Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதம் தொடர்­கி­றது

Featured Replies

தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதம் தொடர்­கி­றது

 

(எம்.எப்.எம்.பஸீர்)

நிலை­மையை சட்ட மா அதி­ப­ருக்கு தெரி­ய­ப்ப­டுத்­தி­யுள்ளோம் என்­கிறார் சிறைச்­சா­லைகள் பேச்­சாளர் துஷார

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போராட்டம் நேற்று 11 ஆவது நாளா­கவும் தொடர்ந்து இடம்­பெற்­றது. இந் நிலையில் அர­சியல் கைதிகள் சிறைச்­சாலை உணவை புறக்­க­ணிக்கும், நிலையில் அவர்­க­ளது உடல் நிலை மற்றும் ஆரோக்­கியம் குறித்து விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களில் இரு­வ­ருக்கு தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் துஷார உப்­புல்­தெ­னிய கேச­ரி­யிடம் தெரி­வித்தார். 

 உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதிகள் தமது வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை முன்­வைப்­ப­தாக கூறும் அவர், அது தொடர்பில் நீதி­மன்­றங்­க­ளிடம் அழுத்தம் பிர­யோ­கிக்கும் அதி­காரம் தமக்கு இல்லை எனவும், அதனால் கைதி­களின் கோரிக்­கையை தாம் சட்ட மா அதி­ப­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் மேலும் தெரி­வித்தார்.

 இது தொடர்பில் சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் துஷேர உப்­புல்­தெ­னிய தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

' குறித்த கைதிகள் தொடர்ந்தும் உணவை புறக்­க­ணிக்­கின்­றனர். அதனால் அவர்­க­ளது உடல் நிலை மோச­ம­டை­கின்­றது. எனவே எமது வைத்­தி­யர்கள் அவர்­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றனர். அவ­சியம் ஏர்­படும் போது அவர்­களை வைத்­தி­ய­சா­லை­யிலும் அனு­ம­தித்து சிகிச்­சை­ய­ளித்­துள்ளோம். தற்­போது இருவர் தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் உள்­ளனர்.

கைதி­களின் கோரிக்கை எமது அதி­கா­ரத்­துக்கு அப்பால் பட்டது. எம்மால் வழக்குகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. இந்த விடயம் குறித்து நாம் சட்ட மா அதிபருக்கு அரிவித்துள்ளோம். என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-25#page-1

  • தொடங்கியவர்

விசேட சலுகைகள் வழங்க முடியாது

city-1-blackGMGPage1Image0004-5856ef9be6f9600c7eeb867b428fe3f300bc3798.jpg

 

(இராஜதுரை ஹஷான்)

அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் நீதியமைச்சர் தலதா

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்  தொடர்பில் தற்போது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் விடுதலை  தொடர்பில் நீதிமன்றங்களே தீர்மானிக்க  வேண்டும். கைதிகள் உண்ணாவிரதப் போராட்  டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்பதற்காக விசேட சலுகைகளை வழங்க முடியாது என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். 

தேசிய அரசாங்கத்தில்  நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே. அவ்விடயத்தில் அரசியல் கைதிகள் விதிவிலக்கல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி 8 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 11 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் கேட்டபோதே நீதி அமைச்சர் தலதா அத்துகோரல இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து நீதி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்.

 கடந்த கால அரசாங்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.

 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் இவர்கள் தொடர்பில் எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் சந்தேகத்தின் பெயரில் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது. இவர்கள் விடயத்தில் அரசாங்கம் முறையான சட்ட முறைகளையே பின்பற்றி வருகின்றது.

  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள கைதிகள் குறிப்பிடுவதை போன்று வழக்குகளை துரிதப்படுத்த முடியாது. அதற்கான சட்ட விதிமுறைகளுக்கு அமையவே செயற்பட முடியும். விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர்களை நியாயமற்ற முறையில் தடுத்து வைக்க வேண்டிய எவ்வித அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது .இருப்பினும் அனைத்து விதமான விசாரணைகளின் முடிவில் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாகவே இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரத போராட்டங்களினால் அல்ல என்ற விடயத்தை இவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.