Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த அரசமைப்பு வரையறைக்குள் தீர்வுக்கு இடமேதும் கிடையாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசமைப்பு வரையறைக்குள்

தீர்வுக்கு இடமேதும் கிடையாது

`

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் மாதிரியை ஒத்த அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணலாம் என சில அரசியல் பிரகிருதி கள் பெரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இவ்விடயத்தை ஒட்டி தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ. நெடுமாறன் இப்போது தெரிவித் துள்ள இரண்டு விடயங்கள் இங்கு கவனிக்கத் தக்கவை.

ஒன்று இந்தியாவில் இருப்பது போன்ற இன சமரசம் பாகுபாடின்மை இலங்கையில் கிடை யாது. இங்கு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி நசுக்குவதே தனது வாழ்வியல் நோக்காகக் கொண்டு அந்தத் தீவிர வெறியில் செயற்படுகின்றது.

அடுத்தது இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கையின் அரசமைப்புக்குள் உட்பட்டு தீர்வு காணவே முடியாது.

இந்த இரண்டு கருத்துகளும் ஆழமாக நோக்கப்படவேண்டியவை.

இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக் கள். ஆனால் அந்த நாட்டின் ஜனாதிபதியோ சிறு பான்மை சமூகமான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வர். அதுவும் இராமேஸ்வரத்துத் தமிழர். நாட்டின் பிரதமரோ சீக்கியர். எதிர்க்கட்சித்தலைவர்தான் பெரும்பான்மை மக்களான இந்துக்கள் சமூகத் தைச் சேர்ந்தவர்.

அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் சிறுபான்மை சமூ கத்தைச் சேர்ந்தவர்களிடம். அவர்களை சிறுபான் மையினராகப் பார்க்காமல் இந்தியராக மட்டும் நோக்கும் தாராளம் இன சமத்துவம் பாகு பாடின்மை இந்தியாவில் உண்டு.

ஆனால் இலங்கைக்கு ........?

இந்த நாட்டின் பிரதமராக அல்லது ஜனா திபதியாக ஒரு தமிழரோ,ஒரு முஸ்லிமோ வர முடியுமா? நினைத்தே பார்க்க முடியாத விவகா ரம் அது. அத்தகைய இன சமரசமும் சகிப்புத் தன்மையும் தாராள விட்டுக்கொடுப்பும் இல்லாத இலங்கைத் தீவுக்கு, இந்தியாவின் அதிகாரப் பரவலாக்கம் முறை மட்டும் போதுமானது, ஒத்து வரக்கூடியது, பிரச்சினைக்குத் தீர்வாக அமையக் கூடியது என்று கூறுவதில் என்ன அர்த்தம் நியா யம் இருக்கமுடியும்?

""இந்தியாவில் சிறுபான்மையினர் உயர் பத விக்கு வரமுடியும். ஆனால், இலங்கையிலோ கடற் படையிலோ அல்லது விமானப்படையிலோ தமி ழர்கள் சேர்வது என்பது முடியாது. அத்தகைய இனத்துவேஷ நாடு இது.'' என்று பழ நெடுமா றன் சீறுவதில் கருத்துகள் நிறையப் பொதிந்துள் ளன.

அடுத்து, அவர் கூறிய விடயம் இலங்கை அரசமைப்புப் பற்றியது.

பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த நாட் டில் இரண்டு அரசமைப்புகள் 1972 இலும் பின் னர் 1978 இலும் கொண்டுவரப்பட்டன.

அவற்றைத் தயாரிப்பதிலோ, ஏற்று அங்கீ கரிப்பதிலோ தமிழர் தேசம் சம்பந்தப்படவில்லை. மாறாக, அவற்றைத் தமிழர் தேசம் ஒரேயடியாக எதிர்த்தே நின்றது. ஆனால் சிங்களப் பெரும் பான்மையினால் ஒருதலைப்பட்சமாக தமிழர் மீது அவை வலிந்து திணிக்கப்பட்டன.

பெரும்பான்மையினரின் முடிவே தீர்ப்பு என்ற "ஜனநாயகக் கேலிக்கூத்து' முறையின் கீழ் அநீதியான முறையில் தமிழரின் சம்பந்தமோ, இணக்கமோ, இசைவோ இன்றி அவர்கள் மீது சுமத்தப்பட்ட இந்த அரசமைப்புகளே இலங் கைத் தீவின் இனப்பிரச்சினையை இவ்வளவு தூரம் கூர்மையடையச்செய்து முனைப்புற வைத் தன என்றால் மிகையாகாது.

சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப் புரிமைகளையும் உயர் தமைகளையும் வழங்கிய தற்போதைய அரசமைப்பு, தமிழர்களை சட்டரீதியாக வும் இரண்டாம் தரப் பிரஜைகளாக்கும் கைங் கரியத்தை கனகச்சிதமாக ஒப்பேற்றியது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தமிழரின் தேசிய இன நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால், தமிழர்களின் நியாயமான அபி லாஷைகளை நிறைவுசெய்யத்தக்க வகையில் அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டும் என்பது வெள்ளிடைமலை.

ஆனால் இலங்கையின் இறுக்கமான, நெகிழ் வற்ற அரசமைப்புக்குள் இது சாத்தியமானதல்ல. இந்த அரசமைப்புச் சிறைக்குள் சிக்கிக்கிடக்கும் சிங்களத்தால் அதற்கு வெளியே வந்து தமிழர் களுக்கு நீதி செய்யும் பக்குவமும் இல்லை என் பது மற்றொரு புறம்.

சிறிய அளவில் தன்னும் அரக்கவோ, நகர்த் தவோ, நெகிழ்த்தவோ முடியாத சட்ட அடைப் பாக இருக்கும் இந்த அரசமைப்புக்குள் தன்னைத் தானே சிறை வைத்துக்கொண்டு அதற்கு வெளியே வரக்கூடாது என்ற குருட்டுத்தனமான பிடிவாதத்தோடு நின்றுகொண்டு தமிழர்களுக்கு நீதி செய்யப்போவதாகச் சிங்களம் கூறுவது வேடிக் கையானது.

ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களின் அவசர, அவசிய மனிதாபிமானத் தேவைகளை நிறைவு செய்யும்பொருட்டு முழுக்க, முழுக்க மனிதாபிமான நோக்கத்தோடு உருவாக்கப் பட்ட பொதுக் கட்டமைப்பையே இந்த ஒற்றையாட்சி அரசமைப்பின் வரையறைகளைக்காட்டி இலங்கை யின் நீதிமன்றம் நிராகரித்த நிலையில்

தமிழர்களுக்கு அவர்களின் நியாயமான அபி லாஷைகளை நிறைவுசெய்யும் அதிகாரப் பகிர் வுக்கோ, அதன் அடிப்படையிலான தீர்வுக்கோ இந்த அரசமைப்பு வரையறைகள் நெகிழ்ந்து கொடுக் கும் என்றோ அந்த அரசமைப்புக்குள் சிக்கிக் கிடக் கும் நீதித்துறை அனுமதிக்கும் என்பதோ சாத்தி யப்படக்கூடியவையே அல்ல.

எனவே, தற்போதைய அரசமைப்புக்குள்தான் தீர்வு என்பதும், தமிழர்களைத் தொடர்ந்தும் அடக்கி வைத்திருப்பது என்பதும் ஒரே சிந்த னைப் போக்கின் அடிப்படைகள்தாம்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.