Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகள்: புலிகள் பெயரைச் சொல்லி ஏமாற்றிய தமிழக மீனவர்கள்

Featured Replies

ராமேஸ்வரம்: கள்ளத்தனமாக இலங்கைக்கு சென்று அகதிகளிடம் அதிக அளவில் பணம் பறித்துக் கொண்டுஇ விடுதலைப் புலிகள் மிரட்டியதால் அவர்களை அழைத்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்த 3 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 3ம் தேதி 14 பெண்கள்இ 15 குழந்தைகள் உள்பட 41 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். செல்வம் என்பவரின் விசைப் படகில் அவர்கள் வந்தனர். இதையடுத்து அகதிகளை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்த போலீஸார்இ செல்வத்திடம் விசாரித்தனர்.

அதற்கு செல்வம்இ நான்இ ராஜ்இ அந்தோணி சிலுவை ஆகிய மீன்வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது விடுதலைப் புலிகள் ஒரு படகில் வந்து எங்களைக் கடத்திச் சென்றனர். பின்னர் இந்த 41 பேரையும் ராமேஸ்வரம் கொண்டு போய் சேர்க்குமாறு உத்தரவிட்டனர். அவர்களுக்குப் பயந்தே நாங்கள் 41 பேரையும் ராமேஸ்வரம் அழைத்து வந்தோம் என்றனர்.

முதலில் இதை போலீஸார் நம்பி விட்டனர். ஆனால் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்ட 41அகதிகளும் செல்வம் சொல்வது முழுப் பொய் என்றனர்.

நடந்தது இதுதான்:

கடந்த 3ம் தேதி செல்வத்தின் படகில் அவர்இ அந்தோணி சிலுவைஇ ராஜ்இ செல்வத்தின் மகன் ராஜா ஆகியோர் கடலுக்குள் சென்றனர். இந்திய எல்லையைக் கடந்து இலங்கைக்குள் நுழைந்த அவர்கள் இரணைத் தீவுக்குப் போயுள்ளனர்.

அந்தத் தீவில் ஏராளமான அகதிகள் ராமேஸ்வரம் செல்ல காத்திருந்தனர். அவர்களிடம் ராஜா போய் பேரம் பேசியுள்ளார். பின்னர் ராஜேந்திரன் என்பர் உள்ளிட்ட 10 அகதிகளிடம் ரூ. 60 ஆயிரம் பணமும்இ இன்னொரு குடும்பத்தினரிடம் ரூ. 30 ஆயிரம் பணத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மற்றொரு குடும்பத்திடம் பணம் இல்லை. இதனால் அவர்களில் ஒருவர் அணிந்திருந்த தங்க மோதிரத்தைப் பறித்துக் கொண்டனர். பின்னர் ஐந்து ஐந்து பேராக அழைத்துக் கொண்டு வந்து படகில் ஏற்றி ராமேஸ்வரம் கூட்டி வந்துள்ளனர்.

ஆனால் போலீஸாரிடம் விடுதலைப் புலிகள் மிரட்டியதாக கூறி நாடகமாடி விட்டனர். இதையடுத்து போலீஸார் செல்வம்இ ராஜ்இ அந்தோணி சிலுவை ஆகியோரைக் கைது செய்தனர். ராஜா தப்பி விட்டார்.

http://thatstamil.oneindia.in/news/2007/04/07/fishermen.html

புலிகளின் தயவில் எல்லோரும் குளிர் காயப் பார்க்கினம் போல....

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இப்பிடியான ஆட்களைத்தான் இலங்கை இந்தியப் புலனாய்வுத்துறையினர் தேடித்திரியினம். இவங்களைப்போல ஆக்களைப்பிடிச்சிக் கொஞ்சம்காசைக குடுத்தா ஈழத்தமிழருக்கும் அவர்களுடைய கடற்படைக்கும் எதிராக இல்லாத பொல்லாததையெல்லாஞ் சொல்லிக் கூட்டுரோந்துக்கும் வழிபண்ணிக் குடுத்துப் போடுவாங்கள். அந்தோனிக்கும், இந்தியக்கடற்படைத்தளபதிக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.