Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழத்தேசியத்துடன் முந்தானை விரித்து படுத்தெழும்ப ஆயத்தமாகும் விபச்சாரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை மையப்படுத்தி வடக்கு கிழக்கில் தற்போது பெரும் அரசியல் தகிடுதாளங்கள் தொடங்கியுள்ளன. வடக்கு, கிழக்கு மக்களுக்கு உள்ள தமிழ்த்தேசியப்பற்றையும் புலிகள் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு உள்ள செல்வாக்கையும் வைத்து அதனை மூலதனமாக்கி தமக்கான வாக்கு வேட்டை நடாத்தவே தற்போதய தமிழ் அரசியல்வாதிகள் முன்னிலையில் நிற்கின்றார்கள்.

வடக்கில் தற்போது 3 அணிகள் தமிழ்த்தேசியத்தையும் புலிப்பபுராணத்தையும் வைத்து களமிறங்க ஆயத்தமாகியுள்ளன. வீட்டுச்சின்னம் மற்றும் சைக்கிள், இன்னொன்று தற்போது புதிதாய் அவதாரம் எடுத்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அணி என்பனவாகும்.

தற்போது முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய பாதையில் பயணிக்க ஆயத்தமாகி வரும் சமயத்தில் தமிழ்த் தரப்புக்கள் பல்வேறு துண்டங்களாக பிரிந்து சிதறிப் போயுள்ளன. குறிப்பாக தமிழ்த்தேசியத்தை மையப்படுத்தி அரசியலில் குதித்தவர்களது அந்தரங்கத்தை தற்போது அனைவரும் பார்க்க கூடியதாக உள்ளது. வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்த மாகாணசபைக்குள்ளேயே இவர்களின் வண்டவாளங்கள் வெளிப்பட்டன.

அதிகாரங்கள் அற்ற வடக்கு மாகாணசபைக்குள்ளேயே யார் பெரியவர், யார் அதிகாரம் மிக்கவர் , யார் அதிக ஊழல் செய்தவர் என்று தமக்குள்ளேயே அடிபட்டவர்கள் தற்போது வெளியே வந்துள்ளார்கள். இதை மக்கள் பார்க்காமல் இருப்பார்கள் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் உண்ணி போல் ஒட்டியிருந்து தமக்கு மட்டுமே நன்மைகளைப் பெற்ற தமிழ்த்தேசியநாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றார்கள். இந்த உறுப்பினர்கள் இவ்வளவு காலமும் தமிழர்களுக்கு என்ன நன்மைகளைப் பெற்று கொடுத்தார்கள் என்று அவர்கள் கூறுவார்களா? குறைந்தது ஒரு அரசியல்கைதியையாவது அவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்களா? ஒன்றுமே அவர்கள் செய்து முடிக்கவில்லை. இந் நிலையில் நாடாளுமன்றில் ரணிலுக்கு ஆதரவாக எதற்காக குரல் கொடுக்க இருந்தார்கள் என்பதை வாக்களிக்கப் போகும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.  அவர்கள் ரணில் பக்கம் நிற்பதற்கான முழுக் காரணம் என்னவென்றால் ரணில் தரப்பால் கொடுக்கப்படவிருந்த பல கோடிரூபா பேரத்தொகையே காரணமாகும்.

தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. இனி இவர்களுக்கான அந்த பேரத்தொகை கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.

இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப்போகின்றது. தற்போது அதற்கான ஆயத்தங்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் மும்முரமாக செய்து கொண்டிருப்பார்கள். இந் நிலையில் எமக்கு கிடைத்த தகவல்களின் படி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முன்னர் போட்டியிட்ட அதே முகங்களே மீண்டும் களமிறங்கப் போகின்றார்கள். சைக்கிள் கட்சியிலும் அதே நிலைதான் என தெரியவருகின்றது. இதே வேளை முதலமைச்சர் அணி என்ற ஒன்று கிளம்பியுள்ளது. அந்த அணியில் அனந்தி, அருந்தவராஜா, ஐங்கரநேசன், சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் களத்தில் உள்ளார்கள் என அறியமுடிகின்றது.

