Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு: மக்களவையில் மசோதா தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இடஒதுக்கீடுபடத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

 

முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

ஆதரவு

 

இந்த இடஒதுக்கீட்டால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதனால் பட்டியல் சாதி, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் வராது என்று பா.ஜ.க தலைவர் கூறியதாக ஏ.என்.ஏ செய்தி முகமை கூறுகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கே.வி. தாமஸ், நாங்கள் இந்த இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிக்கிறோம். ஆனால், இது கொண்டு வரும் முறைதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனை முதலில் நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்புங்கள் என்று கூறினார் என்கிறது ஏ.என்.ஏ

மக்கள் நலத் திட்டங்கள்? - அதிமுக மக்களவை உறுப்பினர்

ஏழைகளுக்கான மக்கள் நலத் திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டதா? ஏராளமான திட்டங்கள் உள்ளன. இந்த இட ஒதுக்கீடு மசோதாவானது உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும்

அவர், "பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளன. அதனல் இடஒதுக்கீடு தேவையில்லை" என இந்த விவாதத்தின் போது கூறி உள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் வந்த சூழ்நிலையில் இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.

https://www.bbc.com/tamil/india-46798662

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

முன்னேறிய வகுப்பினரில், பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்…

January 9, 2019

quota-bill-in-Rajya.jpg?zoom=3&resize=33

இந்தியாவின் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா பாராளுமன்ற மக்களவையில் நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவேறியுள்ளது

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் பாராளுமன்றின் மக்களவையில் தாக்கல் செய்த மசோதா மீதான வாக்கெடுப்பு இரவே இடம்பெற்றது.

காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு ஆதரவு வழங்கியமையினால் மொத்தம் வாக்கெடுப்பில் பங்கேற்ற 326 பேரில் 323 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மூவர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

இந்த இடஒதுக்கீட்டால் கோடிக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள் எனவும் இதனால் பட்டியல் சாதி, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் வராது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/2019/109407/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.