா அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

வர்களுக்கு எதிராக போர் குற்றங்களோ ஏனைய குற்றச்சாட்டுக்களோ சுமத்தப்படவில்லை. இவர்கள் தமது தாய் நாட்டை காக்க போராடியவர்கள்.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைந்து கொள்ள உள்ள இராணுவத்தினருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்னும் நற்சான்றிதழை வழங்கவில்லை.

இவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த நற்சான்றிதழை பெற காத்திருக்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதே இவர்கள் செய்த ஒரே குற்றம்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படையினர் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட போதிலும் இலங்கையர்களான எம்மை போல் நடத்தப்படவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/194218?ref=home-feed

  • தொடங்கியவர்

இலங்கை தனது பிரஜைகளின் மனித உரிமைகளை பாதுகாத்துள்ளது! ஐ.நாவில் வலியுறுத்து

 

இலங்கை அரசாங்கம் 2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் தனது அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆபிரிக்க பசுமை நிதியம் சர்வதேச அமைப்பின் சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றிய சேனக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச கட்டமைப்பின் உதவியின்றி இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

போரின் முடிவில் சரணடைந்த 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 594 சிறார்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பல்வேறு தேசிய மட்டத்திலான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். அரசாங்கம் 2017ம் ஆண்டு இராணுவம் கையகப்படுத்தியிருந்த 24 ஏக்கர் தனியார் காணிகளை விடுவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறார் போராளிகளாக இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளனர்.

சர்வதேச முகவர்களின் தலையீடு இன்றி இலங்கை தனது மனித உரிமை நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் எனவும் சேனக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/194213?ref=home-feed

 

 

புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஜெனிவாவில் விருந்தளித்த இலங்கை தூதுவர்

 

இலங்கை படையினர் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் புலிகளின் அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் எல்.ஏ. அசீஸ் இராபோசன விருந்தளித்துள்ளார்.

இதனை தாம் கடுமையாக எதிர்த்ததாக உலக தேசப்பற்றுள்ள இலங்கை பேரவை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் வேளையில் ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அமைதிக் காத்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்து்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பில் இருந்து தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கை தூதுவரின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பாவில் வாழும் சிங்களவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சிங்கள இனவாத அமைப்புகள் புலம்பெயர் புலிகளின் அமைப்புகள் என்றே கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilwin.com/politics/01/194228?ref=home-top-trending

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு மஹிந்தவாதிகளின் சவால்!

 

 

இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை இலங்கையின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் ஜெனீவாவில் ஆரம்பித்திருக்கின்றனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு சிறிலங்கா தொடர்பான ஜெனீவாத் தீர்மானத்திற்கு எதிராகவும், சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் உட்பட மோசமான மனித உரிமைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்துவரும் சிங்கள அமைப்புக்களில் ஒன்றான உலக சிறிலங்கா பேரவை என்ற அமைப்பினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி கட்டமைப்பின் நிதியைக் பயன்படுத்தியே ஜெனீவா உட்பட சர்வதேச அரங்கில் சிறிலங்காவிற்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அழுத்தங்களை பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள இந்த அமைப்பினர், உடனடியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப் புலிகளுக்கு நிதியூட்டம் வழங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உலக சிறிலங்கா பேரவையினர் நேற்றைய தினம் ஜெனீவாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது உயர் அரச பதவிகளை வகித்தஅவரது விசுவாசிகளான கலாநிதி நாலக்க கொடஹேவா மற்றும் கலாநிதி பிரதீபா மஹானாமாஹேவா ஆகியோர் கலந்துகொண்டு இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துவரும் சிங்கள அமைப்பான உலக சிறிலங்கா பேரவையினர், 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உலக சிறிலங்கா பேரவையின் தலைவரான கலாநிதி நாலக்க கொடஹேவா, பயங்கரவாத அமைப்பிற்கு நிதியூட்டம் வழங்குவது பாரதூரமான குற்றம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த நிதியைக் கொண்டு செயற்படும், புலம்பெயர்தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உலகம் முழுவதும் பரந்துபட்ட நிதி வலையமைப்பொன்று இருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் அவர்கள் வருடாந்தம் 400 மில்லியன் டொலர் நிதியை திரட்டி வருகின்றனர். அவற்றை பயன்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்தனர்.

ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் இந்த நிதி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை. இவற்றில் சில சட்டபூர்வமானவை. சில சட்டத்திற்கு விரோதமானைவை. இவற்றில் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கப்பம் பெறும் நடவடிக்கைகளும் அடங்கும். அதேபோல் விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பின் முக்கிய நபர்கள் உயிருடனேயே இருக்கின்றனர்.

உள்நாட்டிற்குள் இருந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிதியைக் கொண்டு தமது கருத்துக்களை சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கும் அழுத்தங்களை பிரயோகித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக பேச வைப்பதற்காகவும் இந்த நிதியை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 17 நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தீர்மானமொன்றை கொண்டுவந்தனர். எங்களது பிரச்சனை எமது நாட்டில் 30 ஆண்டுகளாக யுத்தம் நீடித்தது. ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளே தற்கொலை குண்டுதாரிகளை அறிமுகப்படுத்தினர். விடுதலைப் புலிகளே உலக தலைவர்கள் இருவரை கொன்றனர். உள்நாட்டுத் தலைவர்கள் இருவரையும் கொன்றனர். ஆனால்அப்போது எவரும் கதைக்க வரவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மனித உரிமை மீறல் விவகாரத்தை கையிலெடுத்து சிறிலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய விசுவாசிகளில் ஒருவரான கலாநிதி நாலக்க கொடஹேவா, அவரது ஆட்சிக் காலத்தில் கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

இதற்கமைய அவர் மஹிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்சவின் தாருண்ய ஹெட” என்ற செயற்திட்டத்திற்கு 2013 ஆம் ஆண்டு ஐம்பது இலட்சம் ரூபா நிதியை வழங்கியதற்கான தெளிவான காரணத்தை கூறாத குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது ஜெனீவா சென்றிருக்கின்றார்.

இதேவேளை உலக சிறிலங்கா பேரவையின் மற்றுமொரு முக்கியஸ்தரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட தலைமை விரிவுரையாளரான கலாநிதி பிரதீபா மஹானாமாஹேவா புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியதுடன், அவற்றை முடக்கவும் நடவடிக்கை எடுக்க சர்வதுச சமூகம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்த விடையங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்திட்டத்திலும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதனால் 30 இன் கீழ் ஒன்று தீர்மானம் தயாரிக்கப்பட்டபோது இந்த விவகாரம் உள்வாங்கப்பட்டிருவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது என்பது முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது.

இதனை திருத்திக் கொள்ள சிறிலங்காவிற்கு இன்னமும் சந்தர்ப்பம் இருக்கின்றது. அதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்தத் தவறை திருத்திக் கொள்ளவதில் உடனடியாக தலையிட வேண்டும். அதேவேளை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இணை அணுசரணை வழங்கிய அமெரிக்காவும் வெளியேறியுள்ள நிலையில், 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம். 30 இன் கீழ் ஒன்று தீர்மானம் இன்னமும் நடைமுறையில் உள்ளதால், பயங்கரவாதத்திற்கு நிதியூட்டம் வழங்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது இன்றியமையாதது.

இது சிறிலங்காவிற்கு உரிய பிரச்சனை மாத்திரம் அல்ல. இது ஒட்டுமொத்த உலகத்துடனும் தொடர்புடைய பிரச்சனை. அதனால் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குரிய தீர்மானத்தை முன்வைக்க வேண்டும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு நிதியூட்டம் வழங்கிய பலர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.

அவர்கள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு துணை போகின்றனர். அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/world/80/106632

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.