Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்காவற்படை நியமனம்- ஆசிரியர் பணிக்கானதுவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற்படை நியமனம்- ஆசிரியர் பணிக்கானதுவா?

பதிவேற்றிய காலம்: Jan 1, 2019

உறு­தி­யாக இல்­லாத ஆரம்­பக் கல்­வி­யா­னது அத்­தி­வா­ரம் இல்­லாத கட்­ட­டத்­தைப் போன்­றது. அதே­போல் ஆரம்­பக் கல்வி திட­மாக இல்­லாத வரை­யில் மாகா­ணத்­தின் கல்­வியை வளர்க்க முடி­யாது. எனவே வடக்­கில் இருந்து சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தின் முன்­பள்­ளி கள் அகற்­றப்­பட்டே ஆக­வேண்­டும் என மூத்த கல்­வி­ய­லா­ளர்­கள் கோரு­கின்­ற­னர்.

இலங்­கை­யின் கல்­வித் தரத்­தில் வடக்கு மாகாண கல்­வியே இறுதி இடத்­தில் உள்­ளது. அதி­லும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­கள் மிக­வும் பின்­தங்­கியே உள்­ளன. இதற்கு மாவட்­டக் கல்­வித் தரத்­தில் உள்ள குறை­பா­டு­களே கார­ணம் என நீண்­ட­கா­ல­மா­கவே சுட்­டிக்­காட் டப்­ப­டு கின்­றது.
குறிப்­பாக முன்­பள்­ளி­க­ளில் படைக் கட்­டு­மா­னத் தலை­யீ­டும் இதன் கீழான முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் நிய­ம­ன­மும் இங்கு சுட்­டிக் காட்­டத்­தக்­கன. முன்­பள்­ளி­க­ளில் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­று­ப­வர்­க­க­ளுக்கு சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தால் வழங்­கப்­ப­டும் நிய­ம­ன­மா­ னது ஆசி­ரி­யர் நிய­ம­னமே கிடை­யாது என்று மூத்த கல்­வி­யி­ய­லா­ளர்­கள் தமது தரப்பு நியா­யத்தை எடுத்­தி­யம்­பு­கின்­ற­னர்.

ஊர்­கா­வற்­படை நிய­ம­னத்­தில் 
ஆசி­ரி­யர் பணி மேற்­கொள்­வது
தவ­றா­ன­தொரு எடுத்­துக்­காட்டு
சமூ­கப் பாது­காப்புக் குழு என்ற நிய­ம­னத்­தின் அடிப்­ப­டை­யில் அதா­வது ஊர்­கா­வல் படைக்­கு­ரிய நிய­ம­னத்­தின் கீழேயே அவர்­கள் ஆசி­ரி­யர் தொழி­லுக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர் என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இங்கே சீரான கல்­வித் தரமே பேணப்­ப­ட­வில்லை. ஊர்­கா­வல் படைக்­கு­ரிய நிய­ம­னத்­தின் கீழ் பணி­யாற்­று­ப­வர்­க­ளில் 8ஆம் தரம் சித்­தி­யெய்யா­த­வர்­க­ளும் நூற்­றுக் கணக்­கில் உள்­ள­னர். அவர்­க­ளின் மாதாந்­தக் கொடுப்­ப­னவு 32 ஆயி­ரம் ரூபா. கிளி­நொச்­சி­யில் ஆயி­ரத்து 56 முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் வல­யக் கல்­வித் திணைக்­க­ளத்­தின் கீழ் பணி­யாற்­று­கின்­ற­னர். இவர்­க­ளின் கொடுப்­ப­னவு வெறும் 6 ஆயி­ரம் ரூபா மட்­டுமே என்­ப­தும் இங்கு நோக்­கத்­தக்­கது.

ஊதி­யத்தை நம்பி கடன் பெற்­றோம்
அத­னால் பணி நீக்க வேண்­டாம்
முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளாக சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தின் கீழ் கடந்த 5 ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி­ய­வர்­கள் இந்­தச் சர்ச்சை தொடர்­பில் சில கருத்­துக்­க­ளைப் பதி­வு­செய்­துள்­ள­னர்.

