Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் வங்குரோத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் வங்குரோத்து

[12 - April - 2007]

மகிந்த சிந்தனை என்ற தனது 2005 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது எந்தவகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அத்தேர்தலின் போது அவருடன் அணிசேர்ந்து நின்று அவரது வெற்றிக்கு காரணம் தாங்களே என்று இன்றும் உரிமைகோரிக்கொள்வதில் பெருமை காணும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் தலைவர்கள் மகிந்த சிந்தனையைத் தவிர தங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதைப் போல பேசிக் கொண்டு திரிவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே மகிந்த சிந்தனையில் இல்லாத அக்கறையையும் பற்றுதலையும் தாங்கள் கொண்டிருப்பதாக ஜே.வி.பி. தலைவர்கள் காட்டிக் கொள்கின்ற ஒரு விசித்திரம்.

கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றின் நேற்றைய இதழில் பேட்டியொன்றை அளித்திருக்கும் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, அரசாங்கம் மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வில்லையென்றும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனமான மக்கள் நிகழ்ச்சி நிரலுடன் மகிந்த சிந்தனை கலக்கப்பட்டுவிட்டது என்றும் குற்றஞ் சாட்டியிருக்கிறார். `நாட்டை நிருவகிப்பதில் அரசாங்கம் இரண்டு முகங்களைக் காட்டுகின்றது. அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்களை எம்மால் இப்போது விளங்கிக் கொள்ள முடியவில்லை. அரசாங்கம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதும் எமக்குத் தெரியவில்லை. பகலில் மகிந்த சிந்தனையையும் இரவில் வேறு சிந்தனையையும் அரசாங்கம் கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களிடம் பெற்ற ஆணையிலிருந்து அரசாங்கம் விலகிவிட்டது. இராணுவரீதியாக விடுதலைப் புலிகளை பல வீனப்படுத்துகின்ற அதேவேளை, தத்துவார்த்தரீதியாக அவர்களை அரசாங்கம் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. தத்துவார்த்தரீதியில் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளின் அடிப்படையில் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவில் கலந்தாலோசனைகளை நடத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளை அரசாங்கம் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைச் செய்வதற்கு மக்களிடமிருந்து அரசாங்கம் ஆணையைப் பெறவில்லை' என்று ஜே.வி.பி.யின் தலைவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் யோசனைகளை சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவிடம் விரைவில் சமர்ப்பிக்கப் போவதாக சுதந்திரக் கட்சி அறிவித்திருப்பதையடுத்து தங்களது இனவாதப் பிரசாரங்களை மீண்டும் தீவிரப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் காணும் ஜே.வி.பி.யினர் சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவின் செயற்பாடுகளைச் சீர்குலைப் பதற்கான கைங்கரியங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். சர்வகட்சி மகாநாட்டின் மூலமாக தேசிய இனப் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வுத்திட்டமொன்றை வகுக்கமுடியுமென்று தமிழ் மக்கள் நம்பவில்லை என்றபோதிலும், அந்த மகாநாட்டின் மூலமாக விடுதலைப் புலிகளை அரசாங்கம் அரசியல் ரீதியாக வலுப்படுத்துகின்றது என்ற பிரசாரத்தை ஜே.வி.பி.யினர் சிங்கள மக்கள் மத்தியில் முன்னெடுக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அந்தப் பிரசாரத்தில் பயன்படுத்துவதற்குக்கூட தங்களுக்கென்று சொந்தத்தில் கொள்கை நிலைப்பாடு ஒன்றைக் கொண்டிருக்காத ஜே.வி.பி.யினர் மகிந்த சிந்தனையையே இறுகப் பற்றிப் பிடிக்கின்ற பரிதாபம். இது அவர்களின் இன்றைய அரசியல் வங்குரோத்தையே அம்பலப்படுத்தி நிற்கிறது.

thinakkural

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.