Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டுக் கடல் ரோந்து புலிகளுடனான சண்டையில் இந்தியாவைச் சம்பந்தப்படுத்தும்: தமிழகக் கடற்படைப் பொறுப்பதிகாரி.

Featured Replies

கூட்டுக் கடல் ரோந்து புலிகளுடனான சண்டையில் இந்தியாவைச் சம்பந்தப்படுத்தும்: தமிழகக் கடற்படைப் பொறுப்பதிகாரி.

இந்திய இலங்கைக் கடற்பரப்பில் இரு நாட்டுக் கடற்படைகள் கூட்டு ரோந்து மேற்கொள்ளும் பட்சத்தில், விடுதலைப் புலிகளுடனான சண்டையில் இந்தியக் கடற்படையை அது சம்பந்தப்பட வைத்துவிடும் ஆகையால் கூட்டுக் கடல் ரோந்து இந்தப் பிரதேசத்தில் சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை ஆயினும் இந்திய அரசின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்படவேண்டிய விடயம் இதுவாகும் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் தமிழகத்துக்குப் பொறுப்பான இந்திய கடற்படையின் அதிகாரி கொமடோர் வான் ஹால்ரன்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அந்நாட்டுக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் விவகாரம் குறித்த செவ்வி ஒன்றிலேயே கொமடோர் வான் ஹல்ரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். கூட்டுக்கடல் ரோந்து குறித்து அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் இங்கு எங்களது பகுதியில் ரோந்து மேற்கொள்கிறோம். கூட்டு ரோந்து என்றால் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் சண்டையில் நாங்களும் சம்பந்தப்பட வேண்டியிருக்கும். இதை ஒரு நல்ல யோசனையாக நாம் கருதமுடியாது. கூட்டு ரோந்து என்றால், நாம் இலங்கைக் கடல் எல்லைக்குள் ரோந்து மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதை ஒரு நல்ல யோசனையாக நாம் கருதமுடியாது. கூட்டுரோந்து என்றால், நாம் இலங்கைக் கடல் எல்லைக்குள் ரோந்து மேற்கொள்ளவேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது விடுதலைப் புலிகளை நேரடியாகச் சந்திக்கவேண்டும். இது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றல்ல. இது குறித்த இறுதி முடிவு இந்திய அரசின் உயர் மட்டத்திலேயே எடுக்கப்படவேண்டும்.

இந்திய இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச் சூடு, மீனவர்கள் உயிரிழப்பு போன்றவை தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதில் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவத்தைப் பொறுத்தவரை, மீனவர்கள் பலர் கடல் எல்லையைத் தாண்டி, அந்தப் பக்கம் இலங்கைக் கடற்படை இருக்கும் பகுதிக்குச் செல்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் நடக்கும் மோதலில் இவர்கள் இடையில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

நாங்கள் மீனவர்களிடம் சர்வதேச எல்லையைத் தாண்டிச் செல்லாதீர்கள் என்று கூறுகிறோம். அங்கு நடக்கும் மோதலில் சிக்கில் உயிரிழக்கலாம் என்று கூறுகின்றோம். ஆனால், இலங்கைப் பகுதியில் மீன் வளம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்லவே தமிழக மீனவர்கள் விரும்புகின்றனர். அங்கு செல்லும்போது சில சமயங்களில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சென்றுவிடுகின்றனர். அங்கு நடக்கும் மோதலிலும் சிக்கிக் கொள்கின்றனர் என்றார் கொமடோர் வான் ஹால்ரன்

-Uthayan-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.