Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணை வளையத்தில்... தமிழக முதல்வர் பழனிச்சாமி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திமà¯à®à®µà®¿à®±à¯à®à¯ à®à®©à¯à®ª à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿ 

சிபிஐ விசாரணை வளையத்தில் சிஎம்.. அடுத்து என்ன? எஞ்சியிருப்பது 3 வாய்ப்புகள்தான்!

 

நெடுஞ்சாலை துறை ஊழல்கள் தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த, வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பையடுத்து முதல்வருக்கு இப்போது எஞ்சியிருப்பது 3 சட்ட வழிகள்தான் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் சாலை திட்டங்கள் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற ரூ.4800 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான பணிகளில் உறவினர்கள், நண்பர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் குறிப்பிட்டு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த புகாரை சரியாக விசாரிக்காமல் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, விசாரணைக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக தரப்பே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளது. ஆம், ஹைகோர்ட், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

à®®à¯à®¤à®²à¯ வாயà¯à®ªà¯à®ªà¯ à®à®¤à¯à®¤à®¾à®©à¯

முதல்வரே சிபிஐ விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளதால் அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இதிலிருந்து மீண்டுவர சட்ட ரீதியாக முதல்வர் சில நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் முதல் வாய்ப்பு இன்று இரவே சுப்ரீம் கோர்ட் வாசலை தட்டுவது. அதாவது, சிபிஐ விசாரணைக்கு தடை கோரி நீதிபதியிடம் முறையிடலாம். இன்றேதான் அதை செய்ய வேண்டுமா என்றால், தசரா விடுமுறை என்பதால், சுப்ரீம் கோர்ட் இனி வரும் 22ம் தேதிதான் திரும்பவும் வழக்கு விசாரணையை ஆரம்பிக்கும்.

நீதிபதிகளை அவசரப்பட்டு அணுக வேண்டாம் என்று எடப்பாடி தரப்பு நினைத்தால், 2வது வாய்ப்பு இதுதான். 22ம் தேதி நீதிமன்றம் திறந்ததும், எடப்பாடி தரப்பில் மனு தாக்கல் செய்யலாம். மூன்றாவது ஒரு வாய்ப்பு உள்ளது. எந்த மேல்முறையீடும் செய்யாமல், ஹைகோர்ட் கூறியபடி சிபிஐ விசாரணைக்கு உட்படுவதுதான் அது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/with-chennai-high-court-ordering-cbi-inquiry-against-cm-edappadi-palanisamy-he-is-in-a-fix-331874.html

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Chennai HC hands over the Corruption case against TN CM to CBI

முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

முதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். லஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.

இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும்.

3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-hands-over-the-corruption-case-against-tn-cm-cbi-331867.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.