Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’

Featured Replies

‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்...

‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு!

போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம்.

‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கபட்டு இருக்கிறீர்கள்?

ஆனால், இதே சட்டத்தில் வழக்குப் போடப்பட்ட வைகோ உட்பட மேலும் பலரையும் இன்னும் பொடா வழக்கிலிருந்து விடுவிக்கவில்லையே...?’’

‘‘ ‘பொடா’ சட்டம் ஏற்கெனவே பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த போதுதான் கொண்டு வரப்பட்டது. அப்போதே இது மனித உரிமையை மீறுகிற சட்டம் என்று சொன்னோம். மொழிவழி தேசிய உணர்வாளர்களை நசுக்குவதற்குத்தான் இந்தச் சட்டம் பயன்படும் என்று எதிர்ப்புத் தெரி வித்து இயக்கம் நடத்தினோம். இந்தச் சட்டம் யாருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று நாங்கள் சொன்னோமோ அதுதான் பிற்பாடு நடந்தது. பொடா சட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த பயங்கரவாதியும் கைது செய்யப்படவில்லை. நாங்கள்தான் கைது செய்யப்பட்டோம். எங்களைக் கைது செய்தபோது தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளும் அதைக் கண்டிக்கவில்லை. மக்கள் போராடத் துவங்கிய பிறகுதான், அரசியல் கட்சிகள் பொடாவை எதிர்த்து அறிக்கைவிட முன்வந்தன... போராடின. நானும் எனது நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டோம். ஒரு ஆண்டும் நான்கு மாதங்களும் சிறையில் இருந்தோம். ஏகப்பட்ட நிபந்தனைகளோடு ஜாமீன் கொடுத்தார்கள். பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கக்கூடாது, பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது, சென்னைக்கு வெளியே செல்ல வேண்டுமானால் அனுமதி வாங்க வேண்டும் என்பதெல்லாம் நிபந்தனைகள். பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட பொடா மறு ஆய்வுக்குழு விசாரித்து விட்டு, ‘பொடா சட்டத்தின் கீழ் எங்கள் மீது வழக்குப் போட்டது செல்லாது’ என்றார்கள். அதையாவது ஏற்றுக்கொண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு எங்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கி இருக்கலாம். ஆனால் அதனைச் செய்யாமல், உயர் நீதிமன்றத்துக்கு அப்பீல் போனார்கள். இதற்கிடையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பொடா சட்டம் திரும்பப் பெற்றது. இந்த சூழ்நிலையில்தான் மாநிலத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. மறு ஆய்வுக்குழுவின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசு செய்த மேல் முறையீட்டை வாபஸ் வாங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பொடா நீதிமன்றம் எங்கள் மீதுள்ள வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது. ‘பொடா’ சட்டம் இப்போது காலாவதியாகி விட்ட சூழ்நிலையிலும் இதே சட்டத்தின் கீழ் பலர் மீது போடப்பட்ட வழக்குகளையும் நிலுவையில் வைத்திருக்கிறார்கள். அதனையும் உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். இதனைத் தமிழக முதல்வர் கலைஞருக்கு நான் கோரிக்கையாகவே வைக்கிறேன்...’’

‘‘முல்லை பெரியாறு அணை விஷயத்திலும் கேரள அரசின் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். தற்போது இருக்கும் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்போவதாக கேரளம் கூறி வருகிறதே?’’

‘‘கடந்த 26&ஆண்டுகளாக அணையின் நீர் மட்டத்தை உயர்த்த முடியாதபடி முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது கேரள அரசு. கடைசியாக உச்ச நீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142&அடியாக உயர்த்தலாம் என்று தீர்ப்புக் கொடுத்தப் பிறகு, இப்போது புதிய அணை பற்றி புது கோரிக்கையை வைக்கிறார்கள். புதிய அணை கட்டுவதன் மூலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாணத் துக்கும் இடையே போடப் பட்ட 999 வருடத்துக்கான ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதுதான் கேரள அரசின் நோக்கம். புதிய அணை கட்டினால் புதிய நிபந்தனைகளோடு புது ஒப்பந்தத்தைப் போடலாம் என்று நினைத்துத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.

