Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளின் வான் தாக்குதல் குறித்து இந்திய நிபுணர்களின் மாறான கருத்துகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகளின் வான் தாக்குதல் குறித்து இந்திய நிபுணர்களின் மாறான கருத்துகள்

[11 - April - 2007]

உலகில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை நிகழ்த்தாத வான்வழித் தாக்குதலை இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்தி காட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல் இலங்கை அரசு உட்பட பல தரப்பில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்திய நிபுணர்கள் அதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளனர்.

புலிகளின் வான்வழித் தாக்குதல் பற்றி இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஆனால், புலிகளின் விமானங்கள் பறந்து வருவதை இலங்கை விமானப் படையினர் எப்படி கண்டுபிடிக்காமல் இருந்து விட்டனர் அவர்கள் வைத்திருக்கும் கண்காணிப்பு சாதனங்கள் தோல்வி அடைந்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. பாதுகாப்பு நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற பி. ராமன் இது தொடர்பாக சில கேள்விகள் எழுப்பியுள்ளார். அவை வருமாறு:

வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு முன் புலிகள் சிறிது காலமாவது அதற்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்டதா? அப்பகுதியில் விமானங்கள் பறப்பதை இலங்கை விமானப் படையினரும், இந்தியாவும் கவனிக்காமல் விட்டு விட்டனரா? மீண்டும் வான்வழித் தாக்குதல் இருக்கும் என்று புலிகள் எச்சரித்துள்ளனர். அப்படியென்றால் அதற்குத் தேவையான எரிபொருள் அவர்களிடம் ஏராளமாக இருப்பில் உள்ளது என்பதே இதன் அர்த்தம். அந்த எரிபொருளை அவர்கள் தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றது எப்படி? புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் ஓடுதளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது சரமாரியாக குண்டுகள் வீசி சேதப்படுத்திவிட்டோம் என்று இலங்கை விமானப்படை முன்னர் தம்பட்டம் அடித்தது. அந்த ஓடுதளத்தை புலிகள் சரி செய்து விட்டனரா? அல்லது அதேபோன்றதொரு ஓடுதளம் மற்றொரு பகுதியில் உள்ளதா? இவ்வாறு பல்வேறு கேள்விகளை ராமன் எழுப்பியுள்ளார். `புலிகள் வான்வழித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆபத்தானதே' என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆனால், புலிகளின் வான்வழித் தாக்குதலால் மத்திய அரசு கவலை அடையவில்லை. வான்வழித் தாக்குதலுக்கு அடுத்தநாள் மட்டக்களப்புப் பகுதியில் புலிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இவ்விரு சம்பவங்களுக்கு முன் மேற்கத்தைய நாடுகளின் தூதர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள். `இவற்றினால் புலிகள் பலம் பெற்று விட்டதாக கருத முடியாது. முன்பை விட புலிகள் பலவீனம் அடைந்துள்ளதையே இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன' என்று இந்திய உளவுத் துறையினர் கூறுகின்றனர். மூன்று தாக்குதல்களிலும் பெருத்த அளவு சேதம் ஏற்படவில்லை. பீதியை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்குதல் இருந்தாலும், சேதம் மிகக் குறைவே என்பது அவர்களின் கணிப்பு.

புலிகளின் தற்போதைய நிலை குறித்து உளவுத்துறையினர் கூறியதாவது; பீதியை உண்டாக்கவும் மீண்டும் அனைத்து தரப்பினராலும் பேசப்படுவதற்காகவும் இதுபோன்ற தாக்குதல்களை புலிகள் தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால், அவற்றினால் பெரிய அளவு வெற்றி எதையும் காண முடியாது. சர்வதேச அளவில் புலிகள் மேற்கொண்டுள்ள நிதி திரட்டும் முயற்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புலிகள் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இதற்கு காரணம். அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இலங்கைத் தமிழர்களால் நிதி திரட்டப்பட்டு புலிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் புலிகள் மீது அனுதாபம் காட்டியவர்கள் தற்போது கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். புலிகளின் எதிர்கால நோக்கம் என்ன? என்பது தான் அவர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. புலிகள் அமைப்பில் உள்ளவர்களின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சிறுவர், சிறுமிகளை படையில் தொடர்ந்து சேர்த்து வருவது ஆகியவையே இந்தக் கேள்விக்கு அடிப்படையாக உள்ளது.

புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது மிகப் பெரிய அடி. கடந்த காலங்களில் ஆதரவுக் கரம் நீட்டி வந்த கனடா அரசும் புலிகளின் ஆதரவாளர்கள் நடமாட்டத்தை தடை செய்யத் தொடங்கிவிட்டது. பிரிட்டனும் இதேபோன்ற செயலில் இறங்கியுள்ளது. இவையெல்லாம், புலிகள் அமைப்பினர் மீது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே. இராணுவத்தின் துணையுடன் புலிகளை கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை முன்னெப்போதையும் விட இலங்கையில் தற்போது தோன்றியுள்ளது. இதனால் தான், வடக்கு பகுதியில் தீவிர தாக்குதலை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள மக்களிடம் ஒருவித வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை இந்த வெறுப்புணர்வு தான் தடுத்து வருகிறது. இதுவும் புலிகளுக்கு ஒரு பின்னடைவு தான். இவ்வாறு உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-தினமலர்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.