Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரி, கோத்தா கொலைச் சதி நாலகவின் “ ட்ரோன் கமரா” வுடனான அதி விஷேட வாகனம் குறித்து விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி, கோத்தா கொலைச் சதி  நாலகவின் “ ட்ரோன் கமரா” வுடனான அதி விஷேட வாகனம் குறித்து விசாரணை

 கொலை சதி  விவகாரம் குறித்து  பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட   பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, ட்ரோன் கமரா உள்ளிட்ட அதி விஷேட வசதிகளைக் கொண்ட வாகனம் ஒன்றினைப் பெற்று அதனை இரகசியமாக பயன்படுத்தியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ்  ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே அவர் இதனை அறிவித்தார்.

 இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைகளை முன்னெடுக்கும்  சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணை அறை உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொக்குஹெட்டி, பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் கே.எம்.எம். குமாரசிங்க ஆகியோருடன் மன்றில் மேலதிக விசாரணை அறிக்கையுடன் ஆஜராகியே இதனை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் வெளிப்படுத்தினார். 

அது குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்வதாக இதன்போது கூறிய அவர், உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன  அல்விஸ் கொலை சதிக்கு சாட்சிகள்  உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரி - கோத்தா கொலை சதி விவகாரம் குறித்து சாட்சிகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 

நேற்றையதினம் இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் 2 ஆவது சந்தேக நபராக பெயரிடப்ப்ட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா அதிரடிப் படை, சிறைச்சாலை அதிகாரிகளின் விஷேட பாதுகாப்புக்கு மத்தியில் மன்றில் ஆஜர்ச் செய்யப்பட்டார்.  இதன்போது மேலதிக விசாரணை அறிக்கையை பொலிஸார் முன்வைத்தனர். 

mahinda_and_gota.jpg

இதனையடுத்து சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண , தனது சேவைப் பெறுநர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதம் என வாதாடினார். 

பயங்கரவாத தடை சட்டத்தின் 6,7 ஆம் அத்தியாயங்களை சுட்டிக்காட்டி அவர் இந்த வாதங்களை முன்வைத்தார். அத்துடன் சாட்சிகள் கட்டளை சட்டத்தின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளவே முடியாத சாட்சிகளை மையப்படுத்தியே தனது  சேவைப் பெறுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை சதி குறித்து அச்சாட்சிகளில் எந்த வெளிப்படுத்தல்களும் இல்லை எனவும் சுட்டிக்காட்டிய  சட்டத்தரணி அஜித் பத்திரன, இந்த சதி எப்போது செய்யப்பட்டது என்பது குறித்த கால எல்லைக் கூட விசாரணையாளர்களுக்கு தெரியாது என கூறினார்.

அவர்கள் யாரின் தேவைக்காக இவ்வாரு அவசர அவசரமாக நாலக சில்வாவைக் கைது செய்தனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து இதற்கு  சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்  பதில் தர்க்கத்தை முன்வைத்தார்.

 ' நாம் ஒரு போதும் நாலகவை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை.  அவரைக் கைது செய்த பின்னர் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழ்  குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு எதிராக புரியும் குற்றம் தொடர்பில் காரணிகள் வெளிபப்டுத்தப்பட்டன. அதன்படியே அந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

எனவே  அச்சட்டத்தின் 6,7 ஆம் அத்தியாயங்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை.  அத்துடன் இந்த விசாரணை மிக  நம்பகரமானது. நாம்  நாமல் குமாரவின் முறைப்பாட்டுக்கு அமைய கைது நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை.  நாலக சில்வவைடம் 46 மணி நேரமும் 20 நிமிடங்களும் விசாரணைகளை முன்னெடுத்த பின்னரே கைது செய்தோம்.

உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் கொலை தொடர்பில் தெளிவான சாட்சியங்கள் உள்ளன. ஜனாதிபதி மைத்திரி,  கோத்தா  கொலை சதி தொடர்பில் சாட்சிகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.  மேலதிக விசாரணைகளை கருத்தில் கொண்டு அவற்றை வெளிப்படுத்த முடியாது  என்றார்.

 இதன்போது நாலக சில்வவைன் சார்பில் பிணைக் கோரப்பட்டதால், முதலில் இந்த நீதிமன்றுக்கு பிணை வழங்கும் அதிகாரம் இந்த வழக்கை பொறுத்தவரை உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க  இரு தரப்பினருக்கும் எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் முன்வைக்க நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார். 

அதுவரை அதாவது எதிர்வரும் 21 ஆம் திகதிவரை  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இதன்போது மேலதிக விசாரணைகளில் வெளிபப்டுத்தப்பட்ட விடயங்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மன்றில் முன்வைத்தார். 

அதில் ,  பிரான்சில் உள்ள துஷார் என்பவர் ஆயுதங்களை நாட்டுக்கு அனுப்பி கொலை  திட்டங்களை அரங்கேற்றவுள்ளதாக 2017.09.21 அன்றே நாமல் குமார பொலிஸ் மா அதிபர் பூஜித்தைச் சந்தித்து கூறியுள்ளார். அதன் பின்னரே நாமல் குமாரவுக்கு பொலிஸ் மா அதிபர் ஊடாக அப்போது பயங்கரவாத புலனயவு பிரிவு பிரதானியான நாலக சில்வாவின் தொடர்பு கிடைத்துள்ளது.

எனினும் இந்த தகவல் தொடர்பில் அவர் எந்த முறைப்பாடுகளையும் பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை என்பது இதுவரையிலான விசாரணைகளில் தெளிவாகிறது.  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கீழ் 3 தனி விசாரணை அமைப்புக்கள் உள்ளன.

150 இற்கும் அதிகமான அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் எவருக்கும் இந்த விடயம் கூட தெரியவில்லை.  எனினும் டேன் பிரசாத்துக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாமலின் குரல் பதிவை போட்டுக்காட்டியதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முறுகலின் எதிரொலியாகவே சதி குரித்த தகவல்கள் வெளிபப்டுத்தப்ப்ட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் மக்கள்  பேரணி இடம்பெற்ற வேளை இரு எல்.எம்.ஜி. துப்பாக்கிகள் எந்த உரிய பதிவுகளும்  இன்றி 11  பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் பயங்கரவாத புலனயவுப் பிரிவுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 

இவ்வகையான ஆயுதங்கள் நிமிடத்தில் பல ஆயிரம் தோட்டாக்களை வெளிபப்டுத்த வல்லவை. 200 மீற்றருக்கு அப்பால் உள்ள இலக்கையும் தாககும். எனவே சன நெரிசல் மிக்க இடத்தில் அதனை எதற்காக கொண்டு சென்றனர் என்பது பாரிய சந்தேகத்துக்கு உரிய விடயமாகும். 

அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக தனக்கு கீழ் செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்களைப் பயன்படுத்தி சிம் அட்டைகளைப் பெற்று, போலி பேஸ் புக் கணக்கை ஆரம்பித்து செய்துள்ள விடயங்கள் ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபர் செய்யும் விடயங்கள் அல்ல. அத்துடன் அவர் விஷேட வசதிகளைக் கொண்ட ஒரு வாகனத்தை பெற்றுக்கொன்டு பயன்படுத்தியுள்ளார். 

அதில் டரோன்   கமரா உள்ள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இரகசியமாக அதனை எதற்காக பயன்படுத்தினார் என்பது குறித்து விசாரணை தொடர்கின்றது. என மேலதிக விசாரணைக் குறித்து பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மன்றுக்கு விளக்கினார்

 

http://www.virakesari.lk/article/44074

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.