வட பகுதியில் தற்போது கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் விசனத்தை மூலதனமாகக் கொண்டு சைக்கிள் அணியும் முதலமைச்சர் அணியும் களமிறங்கினால் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெறலாம் என அரசியல்அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்த வேளையில் அந்த இரு அணியும் சேருவதற்கு வாய்பே இல்லை என் நிலை வந்துள்ளது. கூட்டமைப்பு உட்பட தமிழ்த்தேசியத்தை முன்னிலைப்படுத்தி போட்டியிடப் போகும் இவ்வாறானவர்கள் தேர்தல்காலத்தில் கூட ஒன்றிணையவில்லை. அதன் பினர் இவர்கள் தனித்தனியே வென்று நாடாளுமன்றம் சென்றால்கூட தமிழர்களுக்கு ஆதரவாக வரும் வாய்ப்புகளை ஒ்ன்றாக நின்று பெற்றுக் கொடுப்பார்களா??

எழிலனின் மனைவி என்ற ஒரே ஒரு பெயரை வைத்து வடக்கு மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பாக வென்று மாகாணசபை சென்ற அனந்தி தன்னைத் தேர்ந்தெடுத்தவர்களுக்காக என்ன செய்தார்? தனது அந்தரங்ககாரியதரிசியாக ஒரு முஸ்லீம் இளைஞனையே வைத்திருந்த அனந்திக்கு அந்த பதவிக்கு தமிழ் இளைஞர்கள் கிடைக்காமல் போய்விட்டார்களா?

அனந்தி மகளீர் அமைச்சராக இருக்கும் போது இறுதியுத்தத்தில் ஆயுதப்படைகளால் கேவலப்படுத்தப்பட்ட பெண்கள் தொடர்பான விபரங்களை பெற்றாரா? அவற்றை பெற்று அவர்களுக்கு நீதி கிடைக்க வழி சமைத்தாரா? எதுவுமே அனந்தி செய்யாது தனக்கு சொத்துத் சேர்ப்பதிலேயு குறியாக இருந்தார்.

அதே போலவே ஐங்கரநேசன் பெரும் ஊழல் செய்தது தொடர்பாக வடக்கு மாகாணசபையில் பெரும் களோபரம் உருவாகி மாகாணசபையே ஐங்கரநேசனால் அழிந்து போகும் நிலையையும் உருவாக்கியவர் அவர். முன்னாள் ஆயுததாரியான சுரேஸ் தற்போது எந்தவித மக்கள் செல்வாக்கும் இல்லாது இருக்கும் நிலையில் முதலமைச்சருடன் ஒட்டினாலேயே தனக்கு விடிவு காலம் என்று அறிந்து அவருடன் ஒட்டினார்.

இ்வ்வாற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை, சித்தார்த்தன், சுமந்திரன்,சரவணபவன் போன்றோரும் நாடாளுமன்றிலோ அல்லது வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலோ இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட யுத்த மனித உரிமை மீறல்கள்இன அழிப்புக்கள் தொடர்பாகவோ மூச்சுக்கூட விடவில்லை.

இவ்வாறான நிலையில் இனிவரும் நாட்களில் உங்கள் வீடுகளுக்கு கை கூப்பி கும்பிட்டுக் கொண்டு வரும் தமிழ்த்தேசிய அரசியல் போலிகளை நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமது பதவிக்கும், புகழுக்கும் இவர்கள் தமிழ்த்தேசியத்துடன் முந்தானை விரித்துப் படுக்கவே இவர்கள் ஆயத்தமாவார்கள்.

16693-1-9dab130956f9716f052f07ca50bfa896.jpg

http://www.jaffnaboys.com/news/16693

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.