‘‘எமக்கு தற்­போது 32 ஆயி­ரம் ரூபா ஊதி­ய­மா­கக் கிடைக்­கின்­றது. இதை நம்­பியே நாம் கடன்­க­ளைப் பெற்­றுள்­ளோம். எமது பணி­களை ஜன­வ­ரி­யு­டன் இடை­நி­றுத்­து­மாறு அரச தலை­வர் தெரி­வித்­துள்­ளார் என்று எமக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் எமது குடும்ப நில­மையை கரு­தித்­தில் எடுத்து தொடர்ந்­தும் பணி­யாற்ற அனு­ம­திக்க வேண்­டும். யாழ்ப்­பா­ணத்­தில் 13 முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளும் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 322 பேரும் பணி­யாற்­று­வ­தோடு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 173 பேரும் குறித்த சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தின் கீழ் ஊதி­யம்­பெ­றும் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­று­கின்­றோம். கூட்­ட­மைப்­பி­னர் படை­யி­ன­ரின் கீழ் இயங்­கும் முன்­பள்­ளி­களை நிறுத்­து­மாறு கோரு­கின்­ற­னர். அவ்­வாறு நிறுத்­து­வ­தனை தடுக்­கு­மாறு கோரு­வ­தோடு சிவில் பாது­காப்­புத் திணைக்­க ளத்தை இயங்க அனு­ம­திக்க வேண்­டும்’’- என்­ற­னர்.

இவர்­கள் கடந்த 26ஆம் திகதி புதன்­கி­ழமை ஆளு­நர் அலு­வ­ல­கம் முன்­பாக கவ­னீர்ப்பு ஒன்றை மேற்­கொண்­ட­னர். கேள்­விச் செவி­யன் ஊரைக் கெடுத்­தான் என்­னும் நிலை­யி­லேயே அவர்­கள் அந்­தக் கவ­ன­வீர்ப்­பில் கலந்து கொண்­ட­னர். ஏனெ­னில் ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்து கொண்ட பல­ருக்கு தமது நிய­ம­னத்­தைத் தடுத்­தது யார்?, எவ்­வாறு தடுக்­கப்­பட்­டது? என்­பது தொடர்­பில் போதிய தெளி­வில்லை.

ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நடந்­தது 
ஏற்­க­னவே திட்­ட­மிட்ட கவ­ன­வீர்ப்பா?
ஆளு­ந­ரைச் சந்­தித்து தமது கோரிக்கை மனு­வைக் கைய­ளித்த நிலை­யில் ஆளு­நர் ஆசி­ரி­யர்­களை நேரில் சந்­தித்­தார். இதன்­போது சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தின் கீழ் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­களை கல்­வித் திணைக்­க­ளத்­தின் கீழ் கொண்­டு­வர வேண்­டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரனே கோரி­னார். அத­னால் சிறி­த­ரன், சுமந்­தி­ரன், மாவை சேனா­தி­ராசா ஆகி­யோ­ரு­டன் பேசுங்­கள் என்று ஆளு­நர் கோரி­னார். எனி­னும், சிறி­த­ர­னு­டன் பேச­மாட்­டோம் என முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் பதி­ல­ளித்­த­னர்.

இதை­ய­டுத்­துக் கருத்­துத் தெரி­வித்த ஆளு­நர், அரச தலை­வ­ருக்கு உடன் கடி­தம் எழுதி உங்­க­ளைத் தொடர்ந்­தும் பணி­யாற்ற ஏற்­பாடு செய்து தரு­கின்­றேன். அதற்கு கால அவ­கா­சம் வேண்­டும். எனப் பதி­ல­ளித்­தது மட்­டு­மன்றி சிவில் பாது­காப்­புத் திணைக்­கள பணிப்­பா­ள­ரிற்­கும் தற்­கா­லி­க­மாக தொடர்ந்­தும் செயல்­பட அனு­ம­திக்­கு­மாறு அன்று மாலையே கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

