Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்துள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: அன்புமணி ராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்துள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: அன்புமணி ராமதாஸ்

faef-720x450.jpg

இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்திருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்த போது, அவருக்கு இந்தியா வலிந்து சென்று உதவினாலும் அவர் சீனாவுக்கு மட்டுமே விசுவாசம் காட்டினார்.

அண்மையில் டெல்லி வந்து, இந்திய பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து விட்டுச்சென்ற ராஜபக்ஷ, சீனாவின் ஆதரவுடன் பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார்.

இது இலங்கையின் உள்விவகாரம் தான் என்றாலும், இந்த மாற்றம் இந்தியாவின் பாதுகாப்புச் சூழலையும், இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனையும் மிகக்கடுமையாக பாதிக்கும்.

ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் நிலையில், அவர் பதவி நீக்கப்படுவதை இந்தியா முன்கூட்டியே அறிந்து, இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்தியா தனக்குத் தானே தேடிக்கொண்டிருக்கிறது.

இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில், சீனாவிடம் வாங்கியக் கடனுக்காக இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒப்படைத்தார்.

அந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்குடன் மாத்தளை விமான நிலையத்தை கையகப்படுத்த இந்தியா முயன்றது. அதற்கு இலங்கை அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், பிரதமராகியுள்ள ராஜபக்ஷ, இந்தியாவிடம் மாத்தளை விமான நிலையம் ஒப்படைக்கப்படுவதை தடுப்பார். அதுமட்டுமின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் இராணுவப் பயன்பாட்டை அனுமதிப்பார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

அதேபோல், இலங்கை அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டதற்கு பின்னரே ஈழப்பகுதிகளில் தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதிக் காற்றை சுவாசிக்க முடிகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் அதிக அளவில் இராணுவத்தை நிறுத்துவதன் மூலம் தமிழர்களை ராஜபக்ஷ அச்சுறுத்துவார்.

இலங்கை ஜனாதிபதியாக ராஜபக்ஷ இருந்ததால் தான், 2009 முதல் 2015 வரை இலங்கைப் போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் எட்டப்படவில்லை.

அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்ற விசாரணையோ, இலங்கை மற்றும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணையோ நடக்காமல் தடுத்துவந்தார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள், 1.40 இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதில் ராஜபக்ஷ மட்டும் குற்றவாளியல்ல. இப்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் அவருக்குத் துணை நின்றவர் தான்.

இனப்படுகொலையாளிகள் இருவரும் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், போர்க்குற்ற விசாரணையை முற்றிலுமாக முடக்கத் துடிப்பார்கள்.

அதைத் தடுத்து ஈழத் தமிழர்களுக்கு நீதிபெற்றுத் தரவேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது. எனவே, இலங்கை பிரதமராக ராஜபக்ஷவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிப்பதை இந்தியா தடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து நீதி விசாரணையை இலங்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

ஆனால், அதற்குள் போர்க்குற்ற விசாரணை முடிவடையாது என்பதால் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்தியா கொண்டுவர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

http://athavannews.com/இலங்கையில்-இனப்படுகொலை-க/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.