பெரியார் அணை பலவீனமாக இருக்கிறது என்று மராமத்துப் பணிகளுக்காக மூடப்பட்ட அணையை 26 ஆண்டுகளாக திறக்கவில்லை. கூடவே, மராமத்துப் பணிகளையும் செய்யவில்லை. அப்படிப்பட்டவர்கள்தான் இப்போது புதிய அணை கட்டப்போவதாகச் சொல்கிறார்கள். நூறு ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் அதனைச் செய்ய மாட்டார்கள். அதற்காகத் திட்டமிடப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தமிழகத்திடமிருந்து பெற்றுக் கொண்டு ஏமாற்றுகிற ஒரு முயற்சிதான் இந்தப் புதிய அணை விவகாரம். நான் சமீபத்தில் முல்லை பாசன விவசாயிகளைப் போய் சந்தித்தேன். அவர்கள் நொடித்து போய் இருக்கிறார்கள். பல கிராமங்களில், ‘எங்களின் விவசாய நிலங்களை விற்றுவிட தீர்மானித்திருக்கிறோம். ஆனால், அதை வாங்கத்தான் ஆளில்லை’ என்கிறார்கள். வைகை அணையைச் சுற்றி ஏராளமான ஊராட்சிகள், பேரூராட்சிகள் இருக்கிறது. இந்தப் பகுதிகள் முழுக்கக் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. பேராபத்து நமது வாசலில் வந்து சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது என்று தொடர்ந்து நான் அரசை எச்சரித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் புதிய அணை என்று கேரளம் விரிக்கிற ஆபத்தான தந்திர வலையில் தமிழகம் சிக்கிவிடக்கூடாது!’’

‘‘விவசாயிகளின் நிலங்களின் மீதுதான் நவீனத் தொழிற் வளர்ச்சியை அமைத்துக் கொண்டிருக் கிறோம். இந்தியாவின் ஜீவநாடியான விவசாய நிலங் களைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?’’

‘‘சிறப்புப் பொருளாதார மண்டலம், துணை நகரம் போன்ற திட்டங்களை அமைக்கத் தனியார் பெருமுதலாளிகள் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். காலம்காலமாக விவசாயிகளின் ரத்தத்தில் தோய்த்தெடுத்த நிலங்களை அவர்களிடம் இருந்துப் பிடுங்கி மிகக் குறைந்த விலைக்கு அந்நிய முதலாளிகளுக்கு அரசு கொடுக்கிறது. அரசு இவ்வாறு கொடுக்கும் நிலங்களில் சிறு பகுதியை மட்டும் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்திவிட்டு மீதம் இருக்கும் நிலங்களை வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யப்போகிறார்கள் அந்தப் பெருமுதலாளிகள். இதுதான் உண்மை. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பவர்களுக்கு அரசு இராமநாதபுரம், தருமபுரி போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் இருந்து தரிசு நிலங்களை எடுத்துக் கொடுக்கலாமே..’’

‘‘ராமேஸ்வரம் மீனவர்களையும் குமரி மாவட்ட மீனவர்களையும் கொன்றது இலங்கைக் கடற் படை அல்ல விடுதலைப்புலிகள்தான் என்று கூறப் படுகிறதே? தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இந்தக் கடற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு?’’

‘‘மீனவர்கள் தாக்கப்படுவது இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல... 1983&ம் ஆண்டிலிருந்து நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதுவரை 300&க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடலுக்குள் மட்டுமல்ல நமது மீனவ கிராமத்துக்குள் புகுந்தும் மீனவர்களைக் கொன்றிருக்கிறார்கள். ராமேஸ்வரத்துக்குப் பக்கத்தில் இருக்கிற தாழங்குடா என்கிற மீனவ கிராமத்துக்குள் புகுந்த இலங்கைக் கடற்படையினர் அந்த மீனவ கிராம மக்களைத் தாக்கியும் வீடுகளுக்குத் தீவைத்தும் பொருட்களை சேதப்படுத்தியும் இருக்கிறார்கள். 24&ஆண்டு காலமாக சிங்களக் கடற்படையால் நடத்தப்படுகிற அக்கிரமம் இது. இப்படி 300 மீனவர்களை பலிகொடுத்தப் பிறகும் இந்தியக் கடற்படை மௌனம் சாதிக்கிறது என்றால், அதற்கு என்ன அர்த்தம்? வேண்டாத மக்களாக மீனவ மக்களை இந்திய அரசு நினைக்கிறது என்பதுதானே. இந்தியக் கடற்படைத் தனது கையாலாகதத்தனத்தை மறைக்கக் கொலையைப் புலிகளின் மீது போடுகிறது. ஒரு நாடு தனது அண்டை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்துகிற உயிர் சேதத்துக்கான நஷ்ட ஈட்டுத்தொகையை வற்புறுத்தி இலங்கையிடம் இருந்து மத்திய அரசு வாங்க வேண்டும். அதோடு நம் மீனவர்களைக் காப்பாற்றுவதற்கு என்று தனியான காவல்படையை ஏற்படுத்த வேண்டும்...’’