ஆளு­ந­ரின் அவ­சர முடிவு
வடக்கு மாகாண ஆளு­நர் எந்த விட­யத்­தி­லும் அவ­ச­ர­மான முடி­வையே மேற்­கொள்­கி­றார் என்று எண்­ணத்­தோன்­று­கி­றது. அதா­வது அரத தலை­வர் தலை­மை­யில் இடம்­பெற்ற வடக்கு கிழக்­குக்­காக அபி­வி­ருத்­திச் செய­ல­ணிக் கலந்­து­ரை­யா­ட­லில் வடக்­கில் படைக் கட்­டு­மா­னத்­தின் கீழ் இயங்­கும் முன்­பள்­ளி­கள் பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்­குத் தவ­றான செய்­தி­யை­யும் வடக்கு மாகாண முன்­பள்ளி நிய­திச் சட்­டத்தை மீறு­வ­தா­க­வும் உள்­ள­த­னால் அவற்­றினை கல்­வித் திணைக்­க­ளத்­தி டம் ஒப்­ப­டைத்தே ஆக வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ரன் தெரி­வித்த வேளை­யில் ‘நானே வடக்­கின் காவ­லன்’ என்­னும் தொனி­யில் அதிக கருத்தை முன்­வைத்து அவற்­றினை நிறுத்­தியே ஆக வேண்­டும் என்ற கோரிக்­கையை வடக்கு மாகாண ஆளு­நர் குரேயே அழுத்­த­மாக முன்­வைத்­தார். இருப்­பி­னும் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத் தின் ஏற்­பாட்­டில் அழைத்து வந்த ஆசி­ரி­யர்­கள் முன்­னி­லை­யில் ஆளு­நர் அர­சி­யல் வாதி­யா­க­வும் சிறப்­பா­கவே செயற்­பட்­டார். அதா­வது ‘‘பாலுக்­கும் காவல் பூனைக்­கும் தோழன்’’ என்ற நிலைப்­பாடே அது.

முன்­பள்ளி ஆசி­ரி­யர் நிய­ம­னத்தை 
பெற்­ற­வர்­க­ளி­னது நிலை அவ­லம்
வடக்­கில் தற்­போது பல­நூறு முன்­பள்­ளி­கள் உள்­ளன. அவற்­றில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர்­க­ளுக்­குக் கல்வி அமைச்­சால் அனு­ம­திக்­கப்­பட்ட 6 ஆயி­ரம் ரூபா மட்­டுமே வழங்­கப்­ப­டும் நிலையே உள்­ளது. அதே­நே­ரம் வல­யக் கல்­வித் திணைக்­க­ளங்­க­ளால் நிர்­வ­கிக்­கும் முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் க.பொ.த உயர்­த­ரம் அல்­லது சாதா­ரண தரத்­தினை முழு­மை­யாக பூர்த்தி செய்து தகமை அடிப்­ப­டை­யில் பயிற்சி அளிக்­கப்­பட்ட நிலை­யில் உள்­ள­னர். இவை எவை­யும் இல்­லாத சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தின் கீழ் ஆசி­ரி­யர் எனச் சொல்­லப்­ப­டு­ப­வர்­கள் 32 ஆயி­ரம் ரூபாவை பெறு­வது என்­பது பிரச்­சி­னைக்­கு­ரிய விட­யமே.

இதனை தீர்ப்­ப­தா­னால் இரு வழி­களே உள்ளன. அதா­வது அனைத்து ஆசி­ரி­யர்­க­ளை­யும் கல்­வித் திணைக்­க­ளத்­தின் கீழ் உள்­வாங்கி அனை­வ­ருக்­கும் 32 ஆயி­ரம் ரூபா சம்­ப­ளம் வழங்­கப்­பட வேண்­டும். அல்­லது சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தி­ ன­ருக்­கு­ரிய நிய­ம­னப் பணி­களை வழங்கி முன்­பள்­ளி­களை விடு­விக்க வேண்­டும். இதனை அர­சி­யல் ரீதி­யா­கவே தீர்க்க முடி­யும். அதுவே யதார்த்­த­மும்.
சிறி­த­ர­னின் பதில்

