Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் 2010 வரை நீடிக்கும் ரணிலின் பகல் கனவு பலிக்காது தோழமைக் கட்சிகள் கூட்டாக தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் 2010 வரை நீடிக்கும் ரணிலின் பகல் கனவு பலிக்காது தோழமைக் கட்சிகள் கூட்டாக தெரிவிப்பு

[12 - April - 2007]

- ப.பன்னீர்செல்வம் -

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டுவரை தொடருமென்றும் அதனை எவராலும் அசைக்க முடியாதென்றும் உறுதிபடத் தெரிவிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது என்றும் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இச் செய்தி அறிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த, ரோஹித போகொல்லாகம, பந்துல குணவர்த்தன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ரிஷாட் பதியுதீன், டீயூ.குணசேகர, ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலியே ரத்ன தேரர், சமசமாஜக் கட்சி சார்பில் விமலசிறி டிமெல், மக்கள் ஐக்கிய முன்னணி சார்பில் சோமவீர சந்திரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், டலஸ் அழகப்பெரும, முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்த போதும் சமூகமளித்திருக்கவில்லை.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி, அரசாங்கம் கவிழப் போகிறதென்றும் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதாகவும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. எனவே, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அனைத்துக் கட்சிகளும் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சிக் காலம் முடியும் வரை தமது ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளன. இதனை மக்களுக்கு அறிவிப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டினோம்.

பதினான்கு தேர்தல்களில் தோல்வியை தழுவிய ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை கைப்பிடிக்கும் மோகத்தால் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கும் அதேநேரம், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிரான பதில் தாக்குதல்களையும் அரசாங்கம் சரியான திசையில் முன்னெடுத்து வருகிறது.

எனவே, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் தமது ஒத்துழைப்பை தொடர முன் வந்துள்ளதோடு, 1989 இற்கு பிறகு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அரசாங்கமாக பலமாக இருப்பதோடு, தேசிய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.