Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் தோல்விக்கு பத்திரிகையாளர்களை பழிவாங்கும் அரசாங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் தோல்விக்கு பத்திரிகையாளர்களை பழிவாங்கும் அரசாங்கம்.

- பண்டார வன்னியன் Thursday, 12 April 2007 12:51

ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகக் கேள்வியெழுப்பும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது.

ஸ்ரான்டட் நியூஸ்பேப்பர் லிமிட்டட் நிறுவனத்தால் வெளியிடப்படும் மௌபிம மற்றும் சண்டே ஸ்ரான்டட் பத்திரிகைகளின் வங்கிக் கணக்குகளை முடிக்கி, அந்த நிறுவனத்தின் நிதித்துறைப் பணிப்பாளர் துஸ்யந்த பஸ்நாயக்கவை சிறிலங்கா அரசாங்கம் கைது செய்திருந்தது.

ஊடகங்களை மௌனமாக்குவதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது. மோதல்கள் உக்கிரமடைய அதற்கு எதிராகத் தோன்றும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்களை அடக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிராந்தியத்துக்கான ஆராய்ச்சிப் பணிப்பாளர் சாம் சரிஃபி (Sam Zarifi) தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகங்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து பல தடவைகள் அழுத்தங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், மூன்று தசாப்த காலப்பகுதியில் சிங்கள ஊடகமொன்றை சிறிலங்கா அரசாங்கம் மூடியமை இதுவே முதல் தடவையெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மௌபிமவுக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடு இலங்கையின் ஊடக சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டுக்கு எதிரானவர்கள் தொடர்பாக அரசாங்கம் கொண்டிருக்கும் கொள்கை குறித்துப் பல குற்றச்சாட்டுங்கள் முன்வைக்கப்பட்டே வருகின்றன என்றார் சரிஃபி.

சங்கதி

உலகில் தோல்வியுற்ற அத்தனை சர்வாதிகாரிகளின் நடவடிக்கைகளையும் மகிந்த மேற்கொள்ளுகிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.