இந்த விட­யத்­தில் சிறி­த­ரனே குழப்­பு­கி­றார் என்று சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்­தி­ ன­ரும் ஆளு­ந­ரும் கூறு­வது தொடர்­பில் சிறி­த­ர­னி­டம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, எந்­த­வொரு முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளை­யும் பணி­யில் இருந்து நிறுத்­து­மாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோர­வில்லை. மாறாக ஒரு பகு­தி­யி­ன­ருக்கு 32 ஆயி­ர­மும் மறு­த­ரப்­பிற்கு 6 ஆயி­ரம் ரூபா­வும் வழங்­கு­வ­தனை சீர் செய்­யும் நட­வ­டிக்­கை­யையே கோரு­கின்­றோம். வடக்கு மாகா­ணத்­தில் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளம் என்­னும் பெய­ரில் இரா­ணுவ துணைப்­ப­டைக் கண்­டு­மா­னத்­தில் இயங்­கும் முன்­பள்­ளி­களை அகற்றி அவற்­றினை கல்­வித் திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறே கோரு­கின்­றோம்.

கிளி­நொச்­சி­யில் தற்­போது பணி­யில் உள்ள முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளில் 322 பேர் சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளத்­தைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­க­ளுக்கு மட்­டும் இந்த நாட்­டின் அர­சால் 32 ஆயி­ரம் ரூபா வழங்க முடி­யு­மா­னால் எஞ்­சிய முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஏன் அந்த 32 ஆயி­ரத்தை வழங்க முடி­யாது என்­பதே எமது கேள்வி.

சிவில் பாது­காப்­புத் திணைக்­க­ளம் 8 வகுப்­பு­ட­னும் வய­துக் கட்­டுப்­பாடு இன்­றி­யும் நிய­ம­னம் செய்த பின்பு பயிற்­சியை வழங்கி பணி­யாற்ற அனு­ம­திக்­க­லாம் எனில் க.பொ.த. உயர்­த­ரம் மற்­றும் சாதா­ரண தரம் சித்தி எய்­திய ஆயி­ரம் ஆசி­ரி­யர்­கள் மட்­டும் 6 ஆயி­ரத்­துக்­கா­கப் பணி­யாற்­று­வது சரி­யா­ன­து­தானா? என்ற கேள்­விக்கு வடக்கு மாகாண ஆளு­நர் பதில் கூற­வேண்­டிய தேவை உள்­ளது.

இன்று இந்த 600 பேரின் நிய­ம­னத்­துக்கு நாம் எதிர்ப்­புக் கூற­வில்லை. ஆனால் வடக்கு மாகா­ணத்­தில் 6 ஆயி­ரம் ரூபா­வு­டன் நிரந்­த­ர­மும் இன்றி, ஓய்­வூ­தி­யமோ அல்­லது ஊழி­யர் சேம­லாப நிதியோ இன்றி பணி­யாற்­று­ப­வர்­க­ளுக்கு ஆளு­நர் கூறும் பதில் என்ன? என சிறி­த­ரன் கேள்வி எழுப்­பி­னார்.

கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளின்
கவ­னத்­தின் கீழ்
வட­மா­கா­ணத்­தில் கல்வி நிலையை இரா­ணுவ மயப்­ப­டுத்­தாது கல்­வி­யா­ளர்­கள் கல்­வி­யை­யும் படைக் கட்­டு­மா­னத்­தி­னர் படைக் கட்­டு­மா­னப் பணி­யி­னை­யுமே மேற்­கொள்ள வேண்­டும். அதி­லும் குறிப்­பாக சில முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் சேராத இடம் சேர்ந்து ஊதி­ யத்­துக்­காக மாவட்­டத்­தின் கல்­வியை விற்க அனு­ம­திக்க முடி­யாது. இவர்­க­ளுக்கு அவர்­க­ளின் ஊதி­யம் முக்­கி­யம். எமக்கு எதிர்­கால சந்­த­தி­யின் கல்வி மட்­டும்­தான் முக்­கி­யம் என்று கல்­வி­யி­ய­லா­ளர்­கள் கருத்­துத் தெரி­விக்­கின்­ற­னர்.

 

https://newuthayan.com/story/09/ஊர்காவற்படை-நியமனம்-ஆசிரியர்-பனிக்கானதுவா.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.