‘‘பால்ரஸ் மற்றும் இரும்புக் குண்டுகளை தமிழகத்திலிருந்து விடுதலைப்புலிகள் கடத்து வதாக பலரையும் தமிழக போலீஸ் கைது செய்து வருகிறது... புலிகள் ஆதர வாளராக உங்கள் பதில் என்ன?’’

‘‘இலங்கையில் சைக்கிள் உற்பத்தி கிடையாது. ஆகவே, இங்கிருந்து சைக்கிள் செய்யத் தேவையான பொருட்களை கடத்திச் சென்று அங்கு விற்பனை செய்வார்கள். இப்படிப்பட்ட பொருட்களை விற்பதற்கென்று கொழும்பில் தனி தெருவே இருக்கிறது. இந்தக் கடத்தல் காலம்காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். அப்படி நடப்பது நம் போலீஸ§க்கும் நன்கு தெரியும். திடீரென இப்போது ஏதோ பயங்கர ஆயுதங்களோடு ஆட்களைப் பிடித்துவிட்டது மாதிரியான தோற் றத்தை எழுப்புகிறார்கள் போலீஸார். ஈழத்தமிழர் விடுதலைப்போருக்குத் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு வலுத்து வருகிறது. அதை இல்லாது செய்யும் நோக்கத்துடனேயே நம் போலீஸார், இப்படிச் செய்து வருகிறார்கள். வெடிகுண்டு கடத்துகிறார்கள் என்று கைது செய்யப்பட்டவர்களை வெடிச்சட்ட வழக்கில்தானே கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்களை ஜாமீனில் அவ்வளவு சீக்கிரமாக வெளியே வந்துவிட முடியாத தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? அதுமட்டுமல்ல, சமீபத்தில் மதுரையில் வெடிப்பொருட்கள் நிரப்பிய லாரி ஒன்றைப் பிடித்தார்கள். விசாரித்தபோது, இலங்கை அரசுக்காக குஜராத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் வெடிமருந்துப் பொருட்கள்தான் என்பது தெரிய வந்தது. தூத்துக்குடித் துறைமுகம் வழியாக அது இலங்கைக்கு அனுப்பப்பட இருந்தது. அதைத்தான் நம் போலீஸார் பிடித்தார்கள். ஆனால், மேலிட உத்தரவுக்கிணங்க அந்த லாரியை பத்திரமாக தூத்துக்குடி செல்ல அனுமதித்தார்கள். அங்கிருந்து அது இலங்கை அரசுக்குப் போய்விட்டது. ஒரு வாதத்திற்காக கேட்கிறேன்... புலிகளுக்கு ஆயுதம் கடத்துவது தவறு என்றால் சட்டத்துக்குப் புறம்பான வகையில் சிங்கள இராணுவம் மட்டும் இங்கிருந்து ஆயுதங்களை கடத்தலாமா? அது நியாயமா? விமானப்படை வரை இன்று புலிகளிடம் இருக்கும்போது, பால்ரஸ் குண்டுகளையும் சைக்கிள் பேரிங்குகளையும் பெரிய ஆயுதங்களாக சித்திரித்துப் புலிகளை சிறுமைப்படுத்துவதாக நினைத்து நம்மை நாமே காமெடி யர்களாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தென் கிழக்காசிய சந்தைகளிலே கிடைக்கும்போது சைக்கிள் பேரிங் குகளை கடத்த வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை...’’ & டி.அருள்எழிலன்

நன்றி "ஜீனியர் விகடனுக்கு"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.